அக்னிபாதை திட்டத்துக்கு எதிரான மனு – மத்திய அரசு பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. முப்படைகளில் 17.5 வயது முதல் 21 வரையிலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. … Read more

இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார் 60 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. வெளிநாட்டு கடன்களையும் திருப்பி செலுத்துவதை நிறுத்தி உள்ளது. … Read more

கர்நாடக சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 24 பேர் வேனில் பெங்களூரு சென்றனர். நேற்று அதிகாலை துமக்கூரு மாவட்டம் சிராவை அடுத்துள்ள கலம்பெல்லா அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது வேன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்த 15 பேரை மீட்டு துமக்கூரு அரசு … Read more

டெல்லி அரசை கவிழ்க்க பாஜ ரூ.800 கோடி பேரம்: முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி அரசை கவிழ்க்க ஆபரேசன் தாமரை மூலம் பாஜ முயற்சித்து வருவதை தடுப்பது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்கள் கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் வழங்க மோடி தலைமையிலான பாஜவினர் தயாராக இருக்கிறார்கள். டெல்லி அரசை கவிழ்ப்பதற்காக மட்டும் வைத்துள்ள இந்த ரூ.800 கோடி ரூபாய் எங்கிருந்து பாஜவுக்கு … Read more

பிஹாரில் விஷ்ணு கோயிலில் நுழைந்த முஸ்லிம் அமைச்சர் – தடையை மீறி கருவறை வரை சென்றதாக நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: பிஹாரில் புத்த கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார். இங்குள்ள புத்தர் கோயில் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. அதேசமயம், இதன் அருகில் இந்துக்களின் விஷ்ணு பாதம் என்ற கோயிலும் உள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகி, மீண்டும் முதல்வரான பிறகு கடந்த திங்கட்கிழமை இக்கோயிலுக்கு வருகை தந்தார். அவரது அமைச்சரவை சகாவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவருமான முகம்மது இஸ்ரேல் மன்சூரியும் அப்போது முதல்வருடன் இருந்தார். … Read more

பிரேத பரிசோதனை முடிந்தது நடிகை சோனாலி உடலில் காயங்கள்: பலாத்கார முயற்சியில் கொலையா?

பனாஜி: பாஜ மகளிரணி துணைத் தலைவரும், நடிகையுமான சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனையில் உடலில் பலவந்தம் செய்யப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாக அதில் தெரிய வந்துள்ளது. அரியானாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட், டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். பின்னர், இவர் பாஜ.வில் இணைந்தார். 2019ம் ஆண்டு நடந்த இம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில்  போட்டியிட்டு தோற்றார். பாஜ.வின் மகளிரணி துணைத் தலைவராக இருந்த இவர், கடந்த வாரம் கோவாவுக்கு சுற்றுலா சென்றார். கடந்த செவ்வாயன்று திடீரென … Read more

டிஆர்டிஓ புதிய தலைவர் காமத்: ஒன்றிய அரசு நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவராக சதீஷ் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இவர் தற்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதையடுத்து, டிஆர்டிஓ.வின் கீழ் செயல்படும் கடற்படை அமைப்பு மற்றும் சாதனங்கள் பிரிவின் பொது இயக்குநராக பணி புரிந்து வரும் சமீர் வி காமத், டிஆர்டிஓ.வின் புதிய செயலாளர் மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை ஒன்றிய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த … Read more

காஷ்மீர் எல்லையில் கைதான பாக்., தீவிரவாதி: ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள்

காஷ்மீர்: ஜம்மு எல்லை அருகில் பிடிபட்ட தீவிரவாதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் ரத்தம் கொடுத்து காப்பாற்றியுள்ளனர். காஷ்மீரில் நேற்றுமுன்தினம் 72 மணி நேரத்தில் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. மேலும் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். ரஜோரி மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற அவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இந்த நபர் ஏற்கெனவே ஒருமுறை எல்லையில் ஊடுருவிய போது மனிதாபிமான அடிப்படையில் அவரை பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தனர். ஆனால் அதே நபர் தற்போது மீண்டும் ஊடுருவல் … Read more

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக சமீர் வி காமத் தேர்வு.!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக சமீர் வி காமத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது இப்பதவியை வகித்து வரும் சதீஷ் ரெட்டி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டதை அடுத்து டிஆர்டிஓ-வின் தலைவராகவும், செயலாளராகவும் சமீர் வி காமத் நியமிக்கப்பட்டுள்ளார். 1985ம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியில் படிப்பில் பி.டெக் முடித்த இவர், அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று 1989ஆம் ஆண்டில் டிஆர்டிஓ-வில் விஞ்ஞானியாக இணைந்தார். Source link

விலை உயர்வை கட்டுப்படுத்த கோதுமை மாவு ஏற்றுமதிக்கு தடை

புதுடெல்லி: கோதுமை மாவு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. உலகளவில் ரஷ்யா, உக்ரைன் கோதுமை ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளன. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையேயான போரினால் சர்வதேச சந்தையில் கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய கோதுமையின் தேவை அதிகரித்தது. இது நாட்டில் கோதுமை மாவு விலையில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில், கோதுமை … Read more