NDTV பங்குகளை மறைமுகமாக வாங்கி ஊடகத்தில் ஊடுருவும் அதானி நிறுவனம் பின்னணி

புதுடெல்லி: புது தில்லி டெலிவிஷன் லிமிடெட் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கப்போவதாக கவுதம் குழுமம் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, என்டிடிவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஆச்சரியத்தை ஏர்படுத்துவதாக இருக்கிறது. செவ்வாய்கிழமை (2022 ஆகஸ்ட் 23) அறிக்கை ஒன்றை வெளியிட்ட நியூ தில்லி டெலிவிஷன் லிமிடெட் (New Delhi Television Limited) பங்குகளை அதானி நிறுவனம் வாங்கியது தொடர்பாக, அதன் நிறுவகத் தலைவரர்களான ராதிகா மற்றும் பிரணாய் ஆகியோருக்கு எந்த விவரமும் தெரியாது என்றும், இது தொடர்பாக … Read more

அடுத்த 8 ஆண்டுகளில் அகமதாபாத்தில் வெயில் வாட்டும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

அகமதாபாத்:  2030ம் ஆண்டுக்குள் அகமதாபாத் நகரின் வெப்பநிலை கணிசமாக உயரும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் அடுத்து வரும் ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில், 2030ம் ஆண்டு சராசரியாக 0.81 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள்  மதிப்பிட்டுள்ளனர். வெப்பம் அதிகரித்து வருவதால் மின்தேவையும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வெப்பத்தின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக மக்கள் ஏசி, … Read more

கொலம்பியா தொழிற்சாலையில் வாரத்துக்கு 3 கோடி கொசுக்கள் உற்பத்தி: பில்கேட்ஸ் ஆச்சர்ய பதிவு

புதுடெல்லி: கொலம்பியாவில் வாரத்துக்கு 3 கோடி கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், சில நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலம்பியாவில் உள்ள மெடலினில்தான் இந்த கொசுக்கள் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில், விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து, வாரத்துக்கு 3 கோடி கொசுக்களை உற்பத்தி செய்கின்றனர். இந்த … Read more

மெட்ரோ ரயில்களை போல் இன்ஜின் இல்லாத மின்சார ரயில்கள்: அமைச்சர் வைஷ்ணவ் தகவல்

பிஜ்னோர்: கடந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ரயில் பயணிகளுக்கு ரூ.62 ஆயிரம் கோடி மானியம்  வழங்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம், பிஜ்னோருக்கு 2 நாள் பயணமாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டியில், ‘ரயில்வே ரூ.100 செலவு செய்தால், பயணிகளிடம் இருந்து ரூ.45 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரயில்வே துறை ரூ.62 ஆயிரம் கோடியை பல்வேறு பிரிவுகளை சேர்ந்த … Read more

பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் 11 பேரை விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு – மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேருக்கு குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே … Read more

பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் 11 குற்றவாளிகளை விடுவித்தது சரியா?…உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 ஆயுள் தண்டனை கைதிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டது. குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்த நடந்த வன்முறையில் பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி கூட்டு பலாத்கார செய்யப்பட்டார். அவரது 3 வயது மகள் உட்பட குடும்பத்தினர் 7 பேர் வன்முறை கும்பலால் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 … Read more

குளுகுளு சீசனுடன் கொட்டும் மலையருவிகள்.. கொண்டாட குடும்பத்துடன் திரண்டு வரும் சுற்றுலாப் பயணிகள்..!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் சுற்றுப்புறங்களில் கன மழை பெய்துள்ளதன் தொடர்ச்சியாக, அருவிகளில் புதுவெள்ளம் பாய்ந்து வருகிறது. இங்குள்ள ஹூன்டுரு மலையருவியில் பொங்கிப் பாயும் தண்ணீரைக் காணவும் குளியல்போடவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர். கடும் கோடைக்காலத்துக்குப் பின்னர் இந்த குளிர்ச்சியை அவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர் Source link

என்டிடிவி பங்குகளை வாங்குகிறார் அதானி

புதுடெல்லி: பிரபல தனியார் செய்தி நிறுவனமான என்டிடிவி.யின் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க தயாராக இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கவுதம் அதானி தனது குழுமத்தை விரிவாக்கும் பொருட்டு பல்வேறு புதிய தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே 5ஜி அலைக்கற்றை ஏலம், இலங்கையில் மின் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றில் முதலீடு செய்து வருகிறார். என்டிடிவி எனப்படும், ‘புதுடெல்லி டெலிவிஷன் லிமிடெட்’ செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தின் 29.18% பங்குகளை அதானி குழும நிறுவனம் … Read more

உத்தவ்-ஷிண்டே விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை: தேர்தல் ஆணையத்துக்கு தடை

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே உட்பட 38 அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்களில் 16 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து நோட்டீஸ் அனுப்பினார். இதற்கிடையே, 38 எம்எல்ஏ.க்களை வைத்துள்ள முதல்வர் ஷிண்டே, பாஜ ஆதரவுடன் புதிய ஆட்சி அமைத்துள்ளார். இதற்கிடையே, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, அது தொடர்பான சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்பது தொடர்பாக உத்தவ், ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், கட்சி சின்னம் … Read more

சுவிஸ் வங்கிகளில் ரூ.814 கோடி கருப்பு பணம் அனில் அம்பானிக்கு சிக்கல்: வருமான வரித்துறை 2வது நோட்டீஸ்

புதுடெல்லி: ‘சுவிஸ் வங்கியில் 2 கணக்குகளில் ரூ.814 கோடி கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பது தொடர்பாக ஏன் வழக்கு தொடரக் கூடாது?’ என்று கேட்டு, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்  அனில் அம்பானிக்கு  வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் தம்பியுமான அனில் அம்பானி, சுவிஸ் நாட்டில் உள்ள 2 வங்கிகளில் ரூ.814 கோடி கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ளார். இதன்மூலம், அவர் ரூ.420 கோடி வரி … Read more