விண்வெளி திட்டங்களுக்கு தாமதமில்லாமல் அனுமதி – மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தரா சிங் தகவல்

புதுடெல்லி: விண்வெளி தொடர்பான திட்டங்களுக்கான அனுமதிக்கு தாமதம் இல்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்தரா சிங் தகவல் அளித்துள்ளார். இதை அவர், திமுக எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கான பதிலில் தெரிவித்தார்.. இது குறித்து பிரதமர் அலுவலகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்த பதிலில் கூறியதாவது: உலக விண்வெளிப் பொருளாதாரத்தின்( குளோபல் ஸ்பேஸ் எகானமியின்) சரியான அளவை மதிப்பிடுவது ஒரு சிக்கலானதும் விவாதத்திற்குரியதுமான விஷயம் ஆகும். 2019 ஆம் ஆண்டின் … Read more

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பரிந்துரை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பரிந்துரை இந்தியாவின் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயர் பரிந்துரை யு.யு.லலித் பெயரை பரிந்துரை செய்தார் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரை செய்யும்படி மத்திய சட்ட அமைச்சகம் கோரியிருந்தது வரும் 26-ந் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்.வி.ரமணா Source link

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயர் பரிந்துரை

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசுக்கு பரிந்துரை செய்தார். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் 26ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.

சாலை தடுப்பில் மோதி அந்தரத்தில் தொங்கும் கார் – வாகன ஓட்டிகள் அச்சம்

ஹைதராபாத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி கார் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜ்பவன் சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி தொங்கியபடி நின்றது. இதில் காரில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து ஏற்பட்ட இடத்திற்கு கீழே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் … Read more

ஆந்திர தொழிற்சாலையில் விஷவாயு தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 121 ஆக உயர்வு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், அச்சுதாபுரம் பகுதியில் ‘சீட்ஸ்’ தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஷிப்ட்டில் பணியாற்றி வந்த பெண்களில் 121 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே கடந்த ஜூன் 3-ம் தேதி இதே தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்ததில் 350-க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கம், வாந்தி எடுத்து … Read more

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை எதிரொலி: அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பெங்களூர்; காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்திருக்கிறது. இதையடுத்து ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், குளிப்பதற்கும் 25-வது நாளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தொடர் கனமழை காரணமாக தண்ணீர் திறப்பட்டு வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒகேனக்கலில் இருந்து வினாடிக்கு 1,75,000 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடகா, கேரளா, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக … Read more

என்.டி.ஆர். மகள் உமா மகேஸ்வரியின் இறுதிச்சடங்கில் சந்திரபாபு பங்கேற்பு

ஹைதராபாத்: பழம்பெரும் நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி (52). இவர் கடந்த திங்கட்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சில உடல் உபாதைகளாலும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் உமா மகேஸ்வரி இத்துயர முடிவுக்கு வந்ததாக அவரது கணவர் ஸ்ரீநிவாச பிரசாத் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். உமா மகேஸ்வரியின் உடலைக் கைப்பறிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்குப் பின் அன்று இரவே உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். … Read more

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 83,000 கனஅடியாக உயர்வு…

பெங்களூர்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 45,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 83,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

காரைக்கால்: பள்ளி சென்று திரும்பிய சிறுவனை கடிக்கத் துரத்திய தெரு நாய்கள்

காரைக்காலில் பள்ளிக்குச் சென்று திரும்பிய சிறுவனை கடிக்க தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைக்க வைத்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகர பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் தெரு நாய்கள் அதிகளவு சுற்றித் திரிகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் தெரு நாய்களை அப்புறப்படுத்த நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இந்நிலையில் திருபட்டினம் பெரிய … Read more

தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளை கட்டுப்படுத்த நிபுணர் குழு – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை

புதுடெல்லி: தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்த உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர, அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச பொருட்கள், வாக்குறுதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தேர்தல் பிரச்சாரத்தில், அரசு நிதியில் இருந்து இலவச திட்டங்களை வழங்குவோம் என வாக்குறுதி அளிப்பது லஞ்சம் கொடுப்பதற்கு இணையானது. இதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த மனு உச்ச … Read more