’அடிப்படை ஆதார விலை..புதிய மின்சார திட்டம்’.. டெல்லியில் விவசாயிகள் 72 மணி நேர போராட்டம்!

தலைநகர் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியிருக்கும் நிலையில், டெல்லியின் எல்லைகளில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லியில் 100 நாட்களை கடந்து ஆயிரக்கணக்கான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது வேளாண் விளைப்பொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலையை உயர்த்த வேண்டும். அதற்கு உரிய சட்டம் இயற்ற வேண்டும். மின்சார திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது. வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட … Read more

8 மாநிலத்தில் பரவியது தோல் கழலை நோய்: இதுவரை 7,300 கால்நடைகள் உயிரிழப்பு

புதுடெல்லி: தோல் கழலை நோய் 8 மாநிலங்களுக்கு பரவி உள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 7,300 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தோல் கழலை நோய் (லம்பி ஸ்கின் டிசீஸ்) கால்நடைகளை குறிப்பாக பசு மாடுகளை தாக்குகிறது. போக்ஸ்விரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை வைரஸ் மூலம் பரவும் இந்நோய் தொற்றும் தன்மை கொண்டது. குறிப்பாக கொசு, ஈக்கள் மூலம் பரவும். இதன் அறிகுறியாக முதலில் காய்ச்சல் ஏற்படும். பின்னர் தோலின் மேற்புரத்தில சிறுசிறு கட்டிகள் உருவாகும். இந்த நோய் … Read more

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறைகள் என்ன?

சமீபத்தில், மருத்துவர்கள் மீண்டும் ஒரு புதிய நோய் குறித்து நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோயின் பெயர் தக்காளி காய்ச்சலாகும். முக்கியமாக இந்த நோய் கை, கால் மற்றும் வாய் தொடர்பானது. அதன் பரவல் தற்போது ஒடிசா மாநிலத்தில் காணப்படுகின்றன. லான்செட் சுவாச மருத்துவத்தின்படி, தக்காளி காய்ச்சலின் முதல் தொற்று கேரளாவின் கொல்லத்தில் கண்டறியப்பட்டன. மேலும் இதுவரை இந்த தொற்றால் மொத்தம் 82 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒடிசாவில் 26 குழந்தைகளும் இதன் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தடன் 5 … Read more

ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் சேர்த்தால் சிபிஐ, அமலாக்கத்துறையின் வழக்குகள் அனைத்தும் முடிக்கப்படும் என பேரம்: மணீஷ் சிசோடியா அதிர்ச்சி தகவல்

டெல்லி: ஊழல்வாதிகள் மற்றும் சதிகாரர்கள் முன் நான் தலைகுனிய மாட்டேன் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆவேசமாக தெரிவித்துள்ளார். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குபதிவு செய்தது. இந்நிலையில் இன்று குஜராத் மாநில பேரவை ேதர்தல் பிரசாரத்திற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், மணீஷ் சிசோடியா அகமதாபாத் சென்றுள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட பதிவில், ‘ஆம் ஆத்மி கட்சியை … Read more

ஆம் ஆத்மியைக் கண்டித்து கேஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. டெல்லியை சாராயத்தில் மூழ்கடிக்க சாராய மாஃபியாக்களுடன் கைகோத்து கோடிக் கணக்கில் ஊழலில் ஈடுபட்டதற்காக மணிஷ் சிசோடியா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்களை … Read more

டெல்லியின் நிர்வாக அதிகாரம் யாருக்கு என்பது குறித்த வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைப்பு

டெல்லி: டெல்லியின் நிர்வாக அதிகாரம் யாருக்கு என்பது குறித்த வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

பாஜக தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டம்-ரஷ்யாவில் கைதான ஐஎஸ் தீவிரவாதி பகீர் தகவல்

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் தீவிரவாதி (Islamic State – IS), ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு வருகை தந்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் முக்கிய தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதி திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு, கைது செய்யப்பட்ட தீவிரவாதிக்கு, துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் ரஷ்ய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இஸ்தான்புல் நகர் சென்ற அந்த நபர், அங்கே … Read more

அடுத்த மாதம் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி – அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு?

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. உக்ரைன், தைவான் விவகாரங்களால் சர்வதேச அளவில் சீனா ஓரங்கட்டப்பட்டு வருகிறது. இதன்காரணமாக … Read more

இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதி ரஷ்யாவில் கைது

மாஸ்கோ: இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ரஷ்ய உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஐஎஸ் பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி தரப்பட்டுள்ளது.  துருக்கி இஸ்தான்புல் சென்ற பயங்கரவாதி ஐஎஸ் இயக்கத்தில் இணைந்துள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதி சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய … Read more

ஜார்க்கண்டில் சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் சிக்கியதால் மனைவியை முதல்வராக்க ஹேமந்த் திட்டம்

ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசியல் நெருக்கடி முற்றுவதால் மனைவியை முதல்வராக்க அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதல்வர் பெற்றிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு … Read more