இன்று மாலை ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஜப்பான் செல்கிறார். ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு டோக்கியோவில் உள்ள நிப்போன் புடோகான் அரினாவில் நடைபெறவுள்ளது.

₹20,000 சைக்கிளை ₹2,000க்கு விற்ற போதை ஆசாமி.. கையும் களவுமாக பிடித்த ஹரியானா போலீஸ்!

விநோதமான திருட்டு வழக்குகள் பற்றி தொடர்ந்து கேள்விப்பட்டு வந்திருப்பீர்கள். அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் உயர் ரக சைக்கிள்களாக பார்த்து திருடி அதனை இரண்டாயிரம், ஆயிரம் ரூபாய் என சொற்ப மதிப்புக்கு விற்று வந்த பலே திருடனை போலீசார் மடக்கிப்பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கைது செய்யப்பட்ட திருடனிடம் இருந்து கிட்டத்தட்ட 62 சைக்கிள்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்ட போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். கைதானவர் ரவிக்குமார் என்பதும் பஞ்ச்குலாவில் உள்ள மஜ்ரி கிராமத்தில்தான் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி … Read more

இந்தியா குறித்து பாரபட்சமான பதிவு: அமெரிக்க ஊடகங்களை விமர்சித்த அமைச்சர் ஜெய்சங்கர்

வாஷிங்டன்: இந்தியா குறித்து பாரபட்சமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுசபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார். அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் அமைச்சர் உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவில் இந்தியாவிற்கு எதிரான கருத்துடையவர்கள் அதிகரித்துவருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ” இங்குள்ள ஊடகங்களை நான் பார்க்கிறேன். … Read more

மைசூருவின் 412-வது தசரா கொண்டாட்டம்: சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து விழாவை தொடக்கி வைத்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

மைசூரு: சரித்திர புகழ் பெற்ற 412-வது மைசூரு தசரா விழாவை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். கர்நாடக மாநிலம், மைசூருவில் தசரா விழா இன்று தொடங்கி வரும் 3ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், ஜனாதிபதியின் நிகழ்ச்சிகள் குறித்த அறிக்கையை ராஷ்டிரபதி பவன் நேற்று வெளியிட்டது. அதன்படி, … Read more

காங்கிரஸுக்கு புதிய நெருக்கடி ! – ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமை நீடிக்குமா ?

ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநில புதிய முதல்வராக சச்சின் பைலட் தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சச்சின் பைலட்டை முதல்வராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உள்பட 70 எம்எல்ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்த … Read more

'அவர்கள் கோபமாக இருக்கிறார்கள்; என்வசம் ஏதுமில்லை' – ராஜஸ்தான் அரசியல் சர்ச்சையில் கைவிரித்த கெலாட்

ஜெய்ப்பூர்: கோவா மாநில காங்கிரஸில் அதிரடிகள் அரங்கேறி முடித்த நிலையில் இப்போது ராஜஸ்தான் காங்கிரஸில் பூகம்பம் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சி எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கட்சித் தலைவராக தேர்வானாலும் முதல்வர் பதவியிலும் தொடர கெலாட் விரும்பினார். ஆனால், இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, … Read more

புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலத்துடன் தொடங்கியது: குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைத்தார்.

கர்நாடகா: புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலகத்துடன் தொடங்கியது, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைத்துள்ளார். சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலத்துடன் விழா கொடாட்டம் நடைபெற்றது. தசரா விழாவில் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டது  .

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்க மறுத்த முகுல் ரோத்தகி.!

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்க பிரபல வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி மீண்டும் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என மத்திய அரசு விரும்பியது. இது தொடர்பாக முகுல் ரோத்தகியை மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது அவர் அந்தப் பதவியை ஏற்க இசைவு தெரிவிக்கவில்லை. முகுல் ரோத்தகி அட்டர்னி ஜெனரல் பதவியை மறுத்த நிலையில், அந்த முக்கிய பதவிக்கு யாரை நியமிக்கலாம் என … Read more

கோவா பேரவை தேர்தலில் ரூ.47.54 கோடி செலவிட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி

புதுடெல்லி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.47.54 கோடி செலவிட்டுள்ளது. ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக ரூ.17.75 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது. கோவா சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. எனினும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் களமிறங்கின. இந்த இரு கட்சிகளின் வரவால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் … Read more

தில்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா – தமிழ்நாடு ஆளுநர் RN.ரவி. சந்திப்பு!

தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளித்தல், தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆட்களை மூளைச் சலவை செய்தல் ஆகியவற்றை பிஎப்ஐ அமைப்பும், அதன் நிர்வாகிகளும், எஸ்டிபிஐ கட்சியும் செய்துவருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், NIA அமைப்பும், அமலாக்கப்பிரிவும் இணைந்து 11 மாநிலங்களில் அதிரடியாக சோதனை நடத்தின. தேசிய புலானய்வு முகமை நடத்திய சோதனையில், இதுவரை 106 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 11 … Read more