மேகதாது குடிநீர், மின்சார திட்டத்துக்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை: ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் பதில்

டெல்லி: மேகதாது குடிநீர், மின்சார திட்டத்துக்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடூ பதிலளித்தார். திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை காவிரி கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் – பபுல் சுப்ரியோ உட்பட 9 பேர் பதவியேற்பு

கொல்கத்தா: மேற்கு வங்க அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி வீடுகளில் அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் நடத்திய சோதனையில் ரூ.50 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பார்த்தா சட்டர்ஜி அமைச்சரவையில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையை நேற்று விரிவாக்கம் செய்தார். இதில், கடந்த ஆண்டு பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் … Read more

விண்வெளி ஆராய்ச்சியில் தேயும் இந்தியா: பூசி மெழுகும் ஒன்றிய அரசு!

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் பணம் முதலீடு செய்வது மற்றும் செலவழிப்பது ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு வித்திடும். எனவே, விஞ்ஞான ஆய்வுக்காக, குறிப்பாக விண்வெளித்துறை ஆய்வுக்காக தொடர்ச்சியாக தங்களின் பட்ஜெட்டில் கூடுதல் நிதியை இந்தியா ஒதுக்கீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. உண்மையில், அறிவியல் வளர்ச்சி தொடர்பாக போதுமான நிதி ஒதுக்கீட்டை செய்யவில்லை என்று தங்களின் மீது கூறப்படும் விமர்சனத்துக்கு பதில்கூறும் வகையில் செய்யப்பட்டவைதான் விண்வெளித்துறையில் இந்தியா செய்த பாதிக்கும் மேலான நிதி ஒதுக்கீடுகள். ஆனால், பல பில்லியன் டாலர்கள் … Read more

பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: பிரதமரின் மிரட்டலுக்கு கங்கிரஸ் பயப்படாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தி வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கட்சி தலைவர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி; நேஷனல் … Read more

தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா வாபஸ்

புதுடெல்லி: தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. 2019 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு 81 திருத்தங்களை முன்வைத்துள்ள நிலையில் தற்போது இம்மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா மீது நாடாளுமன்றக் கூட்டுக் குழு 81 திருத்தங்களையும் 12 பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. விளைவாக, இம்மசோதா … Read more

சீண்டும் பாஜக… செக் வைக்கும் நேஷனல் ஹெரால்டு; அசால்ட்டா தட்டி விட்ட ராகுல் காந்தி!

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, எங்களுக்கு எதிராக நேஷனல் ஹெரால்டு விவகாரம் விஸ்வரூபம் ஆக்கப்பட்டு வருகிறது. ஒரு சிறிய அழுத்தம் கொடுத்து விட்டு, எங்களை அமைதியாக்கி விடலாம் என்று மோடியும், அமித் ஷாவும் கனவு காண்கிறார்கள். அது முற்றிலும் நடக்காது. ஜனநாயகத்திற்கு எதிராக என்ன செய்தாலும், நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போம் என்று கூறினார். இதையடுத்து பாஜகவின் அச்சுறுத்தலால் ஓடி ஒளிவதற்கு இடமே இல்லை என்று நிலைக்கு வந்திருப்பதாக நினைக்கிறீர்களா? … Read more

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மாநிலங்களவை செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டத்தை மதித்து அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராவேன் என கூறினார்.

‘‘150 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்'' – கர்நாடக காங்கிரஸாருக்கு ராகுல் உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சித்ரதுர்கா சென்றார். அங்குள்ள லிங்காயத்து முருக ராஜேந்திரா மடத்துக்கு சென்ற ராகுல் காந்தி மடத்தின் தலைமை மடாதிபதி ஷிவமூர்த்தி முருகு சரணரு, ஹாவேரி ஹொசமட சுவாமி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது, ராகுல் காந்தி கூறுகையில், ‘‘பசவண்ணாவின் கொள்கைகளை படித்து, பின்பற்றி வருகிறேன். இஷ்டலிங்க தீட்ஷை மற்றும் சிவயோக பயிற்சி குறித்து கற்க விரும்புகிறேன். இங்கு வந்ததை … Read more

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி: யு.யு.லலித் பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த நீதிபதி யார் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது. எனவே, கொலீஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசித்து இவர்களில் ஒருவரை தலைமை நீதிபதி பரிந்துரைக்க வேண்டும். எனவே, அடுத்த தலைமை நீதிபதியாக … Read more

மும்பையில் பால்கர் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1400 கோடி போதை பொருள் பறிமுதல்…

மும்பை: மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1400 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். 700 கிலோ மெஃபெட்ரோன் என்ற போதை பொருளை கைப்பற்றிய போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.