7வது நாளாக நடைபெறும் காங். எம்.பி. ராகுலின் ஒற்றுமை நடைபயணம்: மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு..!!

திருவனந்தபுரம்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7வது நாளாக பங்கேற்று நடந்து செல்கின்றனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரம், நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த புதன்கிழமை தொடங்கினார். களியக்காவிளை  அருகே உள்ள தலைச்சன்வளையில், கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் பயணத்தை நிறைவு செய்த அவர், நேற்று முன்தினம் முதல் கேரள மாநிலத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இரவு ஓய்வு எடுத்துக்கொண்ட ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் … Read more

கல்வி, வேலைவாய்ப்பில் உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதம்

டெல்லி: கல்வி, வேலைவாய்ப்பில் உயர் சாதியில் வசதியற்றோருக்கு தரப்படும் 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதம் நடைபெற்று வருகிறது. உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது அரசியல் சட்டத்திருத்தத்தை எதிர்த்து, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் கோபால் உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து வருகிறார்.   

விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: கடந்த1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற உலக மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 11-ம் தேதி, சுவாமி விவேகானந்தருடன் தொடர்புள்ள சிறப்பு தினமாகும். கடந்த1893-ம் ஆண்டு இதே நாளில்தான் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் தலைசிறந்த உரை ஆற்றினார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த பார்வையை உலக … Read more

செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

டெல்லி: செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000வழங்கப்படும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில்  8 பேர் உயிரிழந்தனர். ரயில் நிலையம் அருகே உள்ள ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூமின் மேல் தளத்தில் தங்கும் … Read more

யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி 2 மணி நேரமாக மரத்தின் மீது பரிதவித்த வனத்துறையினர்!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே காட்டு யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது பரிதவித்த வனத்துறையினர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஆராளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வந்ததால் யானைகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்க பொதுமக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத் துறையினரின் கண்ணுக்கு காட்டு யானை ஒன்று தெரிய … Read more

தெலங்கானா | இ- பைக் ஷோரும் தீ விபத்தில் 8 பேர் பலி; மேலே இருந்த ஹோட்டலுக்கு தீ பரவியதால் விபரீதம்

செகந்திராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இ பைக் ஷோரும் ஒன்றில் திங்கள் கிழமை இரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் நான்கு தளம் கொண்ட கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரும் ஒன்றில் திங்கள் கிழமை இரவு 10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களுக்கும் தீ வேகமாக பரவியது. இந்த … Read more

செகந்திராபாத் தீ விபத்து -8 பேர் பலி: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர். செகந்திராபாத் நகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையம் உள்ளது. அங்குள்ள வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு திடீரென தீ பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்கு பரவியது. அங்கு 40 பேர் தங்கியிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து … Read more

மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமில் நள்ளிரவு தீ விபத்து… 7 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்தவர்களில் 7 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். செகந்திராபாத்தில் ரூபி எலக்ட்ரிக்கல் என்ற மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமும், அந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் லாட்ஜும் இயங்கி வந்தது. நள்ளிரவு மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் எழுந்த கரும்புகையால், லாட்ஜில் தங்கியிருந்தவர்களில் ஒரு பெண் உள்பட 7 பேர் மூச்சுத் … Read more

ஓபிஎஸ் தரப்புக்கு மீண்டும் ஒரு பின்னடைவு

டெல்லி: அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எடுத்து ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல் முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவு அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தெளிவு படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து உயர்நீதிமன்றம் உத்தரவின் படி அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்பாடைக்கப்பட்டது. … Read more

தெலங்கானா: எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சென்னையை சேர்ந்தவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த செகந்திராபாத் பகுதியில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ கட்டடத்தின் மேலே உள்ள தங்கும் விடுதியில் மளமளவென பரவியதால் முதல் மாடி முழுவதும் புகை மண்டலமானது. இதில், சிக்கி தீயில் கருகியும், மூச்சு திணறல் ஏற்பட்டும் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உடனடியாக … Read more