திருமலையில் ரூ.23 கோடியில் புதிய பரகாமணி கட்டிடம் – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா தற்போது திருமலையில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் நாளான்று, சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். பின்னர், இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை மீண்டும் சுவாமியை தரிசனம் செய்தார். நேற்று காலை, திருமலையில் ரூ.23 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பரகாமணி கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது உண்டியல் காணிக்கை கோயிலுக்குள் எண்ணப்பட்டு … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாள் பெரிய விசேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளான நேற்று காலை சின்னசேஷ வாகனத்திலும் இரவு அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்றாவது நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் … Read more

பிரபல தயாரிப்பாளரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட்!!

பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர், வலைத்தள தொடர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். சீசன் 2 என்ற பெயரில் வலைதள தொடர் ஒன்றின் தயாரிப்பில் அவர் ஈடுபட்டார். இதில், மதஉணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் மற்றும் தேசிய சின்னம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி இந்தூரில், ஏக்தா கபூர் மற்றும் பிறர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பீகாரின் பெகுசராய் நகரை … Read more

ஆர்எஸ்எஸ் -ஐ தடை செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு பாஜக தலைவர்கள் பதில்

பாட்னா: “நான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று என்னால் பெருமையாகவும் வெளிப்படையாகவும் சொல்ல முடியும். ஆனால் லாலு பிரசாத் யாதவ்-ஆல் அவர் ஒரு பிஎஃப்ஐ உறுப்பினர் என்று சொல்ல முடியுமா என்று பாஜகவைச் சேர்ந்த கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல மத்தியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் சிங்,இதே சவாலை காங்கிரஸின் திக்விஜய் சிங்-மிடமும் விடுத்துள்ளார். மத்திய அரசு சமீபத்தில் விசாரணை அமைப்புகளால் சோதனைக்குள்ளான பிஎஃப்ஐ அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து புதன்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்து … Read more

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி  பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணம் ஆகாத பெண், கருக்கலைப்புக்கு அனுமதி கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நானே வருவேன்: தனுஷ் கட்-அவுட்க்கு பீர் அபிஷேகம் செய்த புதுச்சேரி ரசிகர்கள்

நடிகர் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியில் தனுஷ் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் தனுஷ் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் நானே வருவேன் திரைப்படத்தின் காலை காட்சி ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் அவருடைய பேனருக்கு மாலை … Read more

ஈரோடு பேராசிரியர் மணியின் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ – பொருளாதார மாணவர்களுக்கு புதிய பாடநூல் வெளியீடு

புதுடெல்லி: ஈரோடு கல்லூரிப் பேராசிரியர் என்.மணியின் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ நூல் டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதை இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் (ஐசிஎஸ்எஸ்ஆர்) உறுப்பினர் செயலாளர் வி.கே.மல்ஹோத்ரா வெளியிட்டார். புதிய கல்வித் திட்டத்தின்படி, பொருளாதாரம் படிக்கும் இளநிலைமற்றும் முதுநிலை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ எனும் புதிய பாடநூலை ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் என்.மணி எழுதியுள்ளார். சர்வதேச பொருளாதாரம் தொடர்பாக ஆங்கிலத்தில் என்.மணி எழுதியுள்ள மூன்றாவது நூல் இதுவாகும். இதனை … Read more

திருப்பதியில் 2ம் நாள் கோலாகலம் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் அருள்பாலிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் 9 நாட்கள் கொண்ட வருடாந்திர பிரமோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 7 தலை கொண்ட பெரியசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி 4 மாடவீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி  4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை அயிரக்கணக்காண பக்தர்கள் தரிசனம் செய்தனர். … Read more

உத்தராகண்ட்டில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிஷிகேஷில் சொகுசு விடுதி உள்ளது. இந்த சொகுசு விடுதியில் அங்கிதா பண்டாரி என்ற பெண் வரவேற்பாளரை புல்கிட் மற்றும் சொகுசு விடுதி மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் கொலை செய்து அருகில் உள்ள ஓடையில் வீசியதாக கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த கொலை சம்பவம் அங்கிதாவின் சமூக வலைதள நண்பர் ஒருவரின் மூலமாக வெளிச்சத்துக்கு … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 4,272 பேருக்கு கொரோனா… 27 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 4,272 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,83,360-ஆக உயர்ந்தது. * புதிதாக 27 பேர் … Read more