கண்ணூர் பல்கலை. இணை பேராசிரியராக பினராய் விஜயனின் செயலர் மனைவி நியமனத்திற்கு தடை: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயனின் தனி செயலாளர் ராகேஷின் மனைவி பிரியா வர்கீசை கண்ணூர் பல்கலைக்கழக இணை பேராசிரியராக நியமித்த உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கேரள முதல்வர் பினராய் விஜயனின் தனி செயலாளரான ராகேஷின் மனைவி பிரியா வர்கீசை கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக நியமனம் செய்த உத்தரவை கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இணை பேராசிரியர் பதவிக்கான ரேங்க் பட்டியலில் 2வது இடத்தை … Read more

ராமர் பாலத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்றால் 2024ல் மோடி பிரதமராக மாட்டார் – சுப்ரமணிய சுவாமி

ராமர் பாலத்திற்கு ஆதரவாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றால் 2024 ஆண்டு மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ராமர் பாலத்தை இந்தியாவின் பண்டைய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று நீதிபதி சந்திரசூட் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சுப்ரமணிய நேரில் ஆஜராகி … Read more

இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட ஐ.எஸ். திட்டம்? ரஷ்யாவில் பயங்கரவாதி சிக்கினான்

இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நபரை கொலை செய்ய திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவிற்கு வருகை தந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்த ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியை ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. கைது செய்துள்ளது. ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான எஃப்.எஸ்.பி., தீவிரவாத தடுப்பு, எல்லைப் பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தற்கொலைப் படை … Read more

கால்நடைகளுக்கு பரவும் பெரியம்மை: மருந்து வாங்குவதற்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு

ஜெய்ப்பூர்:  ராஜஸ்தான் மாநிலத்தில் பெரியம்மை நோய் காரணமாக இதுவரை 6 லட்சத்து 12 ஆயிரத்து 841 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் நோய் பாதித்த 25,986 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் பெரியம்மை பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘லும்பி தோல் நோய் பசுக்கள் மற்றும் எருமைகளை பெரிதும் பாதிக்கின்றன. கால்நடைகளின் தோலில் கட்டிகள் போன்று ஏற்படுகின்றன. இதன் காரணமாக அவை இறக்க நேரிடுகின்றது. இதுவரை மாநிலத்தில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட … Read more

’எங்களையா ஈவ்டீஸிங் பண்ற’.. போதையில் ஓட்டுநரையும் ஆட்டோவையும் அடித்து நொறுக்கிய பெண்கள்!

குவாலியரில் Eve teasing எனக் கூறிக்கொண்டு குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநரை அடித்ததோடு ஆட்டோவை தாக்கிய பெண்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் செண்ட்ரல் பார்க் ஹோட்டல் சிட்டி சென்டரில் ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் திடீரென வாகனத்தை நிறுத்தி அருகே வந்துகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை அடித்து, ஆட்டோவையும் தாக்கினார். இந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலானது. After Noida, meet another Karen … Read more

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்ப்பது சொந்த விருப்பம்-தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்ப்பது சொந்த விருப்பத்திலானது தான் எனத் தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆதார் எண் இணைக்காத காரணத்துக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தப் பெயரும் நீக்கப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்ப்பது, ஒருவரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்தால் அதைக் கண்டறிந்து நீக்குவதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.  Source link

கல்வி தகுதி தேவையில்லை துறை நிபுணர்களுக்கு பேராசிரியர் பணி: யுஜிசி புதிய திட்டம்

புதுடெல்லி: முறையான கல்வி தகுதிகள் இல்லாவிட்டாலும், துறையில் சாதனை படைத்த நிபுணர்களை பேராசிரியர்களாக நியமிக்கும் திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்த உள்ளது. பல்கலைகழக மானிய குழுவின்(யுஜிசி) கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில், பல்கலைகழகங்கள், உயர்நிலை கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் இன்ஜினியரிங், அறிவியல், மீடியா, இலக்கியம், கலை, சமூக அறிவியல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை பேராசிரியர்களாக நியமிப்பது என்று  முடிவெடுக்கப்பட்டுள்ளது. அனுபவத்தின் அடிப்படையில் பேராசிரியர்கள் என்ற முறையில் இவர்களை நியமனம் செய்வதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி – ரயில்வே அதிரடி அறிவிப்பு.!

ரயில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு பயண சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சில ரயில்களின் முன்பதிவு பெட்டிகள் ‘டிரிசர்வ்டு’ (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி ரயிலில் (16723) அக்டோபர் 19 முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் … Read more

இரண்டு குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்த பெண்… – உதவி அறிவித்த ஜொமோட்டோ

மும்பை: பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் உணவு டெலிவரி செய்துவரும் வீடியோ வைரலாக, அவருக்கு உதவுவதாக ஜொமோட்டோ அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன், ஜொமோட்டோவில் வேலைசெய்து வந்த தந்தை விபத்தில் காயமடைந்ததால், குடும்பத்தைக் காப்பாற்ற, தந்தையின் வேலையைப் பார்த்த பள்ளிச் சிறுவனின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்தது. இப்போது அதேபோன்று இன்னொரு வீடியோ வைரலாகி வருகிறது. சௌரப் பஞ்வானி என்பவர், ஒரு பெண் டெலிவரி ஏஜென்ட் தனது கைக்குழந்தையுடனும், அதேபோல் இரண்டு வயது மதிக்கத்தக்க தனது … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 9,531 பேருக்கு கொரோனா… 36 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 9,531 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,48,960ஆக உயர்ந்தது. * புதிதாக 36பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,368ஆக … Read more