ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கெலிஜியம் பரிந்துரை

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கெலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி வரலாவை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கெலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஜம்மு கோர்ட் நீதிபதி முகமது மாக்ரோவை ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

"காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப் போன மருந்து" – அசாம் முதல்வர் விமர்சனம்

புதுடெல்லி: “காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப்போன மருந்து. அவர்களால் எதிர்க்கட்சிக்கான வேலையை செய்ய முடியாது” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். அண்மையில் அவர் அளித்தப் பேட்டியில், “காங்கிரஸ் இன்னும் தாங்களே ஆட்சியில் இருப்பதாக உணர்கிறது. பாரதிய ஜனதா கட்சி அவர்களிடமிருந்து எப்போதோ ஆட்சியை பறித்து விட்டது. இந்தியாவில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இயல்பான ஜனநாயக அமைப்புகள் இருக்கின்றன. மேலும் அவை கட்சிக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் காந்தி குடும்பத்தை ஒரு எதிர்க்கட்சியாக பார்க்கக் கூடாது. … Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: மோடி கொடுத்த சிக்னல்… மும்பைக்கு கிளம்பிய 2.0!

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் 15, 2021ல் பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்காக ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக உழைத்து வந்தனர். முன்னதாக நியூ டெல்லி – வாரணாசி மற்றும் நியூ டெல்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வரிசையில் மூன்றாவது ரயிலை பிரதமர் மோடி … Read more

மழலை மாணவர்களுக்கு அயோத்தியில் நடக்கும் கொடுமை! சாதமும் உப்பும் மட்டுமே உணவு!

அயோத்தியா: ராமர் ஜென்ம பூமியான அயோத்தியில் அரசுப் பள்ளியில் மதிய உணவில் பரிமாறப்பட்ட உணவு வீடியோ வெளியாகி அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகி இருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில், தரையில் அமர்ந்தபடி பள்ளிக் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதத்துடன் உப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் … Read more

மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு

இம்பால்: மணிப்பூரில் தெங்னூமால் என்ற இடத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, மேகாலாவிலும் உணரப்பட்டது.

காந்திநகர் – மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்: காந்திநகர்- மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை காந்திநகர் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காந்திநகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையம் வரை ரயிலில் இன்று பயணம் செய்கிறார். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

`நீதிபதி எஸ்.முரளிதரை இடமாற்றம் செய்க’-ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்த உச்சநீதிமன்ற கொலிஜியம்

ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யும்படி குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்த முரளிதர் சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் படித்து, பின்னர் சென்னை பல்கலைகழகத்தில் சட்டபடிப்பை முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 1984ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்து, வழக்கறிஞர் … Read more

12 இளம் கதை சொல்லிகளை கண்டறிந்த டெய்லி ஹன்ட், ஏஎம்ஜி மீடியா!!

உள்ளூர் செய்திகள் அடங்கிய இந்தியாவின் முதல் இணையதளமான டெய்லி ஹன்ட், ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஸ்டோரி ஃபார் குளோரி #StoryForGlory என்ற பெயரில் அறிவுத்தேடல் நிகழ்ச்சியை நடத்தின. ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட் அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட கதைசொல்லிகளுக்கான இறுதி தேர்வு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதில் வீடியோ மற்றும் அச்சு என இரண்டு பிரிவுகளில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி கடந்த … Read more

கட்சி மேலிட விருப்பம்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இணைகிறார் மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடைசி நிமிட வரவாக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவரும் காங்கிரஸ் தேர்தல் குழு தலைவருமான கே.சி.வேணுகோபால் நேற்றிரவு கார்கேவிடம் அவரே கட்சியின் விருப்பமான தெரிவாக இருப்பதாக எடுத்துரைத்து மனுத்தாக்கல் செய்யச் சொன்னதாகத் தெரிகிறது. மும்முனைப் போட்டியா? காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவரும் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்: சசிதரூர் பேட்டி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக திருவனந்தபுரம் எம்.பி.சசிதரூர் பேட்டி அளித்தார். நாங்கள் அனைவரும் ஒரே சித்தாந்தத்தை நம்புபவர்கள், கட்சி வலிமையடைய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவதாக சசிதரூர் கூறினார்.