7 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன் மீது போக்சோ வழக்கு

ஹைதராபாத்தில் விடுதி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வார்டன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவிலுள்ள ஹயாத்நகர் பகுதியில் இயங்கிவருகிறது ஸ்ரீ சைதன்யா பள்ளி. அந்த பள்ளியில் விடுதி வார்டனாக பணிபுரிந்து வந்தவர் முர்ராம் கிருஷ்ணா. 35 வயதான இவர் விடுதியில் தங்கியிருந்த ஏழு சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த தகவலறிந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சண்டையிட்டுள்ளனர். உடனே ஹயாத்நகர் காவல் நிலையத்தில் வார்டன் கிருஷ்ணா மீது புகாரளிக்கப்பட்டது. அதனையடுத்து அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

குலாம் நபி ஆசாத்தின் புதிய அரசியல் கட்சி..! – இன்னும் 10 நாளில் வெளியாகப்போகும் அந்த அறிவிப்பு..?

காங்கிரஸ் கட்சியை விட்டு கடந்த மாதம் 26ம் தேதி விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், “இன்னும் 10 நாட்களில் … Read more

50 ஆண்டுகளுக்கு பின் பால்வள மாநாடு.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

உலக பால்வள உச்சிமாநாட்டை டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.  உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளரான இந்தியா, சர்வதேச அளவிலான பால் உற்பத்தியில் 23 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் உலக பால்வள உச்சிமாநாட்டை நாளை காலை பிரதமர் மோடி … Read more

ஒன்றிய அரசுக்கு எதிராக பேசாமல் இருந்தால் துணை ஜனாதிபதி பதவி!: மேகாலயா ஆளுநர் மீண்டும் பரபரப்பு கருத்து

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிராக பேசாமல் இருந்தால் துணை ஜனாதிபதி பதவி வழங்குவதாக கூறினார்கள் என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், அவ்வப்போது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சைகளை கிளப்புவார். குறிப்பாக விவசாயிகள் போராட்டம் குறித்து தொடர்ந்து அவர் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார். ஆளும் ஒன்றிய அரசுக்கு ஆளுநர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், சத்ய … Read more

அடுத்த 10 நாட்களில் புதிய கட்சி அறிவிக்கப்படும்- குலாம் நபி ஆசாத்

பத்து நாட்களில் புதிய கட்சி அறிவிக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் கடந்த மாதம் 26ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பி இருந்த நிலையில், அதில் காங்கிரஸ் கட்சியின் மீதும் ராகுல் காந்தியின் … Read more

'உங்களுக்கு நாங்க பொண்ணு தரோம்' – தமிழ் பெண்களிடம் வெட்கப்பட்ட ராகுல் காந்தி…

‘பாரத் ஜோடா யாத்ரா’ (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

ஆயுர்வேத மருத்துவரை தாக்கிய நோயாளிகளின் உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை!

மகாராஷ்டிராவில் ஆயுர்வேத மருத்துவரை தாக்கிய நோயாளிகளின் உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனே மாவட்டம் பாராமதி நகரில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவர் யுவராஜ் கெய்க்வாட் தனது வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டின் கதவை திறந்த மருத்துவரை வீட்டிற்குள் தள்ளி அந்த கும்பல் சரிமாரியாக தாக்கியது. Source link

மூத்த தெலுங்கு நடிகரும், மாஜி அமைச்சருமான உப்பலபதி கிருஷ்ணம் ராஜூ மரணம்: தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்

ஐதராபாத்: மூத்த தெலுங்கு நடிகரும், முன்னாள் அமைச்சருமான  உப்பலபதி கிருஷ்ணம் ராஜூ இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் தெலுங்கு நடிகர் உப்பலபதி கிருஷ்ணம் ராஜூ (83), கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். ‘பாகுபலி’ திரைப்பட புகழ் பிரபாஸ் இவரது மருமகன் ஆவார்.   உப்பலபதி கிருஷ்ணம் ராஜு மறைவுக்கு பிரதமர் … Read more

கர்நாடகா: மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை – குலைத்தே விரட்டியடித்த தெருநாய்கள்

மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை விரட்டி அடித்த தெரு நாய்கள். சிசிடிவி காட்சிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், மைசூர் ரிசர்வ் பேங்க் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் அருகே மரத்தின் மீது சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது இதனை கவனித்த தெரு நாய்கள் சத்தமாக குலைக்க துவங்கின. இதையடுத்து நாய்கள் குலைக்கும் சத்தத்தால் சிறுத்தை மரத்திலிருந்து கீழே குதித்து இரண்டு நாய்களை தாக்க முயற்சி செய்தது. நாய்கள் … Read more

இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சி: குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

பாரமுல்லா: இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை விட்டு கடந்த மாதம் 26ம் தேதி விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார். காங்கிரஸில் இருந்து விலகிய … Read more