வேட்பாளர் கொடுத்த மதுவை வாங்கி குடித்த 6 வாக்காளர்கள் பலி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு மதுபானங்களை சப்ளை செய்து வாக்குகளை சேகரிக்க அழைத்து செல்கின்றனர். அந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரிடம் மதுபானங்களை வாங்கிக் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஹரித்வார் மாவட்டம் பூல்கர் கிராமத்தின் பஞ்சாயத்து வேட்பாளர்  ஒருவர், சிலருக்கு மதுபானங்களை சப்ளை செய்துள்ளார். அந்த மதுபானத்தை குடித்தவர்களில் சிலரின் உடல்நிலை மோசமடைந்தது. … Read more

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1,800 கோடி செலவாகும்: அறங்காவலர் குழு கணிப்பு

அயோத்தியா: அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட ரூ.1,800 கோடி செலவாகும் என்று ராமர் கோயிலை கட்ட அமைக்கப்பட்ட அறங்காவலர் குழு கணித்துள்ளது. ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரம் என்ற அறங்காவலர் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு தான் கோயில் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில ஃபைசாபாத் சர்க்யூட் ஹவுஸில், அறங்காவல் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

ரேடாருக்கு தென்படாத போர்க்கப்பல் தரகிரி அறிமுகம்!

எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார். மேற்கு கடற்படையின் தலைமைத் தளபதி அஜேந்திர பஹதுர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ‘தரகிரி’ போர்க்கப்பலின் அறிமுகத்திற்குப் பிறகு எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு கப்பல்களுடன் இணைந்து மூன்று கப்பல்களும் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்களால் கட்டமைக்கப்படும் … Read more

ஞானவாபி வழக்கில் அதிரடி தீர்ப்பு: வழக்கு கடந்து வந்த பாதை..!!

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. 1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு … Read more

அயோத்தியில் ரூ1,800 கோடியில் ராமர் கோயில்: அறக்கட்டளை கூட்டத்தில் அறிவிப்பு

அயோத்தி: அயோத்தியில் ரூ.1,800 கோடியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அதற்கான அறக்கட்டளை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை, அதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. இதுதொடார்பாக  ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அறக்கட்டளை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ராமஜென்ம பூமி வளாத்தில் மகத்தான மனிதர்கள், துறவிகளின் சிலைகளும் வைக்க … Read more

சைக்கிளில் ஜாலியாக சுற்றிய சிறுவனை கடித்து குதறிய நாய்.! – கேரளாவில் பயங்கரம்

சைக்கிளில் குழந்தைக்கு விளையாட்டு காட்டிகொண்டிருந்த சிறுவனை நாய் ஒன்று பாய்ந்து தாக்கி கடித்து குதறிய சம்பவம் கேரளா கோழிக்கோட்டில் நடந்துள்ளது. நாய்கள் எல்லாம் செல்லப்பிராணிகள் என்று கூறி நாய்களை வளர்ப்பது அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து நாய்களால் சிறுவர்கள் பாதிப்பிற்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. முன்னதாக கேரளாவில் தெருவில் வருபவர்களை 10-15 நாய்கள் ஒன்றாக துரத்தி கடித்து குதறும் சம்பவம் வீடியோவாக வெளியாகிய நிலையில், தற்போது சைக்கிளில் வந்த சிறுவனை நாய் கடித்து குதறிய … Read more

CAA-க்கு எதிரான அனைத்து மனுக்கள் மீதும் அக்.31-ல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: CAA-க்கு எதிரான அனைத்து மனுக்களும் அக்டோபர் 31-ம் தேதி 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கரோனா பெருந்தொற்று காரணமாக விசாரணை தடைபட்டு வந்த நிலையில், பல மாத இடைவெளிக்குப் பிறகு இன்று விசாரணைக்கு வந்தது. … Read more

'உயிரோடுதான் இருக்கேன்'… பென்சன் தொகை நின்றுபோனதால் பாடையில் வந்த முதியவர்

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்தவர் 102 வயதான துலி சந்த். இவருக்கு மாதா மாதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தோடு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது. துலி சந்த் இறந்துவிட்டார் என தெரிய வந்ததன் அடிப்படையில் அவரது பென்சன்தொகையை நிறுத்திவிடதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த துலி சந்த் சரியான ஆவணங்களை எடுத்துக்கொண்டு அதிகாரிகளிடம் முறையிட்டு வந்துள்ளார். ஆனாலும், ஏப்ரல் மாதம் அவருக்கு கிடைக்கவேண்டிய பென்சன் தொகை வரவில்லை. இதுகுறித்து, துலி சந்த் … Read more

செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி தினம் கொண்டாட கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு: செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி தினம் கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் ஹிந்தி தினத்தை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேச வாய்ப்பு

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின்போது, சீன அதிபரையும், பாகிஸ்தான் பிரதமரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் … Read more