ஷின்சோ அபே இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்தினார். கடந்த ஜூலை 8ஆம் தேதி நாரா என்ற நகரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஷின்சோ அபே, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். இன்று அதிகாலை சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பூமியோ கிஷிடாவை சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவு குறித்தும், … Read more

வரலாற்றில் முதன்முறை: நேரலையில் உச்ச நீதிமன்ற விசாரணை!

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக வழக்கு விசாரணை நேரலை செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, யூ – டியூப் பயன்படுத்தி பார்ப்பதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நேரலையில் காண்பதற்கான தளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்து இருந்தார். இன்று முதல், அனைத்து அரசியல் சாசன அமர்வுகளின் விசாரணை நிகழ்வுகளும் நேரலையாக வெளியிடப்பட்டன. எனினும், யூ – டியூப்பில் உச்ச நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையாக வெளியிட்டும், பின்னர் அவற்றை நீதிமன்றம் … Read more

தேச உணர்வு உள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள்; காந்தி ஜெயந்தி அன்று பேரணி செல்வதில் என்ன தவறு?: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கேள்வி

புதுச்சேரி: தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செல்வதில் என்ன தவறு உள்ளது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். எல்லோருக்கும் சமம் என்று சொல்லும் போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை விதிக்க முடியும் என்று தமிழிசை வினவியுள்ளார். காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் உரிமை உள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பேரணி, அமைதி பேரணி தான் என்று திட்டவட்டமாக கூறினார். எவ்வளவு விமர்சனம் … Read more

மேலும் தள்ளிப்போகும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை – என்ன காரணம்?

ஜெட் ஏர்வேஸ் விமான சேவை மீண்டும் இம்மாத  இறுதிக்குள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவை மீண்டும் இந்த மாத (செப்டம்பர்) இறுதிக்குள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விமான உற்பத்தியாளர்கள் விமானங்களுக்கான ஆர்டரை எடுப்பதில் தாமதம் செய்து வருவதால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தொடங்குவது மேலும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்டர் தொடர்பான ஒப்பந்தங்களை விரைவுபடுத்த விமான … Read more

57 ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர்.. கிராம மக்கள் கொண்டாட்டம்..!

இந்தியாவில் முதல் எல்பிஜி சிலிண்டர் இணைப்பு கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகள் கடந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் மியான்மார் எல்லையை ஒட்டிய சாங்லாங்க் மாவட்டத்தின் மியாவ் டிவிஷன் பகுதிக்கு உட்பட்ட விஜயநகர் என்ற கிராமத்தில் சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகரில் இருந்து … Read more

கார், பணம் பறித்த வழக்கில் நிழல் உலக தாதாவின் உதவியாளர் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளர் ரியாஸ் பதி என்பவரை மிரட்டி பணம் பறித்தல் புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வெர்சோவா போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வெர்சோவா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.7.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரியாஸ் பதி பறித்துள்ளார். அதையடுத்து மிரட்டி பணம் பறித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரியாஸ் பதி … Read more

வரலாற்றில் முதன்முறை: பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கு விசாரணை நேரலை

உச்சநீதிமன்றத்தின் மூன்று அரசியல் சாசன அமர்வுகள் வரலாற்றில் முதன்முதலாக நேரலை செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த மாதம் 26-ம் தேதி பதவி ஏற்று கொண்ட யு.யு. லலித் உச்சநீதிமன்ற நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது வாரத்தின் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முக்கியமான வழக்குகளை விசாரணை செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான … Read more

“பாலியல் தொழிலின் கூடாரமாகவே இருந்தது” – உத்தராகண்ட் சொகுசு விடுதியின் முன்னாள் ஊழியர்கள் வாக்குமூலம்

டேராடூன்: உத்தராகண்ட் சொகுசு விடுதி ஒன்றில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்த அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண்ணின் கொலை வழக்கில், அந்த விடுதியின் வேலை பார்த்த முன்னாள் ஊழியர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இதில் வரவேற்பாளராக அங்கிதா … Read more

புதுவையில் பதற்றம்!!தமிழ்நாடு அரசு பேருந்துகள் மீது தாக்குதல்…

திமுக எம்.பி. ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசுவதாகவும், அதைக்கண்டித்தும் புதுவையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று (செப்.27) முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று புதுவையில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. டெம்போக்களும் ஓடவில்லை. தமிழ்நாடு அரசு பேருந்துகள் மட்டுமே காலையில் இயக்கப்பட்டது. இன்று காலை சுமார் 5 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி தமிழ்நாடு அரசு பேருந்து வந்தது. வில்லியனூர் மேம்பாலம் … Read more

ராஜஸ்தான் காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம் | சச்சின் பைலட்டுக்கு தூதுவிடும் பாஜக

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் நீடித்து வரும் சுழலில், அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவருமான சச்சின் பைலட்டுக்கு பாஜகவின் கதவுகள் திறந்திருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் சத்தீஷ் பூனியா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் கட்சித் தலைவராகும் பட்சத்தில், சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டது. இதற்கு அஷோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 90 பேர் எதிர்ப்பு … Read more