கொட்டும் மழையில் ராகுல் செய்த தரமான சம்பவம்… திருப்புமுனை ஏற்படுத்துமா மைசூரு?

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பலம் வாய்ந்த பாஜகவை வீழ்த்த முடியுமா? என்பது தான் பல்வேறு தரப்பினரின் கேள்வியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் மட்டுமே சாத்தியம் என்று சொல்லப்படும் நிலையில், அரசியல் களம் புதிய திருப்பங்களை அளித்து வருகிறது. இருப்பினும் காங்கிரஸை தூக்கி நிறுத்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் இனிமேல் அவ்வளவு தான் என்று பலரும் பேசிக் கொண்டிருக்கையில் புது ரத்தம் பாய்ச்ச இந்திய ஒற்றுமை பயணத்தை … Read more

முலாயம் சிங் ஐசியுவில் அனுமதி

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சி நிறுவனரான முலாயம் சிங் உடல் நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் (வயது 82), உடல் நலக் குறைவால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. இதனால் உடனடியாக அவர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், முலாயம் சிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிப்பதாகவும் சமாஜ்வாடி கட்சி … Read more

டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்..!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் இரட்டை சாதனைகளைப் படைத்தார். குறைந்த பந்துகளில் அதிவேக அரை சதம் எடுத்தது,  மற்றொன்று டி 20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் வரிசையில் மூன்றாவதாக இணைந்தது என்ற சாதனைகளை படைத்தார். அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்தவர்களில் முதலாம் இடத்தில் விராட் கோலியும், இரண்டாம் இடத்தில் கே.எல்.ராகுலும் உள்ளனர் Source link

8 ஆண்டுகளுக்குப் பிறகு மங்கள்யான் செயலிழந்தது? இஸ்ரோ தகவல்

புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த மங்கள்யான் விண்கலம் செயல் இழந்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ரூ.450 கோடியில் இந்தியாவில் மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 1ம் … Read more

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயம்; 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

லக்னோ; உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இருந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. … Read more

தேதி குறிச்சாச்சு… BJP-ஐ வீழ்த்த வரும் BRS… கே.சி.ஆரின் புதிய அரசியல் அவதாரம்!

தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற வியூகம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. மூன்றாவது அணி, நான்காவது அணி, தனிக்கட்சி என அதிரி புதிரி சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே (2024) இருக்கும் நிலையில் வரும் 5ஆம் தேதி பாரத் ராஷ்டிரிய சமிதி (BRS) என்ற புதிய தேசிய கட்சியை தொடங்கவுள்ளார் … Read more

உத்தர பிரதேசம் மாநிலம் பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து

டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலம் பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 52 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் காங். எம்எல்ஏக்கள் புதிய முதல்வர் பெயரை கேட்டு கொந்தளித்தனர்: பைலட் மீது கெலாட் தாக்கு

ஜெய்ப்பூர்: ‘புதிய முதல்வர் பெயரை கேட்டு, கட்சி எம்எல்ஏக்கள் கொந்தளித்தனர். அத்தகைய அதிருப்தி எழுந்தது ஏன் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்’ என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட்டை மறைமுகமாக தாக்கி பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவராக்க கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா முயற்சி மேற்கொண்டார்.  அதனால் ராஜஸ்தானின் புதிய முதல்வராக  சச்சின் பைலட் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் … Read more

பீகாரில் 3,500 கிமீ நடைபயணம் பிரசாந்த் கிஷோர் யாத்திரை தொடக்கம்

பாட்னா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 3,500 கிமீ. பாத யாத்திரையை  பீகாரில் நேற்று துவக்கினார். பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர்,பாஜ உள்ளிட்ட பல கட்சிகளுக்கு பிரசார வியூகங்களை அமைத்துகொடுத்து  தேர்தல் வெற்றியில்  முக்கிய பங்காற்றியுள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் துணை தலைவராக பொறுப்பு வகித்தார். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின்னர் அக்கட்சியில் இருந்து பிரசாந்த் நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் … Read more

ஐதராபாத்தில் 3 தீவிரவாதிகள் கைது: பாக். உளவு அமைப்புடன் தொடர்பு

திருமலை: ஐதராபாத்தில் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு சதியை போலீசார் முறியடித்து, சதியில் முக்கிய பங்காற்றிய பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 4 கையெறி குண்டுகள், ரூ.5.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத், மலக்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் ஜாஹத். இவருக்கு கடந்த காலங்களில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பல வழக்குகளில் தொடர்பு இருந்தது. இந்நிலையில்  பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்புகளுடன்  மீண்டும் தனது தொடர்புகளை புதுப்பித்து குண்டுவெடிப்பு மற்றும் … Read more