பாஜக ஆட்சி மன்ற குழுவில் அதிரடி மாற்றம்..வானதி சீனிவாசன் உள்ளே! ஆதித்யநாத் புறக்கணிப்பா?

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு மற்றும் ஆட்சி மன்ற குழு மாற்றியமைக்கப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாடாளுமன்ற (ஆட்சி மன்ற) குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.  … Read more

ஜம்மு காஷ்மீர் தலைவராக நியமிக்கப்பட்ட காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா; மாநில அரசியலுக்கு தள்ளியதால் அதிருப்தி

காஷ்மீர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஜம்மு – காஷ்மீரின் பிரசாரக் குழுத் தலைவராக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், தான் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகினார். பிரசாரக் குழு தலைவர் பதவி … Read more

தொழிலதிபர் கவுதம் அதானிக்கு ‘Z’ பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான கவுதம் அதானிக்கு ‘Z’ பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் துறைமுக மேம்பாடு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் தலைவர் 60 வயதான கவுதம் அதானி ஆவார். இவர் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகப் பணக்காரர்களிலும் டாப் 10 பட்டியலுக்குள் நீடிக்கும் முக்கிய தொழிலதிபர் ஆவார். இவருக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தல்கள் இருப்பதாக மத்திய … Read more

சிஏஏ எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போராட்டம்

கவுகாத்தி: இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர், வடகிழக்கு பகுதிகளில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதன்கிழமை மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. அசாம் அனைத்து மாணவர்கள் சங்கம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல் வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. அசாம் மாணவர்கள் சங்கம் நடத்த இருந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் தற்போதைய சூழலில், வரும் நாட்களில் இதுகுறித்து கவனம் … Read more

ரூ.215 கோடி மெகா மோசடி..!- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்கியது எப்படி..?

பல்வேறு கால கட்டங்களில் நூதன மோசடிகள் விதவிதமான வடிவங்களில் நடைபெற்று கொண்டு உள்ளன. இவ்வகையில் ரூ.215 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் சுகேஷ். மோசடி மன்னன் … Read more

வெளிநாட்டினருக்கான உலகின் சிறந்த வளர்ந்து வரும் 6 நகரங்களில் இடம்பெற்றுள்ளது பெங்களூரு

வெளிநாட்டினருக்கான உலகின் சிறந்த வளர்ந்து வரும் 6 நகரங்களில் பெங்களூரு இடம்பெற்றுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக ஆயிரக்கணக்கான ஸ்டார்ட்-அப் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு மாறியிருப்பது வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஊதியம் பெறும் வேலைகள் மற்றும் மலிவு விலையில் ஆடம்பர வாழ்க்கை முறைகள் பெங்களூரு உலகளாவிய நகரமாக மாறும் சாத்தியம் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர், லிஸ்பன், துபாய், மெக்சிகோ சிட்டி மற்றும் ரியோ … Read more

நியூயார்க்கில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் மீது தாக்குதல்; சல்மான் ருஷ்டி விவகாரத்தில் பாஜக மவுனம் காப்பது ஏன்? ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மோடி காலத்தில் நடந்த பரபரப்பு தகவல்

புதுடெல்லி: நியூயார்க்கில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நடந்த கொலை வெறி தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தும், பாஜக தொடர்ந்து மவுனம் காப்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த 12ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது மர்ம நபரால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளானார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் அவரது ஒரு … Read more

5 முறைக்கு மேலான ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போதுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்குமேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஏ.டி.எம். மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் … Read more

இலவச திட்டங்களுக்கு தடை கோரி வழக்கு..! – என்ன சொல்கிறது உச்ச நீதி மன்றம்..?

உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த இலவச திட்டங்களுக்கு எதிரான மனுவில், அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யஉத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். அதேநேரம், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் … Read more

‘மேக் இந்தியா நம்பர் 1’ பிரசார இயக்கத்தைத் தொடங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்று கூறி, ‘மேக் இந்தியா நம்பர் 1’ என்ற பிரசார இயக்கத்தை டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். டெல்லியில் நடந்த தொடக்க நிகழ்வில், “நாட்டின் குடிமக்கள் அனைவரும் இதில் ஒன்றிணைய வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார். “சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் நிலையான கவனத்தை செலுத்தி இந்தியாவை மீண்டும் நம்பர் 1 ஆக்கலாம்” என்று … Read more