முஸ்லிம் கதாபாத்திரங்களால் நாடகம் பாதியில் நிறுத்தம் – எழுத்தாளர்கள் கண்டனம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சோரப் அருகேயுள்ள ஹனவட்டியில் இரு தினங்களுக்கு முன்பு வீரசைவ மந்திராவில் எழுத்தாளர் ஜெயந்த் கைகினியின் ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’ என்ற நாடகம் நிகழ்த்தப்பட்டது. ஜோசப் ஸ்டெய்னின் ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’ நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்ட கன்னட நாடகத்தில் முஸ்லிம் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. ரங்க பெலக்கு நாடக குழுவினர் மாலை 7.45 மணிக்கு நாடகத்தை தொடங்கிய போதே இந்துத்துவ அமைப்பை சேர்ந்த சிலர், “முஸ்லிம் கதாபாத்திரங்கள் நிறைந்த நாடகத்தை … Read more

பஞ்சாப்பில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்..!

பஞ்சாப்பில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பஞ்சாப் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார் Source link

இபிஎஸ்-க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு

டெல்லி: இபிஎஸ்-க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில் இபிஎஸ் மீதான வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டத்தில் சுற்றித் திரியும் சிறுத்தை – அச்சத்தில் தொழிலாளர்கள்

தேயிலை தோட்டப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழக – கேரள எல்லை பகுதியான தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே கேரள பகுதியான மூணாறு, பூப்பாறை, பெரியகானல், சின்னகானல், லாக்காடு எஸ்டேட் போன்ற பகுதிகளில் தேயிலை தோட்டங்களும் ஏலத்தோட்டங்களும் அதிகமாக உள்ளன. இங்கு, போடி, தேவாரம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் தினந்தோறும் சென்றும் அங்கேயே தங்கியும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மூணாறு அருகே லாக்காடு தேயிலை எஸ்டேட் பகுதியில் … Read more

‘‘மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள் காளி’’- திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கருத்தால் கடும் சர்ச்சை: ட்விட்டரில் நடந்த ‘வார்த்தைப் போர்’

கொல்கத்தா: காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியதற்கு மேற்கு வங்கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அது அவரது தனிப்பட்ட கருத்து என திரிணமூல் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. இயக்குநர் லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட போஸ்டர் வெளியானது. அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் காளிதேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் … Read more

அக்னிபத் திட்டம்: விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் … Read more

அலட்சியம் காட்டிய அதிகாரிகள்.. சாக்கடையில் இறங்கி போராட்டம் நடத்திய ஆளுங்கட்சி எம்எல்ஏ!

ஆந்திராவில், நிரம்பி வழிந்தோடும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யுமாறு பலமுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்எல்ஏ ஒருவர் சாக்கடையில் இறங்கி போராட்டம் நடத்தினார். நெல்லூர் தொகுதி எம்எல்ஏ வான கோத்தம் ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் சாக்கடை நீரில் இறங்கியதோடு மட்டுமல்லாமல் ஒருகட்டத்தில் அதன் மீது அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டார். Source link

2 நாள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை..வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை

மும்பை: மும்பையில் 2வது நாளாக பெய்து வரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வுமையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் நேற்று காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்தும் ஏற்பட்டிருக்கிறது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரின் பெரும்பாலான இடங்களில் ரயிகள் தாமதமாக இயக்கப்படுகின்றன. முக்கிய சாலைகளில் இடுப்பளவு வெள்ளம் … Read more

துடிதுடித்த பசுவை மீட்டு இதயத்தை வென்ற இளைஞனின் மனிதநேயம்.. பஞ்சாபில் நடந்த நெகிழ்ச்சி!

சுழன்று கொண்டிருக்கும் நவீன உலகத்தில் சக மனிதனுக்கு உதவுவதே பெரிய ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் மத்தியில், வாயில்லா ஜீவனுக்கு உதவியிருக்கிறார் கடைக்காரர் ஒருவர். பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையெங்கும் மழைநீர் தேங்கி இருக்கின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாது, கால்நடைகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அண்மையில் வைரலான வீடியோவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம். அந்த வகையில், மழை காரணமாக மான்சா பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கியிருந்ததோடு, மின்சார கம்பங்கள் மூலம் மின்கசிவும் ஏற்பட்டிருக்கிறது. … Read more

மும்பையில் கனமழை: பள்ளத்தில் விழுந்து இருசக்கர வாகன ஓட்டி பரிதாப பலி

மும்பை: மும்பையில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையமானது வரும் வெள்ளிக்கிழமை வரை மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று எச்சரித்துள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தானேவில் மழைநீர் தேங்கிய சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் பள்ளத்தில் வண்டியுடன் விழுந்த நபர் மீது பேருந்து ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனமழை தொடர்வதால் ராய்கட், … Read more