பஞ்சாப் ஹோஷியார்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் உடைத்து ரூ.17 லட்சம் பணம் கொள்ளை

பஞ்சாப்: ஹோஷியார்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் உடைத்து ரூ.17 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளை தொடர்பாக ஏடிஎம்மை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டு சுற்றுலா பயணி.! – ராணுவத்தினரால் மீட்பு

ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டவர் 30 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், இந்திய ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டைச் சேர்ந்த அகோஸ் வெர்ம்ஸ் என்ற சுற்றுலா பயணி இந்தியாவில் தனியாக பல பகுதிகளுக்கும் வலம் வந்தார். மலையேற்ற வீரரான அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் மலையேற்றம் செய்யும் போது வழி தவறி, சும்சாம் பள்ளத்தாக்கில் உள்ள உமாசிலா கணவாய் பகுதியில் காணாமல் போனார் என்பது தெரிய வந்தது. … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு சாதகம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளதால் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக கட்சியின் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பிறகு கட்சியில் இருந்து வெளியேறும் மூத்த தலைவர் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் பஞ்சாபில் அமரீந்தரை போல், ஜம்முவில் காங்கிரஸுக்கு இழப்பை ஏற்படுத்துவார் என … Read more

காதலனுடன் சேர்ந்து நான்கு வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்த தாய்!

கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி மலை கிராமத்தைச் சார்ந்த நான்கு வயது சிறுவனின் காலை சொந்த தாய் அடுப்பில் வைத்து காயப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.  அட்டப்பாடி மலை கிராமத்தைச் சார்ந்த சுப்ரமணியன் மற்றும் ரஞ்சிதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ளனர். மூத்த மகனை சுப்பிரமணியனும், இளைய மகனை ரஞ்சிதாவும் கவனித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் ரஞ்சிதா தனது இளைய மகனுடன் உண்ணிகிருஷ்ணன் என்ற … Read more

குஜராத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் பிரதமர் மோடி

காந்திநகர்: குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் சுமார் ரூ,4,400 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குஜராத் புஜ் பகுதியில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். 2001 நிலநடக்கத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய உணர்வை பெருமைப்படுத்தும் பகையில் 470 ஏக்கரில் வனநினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.  குஜராத்தின் பூஜ் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் 52-வது குடியரசு தினத்தன்று சக்தி வாய்ந்த … Read more

நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐக்கு மாற்றுக -கோவா அரசுக்கு ஹரியானா முதல்வர் கடிதம்

நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி, கோவா அரசுக்கு ஹரியானா முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஹரியானா மாநிலத்தைச் பாஜக பிரமுகர், டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் உள்பட பன்முகத்தன்மை கொண்ட சோனாலி போகட் (42), கடந்த 22-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றார். மறுநாள் இவர் மர்மமான முறையில் இறந்தார். சோனாலி போகட் மாரடைப்பால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் சோனாலியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பல்வேறு … Read more

'கட்சியில் மூத்தவர்களைக் கையாளத் தெரியவில்லை' – ராகுலை காரணம் காட்டி எம்.ஏ.கான் விலகல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் அண்மையில் விலகிய நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஏ.கான் விலகினார். இது காங்கிரஸ் கட்சிக்கு மேலுமொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏம்.ஏ.கான் தெலங்கானாவைச் சேர்ந்தவர். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர். சிறுபான்மையினர் ஆதரவு பெற்றவர். இந்நிலையில் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்தையும் துறந்து கட்சியிலிருந்து விலகியுள்ளார். ராகுல் மீது புகார்: ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் கட்சியின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தனமே … Read more

விடுமுறை நாள் என்பதால் திருப்பதியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய்  காணிக்கையை உண்டியலில் செலுத்தியுள்ளனர். விடுமுறை நாள் என்பதால் 24 மணி நேரத்தில் 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி ஆட்சியை கவிழ்க்க ரூ.6,300 கோடி செலவிட்ட பாஜக – அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மது விற்பனைக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, பாஜக – ஆம் ஆத்மி கட்சி இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், … Read more

கோதுமை மாவு, மைதா, ரவை ஆகிய பொருட்களை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை

டெல்லி: கோதுமை மாவு, மைதா, ரவை ஆகிய பொருட்களை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவு,ரவை,மைதா ஆகிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.