திருமணம் ஆகாத பெண்ணும் கருக்கலைப்பு செய்யலாம்; கணவன் என்றாலும் பலவந்தம் குற்றமே: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் என வேறுபடுத்தாமல் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்புக்கு பாகுபாடு காட்டுவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கணவராக இருந்தாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்பட வேண்டும். இரு வயதுவந்த நபர்கள் ஒருமித்த கருத்துடன் உறவு கொண்டு எதிர்பாராமல், திட்டமிடாமல் கர்ப்பம் தரிக்க நேர்ந்தால், அந்தக் கரு 20 முதல் 24 வாரங்கள் வளர்ச்சியைத் … Read more

ஜம்முகாஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

காஷ்மீர்: ஜம்முகாஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏறுபடுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் வருகைதர இருக்கும் நிலையில் உதம்பூர் காவல் நிலைக்கு உட்பட டொமைன் சொயில் பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பேருந்தில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வெடிகுண்டு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டில் நடத்துனர் மற்றும் அவருடைய நண்பர் காயமடைந்தனர். பெட்ரோல் நிலையத்தில்  … Read more

காங். தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டி – சசிதரூரின் சர்ப்ரைஸ் பதிவு!

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் மட்டும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வது உறுதியாக உள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் அவருக்கு பதிலாக … Read more

துள்ளிக் குதித்த இளம்பெண்… ஆசுவாசப்படுத்திய ராகுல் காந்தி – ஒற்றுமை யாத்திரையில் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அவருடைய யாத்திரை 19-ஆம் நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், யாத்திரையின்போது அவரைப் பார்த்து துள்ளிக் குதித்து உணர்ச்சிவசப்பட்ட இளம் பெண்ணை அவர் ஆசுவாசப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆயிரம் மைல் நடக்கலாம்: தமிழ்நாட்டில் அவர் யாத்திரை மேற்கொண்டபோது நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சில பெண்கள் ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டு மணமகள் கொண்டு வருகிறோம் … Read more

காங். கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து விலகினார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்..!!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விலகினார். ராஜஸ்தானில் நடந்த உட்கட்சி பூசல்கள் தொடர்பாக சோனியா காந்தியிடம் அசோக் கெலாட் மன்னிப்பு கோரினார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின் போட்டியில் இருந்து விலகுவதாக அசோக் கெலாட் பேட்டியளித்தார். ராஜஸ்தான் முதலமைச்சராக நான் தொடர்வதா? இல்லையா? என்பதை சோனியா காந்தி முடிவு செய்வார் எனவும் கெலாட் கூறினார்.

ரூ.11 லட்சம் காருக்கு சர்வீஸ் சார்ஜ் 22 லட்சமா? -போலோ ஷோரூமின் ரசீதால் நொந்துப்போன கஸ்டமர்

பெங்களூருவில் நிகழ்ந்த பெரு வெள்ளத்தை கண்டு கர்நாடகா மட்டுமல்லாமல் நாடே பெரும் அதிர்ச்சிக்கு ஆளானது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொழிந்த மழையால் ஐ.டி. நகரம் நீரில் மூழ்கியது பெங்களூரு வாசிகளை பெருமளவில் பாதிக்கச் செய்தது. அதிலும் வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்களை மீட்டு அவற்றை சரிசெய்ய பெங்களூரு மக்கள் படாத பாடு படவேண்டியதாய் போனது. ஆகையால் ஆடி, லெக்ஸஸ் போன்ற ஃப்ரீமியம் கார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்திருந்தது. ஆனால் அதே பெங்களூருவைச் சேர்ந்த … Read more

புதுச்சேரியில் மின் தடையை கண்டித்து புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டம் வாபஸ்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் தடையை கண்டித்து புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 5 மணி நேரமாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில் மின் விநியோகம் வழங்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

’நாளை ஆணுறை கேட்பீர்கள்…’ ஐஏஎஸ் அதிகாரி பேச்சால் சர்ச்சை – தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

பீகாரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தில் இயக்குநராக இருப்பவர் , ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர், ”அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்” என்ற கருத்தரங்கில் பங்கேற்றுக் கலந்துரையாடினார். இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுரிடம் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கேட்டனர். அதில் ஒரு மாணவி, ‘’அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. ஆனால் எங்களுக்கு சானிட்டரி நாப்கின்களை ரூ.20 முதல் 30 ரூபாயில் ஏன் வழங்க முடியவில்லை? என்று கேள்வி கேட்டார். … Read more

63 ஸ்பூனா…! வயிறா இல்லை வேற எதாவதா – அதிர்ந்த டாக்டர்கள்

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் விஜயகுமார் (32) என்பவர், தீவிர வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த பார்த்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் ஏராளமான ஸ்பூன்களை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.  அவருக்கு, 2  மணிநேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரின் வயிற்றில் இருந்து தலைகள் இல்லாத 63 ஸ்பூன்களை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். மேலும், … Read more

திருப்பதியில் பிரமோற்சவ 3ம் நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் ேகாயில் பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான நேற்று மதியம் ரங்கநாதர் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக ஜப்பானில் இருந்து ஆப்பிள், மஸ்கட்டில் இருந்து திராட்சை, கொரியாவில் இருந்து பேரிக்காய், தாய்லாந்தில் இருந்து மாம்பழங்கள் மற்றும் அமெரிக்காவில் இருந்து செர்ரி பழங்கள் வரவழைக்கப்பட்டு மலையப்ப சுவாமிக்கு அலங்காரம் … Read more