ரிசார்ட்டில் இளம் பெண் கொலை..! பாஜக தலைவர் வாரிசை எதிர்த்து போராட்டம் ..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் விபச்சாரத்திற்கு உடன்படாத பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் அம்மாநில பாஜக தலைவர் மகன் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில் பாஜக மாநில தலைவர் மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌரி மாவட்டத்திற்கு உட்பட மாவட்டத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அங்கீதா பண்டாரி (19 வயது) இளம் பெண் வரவேற்பாளராக … Read more

3 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை கர்நாடகா விரைகிறார்

பெங்களூர்: ஜனாதிபதி திரௌபதி முர்மு கர்நாடகாவில் 3 நாள் பயணம் மேற்கொள்கிறார். நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரௌபதி முர்மு. ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்ட பின் முதல் முறையாக கர்நாடகா செல்கிறார். கர்நாடக வரும் அவர் முதலில் மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் தசரா விழாவை அவர் தொடங்கி வைக்கிறார். அதே நாளில், ஹூப்ளியில் ஹூப்ளி -தர்வாட் முனிசிபல் … Read more

தினமும் 1.30 மணிநேரம் செல்ஃபோனுக்கு பிரியா விடை கொடுக்கும் இந்திய கிராமம்: எங்கு தெரியுமா?

மனிதர்களின் ஆறாவது விரலாகவே செல்ஃபோன் போன்ற எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள் செயல்பட்டு வருகின்றன. மின்னணு சாதனங்கள் இல்லாத மனிதர்களை காண்பதே இந்த நவீன உலகில் அத்தகைய விந்தையாகவே இருக்கிறது. ஆனால் உலகின் முதல் செல்ஃபோனை உருவாக்கிய மார்ட்டின் கூப்பரே தன்னுடைய ஒரு நாளில் வெறும் 5 சதவிகிதத்தை மட்டுமே செல்ஃபோன் பயன்படுத்துவதற்கு செலவழிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் சராசரி மனிதர் நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 மணிநேரம் செல்ஃபோன் பயன்படுத்துவதற்கு நேரம் செலவழிப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இப்படி … Read more

பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு ‘ரீல்’ வீடியோ விட்ட சாமியார் சாவு: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி

உன்னாவ்: உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பனியா கெரா கிராமத்தில் பஜ்ரங்கி (55) என்ற சாமியார் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் வாகனங்களுக்கு பஞ்சர் பழுதுபார்க்கும் கடை நடத்தி வரும் சுபேதார் என்பவரின் கடையில் விஷத்தன்மை கொண்ட கருநாகப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாம்பை சுபேதார் கட்டையால் தாக்கி கொல்ல முயன்றார். அங்கு வந்த சாமியார் பஜ்ரங்கி, ‘பாம்பை கொல்ல வேண்டாம்’ என்று சுபேதாரை வற்புறுத்தினார். பின்னர், அந்த பாம்பை லாவகமாக பிடித்த சாமியார் பஜரங்கி, ஒரு பெட்டியில் … Read more

3 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை கர்நாடகா விரைகிறார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை முதல் வரும் 28ம் தேதி வரை கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க  உள்ளார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் நாளை முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார்.

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: மகன், மகளுடன் டாக்டர் கருகி பலி: ரேணிகுண்டாவில் பரிதாபம்

திருமலை: திருப்பதி அருகே ரேணிகுண்டா மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் டாக்டர், அவரது மகன், மகள் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் உள்ள பகத்சிங் காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையை டாக்டர் தம்பதி ரவிசங்கர் (44), அனந்தலட்சுமி (40) ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் சித்தாரெட்டி (11), மகள் கார்த்திகா (6). இவர்கள் மருத்துவமனையின் மேல் தளத்தில் வசிக்கின்றனர். கீழ்தளத்தில் 5 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் … Read more

9 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவி: குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்..!

சிக்கமகளூருவில், மூளைச்சாவு அடைந்து 9 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவி ரக்‌ஷிதாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 8 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் பி.யூ.சி. படித்து வந்த ரக்‌ஷிதா (17) என்ற மாணவி கடந்த 18-ம் தேதி கல்லூரிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரக்‌ஷிதாவின் இதயம் ஹெலிகாப்டர் மூலம் … Read more

வகுப்பறையில் சிறுமியின் ஆடையை அகற்ற சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்

மத்தியப் பிரதேசத்தின் ஷாதுல் மாவட்டத்தில் உள்ள அரசின் பழங்குடியின நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் 10 வயதான பழங்குடியின சிறுமி, ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்த 10 சிறுமியின் உள்ளாடை மட்டும் அணிந்து வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் மத்தியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அப்பகுதியினர் மத்தியில் பகிரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அக்கிராமத்தினர்கள் ஆசிரியரின் செயலைக் கண்டு கோபமடைந்தனர். இதுதொடர்பாக, பழங்குடியின நலத்துறை உதவி ஆணையர் … Read more

டாக்டர்கள் தேதி அறிவித்த பிறகும் கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்காததால் அதிர்ச்சி; ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம்: பணம் பறிக்க போலி சிகிச்சையா?

திருமலை: டாக்டர் அறிவித்த தேதியில் குழந்தை பிறக்காததால் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோகாவரத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி(25). இவரது கணவர் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியை சேர்ந்த சத்யநாராயணா (30). இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் சத்யநாராயணா, மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது உடல்நலம் பாதித்ததால் காக்கிநாடா காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை டாக்டர்கள் … Read more

₹550 பெட்ரோலுக்கு ₹55,000 கேட்பதா? – இது என்ன நியாயம்? GPayவால் கஸ்டமருக்கு நேர்ந்த ஷாக்!

கையடக்க செல்ஃபோன் இருப்பதால் சில்லறை வர்த்தகம் அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலேயே நடைபெற்று வருகிறது. இதனால் பணப்புழக்கம் குறைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் கோடிக்கணக்கில் அதிகரித்து வருகிறது. குறைந்தபட்சம் 1 ரூபாயில் இருந்து பணப்பரிவர்த்தனைகள் நடத்தப்படுவதால் சுலபமான பணியாக இருந்தாலும் சமயங்களில் அதனால் பல சிக்கல்களே நேர்ந்துவிடுகிறது. அதற்கு அத்தாட்சியாக பல சம்பவங்கள் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்கள், செய்திகள் வாயிலாக அறிந்துக்கொள்ள முடிகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் தன்னுடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் … Read more