சிறைகளில் ஆங்கிலேயர் கால விதிமுறைகளுக்கு முடிவு – கைதிகளுக்கு புதிய வசதிகள் அளிக்க உ.பி. முதல்வர் யோகி ஒப்புதல்

புதுடெல்லி: உத்தரபிரதேச சிறைச்சாலைகளில் ஆங்கிலேயர் கால விதிமுறைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு பல்வேறு புதிய வசதிகளை அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உ.பி. சிறைச்சாலை நடைமுறைகளில் ஆளும் பாஜக அரசு பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இதில் கடந்த 1941 முதல் பின்பற்றப்பட்டு வந்த சிறைச்சாலை விதிமுறைகள் கையேடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனி அது, ‘உத்தரப்பிரதேச விதிமுறைகள் கையேடு 2022’ என்ற பெயரில் பின்பற்றப்பட உள்ளது. இதற்கான … Read more

வடகிழக்கில் மீண்டும் துவங்கிய சிஏஏ போராட்டம்!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளாதால் சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு … Read more

மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து

திருவனந்தபுரம்: மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவதும் கொடுமைதான். அதை எந்தப் பெண்ணும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்று கூறிய கேரள உயர் நீதிமன்றம், இளம்பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஏற்றுமானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். எம்சிஏ படித்த 2 பேரும் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். திருமணம் முடிந்த அதே வருடம் நவம்பர் 2ம் தேதி, … Read more

கேரளாவில் செயற்கை சுவாச உதவியுடன் தனித்தேர்வு எழுதிய 50 வயது பெண்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட் டம், வைக்கப்ரயார் பகுதியைச் சேர்ந்தவர் சிமிமோள்(50). இவர் கடுதுருத்தி பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு நிலையிலான தனித்தேர்வு எழுதினார். தீவிரமான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிமிமோள் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு இந்தத் தேர்வினை எழுதினார். சிமிமோளிற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில் ஆக்சிஜன் கலன்கள், சுவாசம் பெறுவதற்கான குழாய் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அந்த தனி அறையில் சிமிமோள் 12-ம் வகுப்பு தனித்தேர்வை எழுதினார். … Read more

எனது காட்ஃபாதர் யார் தெரியுமா? கோவையில் கர்நாடக முதல்வர் அளித்த சர்ப்ரைஸ்!

கோவையில் பிரபல சுகுணா குழுமத்தின் நிறுவனர் ஜி.ராமசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்கத்தில் செய்யப்பட்டிருந்தன. இதில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையொட்டி கோவை விமான நிலையம் முதல் விழா அரங்கு வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நூற்றாண்டு விழாவில் ஜி.ராமசாமி நாயுடுவின் திருவுருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, எனது … Read more

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்

பீகார்: டெல்லியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ், நேற்று பீகார் திரும்பினார். அவரை பீகார் முதல்வர் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், உடல் நிலை பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். … Read more

ஒடிசா மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு – 237 கிராமங்களில் மக்கள் தவிப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் மகாநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்களில் வசிக்கும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். ஒடிசாவில் தொடர் மழை காரணமாக மகாநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “மகாநதியில் வெள்ளம் தொடர்ந்து அபாய அளவுக்கு மேல் செல்வதால் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் 237 கிராமங்களில் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிக் தவிக்கின்றனர். இந்தப் பருவத்தில் முதல்முறையாக ஏற்பட்டுள்ள இந்த … Read more

நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!

டெல்லி: நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியிருக்கிறது. போலி செய்திகளை வெளியிடுவதாக எழுந்த புகாரின் பேரில் ஒன்றிய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கண்காணிப்பில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சேனல் உட்பட மொத்தம் 8 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேறு சேனல்களில் … Read more

அங்கன்வாடி பணியாளருக்கு  ஐஎஸ் மிரட்டல் – 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

பிஜ்னோர்: உ.பி.யில் தங்கள் பகுதி மக்களுக்கு தேசியக் கொடி விநியோகம் செய்த அங்கன்வாடி பணியாளருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்ததால், அவரது குடும்பத்தினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரை அடுத்த கிராத்பூரைச் சேர்ந்த அன்னு (35) அங்கன்வாடி பணியாளராக உள்ளார். இவரது கணவர் சிறு வியாபாரம் செய்து வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, தங்கள் பகுதி மக்களுக்கு அன்னு தேசியக் கொடியை விநியோகம் செய்துள்ளார். இந்நிலையில், அன்னுவுக்கு ஒரு … Read more

ஜம்மு காஷ்மீர்: இதோ புது உருட்டு… கொதிச்சு போன அரசியல் கட்சிகள்!

ஜம்மு காஷ்மீர் என்ற பெயரை கேட்டாலே முதலில் நினைவுக்கு வருவது சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதும் தான். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மாற்றத்தின் விளைவுகளை இன்றளவும் அப்பகுதியில் காண முடிவதாக கூறுகின்றனர். இத்தகைய அதிரடி நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்தது. அதன்பிறகு பல்வேறு மாற்றங்கள், திருத்தங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் … Read more