தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு, காஷ்மீரில் தற்காலிகமாக தங்கி இருப்பவர்களுக்கும் வாக்குரிமை; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக குடியிருப்பவர்களும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்துள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தொகுதி எல்லை வரையறை முடிந்ததை தொடர்ந்து, அங்கு சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதை சந்திப்பதற்கு … Read more

கொரோனா பலிகளை மறைத்த குஜராத் அரசு; அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி அறிக்கை

புதுடெல்லி: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகம், ஸ்டேன்போர்டு மருத்துவ பல்கலைக் கழகம், பெர்க்கிலி பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த தேசிய அறக்கட்டளை ஆகியவற்றை சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் 2021ம் ஆண்டு ஏப்ரல் வரை  குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கொரோனா பலிகள் குறித்து ஆய்வு நடத்தினர். இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 162 நகராட்சிகளில் 90 நகராட்சிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள்,‘பிளோஸ் குளோபல்’என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், … Read more

வங்கியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.11 கோடி சில்லறை மாயம்; 25 இடங்களில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி: ராஜஸ்தானில் எஸ்பிஐ கிளையில் இருந்த ரூ.11 கோடி நாணயங்கள் திருடு போனது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 25 இடங்களில் சோதனை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம், கரோலியில் ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளை உள்ளது. இந்த வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் குறித்து கடந்தாண்டு ஆய்வு நடத்தப்பட்டதில் பல குளறுபடிகள்  நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, தனியார் நிறுவனம் மூலமாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வங்கியின் கையிருப்பு பணம் எண்ணப்பட்டது. அதில், ரூ.2 கோடி மதிப்புள்ள நாணயங்கள் … Read more

முல்லைப் பெரியாறு பேபி அணையில் 15 மரங்களை வெட்ட உடனடி நடவடிக்கை; கேரள வனத்துறைக்கு உத்தரவு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு கூட்டம், அக்குழுவின் 16வது தலைவர் குல்சன் ராஜ் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, மேற்பார்வை குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில்,‘முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரிப்பதற்கு ஏதுவாக பேபி அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும். அணை பகுதிக்கு வள்ளக்கடவு வழியாக செல்வதற்கு 5 கிமீ … Read more

ஏலம் எடுத்தவர்களுக்கு கடிதம், 5ஜி சேவைக்கு தயாராகுங்கள்; ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: சமீபத்தில் நடந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்த நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டு கடிதத்தை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.நாட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படக் கூடிய 5ஜி சேவை, விரைவில் தொடங்கப்பட உள்ளது. 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் சமீபத்தில் நடந்தது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இதை ஏலத்தில் எடுத்தன. இதில், ஏர்டெல் நிறுவனம் இந்த மாதமே 5ஜி சேவையை தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. முதலில் ஒரு … Read more

இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு தொடர்புகள், பொதுஒழுங்கை சீர்குலைக்கும் தவறான தகவல்களை பரப்பிய 8 யூடியூப் சேனல்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், 2021 தகவல் தொடர்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 8 யூடியூப் செய்தி சேனல்கள், 1 முகநூல் கணக்கு, 2 முகநூல் பதிவுகளை தடை செய்வதற்கான உத்தரவுகளை செவ்வாய்க்கிழமை (ஆக.16) அன்று பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் மொத்தமாக, … Read more

கேரளாவில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் முதல் வங்கிக் கிளையைத் திறந்தது எச்டிஎப்சி..!

எச்டிஎப்சி வங்கி கேரளத்தின் கோழிக்கோட்டில் மகளிர் மட்டும் பணியாற்றும் முதல் வங்கிக் கிளையைத் திறந்துள்ளது. 4 ஊழியர்கள் பணியாற்றும் இந்தக் கிளையைக் கோழிக்கோடு மாநகர மேயர் பீனா பிலிப் புதனன்று திறந்து வைத்தார். மார்ச் 31 நிலவரப்படி வங்கியில் பெண் ஊழியர்கள் 21 புள்ளி 7 விழுக்காட்டினர் உள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் இதை 25 விழுக்காடாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  Source link

மகாராஷ்டிராவில் ஏகே 47 துப்பாக்கி, குண்டுகளுடன் கரை ஒதுங்கிய படகு தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாக பீதி

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த தீவிரவாதிகள், மும்பையில் நடத்திய தாக்குதலில் ஏராளாமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த மாநிலத்தில் ராய்கட் கடற்கரைக்கு அருகில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் நேற்று சந்தேகத்துக்கு  இடமாக ஒரு நவீன படகு நின்றது. இதை பார்த்து மக்கள் அதிர்ந்தனர். படகில் யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ராய்கட் போலீஸ் எஸ்பி அசோக் துதே உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று, படகில் சோதனை … Read more

வெளிநாடுகளில் ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றுவது போல் நிதிஷ் மாற்றியுள்ளார் – ம.பி முன்னாள் அமைச்சர் சர்ச்சை கருத்து

புதுடெல்லி: வெளிநாடுகளில் ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல், நிதிஷ் தன் கூட்டணியை மாற்றியிருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கருத்து கூறியது சர்ச்சையை கிளம்பியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா. இவர், பாஜகவின் தேசிய ஜனநாயக முன்னணியிலிருந்து விலகிய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீது கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பாக விஜய்வர்கியா, ‘‘அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். அங்கு ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல் … Read more

கெட்ட வார்த்தைகள் லைகர் படத்துக்கு 7 ‘கட்’

ஐதராபாத்: கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றதால் லைகர் படத்துக்கு 7 இடத்தில் கட் தரப்பட்டது. விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லைகர். புரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார். கரண் ஜோஹர், நடிகை சார்மி தயாரித்துள்ளனர். இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வரும் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஆகியோர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று … Read more