விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் இன்று தகர்ப்பு

நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று தகர்க்கப்படுகிறது. நொய்டாவில் ஏடிஎஸ் என்ற கிராமத்தில் எமரால்டு கோர்ட் என்ற குடியிருப்பு பகுதியில், தி டவர்ஸ் அபெக்ஸ் என்ற பெயரில் 32 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. அதன் அருகே சேயன் என்ற பெயரில் 29 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரட்டை கோபுரங்கள் போல் காட்சியளிக்கும். 100 மீட்டர் உயரத்துக்கு … Read more

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் இன்று இந்தியா வருகை

டெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித் இன்று இந்தியா வரவுள்ளார். 2 நாள் சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.

நடிகை சோனாலி போகட் மரணம் – கிளப் உரிமையாளர் உட்பட மேலும் 2 பேர் கைது

பனாஜி: ஹரியாணாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட் (42), கடந்த 23-ம் தேதி கோவாவுக்கு நண்பர்களுடன் சுற்றுப்பயணம் சென்றார். இந்நிலையில் அவர் வடக்குகோவாவில் உள்ள அஞ்ஜுனாவில் உள்ள புனித அந்தோணி மருத்துவமனையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பலத்த காயம் இருந்ததைத் தொடர்ந்து கோவா போலீஸார் கொலை வழக்காக இதைப் பதிவு செய்தனர். இதுகுறித்து கோவா போலீஸ் ஐ.ஜி ஓம்வீர் சிங் கூறும்போது, ‘‘கிளப் ஒன்றில் நடிகை சோனாலி, அவரது உதவியாளர் சுதிர் … Read more

நொய்டா சூப்பர் டெக் இரட்டை கோபுரம்: 9 வினாடிகளில் இன்று தரைமட்டாகிறது

நொய்டாவில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளன. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரத்தின் பெயர் சியான். இது, 31 மாடிகளை உடையது; உயரம் 318 அடி. இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு … Read more

சீனக் கப்பல் வருகை குறித்த சர்ச்சை-சீனத் தூதரகத்திற்கு இந்தியா பதில்

இலங்கைக்கு தற்போது உதவிகள்தான் தேவை என்றும், தேவையில்லாத நெருக்குதல் அல்ல என்று கொழும்புவில் உள்ள சீனத் தூதரிடம் கப்பல் வருகையை ஆட்சேபித்து இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சீனாவின் உளவுக் கப்பல் இலங்கை அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து திரும்பிச் சென்றுள்ளது. எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பாதுகாப்பு காரணங்களைக் கூறி இலங்கையின் இறையாண்மையில் இந்தியா தலையிடுவதாக சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள இந்திய அரசு, தேவையற்ற சர்ச்சைகளையும் மற்றொரு நாட்டின் தேவையில்லாத … Read more

நொய்டாவில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கட்டிடம் மதியம் 2.30 மணிக்கு தகர்ப்பு: மக்கள் வெளியேற்றம்: விமானங்களுக்கு தடை

புதுடெல்லி: நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள், இன்று மதியம் 2.30க்கு வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் எம்ரால்ட் கோர்ட் என்ற வளாகத்துக்குள் கட்டப்பட்டுள்ள 40 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இவற்றை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ‘எடிபைஸ்’ என்ற நிறுவனம், 3,700 கிலோ வெடிமருந்தை … Read more

அயோத்தியின் ‘கல்வி குரு’ – சீருடையில் பாடம் கற்பிக்கும் காவல் உதவி ஆய்வாளர்

புதுடெல்லி: உத்தரபிரதேசம் அயோத்தியில் பணிபுரியும் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் ஏழை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவரை ‘வர்திகே குருஜி (கல்வித் துறவி)’ என்றழைக்கின்றனர். உ.பி. காவல் துறையில் கடந்த 2015-ம் ஆண்டில் உதவி ஆய்வாளராக இணைந்தவர் ரஞ்சீத் யாதவ். அயோத்தியின் நயாகாட் காவல் நிலையத்தில் பணியாற்றிய அவர் ரோந்து செல்லும்போது, கண்களில்பட்ட காட்சி ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்போது, கோயில்களில், மடங்களில் பிச்சை எடுப்பவர்களில் பலர் சிறுவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் … Read more

ரயில் நிலையத்தில் தாயின் அருகே தூங்கிய 7 மாத குழந்தை கடத்தல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

உத்தர பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இருந்து 7 மாத குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். மதுரா ரயில் நிலைய மேடையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவன் அக்கம் பக்கம் நோட்டமிட்டு, அந்த குழந்தையை அங்கிருந்து தூக்கி சென்றான். இதுகுறித்த புகாரின்பேரில் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் … Read more

10 ஆயிரத்துக்கு பதில் 19,500 பேர் டெல்லி சிறைகளில் 2 மடங்கு கைதிகள்: கண்காணிப்பில் சிக்கல்

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் அதி பயங்கர குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அவர்களை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  டெல்லியில் திகார், ரோகினி மற்றும் மண்டோலி ஆகிய மூன்று மத்திய சிறைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக கருதப்படும் திகார் சிறையில் 5,200 கைதிகள் வரை அடைக்கப்படலாம். ஆனால், தற்போது இதில் 13,183 கைதிகள் உள்ளனர். 1,050 பேர் அடைக்கக்கூடிய மண்டோலி சிறையில் 2,037 கைதிகள் உள்ளனர். ரோகினியில் 3,776 பேருக்கு … Read more

கர்நாடக அரசு மீது ஊழல் புகார் தெரிவித்து பிரதமர் மோடிக்கு 13 ஆயிரம் பள்ளிகள் கடிதம்

பெங்களூரு: கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், ”கர்நாடகாவில் அரசின் திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள். இதுபற்றி முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் கெம்பண்ணா அண்மையில், தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனி ரத்னா தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். … Read more