சசி தரூருக்கு பிரான்ஸ் செவாலியர் விருது

திருவனந்தபுரம்: உலகம்  முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பிரான்ஸ் அரசு  உயரிய செவாலியர் விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. மறைந்த நடிகர் திலகம்  சிவாஜி கணேசனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ்  எம்பி சசி தரூருக்கு செவாலியர் விருது கிடைத்து உள்ளது. பேச்சு மற்றும்  எழுத்துத் துறையில் பல சாதனைகளை படைத்ததற்காக இந்த விருது அவருக்கு  வழங்கப்படுகிறது. இது குறித்து சசி தரூர் கூறுகையில், ‘எனக்கு உயரிய செவாலியர் விருதை வழங்க  தீர்மானித்துள்ள … Read more

உச்ச நீதிமன்றம் உத்தரவு: ஹஜ் கமிட்டிகள் பற்றி தகவல் தர வேண்டும்

புதுடெல்லி: ஹஜ் கமிட்டி அமைத்தது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘ஹஜ் கமிட்டி சட்டத்தின்படி, ஹஜ் கமிட்டி அமைப்பதிலும், அதற்கான நிதியை பயன்படுத்துவதிலும் சில மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் முறையாக செயல்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்’ என ஹஜ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஹபிஸ் நவுசத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் … Read more

“ஏதாவது தவறு நடந்திருந்தால் இறந்திருக்கலாம்” – ‘அஸ்ஸாம் நாட்கள்’ குறித்து ஏக்நாத் ஷிண்டே

மும்பை: அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி பத்து நாட்கள் குவஹாத்தியில் முகாமிட்டிருந்தது குறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி ஏக்நாத் … Read more

துவரம் பருப்பு பதுக்கலை கண்காணிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: துவரம் பருப்பின் விலை உயர்ந்து வருவதால் பதுக்கலை தடுக்க வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்களை கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 2வது வாரத்தில் இருந்து துவரம் பருப்பின் விலை உயர்ந்து வருகிறது. சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கும் விதமாக சிலர் இதன் விற்பனையை கட்டுப்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ‘அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ம் … Read more

கருவிழிப் படலம் அறுவை சிகிச்சை; பன்றி தோல் மூலம் 20 பேருக்கு பார்வை: இந்தியா, ஈரான் ஆய்வில் வெற்றி

புதுடெல்லி: பன்றியின் தோல் மூலமாக கருவிழிப்படலம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 20 பேருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. கார்னியா எனப்படும் கருவிழிப்படலம் சேதமடைந்ததால் உலகம் முழுவதும் சுமார் 1.27 கோடி பேர் பார்வை இழந்தோ, பார்வை குறைபாட்டுடனோ பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் கண்களில் இருந்து கருவிழிப்படலம் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும். இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் கருவிழிப்பட மாற்று அறுவை … Read more

இந்தியாவில் 60% யானை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘ஆசியாவில் வசிக்கும் யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் உள்ளன,’ என்று உலக யானை தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். சர்வதேச யானைகள் தினம் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் யானைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.இந்நிலையில், சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `உலக யானைகள் தினத்தில், யானையைப் பாதுகாக்கும் நமது நடவடிக்கைகளை அதிகரிக்க … Read more

தேசிய கொடி விற்பனையில் சாதனை படைத்த தபால் நிலையங்கள்..!- வசூல் எவ்வளவு தெரியுமா..?

வருகின்ற 75வது சுதந்திரத்தினை முன்னிட்டு இந்தியர்கள் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டர். இந்நிலையில் பாஜக ஆதரவாளர்கள் பலர் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். இதற்கு எதிராகவும் பலர் சமூக ஊடங்களில் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். தேசிய கொடியை தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுப்பு வெளியானது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனையாகி உள்ளதாக … Read more

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

டெல்லி: மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங் போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். tnmedicalselection.org, tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.

ரூ.20 கூடுதலாக வசூலித்த ரயில்வே: 22 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் வென்ற உ.பி வழக்கறிஞர்

மதுரா: பயண கட்டணத்தில் ரூ.20 கூடுதலாக வசூலித்த இந்திய ரயில்வேவுக்கு எதிரான வழக்கில் சுமார் 22 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார் வழக்கறிஞர் ஒருவர். அது குறித்து சற்று விரிவாக பார்ப்போம். கடந்த 1999 வாக்கில் தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து மொராதாபாத் செல்லும் நோக்கில் இரண்டு ரயில் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார் வழக்கறிஞரான துக்கநாத் சதுர்வேதி. அவரது இரண்டு டிக்கெட்டுக்குமான பயண கட்டணம் ரூ.70. அதற்கான ரசீதும் … Read more

மருமகளின் தலையை வெட்டிய மாமியார் ..! – ஆந்திராவில் வெறிச்செயல்..!

எல்லா கால கட்டத்திலும் மாமியார் மருமகள் சண்டை என்பது இன்றியமையாத ஒன்று. அவ்வப்போது சில பல பிரச்சனைகள் குடும்பத்தில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திராவில் மருமகளின் தலையை துண்டிக்கும் அளவிற்கு மாமியார் மருமகள் இடையே மோதல் ஏற்ப்பட்டுள்ளது . ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள கொத்தபேட்டை ராமாபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. சுப்பம்மாவின் மகனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசுந்தரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. பின்னர் சுப்பம்மா, வசுந்தரா இடையே சண்டை ஏற்பட்டதால் … Read more