இந்தியா டூ இலங்கை: அதிக அளவில் கடத்தப்படும் கஞ்சா – சர்வதேச தொடர்பா? அதிர்ச்சி பின்னணி

இந்தியாவில் இருந்து 12 ஆண்டுகளில் கடத்தி வரப்பட்ட 27 ஆயிரம் கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ள சூழலில், கடந்த 3 மாதங்களில் யாழில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 141 பேர் யாழ். போதை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றதாக தகவலும் வெளிவந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் பின்பு விடுதலைச் சிந்தனையே ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அந்த எண்ணத்தை மழுங்கடிக்கும் விதத்திலும் இந்த போதைப் … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்..!

கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆரியதான் முகமது இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1952-ம் ஆண்டு கேரள அரசியலில் கால்பதித்த ஆரியதான் முகமது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார். தொடர்ந்து, கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் 1958-ம் ஆண்டு வரை இருந்தார். கேரளாவின் 10-வது சட்டசபையின்போது, காங்கிரஸ் சட்டமன்ற குழு செயலாளராகவும் இருந்தார். 1998 முதல் 2001-ம் ஆண்டு வரை கேரள சட்டசபையின் பொது கணக்கு குழுவின் தலைவராகவும் … Read more

சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரை சூட்ட முடிவு

டெல்லி: செப்.28-ல் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகர் விமானநிலையம் ஷாஹீட் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துளளார். புதிய இந்தியாவை நோக்கி நாம் முன்னேறும்போது சுதந்திர போராட்ட வீரர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆந்திரா: மருத்துவமனையில்  ஏற்பட்ட தீ விபத்து – மருத்துவர் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

திருப்பதி அருகே தனியார் மருத்துவமனை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உள்ள பகத்சிங் காலனியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. .இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த கட்டடத்தின் முதலாவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் … Read more

அடேங்கப்பா.. திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு தலைவர் சுப்பா ரெட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர், “திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள் குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 960 இடங்களில் … Read more

மைசூரு தசரா விழா நாளை தொடக்கம்: ஜனாதிபதி பங்கேற்பு

பெங்களூரு: உலக பிரசித்தி பெற்ற தசரா விழா மைசூரு மாநகரில் நாளை கோலாகலமாக தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடக்கிறது. நாளை காலை  9.45 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, சாமுண்டேஸ்வரி தேவிக்கு பூஜை செய்து இதை தொடங்கி வைக்கிறார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை இதில் பங்கேற்கின்றனர். விழா முடியும் அக்டோபர் 3ம் தேதி வரை, தினமும் காலை முதல் மாலை வரை பல்வேறு போட்டிகளும், மாலை 6 மணி முதல் … Read more

ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.85,705 கோடி – திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பாரெட்டி தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.85,705 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையில் அறங்காவலர் குழுக்கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாமானிய பக்தர்களை கருத்தில் கொண்டு பல தீர்மானங்கள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரம்மோற்சவ விழா மற்றும் புரட்டாசி மாதம் முடிந்த பின்னர், அதிகாலை … Read more

CUET – PG தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: இந்தியா முழுவதும் 50 தேர்வு மையங்களில் மத்திய பல்கலைகழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தேர்வுகள் 6 கட்டமாக நடத்தப்பட்டன. புதிய கல்வி கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET) என்று செல்லப்படுகிறது. பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common university entrance test ) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த தேர்வை … Read more

அதிகாரிகள் தொல்லை கொடுத்ததால் விமானப் படை கல்லூரி மாணவர் தற்கொலை!!

புதுடெல்லியில் உள்ள உத்தம் நகரில் வசித்து வந்தவர் அங்கித் குமார் ஜா (27). இவர் விமானப்படையில் அதிகாரியாக பணி செய்ய தேர்ச்சி பெற்று இருந்தார். இதையடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான தொழில்நுட்ப கல்லூரியில் அங்கித் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி கல்லூரி விடுதி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அங்கித் குமார் ஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அறிந்ததும் ஜாலஹள்ளி போலீசார் … Read more

மாலையில் ஒன்றரை மணி நேரம் செல்போன், டி.வி.யை தவிர்க்கும் கிராமம்

மும்பை: மாலை நேரங்களில் செல்போன், டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை தவிர்க்கும் முறையை மகாராஷ்டிராவிலுள்ள ஒரு கிராமமக்கள் கடைபிடித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது மோஹித்யாஞ்சே வத்காவோன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை செல்போன், டி.வி. உள்ளிட்ட அனைத்து விதமான எலக்ட்ரானிக் சாதனங்களையும் அணைத்து வைத்துவிடுகின்றனர். இந்த ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் புத்தகம் படிப்பது, பாடப்புத்தகங்களில் எழும் சந்தேகங்களை … Read more