பீகார் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது பாய்ந்த கற்கள்.. தாக்குதலுக்கு காரணம் என்ன?

பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று அணிவகுத்து சென்றபோது, திடீரென அவ்வாகனங்கள் மீது  சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  2020 ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. குறைந்த எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த போதிலும் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். இருப்பினும் ஜேடியு – பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு … Read more

2018-2020 | குண்டும் குழியுமான சாலையால் ஏற்பட்ட விபத்துகளில் சுமார் 5000 பேர் உயிரிழப்பு – சாலை போக்குவரத்து அமைச்சகம்

கடந்த 2018 முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் சாலையில் இருந்த பள்ளங்களால் மொத்தம் 5,626 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் அண்மைய தரவுகளின் படி தெரியவந்துள்ளது. பாதுகாப்பான சாலை பயணத்திற்கு பல்வேறு உத்திகளை அரசு முன்னெடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. அந்த அமைச்சகத்தின் அண்மைய தரவில்தான் இந்த விவரம் தெரியவந்துள்ளது. >2018 = 2,015 பேர் >2019 = 2,140 பேர் >2020 = 1,471 பேர் … Read more

காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் ஒரு மாதத்தில் புதிய தலைவர்: மதுசூதனன் மிஸ்திரி பேட்டி

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் தேர்ந்தேடுக்கப்படுவார் என்று அந்த கட்சியின் தேர்தல் வழிகாட்டுதலின் தலைவர் மதுசூதனன் மிஸ்திரி தெரிவித்துள்ளார். வீடியோ நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கடந்த ஏப்ரல் 16 முதல் மே 31 வரை வட்ட அளவிலான உள்கட்சி தேர்தல் ஜூன் 1 முதல் ஜூலை 20 வரை மாவட்ட தலைவர்கள்  நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை மாநில தலைவர்களுக்கான தேர்தலை நடத்த முடிவு … Read more

பாம்பை பிடித்து கழுத்தில் சுற்றி ஊரை வலம் வந்த விவசாயி.. அதே பாம்பால் கடிபட்டு மரணம்

கைத்தேர்ந்த பாம்பு பிடி வீரராக இருந்தவர்கள் பிடிபட்ட பாம்புகளால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது வாடிக்கையாக கேள்விப்படும் செய்தியாகவே இருக்கிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 55 வயதான விவசாயி ஒருவரும் பாம்பை பிடித்தபோது உயிரிழந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தேவேந்திர மிஷ்ரா என்ற அந்த விவசாயி ஷாஜஹான்புர் அருகே உள்ள ஜெய்திபுர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மருவாஜலா கிராமத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சுமார் 200 பாம்புகளை பிடித்துள்ள தேவேந்திர மிஷ்ரா ஜெய்திபுர் பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவரும் கூட. அந்த … Read more

உற்பத்தி பாதிப்பு, இருப்பு சரிவு, விலை உயர்வு எதிரொலி; கோதுமை இறக்குமதிக்கு இந்தியா தள்ளப்பட்டதா? ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சிக்கல்

புதுடெல்லி: கோதுமையின் உற்பத்தி பாதிப்பு, இருப்பு சரிவு, விலை உயர்வு எதிரொலியால் வெளிநாட்டில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளர்களாக இந்தியா இருந்தும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ரஷ்யா – உக்ரைன் போரின் விளைவாக, உணவு பற்றாக்குறை நெருக்கடியை பல  நாடுகள் சந்தித்து வருகின்றன. அதனால் கடந்த மே 13ம் … Read more

கணவரை கொல்ல காதலனுடன் சேர்ந்து ஸ்கெட்ச் – தான் விரித்த வலையில் தானே சிக்கிய பெண்!

காதலனுடன் சேர்ந்துகொண்டு கணவனை கொலைசெய்ய திட்டம் தீட்டிய அந்த பெண், தான் விரித்த வலையில் தானே சிக்கிக்கொண்ட சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. நடந்தது என்ன? பார்க்கலாம். பீன்யா அருகேயுள்ள தொட்டபிதரக்கல்லு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். கார் ஓட்டுநரான இவரது மனைவி பெயர் அனுபல்லவி. அனுபல்லவிக்கு ஹிமாவந்த் குமார் என்ற நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதற்கு அவரது தாயார் அம்மோஜம்மாவும் ஆதரவு அளித்து வந்துள்ளார். இந்நிலையில் அனுபல்லவியும் அவரது காதலன் ஹிமாவந்த் குமாரும் சேர்ந்துகொண்டு நவீன்குமாரை … Read more

ஜேஎன்யுவில் தாக்குதல்: உதவித்தொகை கேட்டுச் சென்ற மாணவர்களை காவலாளிகள் தாக்கியதாக ஏபிவிபி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஜேஎன்யு-வில் தங்களுக்கான உதவித் தொகையை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது பல்கலை.யில் வேலைபார்க்கும் காவலாளிகள் தாக்குதல் நடத்தியதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாக ஏபிவிபி மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை விடுவிக்கக்கோரி இன்று காலை சம்மந்தப்பட்ட துறை முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது பல்கலை காவலாளிகள் நடத்திய தாக்குதலில் 12-க்கும் அதிமான மாணவர்கள் காயம் அடைந்ததாக … Read more

மகளுக்காக மன்னிப்பு கேட்ட சி.எம்… ஆனா மிசோரம் டாக்டர்கள்? – வெடிக்கும் சர்ச்சை!

மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஸோரம்தங்கா முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முதல்வரின் மகள் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தலைநகர் ஐஸ்வாலில் உள்ள தோல் மருத்துவமனை ஒன்றிற்கு முதல்வர் ஸோரம்தங்காவின் மகள் மிலாரி சாங்டே சென்றுள்ளார். அவர் முன்கூட்டியே அப்பாயின்மெண்ட் வாங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சிகிச்சை அளிக்க டாக்டர் மறுத்துள்ளார். அப்பாயின்மெண்ட் வாங்கி வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது இரு … Read more

சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 2023 ஜனவரியில் ‘ஆதித்யா எல்1’ விண்ணில் பாய்கிறது; நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தீவிர முயற்சி

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வரும் ஜனவரியில் ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை நாசாவுடன் இணைந்து இஸ்ரோ செய்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ), அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (நாசா) இணைந்து, சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைக்கோளை அடுத்தாண்டு ஜனவரி இறுதிக்குள் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக கடந்த 2018ம் ஆண்டே, இஸ்ரோ மற்றும் நாசா இடையே திட்டங்கள் வகுக்கப்பட்டன. … Read more

ஆண்டுக்கு 2,300 உயிர்களை காவு வாங்கும் சாலைப் பள்ளங்கள்! – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

சாலையில் உள்ள பள்ளங்களால் ஆண்டுக்கு சராசரியாக 2,300 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் விரைவான போக்குவரத்துக்காக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டபோதிலும் விபத்துகளும் தொடர்ச்சியாக அதிகரிப்பது மக்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் சாலையில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளில் ஆண்டுக்கு சராசரியாக 2,300 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் … Read more