மக்கள் நலப் பணியாளர்களுக்கு 2 வார அவகாசம் விரும்பினால் பணியில் சேர்ந்து கொள்ளுங்கள்: உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: அடுத்த இரண்டு வாரத்தில் விருப்பப்படும் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி அஜய் ரஸ்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் குமணன், ‘மகாத்மா காந்தி ஊரக … Read more

விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் இருந்த நிலையில், பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தன்னுடைய தனிப்பட்ட சட்டப்பிரிவு 142 அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்நிலையில், நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘சிறையில் நளினி நன்னடத்தையுடன் இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவரால் எந்தவித … Read more

ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனங்களில் வேலை வழங்குவதாக கூறி ரூ.3 கோடி வசூலித்து முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘விசாரணை நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்லக் கூடாது. காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்,’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி 12ம் தேதி ஜாமீன் வழங்கியது.  இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் … Read more

இல்லந்தோறும் தேசியக்கொடி திட்டம் – மக்களின் உற்சாகத்துக்கு பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றும் திட்டத்தில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மக்களின் இந்த உணர்வு மற்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது” என்றும் பிரதமர் கூறியுள்ளார். ரக்ஷாபந்தன் தினத்தையொட்டி தாம், இளைஞர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு மூவர்ணக்கொடி வழங்குவது குறித்த வீடியோ ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: “இந்தியர்கள் அனைவரும் மூவர்ணக்கொடியுடன் சிறப்பு பிணைப்பைக் … Read more

ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 3 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர். அதிகாலையில் தர்ஹால் பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். உடனடியாக வீரர்கள் அப்பகுதியை சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்கும் போது மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த லக்ஷ்மணன் … Read more

ஸ்டீல், ஜவுளி அதிபர் வீடுகளில் சோதனை ரூ.56 கோடி, 32 கிலோ தங்கம் ரூ.390 கோடி சொத்து பறிமுதல்: 13 மணி நேரம் பணத்தை எண்ணிய அதிகாரிகள்

ஜால்னா: ஸ்டீல் மற்றும் ஜவுளி அதிபர் வீடு, அலுவலகங்களில் நடந்த ஐடி ரெய்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.56 கோடி, ரூ.32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, அவுரங்காபாத் 9+-ஜால்னாவில் உள்ள ஸ்டீல் மற்றும் ஜவுளி அதிபர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.56 கோடி, 14 கோடி மதிப்புள்ளான 32 கிலோ தங்க நகைகள் … Read more

தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில் வீடு தோறும் தேசிய கொடி ஏற்றும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டுள்ளார். இதற்காக தபால் அலுவலகங்களில் தேசிய … Read more

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை வாங்கப் போகும் காங்கிரஸ் எம்.பி..!- யார் தெரியுமா..?

காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் உள்பட பல இந்தியர்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிதரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது. 23 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் அவையில் தூதராக பணியாற்றிய சசிதரூர், காங்கிரஸ் … Read more

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்; பொது போக்குவரத்து வாகனங்களை மட்டும் பயன்படுத்துங்கள்: அரசு, சொந்த வாகனங்களை தவிர்க்க டெல்லி போக்குவரத்து துறை உத்தரவு

புதுடெல்லி: பணி நிமித்தமான பயணம் மற்றும்  பணிக்கு வந்து செல்லும் பயணம் என அனைத்துக்கும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள், வாடகை வாகனங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை மட்டும் பயன்படுத்துங்கள் என டெல்லி போக்குவரத்து துறை, தனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மாநில போக்குவரத்து துறை தற்போது தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போக்குவரத்து துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள், நகரில் அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் … Read more

ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி – பிஹாரில் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார்

பாட்னா: பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் சார்பில் 8-வது முறையாக பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக 74 இடங்களில் … Read more