சிபிஐ ரெய்டு.. சபாநாயகர் ராஜினாமா.. நம்பிக்கை வாக்கெடுப்பு – என்ன நடக்கிறது பீகாரில்?

பீகார் மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்தத் தலைவர்களின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பழைய கூட்டணி கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து, மீண்டும், ஆட்சி அமைத்துள்ளார். … Read more

இலவசங்கள் தொடர்பாக ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க கூடாது?.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

டெல்லி: இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு ஏன் ஆலோசிக்க கூடாது? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இலவசங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய ஏற்கனவே ஒரு குழுவை உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. இலவசங்கள் தொடர்பான வழக்குகள் 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது. இலவசங்கள் வழக்கை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் காங். தலைவர் சோனியா காந்தி சந்திப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று சந்தித்துப் பேசினார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த திரவுபதி முர்மு நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து திரவுபதி முர்முவை பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை … Read more

அம்ரிதா மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

சண்டிகர்: அரியானா மாநிலம் பரிதாபாத்தில் கட்டப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 2,500 படுக்கை வசதிகளுடன் கூடிய அம்ரிதா மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி பிரதமர் தொடங்கி வைத்தார்.

முதியவரை கட்டி வைத்து அடித்தே கொன்ற கொடூரம்: ஒடிசாவில் பயங்கரம்!

மனிதாபிமானத்தோடு நடக்கும் செயல்கள் தொடர்பான காட்சிகள், போட்டோக்கள் சமூக வலைதளங்களில் காணக் கிடைத்தாலும் இரக்கமின்றி மனிதர்களை மனிதர்களே சரமாரியாக தாக்கும் வீடியோக்கள் பல தினந்தோறும் கண்ணில் அகப்பட்டு விடுகின்றன. அதுபோல, எள்ளளவும் கருணையில்லாமல் முதியவர் ஒருவரை கட்டி வைத்து அடித்தேக் கொன்ற சம்பவம் குறித்துதான் பார்க்கப் போகிறோம். ஒடிசா மாநிலத்தில் கொராபுத் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மலைக் கிராமத்தில்தான் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கும் வீடியோவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை மின்சார கம்பத்தில் … Read more

அக்னிபாதை திட்டத்தின் கீழ் 82 ஆயிரம் விண்ணப்பங்கள் – கடற்படையில் சேரும் பெண்களுக்கு ஒடிசாவில் பயிற்சி

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேரும் பெண்களுக்கு ஒடிசா மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுவரை 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர். ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் அக்னிபாதைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆள் தேர்வு பணிகளை ராணுவம் தொடங்கியுள்ளது. ராணுவம்,கடற்படை, விமானப் படை எனஅனைத்திலும் அக்னிபாதை திட்டத்தின் கீழ் வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். கடற்படையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் … Read more

சோனியாவுக்கு என்னாச்சு? ராகுல், பிரியங்கா உடன் வெளிநாடு பயணம்!

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி (75) கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும் அவருடன் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த தேதியில் பயணம் மேற்கொள்கின்றனர், எங்கு சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர், எப்போது நாடு திரும்புவார்கள் என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. … Read more

காங்கிரஸ் அடுத்த தலைவர் யார்?.. ஆக. 28-ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு..!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். அவருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போவதால் கட்சி பணிகளில் தீவிரம் காட்ட முடியவில்லை. இதனால், கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. இந்த சூழல்நிலையில், … Read more

பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. குறைவான கட்டணத்தில் பயணம்.. – ‘கேரள சவாரி’ செயலிக்காக காத்திருக்கும் மக்கள்

திருவனந்தபுரம்: பெருநிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் டாக்ஸி சேவையை ‘கேரள சவாரி’ என்ற பெயரில் மாநில அரசு தொடங்கி உள்ளது. தற்போது தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் 321 ஆட்டோ, 228 கார்கள் தங்களை இணைந்துள்ளன. அதிலும் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் 22 பெண் ஓட்டுநர்களும் உள்ளனர். குறைவான வாடகை, பாதுகாப்பான பயணம் இவை இரண்டும் இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறும் கேரள தொழில் … Read more

பீகார் அரசியலில் பரபரப்பு: ஒரு பக்கம் நம்பிக்கை வாக்கெடுப்பு.. மறுபக்கம் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு

பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் முன்னாள் முதுல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வருகின்றார். உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, கடந்த 2005 மற்றும் 2009 வரையிலான காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது நிலத்தை பெற்றுக்கொண்டு ரயில்வேயில் வேலை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த … Read more