இந்தியாவில் ஒரே நாளில் 9,436 பேருக்கு கொரோனா… 157 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 9,436 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,08,132 ஆக உயர்ந்தது. * புதிதாக 157 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

நொய்டா இரட்டை கோபுரம் இன்று தகர்ப்பு: குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்-மின்சாரம் துண்டிப்பு

நொய்டாவில் உள்ள பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு  வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளது.   உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டைக் கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரமான ‘சியான்’ 31 மாடிகளை உடையது; இதன் உயரம் 318 அடி. இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு … Read more

கனடா மாநாட்டில் சீனாவில் தயாரான இந்திய தேசியக் கொடி – இறக்குமதி செய்தது ஏன் என தமிழக சபாநாயகர் கேள்வி

ஹாலிபேக்ஸ்: கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடக்கிறது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கலந்து கொண்டனர். அப்போது இந்தியக் குழுவினர் தேசியக் கொடிகளுடன் மாநாட்டுக்கு சென்றனர். அந்தக் கொடியில் ‘மேட் இன் சீனா’ என முத்திரையிடப்பட்டிருந்ததை கண்டு இந்தியக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை மாநில சபாநாயகர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொண்டு சென்றனர். தற்போது இந்த விவகாரம் … Read more

'காங்கிரசுக்கு இப்படிப்பட்ட ஒருவர் தான் தலைமையேற்க வேண்டும்' – பிரித்விராஜ் சவான் விருப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு பொம்மை தலைவர் இருக்கக் கூடாது என்றும், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்றும் பிரித்விராஜ் சவான் தெரிவித்து உள்ளார். நாட்டின் பழமைவாய்ந்த அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இருந்து, மூத்தத் தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி வருவது, அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களின் ராஜினாமா அக்கட்சிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. … Read more

சீன குட்டை வைரஸ் பஞ்சாப்பில் தாக்குதல்: நெற்பயிர் வளர்ச்சி பாதிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நெற்பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கக் கூடிய நெல் கருப்பு குட்டை வைரஸ் (எஸ்ஆர்பிஎஸ்டிவி) வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் கடந்த 2001ம் ஆண்டு தெற்கு சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இது, தற்போது பஞ்சாப் மாநிலம் முழுவதும் பரவியதோடு, அண்டை மாநிலங்களுக்கும் சென்றுள்ளது. இதனால், நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படுவதாக லூதியானாவின் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் சப்பிர் சிங் கோசல் கூறி உள்ளார். வளர்ச்சி குன்றிய நெற்பயிர்கள், வழக்கமான பயிர்களை … Read more

வங்கதேசத்துக்கு நதிநீர், வெள்ள விவரம் கூடுதலாக வழங்கல் – இருதரப்பு அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் இந்தியா தகவல்

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து வங்கதேசத்தில் பாயும் நதிகளின் நீர், மழைக் காலங்களில் பாய்ந்தோடும் வெள்ளம் ஆகியவை தொடர்பான விவரங்கள் கூடுதலாக அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-வங்கதேச நதிகள் ஆணையத்தின் 38-வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். வங்கதேச பிரதிநிதிகள் குழுவுக்கு அந்நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர் ஜாஹீத் ஃபரூக் தலைமை வகித்தார். வங்கதேச நீர் வளங்கள் … Read more

ரயில் பயணிகளின் தகவல் விற்பனை: ஐஆர்சிடிசி பல்டி: ரூ.1000 கோடி வருவாய் போச்சு

புதுடெல்லி:  ரயில் பயணிகளின் தகவல்களை தனியாருக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் முடிவை ஐஆர்சிடிசி கைவிட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவான ‘ஐஆர்சிடிசி’யின் இணையதளத்தின் மூலமாகவே பயணிகள் ரயில் பயணத்துக்கான முன்பதிவுகளை செய்கின்றனர். இதற்காக, தங்களின் பெயர், வயது, முகவரி, செல்போன் எண், இ-மெயில் உள்ளிட்ட தகவல்களை அளிக்கின்றனர். இதுபோல், 20 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஐஆர்சிடிசி வைத்துள்ளது. இவற்றை வணிக நோக்கங்களுக்காக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, ரூ.1000 கோடி வருவாய் திரட்ட … Read more

விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் இன்று தகர்ப்பு

நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று தகர்க்கப்படுகிறது. நொய்டாவில் ஏடிஎஸ் என்ற கிராமத்தில் எமரால்டு கோர்ட் என்ற குடியிருப்பு பகுதியில், தி டவர்ஸ் அபெக்ஸ் என்ற பெயரில் 32 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. அதன் அருகே சேயன் என்ற பெயரில் 29 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரட்டை கோபுரங்கள் போல் காட்சியளிக்கும். 100 மீட்டர் உயரத்துக்கு … Read more

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் இன்று இந்தியா வருகை

டெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித் இன்று இந்தியா வரவுள்ளார். 2 நாள் சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.

நடிகை சோனாலி போகட் மரணம் – கிளப் உரிமையாளர் உட்பட மேலும் 2 பேர் கைது

பனாஜி: ஹரியாணாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட் (42), கடந்த 23-ம் தேதி கோவாவுக்கு நண்பர்களுடன் சுற்றுப்பயணம் சென்றார். இந்நிலையில் அவர் வடக்குகோவாவில் உள்ள அஞ்ஜுனாவில் உள்ள புனித அந்தோணி மருத்துவமனையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பலத்த காயம் இருந்ததைத் தொடர்ந்து கோவா போலீஸார் கொலை வழக்காக இதைப் பதிவு செய்தனர். இதுகுறித்து கோவா போலீஸ் ஐ.ஜி ஓம்வீர் சிங் கூறும்போது, ‘‘கிளப் ஒன்றில் நடிகை சோனாலி, அவரது உதவியாளர் சுதிர் … Read more