ராஜஸ்தான் | ஆசிரியரின் பானையில் தண்ணீர் பருகியதால் தாக்குதல்: பட்டியலின மாணவர் பலி

புதுடெல்லி: ராஜஸ்தானில் தனியார் பள்ளியில் பட்டியலின மாணவர் ஒருவர் தன் ஆசிரியரின் பானையில் குடிநீர் பருகியதால் தாக்கப்பட்டார். அதில் காயமடைந்த அந்த மாணவர் பரிதாபமாகப் பலியாகினார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ளது சுரானா கிராமம். இதன் செய்லா காவல்நிலையப் பகுதியில் சரஸ்வதி வித்யா மந்திர் எனும் பெயரில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் இந்திர குமார் ( 9 வயது ) மெக்வால் என்ற மாணவர் மூன்றாம் வகுப்பு … Read more

உயர் கல்வி நிலையங்களில் எந்த மதத்தையும் சேராத மாணவர்களுக்கு சலுகை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மதமில்லை என்ற காரணத்திற்காக கல்வி சலுகைகளை நிராகரிக்கக் கூடாது என்று கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த 5 மாணவர்கள், கேரள உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்கள் மனுவில் அவர்கள், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய நாங்கள், எந்த மதத்தையும் சாராதவர்கள். உயர் கல்வி படிப்பதற்காக கல்லூரியில்  விண்ணப்பித்தபோது, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான சலுகை எங்களுக்கு நிராகரிக்கப்பட்டது. உயர் சமூகத்தில் பிறந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 164 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு … Read more

எவரும் எட்டாத இடத்தை பிடித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. யார் இந்த இந்தியாவின் Big Bull?

தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். பங்குச் சந்தையில் அவர் கடந்து வந்த பாதை குறித்து காணலாம். யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா? ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு பன்முகங்கள் உண்டு. இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் முன்னிலையிலிருந்தவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. சமீபத்தில் “ஆகாசா ஏர்” என்ற விமான நிறுவனத்தினையும் தொடங்கி தனது முதல் விமானத்தை வானில் பறக்க விட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்தியப் பங்குச் சந்தைகளின் தந்தை என்றும் இந்தியாவின் வாரன் பஃபெட் என்றும் … Read more

வீடுதோறும் தேசியக்கொடியை புறக்கணிக்கக் கோரும் உ.பி மடாதிபதி: முஸ்லிம்கள் தயாரிப்பதாகக் காரணம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மடத்தின் தலைவரான துறவி யத்தி நரசிங்காணந்த், வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுவதைப் புறக்கணிக்கக் கோரியுள்ளார். இதற்கு அக்கொடிகளை முஸ்லிம்கள் தயாரிப்பது காரணமாகத் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்திப் மகாகால் தாஸ்னா மடத்தின் தலைவராக இருப்பவர் யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி. சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு பெயர் போன இவர் வெளியிட்ட ஒரு வீடியோவும் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் துறவி நரசிங்காணாந்த், “மேற்கு வங்க மாநில முஸ்லிம்களால் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது. எனவே, வீடுதோறும் தேசியக்கொடி … Read more

தேசியக் கொடியை உயர்த்தி பிடிக்கும் இந்தியாவின் உழைக்கும் வர்க்கம்!

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் 75-வது சுதந்திர தினம் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி … Read more

காஷ்மீரில் அரசியலை விட்டு விலகிய ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒன்றிய அரசு பதவி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இருந்து முதன் முதலாக அதிக மதிப்பெண் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானவர் ஷா பைசல். இவரது தந்தை கடந்த 2002ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார். ஷா பைசல் கடந்த 2019ம் ஆண்டு தனது அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஈடுபட்டார். ‘காஷ்மீர் மக்கள் இயக்கம்’ என்ற கட்சியை தொடங்கினார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இவர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 6 … Read more

கடன் சுமையால் கேரள அரசு பேருந்துகள் நிறுத்தம் – கோவையில் காத்திருக்கும் பயணிகள்!

கடன் சுமை காரணமாக கேரள அரசு போக்குவரத்துத் துறையின் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டதால் கோவையிலிருந்து கேரளாவிற்குச் செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கேரள அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாயை விட டீசல் செலவு அதிகரித்து வருவதால் நீண்ட தூர சேவைக்கான பேருந்துகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவை பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. கடன் சுமை காரணமாக … Read more

பங்குச்சந்தை ஜாம்பவான், பெரும் தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

பங்குச்சந்தை ஜாம்பவான், பெரும் தொழிலதிபர், இந்தியாவின் வாரன் பஃபட் என்றெல்லாம் அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார். அவருக்கு வயது 62. இன்று அதிகாலை வீட்டில் சரிந்து விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு இஸ்கிமிக் மாரடைப்பு ஏற்பட்டு அதில் அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர். ராகேஷ் ஏற்கெனவே சிறுநீரகக் கோளாறுக்கும் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ராகேஷுக்கு மனைவியும் … Read more

இளங்கலை 4ம் கட்டம் 11 ஆயிரம் மாணவர்களுக்கு கியூட் தேர்வு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கியூட் இளங்கலை 4ம் கட்ட தேர்வானது 11 ஆயிரம் தேர்வர்களுக்காக மட்டும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக கியூட் என்ற பெயரில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், இளங்கலைக்கான 2ம் கட்ட நுழைவு தேர்வின்போது குளறுபடிகள் காரணமாக பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், தேர்வை சீர்குலைக்க நாசவேலைகள் நடப்பதாக வந்த அறிக்கைகளை தொடர்ந்து, பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், … Read more

ராமர் கோயில் பணி அடுத்தாண்டு முடியும்: அறக்கட்டளை உறுதி

சுல்தான்பூர்: அயோத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒன்றிய அரசு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்துள்ளது. சுல்தான்பூரில் நடந்த ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சியில் இந்த அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று கலந்து கொண்டார். அப்போது … Read more