'பாரத ரத்னா' கொடுக்கப்பட வேண்டிய மணீஷ் சிசோடியாவை கைது செய்ய துடிக்கிறது மத்திய அரசு -கேஜ்ரிவால்

அகமதாபாத்: மத்திய அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்திய துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் ஆனால் அரசியல் உள்நோக்கம் காரணமாக மத்திய அரசு அவரைத் துன்புறுத்துகிறது என்றும் கடுமையாக சாடியுள்ளார். டெல்லி அரசின் கல்வி மாதிரியை ‘நியூயார்க் டைம்ஸ்’ (New York Times) பாராட்டியுள்ளது. சிசோடியாவை புகழ்வதற்கு பதிலாக, அவர் குறிவைக்கப்படுகிறார். சிசோடியா விரைவில் கைது … Read more

நில முறைகேடு வழக்கு: சஞ்சய் ராவத்திற்கு செப்.5 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு…

மும்பை: சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது பத்ரா சால் நில முறைகேடு வழக்கு பதியப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சஞ்சய் ராவத் கடந்த ஜூலை 31ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை கடந்த 4ம் தேதி வரை அமலாக்கத்துறையின் காவலில் வைக்க உத்தரவிட்டது. அதன் பிறகு, கடந்த 8 மற்றும் 22ம் தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை கஸ்டடி காவல் … Read more

”ஆம் ஆத்மியை உடைத்தால் முதல்வர் பதவி” – பாஜக பேரம் பேசியதாக மணீஷ் சிசோடியா பேச்சு!

டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மணீஷ் சிசோடியா ஒரு டிவிட்டர் பதிவை பதிவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் அண்மையில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி அரசுக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டது என புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியது. முதல் கட்டமாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் … Read more

கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரினால் கோதுமையின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. போர் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கிருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படாத நிலை இருந்தது. ஐ.நா. சபையின் தலையீடு காரணமாக கடந்த மாதம் முதல் மீண்டும் அந்த நாடுகளில் … Read more

'பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் மணீஷ் சிசோடியா!' – அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்!

“பாரத ரத்னா விருதுக்கு தகுதியானர் மணீஷ் சிசோடியா” என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டி உள்ளார். குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 27 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக, இந்த முறையும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியாக … Read more

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது அரசின் கொள்கை விவகாரம்தானே? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது அரசின் கொள்கை விவகாரம்தானே என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவில் ராமேஸ்வரம் தீவிற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடலில் காணப்படும் மணல் திட்டுகள் ராமர் பாலம் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் மத நம்பிக்கையின் அடிப்படையில் சில கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட அதை தற்காலத்தில் நீதிமன்றங்களின் வாயிலாகவும் தீர்த்து கொள்ளவும் முயற்சிகள் நடக்கின்றனர். இதனால், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க … Read more

வன்கொடுமை செய்து கழுத்தறுத்து, முகத்தை சிதைத்து 8 வயது சிறுமி கொலை – டெல்லியில் கொடூரம்

டெல்லியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கழுத்தை அறுத்து, முகத்தை சிதைத்து யமுனையில் வீசிய கசாப்பு கடைக்காரரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கூலிவேலை செய்யும் தம்பதியரின் 8 வயது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டதாக சிறுமியின் தாயார் ஆகஸ்ட் 5ஆம் தேதி போலீசில் புகாரளித்தார். புகாரின்பேரில் கடத்த வழக்கை பதிவுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமியின் உடல் யமுனை ஆற்றங்கரையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது … Read more

உ.பி. சிறையில் 19 ஆண்டுகள் இருந்த பாகிஸ்தானியர் மீதான வழக்கில் மீண்டும் விசாரணை

மீரட்: உத்தர பிரதேசத்தின் ஷாம்லி பகுதி ஜோலா கிராமத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் முகமது வாரிஸ் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த அவரிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டில் முகமது வாரிஸுக்கு, ஷாம்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து … Read more

LSD: ரத்தத்தை உறிஞ்சும் 'லம்பி வைரஸ்'.. 7,300 மாடுகள் மரணம்.. விவசாயிகள் உஷார்!

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகளுக்கு தோல்கட்டி நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தற்போது வரை 7,300 மாடுகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தோல்கட்டி நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் தாக்குதலால் மாட்டின் தோலில் கட்டி உருவாகி மாடுகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.நோயைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதோடு, நோய் பாதிப்புக்குளான 8 மாநிலங்களில் மாடுகளுக்கு … Read more

ஜெய்ப்பூரில் மாணவர் சங்க தேர்தல் பேரணிக்கு அனுமதியின்றி திரண்ட மாணவர்கள்: போலீஸ் தடியடி

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மாணவர் சங்க தேர்தல் பேரணிக்கு அனுமதியின்றி திரண்ட இருதரப்பினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.