டெல்லியில் கருஞ்சட்டை பேரணி: ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது

புதுடெல்லி: பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் இன்று மிகப்பெரிய அளவில் கருஞ்சட்டைப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளது. அதில் மனீஷ் திவாரி எம்.பி., “குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்றோம். அப்போது விஜய் … Read more

Congress Protest: டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த காங்கிரஸ் – ராகுல் உட்பட எம்பிக்கள் கைது!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உட்பட பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், மத்திய பாஜக அரசின் போக்கை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நாடாளுமன்ற வளாகம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் … Read more

சித்தூரில் ஆலோசனை கூட்டம் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்-அதிகாரி உத்தரவு

சித்தூர் : சித்தூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும என்று மின் துறை அதிகாரி கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். சித்தூர் மாவட்ட மின் துறை மண்டல அலுவலகத்தில் மின் துறை அதிகாரி கிருஷ்ணா அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, அவர் பேசியதாவது: சித்தூர் மாவட்டத்தில் புதிய மின் இணைப்புக்காக 13 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மிக விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும். விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த வேண்டும். … Read more

பாஜக தொண்டர்களின் பாதுகாப்பு – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓராண்டில் 5-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பெங்களூரு வந்தார். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து பாஜக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்த போது கூறியதாவது: கர்நாடகாவில் பாஜக நிர்வாகிகளும், இந்து அமைப்புகளை சேர்ந்த செயல் … Read more

'ஜனநாயகம் செத்து கொண்டிருக்கிறது' – பாஜகவை தெறிக்க விட்ட ராகுல்!

இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயகம் செத்துக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். கையில் கருப்பு பட்டை அணிந்து, டெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியதாவது: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத நிலை உள்ளது; ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் ஒவ்வொரு கல்லாக கட்டமைக்கப்பட்ட இந்தியா, உங்கள் கண் முன்னே … Read more

காவிரியில் தமிழகத்துக்கு நீர்வரத்து நொடிக்கு 1.8 இலட்சம் கன அடி

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நொடிக்கு 96 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து நொடிக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கன அடியாக உள்ளது.  கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நொடிக்கு 81 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணைக்கு நொடிக்கு 13 ஆயிரத்து 12 கனஅடி தண்ணீர் … Read more

விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங். எம்.பி. ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்டோர் கைது..!!

டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். ராகுல் காந்தியை கைது செய்து டெல்லி போலீசார் வேனில் ஏற்றினர். விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி ஒன்றிய அரசுக்கு எதிர்க்க நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மாபெரும் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தின் போது அமலாக்கத்துறையினர் செயல்களையும் கண்டித்து … Read more

IELTS தேர்வில் மோசடி: அமெரிக்காவில் குஜராத் இளைஞர்கள் சிக்கியது எப்படி?- தீவிர விசாரணை

குஜராத்தில் நடைபெற்ற ஐஇஎல்டிஎஸ் (IELTS) எனப்படும் சர்வதேச ஆங்கில மொழி திறனறியும் தேர்வில் மோசடி நடந்திருப்பது தெரியவந்த அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 19 முதல் 21 வயது உடைய குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள், கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது அமெரிக்க அதிகாரிகள் அவர்களைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து நீதிபதி, அந்த இளைஞர்களிடம் கேள்விகள் கேட்டுள்ளார். ஆனால் குஜராத்தைச் சேர்ந்த அந்த 6 இளைஞர்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளனர். இதனால் … Read more

விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதுடெல்லி: விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை நேற்று காலை கூடியதும், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, “மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன” என கோஷம் எழுப்பினர். விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர். அவர்களை சமாதானப்படுத்தி கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்த … Read more

Vice President Election: மார்கரெட் ஆல்வாவிற்கு முதல்வர் கேசிஆர் ஆதரவு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அறிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10 ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இதை அடுத்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர், … Read more