குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் என். படேல் பதவியேற்பு

புதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) சுரேஷ் என்.படேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக இருந்த நிலையில் இடைக்கால சிவிசி.யாக சுரேஷ் என்.படேல் கடந்த ஜுன் மாதம் முதல் செயல்பட்டு வந்தார். அவரை அடுத்த சிவிசியாக நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனக்குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் சிவிசி.யாக சுரேஷ் என்.படேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் … Read more

கடற்படை காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக கேப்டன் சமீர் சிங் மீது வழக்குப் பதிவு

கடற்படை காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக கேப்டன் சமீர் சிங் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் போலி கடிதத்தைக் காட்டி இளைஞர்களுக்கு செக்யூரிட்டி காவலர் வேலை வாங்கித் தருவதாக பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பணி நியமனத் தேர்வு மும்பை கொலாபா வில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் கப்பலான குஞ்சலியில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த போலி நபர் அறிவித்திருந்தார். இதற்கான நுழைவுக் கட்டணம், சீருடை … Read more

அக்னிபாதை திட்டத்தின் கீழ் கடற்படையில் சேர 9½ லட்சம் பேர் விண்ணப்பம்… 82 ஆயிரம் பெண்களும் போட்டி!!

டெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் கடற்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் அக்னிபாதை திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்ட அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன்றிய அரசின் இத்திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், ராணுவத்தில் சேர முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன. … Read more

'நிறை புத்தரிசி' பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ‘நிறை புத்தரிசி’ பூஜைக்காக புதன்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான செட்டிகுளங்கரை வயல்களில் விளைந்த நெற்பயிரை கதிருடன் சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்திற்கு தலையில் சுமந்து வந்து, கோயில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்வதே நிறை புத்தரிசி பூஜை என்று … Read more

குரங்கு அம்மை பரவலை எவ்வாறு தடுப்பது? – மக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுரை

புதுடெல்லி: நாட்டில் குரங்கு அம்மை பரவலை தடுக்க மக்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுரைகளை வழங்கியுள்ளது. வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோயான குரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் முதல் பாதிப்பு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 14-ம் தேதி கண்டறியப்பட்டது. கேரளாவில் இதுவரை 5 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் தலைநகர் டெல்லியில் … Read more

உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் 140 பெண் தொழிலாளர்கள் விஷவாயு கசிவால் மயக்கம்

திருமலை: ஆந்திராவில் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் விஷவாயு கவிந்து 140 பேர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டத்தில் அச்யுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பிராண்டிக்ஸ்(உரம் தயாரிக்கும்)  தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர்.  இந்த பணியாளர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு … Read more

அமலாக்கத் துறை அதிகாரம் பற்றி நீதிமன்ற தீர்ப்பு அபாயகரமானது – காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் கருத்து

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வது உட்பட அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 250 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை ஒன்றாக விசாரித்த நீதிமன்றம், அந்த சட்டம் செல்லும் என கடந்த ஜூலை 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் … Read more

அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பம் – இந்திய கடற்படை தகவல்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் 2 பிரிவுகளுக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 82 ஆயிரம் பெண்கள் உட்பட 9 லட்சத்து 55 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. 4 ஆண்டு கால ஒப்பந்த முறையில் ராணுவத்தின் முப்படைகளிலும் பணியாற்ற அக்னிபாத் என்ற திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது.  இத்திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 46 ஆயிரம் வீரர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. Source link

குரங்கம்மையை தடுக்க செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: குரங்கம்மை  நோயை தடுப்பது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.  திருச்சூரில்  ஒரு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்தார். இதனால், மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது, நாட்டின் மொத்த குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த நோயை தடுப்பதற்கு … Read more

சோனியா, ராகுலிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் – அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் ஒரு பகுதியை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக … Read more