ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குங்கள் : பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தல்

அமராவதி: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமரிடம், போலவரம் அணைக்கட்டு பணிகளை முடிக்க நிதி உதவி செய்ய வேண்டுமென ஜெகன் மோகன் வேண்டுகோள் விடுத்தார். இதற்காக மாநில அரசு ரூ.2,900 கோடி செலவு செய்ததாக தெரிவித்த ஜெகன், அதனை உடனடியாக திரும்ப வழங்கும் படி கேட்டுக்கொண்டார். மேலும், ரூ. 32,625.25 கோடி நிதி, மாநில அரசுக்கு மத்திய அரசுவழங்க வேண்டியுள்ளது. இதனையும் உடனடியாக வழங்க கேட்டுக்கொண்டார். … Read more

மும்பையில் உள்ள பிரபல ஓட்டலுக்கு மர்ம நபர் ரூ.5 கோடி கேட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு..!!

மும்பை: மும்பையில் உள்ள பிரபல ஓட்டலுக்கு மர்ம நபர் ரூ.5 கோடி கேட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டலில் 4 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபருக்கு போலீஸ் வலைவீசியுள்ளது.

'மணிஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா; அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோபல் பரிசு ' – பாஜக கிண்டல்

‘சத்யேந்திர ஜெயினுக்கு பத்ம விபூஷன்; மணிஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா; அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோபல் பரிசு’ என்று கிண்டல் செய்யும் தொனியில் பேசியுள்ளார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மதுக்கடை உரிமம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இதையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா … Read more

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு – சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் காவல் செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: மும்பை பத்ரா சாவல் குடியிருப்பு மறுமேம்பாட்டு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளில் சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு தொடர்புள்ளதாக கூறி அமலாக்கத் துறையினர் அவரை ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ராவத் மனைவி மற்றும் அவரது உதவியாளர்களிடமும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. அதன்பின் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவர் மத்திய மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு மீண்டும் நேற்று … Read more

ஜம்மு காஷ்மீர் கத்ராவில் மிதமான நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கத்ராவில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மனைவியை தரதரவென இழுத்து ரயில் முன் தள்ளி கொன்ற கொடூர கணவன்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

கட்டிய மனைவியை ரயில் வரும் போது தள்ளிவிட்டு கொன்ற அதிர வைக்கும் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (ஆக.,22) அன்று அரங்கேறியிருக்கிறது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசை ரோடு ரயில்வே ஸ்டேஷனில்தான் இந்த கொலை நடந்திருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. அதில், வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மனைவியை தரதரவென இழுத்து தள்ளியிருப்பது பதிவாகியிருக்கிறது. சிசிடிவி காட்சியின் படி இந்த கோர சம்பவம் … Read more

ஆம் ஆத்மியை உடைக்க பேரம்? – டெல்லி துணை முதல்வர் குற்றச்சாட்டும், பாஜக எதிர்வினையும்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் வந்து சேர்ந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என தம்மிடம் பேரம் பேசப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் துணை முதல்வராக பதவி வகிக்கும் மணிஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அதுபற்றி சிபிஐவிசாரணைக்கு துணைநிலை ஆளுநர் … Read more

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்

ஜெய்பூர்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என கடந்தாண்டு நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தேர்தல் பணிகளை நடைபெற்று வருவதால் காங்கிரசின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் … Read more

குஜராத் போதைப் பொருள் கடத்தல் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: குஜராத் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் எவ்வளவு காலத்துக்கு பிரதமர் மோடி மவுனமாக இருப்பார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “போதைப் பொருள் தொழிலை எளிதாக செய்வதற்கு குஜராத் ஏற்ற மாநிலமா என்ன? பிரதமரே இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் குஜராத்தை அடைந்துள்ளது. காந்தி – படேலின் புண்ணிய பூமியில் இந்த விஷத்தை பரப்புவது யார்? … Read more

ஒரு சீட்டுக் கூட ஜெயிக்கல… பாஜகவிற்கு சரியான பாடம்- நந்திகிராமில் ஓடவிட்ட TMC!

மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். இதைத் தொடர்ந்து 33 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வரலாறு படைத்தது. அதன்பிறகு மம்தா பானர்ஜி புதிய அரசியல் அத்தியாயம் எழுதி இடதுசாரிகளை ஓரங்கட்டினார். தொடர்ந்து 3 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தனது அரசியல் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் வகையில் மாநில கட்சிகளை குறிவைத்து ஆபரேஷன்களை நடத்தி வருகிறது. அந்த … Read more