மூணாறில் பயங்கர நிலச்சரிவு: 450 தமிழக தொழிலாளர்கள் மீட்பு

மூணாறு: மூணாறில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் டீக்கடைகள், கோயில், ஆட்டோ மண்ணில் புதைந்தன. இதில், தமிழக தொழிலாளர்கள் 450க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள குண்டலா புதுக்குடி பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்த 2 … Read more

பிரதமர் மோடியை மம்தா சந்தித்த பின்னணி என்ன? – விளக்கம் அளிக்க கோரும் மேற்குவங்க பாஜகவினர்

புதுடெல்லி: மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்ததின் பின்னணி குறித்து பிரதமர் விளக்க வேண்டும் என்று மேற்குவங்க மாநில பாஜக.வினர் கோரியுள்ளனர். மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பாஜக.வை கடுமையாக விமர்சிப்பவர் மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. மேலும், மேற்கு வங்கத்துக்கு வருகை தரும்போது பிரதமர் மோடியை சந்திக்காமல் தவிர்த்து வருகிறார் மம்தா. இந்நிலையில், இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க 2 நாட்களுக்கு … Read more

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக பதவியேற்ற ஆண்கள்; மபி.யில் வைரலாகும் வீடியோ

போபால்: மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்களின் பதவியேற்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், சில கிராமங்களில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பதவி பிரமாணத்தை ஏற்றுள்ளனர். பெண்களின் தந்தை, கணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சாகர், தாமோ மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளன. இந்த வீடியோ வைரலாகி … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் | பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் அமோக வெற்றி; 528 வாக்குகள் பெற்றார்

புதுடெல்லி: இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்றார். தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி … Read more

கருப்பு உடை போராட்டம் பற்றி சர்ச்சை அமித்ஷா கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி ராமனுக்கு பதிலாக ராவணனை வணங்குவதா?

புதுடெல்லி: ‘மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே, காங்கிரசின் கருப்பு உடை போராட்டத்தை ராமர் கோயிலுடன் பாஜ தொடர்புபடுத்தி உள்ளது,’என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து நாடு முழுவதும் நேற்று முன்தினம் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. டெல்லியில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்பி.க்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கருப்பு உடைகளை அணிந்து போராட்டம் நடத்தினர்.  இது பற்றி கருத்து தெரிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் … Read more

ரூ.79 லட்சம் கோடி; பொருளாதார இலக்கு யோகிக்கு ஆலோசனை வழங்க அமெரிக்க நிறுவனம் நியமனம்

லக்னோ: உத்தரப் பிரதேச அரசின் பொருளாதார ஆலோசகராக, அமெரிக்காவை சேர்ந்த டெலாய்ட் இந்தியா நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு, தனது மாநிலத்தில் 100 லட்சம் கோடி டாலர் (ரூ.765 லட்சம் கோடி) பொருளாதார இலக்ைக, வரும் 2027ம் ஆண்டுக்குள் அடைய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூலை 19ம் தேதி யோகி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், இந்த இலக்கை எட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, அமெரிக்காவை சோர்ந்த … Read more

சுதந்திர தினம் வரை அனைத்து நாட்களிலும் அஞ்சல் நிலையங்கள் செயல்படும் – மத்திய அரசு அறிவிப்பு

75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு மத்திய அரசால் இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரத்தின் கீழ் தேசியக் கொடிகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை எளிதாக்க, அனைத்து அஞ்சல் நிலையங்களும் சுதந்திர தினத்திற்கு முன் விடுமுறை நாட்களில் செயல்படும். நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய தபால் நிலையங்கள் இந்த பொது பிரச்சாரத்தை செயல்படுத்தும் அளவிற்கு செயல்படும். பொது விடுமுறை நாட்களில் … Read more

பயணக் கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறையை நீக்க வேண்டும்; திமுக எம்பி கவன ஈர்ப்பு தீர்மானம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதில், ‘கடந்த 2011ம் ஆண்டு தொடங்கி ஏமன், லிபியா ஆகிய அரபு நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டதால் 2016 முதல் ஒன்றிய அரசு இந்த நாடுகள் விவகாரத்தில் பயண கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதனால், குடியுரிமை அதிகாரிகள் மிகக் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.  பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்வது தொடங்கி, கைது வரையில் செல்கிறது. அதனால், ஏமன் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கான … Read more

கொல்கத்தா மியூசியத்தில் சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் புகழ் பெற்ற பழமையான அருங்காட்சியகம் உள்ளது. ஒன்றிய கலாசார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. கடந்த 2019ம் தேதி முதல் இதன் பாதுகாப்பு பொறுப்பை ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) ஏற்றுக் கொண்டது. இங்கு இதன் வீரர்கள் பல தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை தன்னுடன் பணியாற்றும் சக வீரர்களை நோக்கி ஒரு வீரர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஒரு சப் இன்ஸ்பெக்டரும், … Read more

பீகார் அரசுப் பள்ளியில் அலட்சியம்; 50 மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி: மதிய உணவில் ‘பல்லி’ கிடந்ததாக புகார்

பாட்னா: பீகாரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி கிடந்ததால், அதை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள  ஜகதீஷ்பூர் சைனோ அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் நேற்று மதிய உணவை சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டதால் மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர். தகவலறிந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு  விரைந்து சென்று தங்கள் குழந்தைகளை ஜகதீஷ்பூரில் உள்ள ஆரம்ப … Read more