சுதந்திர தின உரை | டெலி பிராம்ப்டரை தவிர்த்துவிட்டு காகித குறிப்புகளை பயன்படுத்திய பிரதமர் மோடி

புதுடெல்லி: நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றி இருந்தார். அப்போது தனது உரைக்கான குறிப்புகளுக்காக காகிதத்தை பயன்படுத்தி இருந்தார். வழக்கமாக பிரதமர் மோடி தனது சிறப்புரை பேச்சுகளின் போது டெலி பிராம்ப்டரை பயன்படுத்துவது வழக்கம். பாரம்பரியமிக்க செங்கோட்டையில் 76-வது சுதந்திர தின விழாவில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் கொடியை ஏற்றிய கையோடு சுமார் 1 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை பேசி இருந்தார். … Read more

SBI Hikes MCLR Rates: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு

வட்டி விகித உயர்வு: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சியை அளித்து வருகிறது. தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பெயரும் இந்த வங்கிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எஸ்பிஐ வங்கி எம்சிஎல்ஆர் எனப்படும் கடனுக்கான இறுதிநிலை செலவு … Read more

குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20% உயர்த்தியது எஸ்.பி.ஐ: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

டெல்லி: பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. இந்த நிறுவனம் அடிக்கடி தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. எம்.சி.எல்.ஆர். எனப்படும் வங்கிக்கடன் வட்டி விகிதத்தை 3 மாதக் கடனுக்கு 7.15 சதவீதத்தில் இருந்து 7.35 சதவீதமாக எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. 6 மாத கால வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் 7.45 சதவீதத்தில் இருந்து … Read more

இந்தியா @ 75 – நகர்புற வளர்ச்சி: ஸ்மாட்டி சிட்டிகளும் மெட்ரோ ரயில்களும்

இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது நாட்டில் பெரும்பாலான பகுதிகள் கிராமங்கள்தான். கிராமங்களின் நாடாகதான் இந்தியா இருந்தது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சென்னைதான். இந்த 75 ஆண்டுகளில் சென்னை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சென்னையின் அடையாளமாக தற்போது இருப்பது ஆங்கிலேயர் கால கட்டிடங்கள்தான். அந்த அளவுக்கு இந்தியாவின் நகர்புறங்களில் இந்த 75 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து உள்ளன. ஆங்கிலேயர் கால கட்டிடங்களுக்கு சவால் விடும் வகையில் சென்னையில் மட்டுமல்ல, நாடு … Read more

ஏப்ரல் – ஜூலையில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40% அதிகரிப்பு..!!

டெல்லி: 2022 ஏப்ரல் – ஜூலை ஆகிய 4 மாதங்களில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40% அதிகரித்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான நேரடி வரி வருவாய் வசூல் இலக்கண ரூ.14.2 லட்சம் கோடியில் ரூ.5 லட்சம் கோடி என்பது 35% ஆகும். தனிநபர் வருமான வரி வருவாய் 4 மாதங்களில் 52% உயர்ந்து ரூ.2.67 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியா @ 75: சுகாதாரப் பணியாளர்களின் மகத்தான பங்களிப்பு

ஒரு நாட்டில் வசிக்கும் மக்களுக்கு மிக மிக அடிப்படை உரிமை சுகாதாரம். இன்றும் முறையான சுகாதார வசதி இல்லாத பல நாடுகள் இருக்கும் நிலையில், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்த 75 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் பல மடங்கு முன்னேறியுள்ளது. ஒரு காலத்தில் உலகை உலுக்கிக் கொண்டு இருந்த போலியோ தொடங்கி மலேரியா, டெங்கு, பிளேக், காலரா, அம்மை என்று பல நோய்களை இந்தியா எப்படி கட்டுப்படுத்தியது என்று பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். உலகில் இன்னும் … Read more

பீகாரில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: முதல்வர் நிதிஷ்குமார் பேச்சு

பாட்னா: பீகார் மாநிலத்தில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். பீகாரில் காலியாக உள்ள அரசுப்பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

புதிய இலக்குகளுடன் புதிய திசையில் பயணிக்க வேண்டிய தருணம்: தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்தார். குறிப்பாக விடுதலைப் போரில் பழங்குடியினத் தலைவர்களின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசினார். நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படும் வேளையில் பிரதமர் நரேந்திர டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகை தந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் … Read more

வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதை காங்கிரஸ் எதிர்க்கும் -சோனியா காந்தி

புது டெல்லி: தனது 75வது சுதந்திர தினத்தை (Independence Day) ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி “இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து” தெரிவித்துள்ளார். இதனுடன், சுதந்திரப் போராட்ட தியாகிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு அவமதித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக உண்மையை மறைத்து … Read more

75ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு…

டெல்லி: இந்திய திருநாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் ஆகியவற்றிற்காக நம்மாலானா அனைத்தையும் அளிக்க வேண்டும் என குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் 75வது சுதந்திர தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார். ஜனநாயகத்தின் மெய்யான சக்தியை உலகம் தெரிந்து கொள்ள இந்தியா உதவி இருக்கிறது என்று கூறிய குடியரசுத் தலைவர் … Read more