சாலையிலேயே நிகழ்ந்த யானையின் பிரசவம்.. தொந்தரவு செய்யாமல் காத்திருந்த வாகன ஓட்டிகள்

கேரள மாநிலம் மறையூர் அருகே யானையொன்று சாலையிலேயே குட்டி யானையை பிரசவித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறையூரிலிருந்து தமிழகத்தின் உடுமலைப்பேட்டை பகுதியை இணைக்கும் மலைப்பாதையில் யானை ஒன்று நகராமல் நின்றுகொண்டிருந்தது. அச்சம் காரணமாக வாகனங்களை சாலையில் நிறுத்தியபடி ஓட்டுநர்கள் காத்திருந்தனர். நீண்ட நேரம் நகராமல் இருந்ததால் சந்தேகமடைந்த வாகன ஓட்டுநர்கள் அருகில் சென்று பார்த்தபோது யானை, குட்டியை ஈன்றது தெரியவந்தது.  குட்டியை அழைத்துக்கொண்டு தாய் யானை காட்டுக்குள் செல்லும்வரை, ஒருமணிநேரத்திற்குமேல் இருப்பக்கமும் வாகனங்கள் காத்திருந்தன. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. யானை பிரசவிப்பதற்காக வாகன ஓட்டிகள் தொர்ந்தரவு செய்யாமல் காத்திருந்த சம்பவம் நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

உதய்பூர் கொலையாளிகளை பிடிக்க உதவிய கிராமவாசிகள் 2 பேருக்கு ராஜஸ்தான் முதல்வர் பாராட்டு

ஜெய்ப்பூர்: நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர வீடியோவை பார்த்தபின், கொலையாளிகள் கவுஸ் முகமது, முகமது ரியாஸ் ஆகியோரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் தியோகர் மற்றும் பிம் ஆகிய இடங்களுக்கு இடையே இருப்பதை அறிந்த போலீசார், அந்தப் பகுதியை சேர்ந்த தார் கிராமத்தைச் சேர்ந்த சக்தி சிங் மற்றும் … Read more

Kaali Poster Row: கடவுள் காளி குறித்து சர்ச்சை கருத்து – திரிணாமுல் காங். எம்பி மீது வழக்கு பதிவு!

கடவுள் காளி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் லீனா மணிமேகலை. அவர் தற்போது காளி என்ற ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கடும் எதிர்ப்பைப் பெற்றது. அதில், காளி வாயில் சிகரெட்டுடனும், தன் பாலினத்தவர்களான எல்ஜிபிடி சமூகத்தின் கொடியுடனும், மற்றொரு கையில் திரிசூலம் உள்ளிட்ட ஆயுதங்களுடனும் … Read more

திடீரென சாலையில் இருந்த மரம் சாய்ந்து விழுந்த நிலையில், ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய சிசிடிவி காட்சி

கேரளாவில் தொடர் மழை காரணமாக சாலையோரத்தில் இருந்த மரம் சாய்ந்தது சாலையில் நடந்து சென்றவர் மீது சாய்ந்த மரம் அதிர்ஷ்டவசமாக மரத்திற்கு இடையே சிக்கிய நபர் உயிர்த்தப்பினார் மரம் சாய்ந்து விழுந்த சிசிடிவிக் காட்சி Source link

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன்

கொல்கத்தா: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை 16-ல் ஆஜராகுமாறு நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

சரியாக படிக்கவில்லை எனக்கூறி 4 வயது மகளை அடித்தே கொன்ற பெற்றோர்! ஜார்க்கண்டில் கொடூரம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் படிப்பில் கவனம் செலுத்தவில்லை எனக்கூறி 4 வயது பெண் குழந்தையை அடித்து கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளர்களான உத்தம் மெய்டி – அஞ்சனா மஹாடோ தம்பதி, தங்களின் 4 வயதான இரண்டாவது மகள் சரியாக படிக்கவில்லை என்பதால் கைகளை கட்டி அடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுமி மயக்கமான நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். உடனே சிறுமியின் உடலை 40 … Read more

8 நாட்களில் 18 சம்பவங்கள்: ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு டிஜிசிஏ நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த 8 நாட்களில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பல்வேறு விமானங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டன. இதனையடுத்து, டிஜிசிஏ எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேற்று மட்டும் இரண்டு சம்பவங்கள்: டெல்லியிலிருந்து மும்பை வழியாக துபாய்க்கு நேற்று மதியம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் இடதுபுற எரிபொருள் டேங்க்கில் எரிபொருள் வழக்கத்துக்கு மாறாக குறைவாக இருப்பதாக இன்டிகேட்டர் காட்டியது. இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி விமான … Read more

18 நாட்களில் 8 சம்பவங்கள் – ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து ஆணையரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த ஸ்பபைஸ்ஜெட் விமான நிறுவனம் விமான சேவையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2018 – 19, 2019 – 20 மற்றும் 2020 – 21 ஆம் ஆண்டுகளில், முறையே 316 கோடி ரூபாய்; 934 கோடி ரூபாய் மற்றும் 998 கோடி ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. … Read more

கொசுக்களை கொண்டே நோய்பரவலை கட்டுப்படுத்தும் புதிய முறை அறிமுகம்

டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை கட்டுப்படுத்தும் பாக்டீரியாக்களை கொண்ட கொசுக்கள் மூலம், நோய்பரவலை கட்டுப்படுத்தும் ஒரு நவீன முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ளன. புதுசேரியில் கடந்த 4 ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு இந்த டெங்கு எதிர்ப்பு கொசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பெண் கொசுக்கள் ஊள்ளுர் நீர்நிலைகளில் விடப்படும். அதனுடன் ஆண் கொசு இணையும் போது, டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை பரப்பாத கொசுக்கள் உருவாகும் என, ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர்கள் … Read more

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை… வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென்மெற்கு பருவமழையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 14 மாவட்டங்களில் கனமழையானது, கடந்த ஒருவாரமாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. அதனால் குடகு மாவட்டம், உடுப்பி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. குடகு, உடுப்பி உட்பட 3 மாவட்டங்கள் முழுவதுமாக … Read more