முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு: அணையில் இருந்து இடுக்கி அணைக்கு உபரி நீர் திறப்பு

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.15 அடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் உள்ள … Read more

நாடு தழுவிய போராட்டம்: ராகுல், பிரியங்கா காந்தி கைது

தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உட்பட பல காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் விலைவாசி உயர்வை தடுக்கவும் உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்துசெய்யவும் கோரிக்கை வைத்து இன்று நாடு முழுவதும் காங்கிர1 கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. அப்போராட்டத்தில் `இந்தியா தற்போது ஜனநாயகத்தின் இறப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறது. சர்வாதிகாரத்திற்கு எதிராக நிற்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுகின்றனர்’ என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். … Read more

தண்ணீர் திறக்க கோரிக்கை: மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும் அந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்டவை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்படி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு, கேரள … Read more

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50 சதவிதமாக அதிகரிப்பு

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழுவின் முடிவுப்படி, வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமான ‘ரெப்போ ரேட்’  0.5 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும், வங்கி கடனுக்கான வட்டி சற்று அதிகரிக்கும். அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த … Read more

இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலி இடங்கள் உள்ளதாக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலி இடங்கள் உள்ளதாக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு நடத்தாததால் 1,08,685 ராணுவ வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ராணூவம், கடற்படை, விமானப்படை என 60,000 காலிப் பணியிடங்கள் உருவாகிறது.

டெல்லியில் கருஞ்சட்டை பேரணி: ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது

புதுடெல்லி: பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் இன்று மிகப்பெரிய அளவில் கருஞ்சட்டைப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளது. அதில் மனீஷ் திவாரி எம்.பி., “குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்றோம். அப்போது விஜய் … Read more

Congress Protest: டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த காங்கிரஸ் – ராகுல் உட்பட எம்பிக்கள் கைது!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உட்பட பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், மத்திய பாஜக அரசின் போக்கை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நாடாளுமன்ற வளாகம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் … Read more

சித்தூரில் ஆலோசனை கூட்டம் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்-அதிகாரி உத்தரவு

சித்தூர் : சித்தூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும என்று மின் துறை அதிகாரி கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். சித்தூர் மாவட்ட மின் துறை மண்டல அலுவலகத்தில் மின் துறை அதிகாரி கிருஷ்ணா அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, அவர் பேசியதாவது: சித்தூர் மாவட்டத்தில் புதிய மின் இணைப்புக்காக 13 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மிக விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும். விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த வேண்டும். … Read more

பாஜக தொண்டர்களின் பாதுகாப்பு – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓராண்டில் 5-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பெங்களூரு வந்தார். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து பாஜக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்த போது கூறியதாவது: கர்நாடகாவில் பாஜக நிர்வாகிகளும், இந்து அமைப்புகளை சேர்ந்த செயல் … Read more

'ஜனநாயகம் செத்து கொண்டிருக்கிறது' – பாஜகவை தெறிக்க விட்ட ராகுல்!

இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயகம் செத்துக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். கையில் கருப்பு பட்டை அணிந்து, டெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியதாவது: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத நிலை உள்ளது; ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் ஒவ்வொரு கல்லாக கட்டமைக்கப்பட்ட இந்தியா, உங்கள் கண் முன்னே … Read more