விவாகரத்து செய்ய விண்ணப்பித்த இயக்குனர்

ஐதராபாத்: தெலுங்கில் 17 படங்கள் இயக்கியவர், ஸ்ரீனு வைட்லா (50). மகேஷ் பாபு நடித்த ‘தூக்குடு’, ‘ஆகடு’ மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ‘பாட்ஷா’ உள்பட பல படங்களை இயக்கிய அவர், ‘ரெயின்போ’ படத்தில் நடித்தார். இந்த நிலையில், தனது மனைவி ரூபாவை விட்டு பிரிந்து செல்வதற்காக, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே ஸ்ரீனு வைட்லா, ரூபாவுக்கிடையே குடும்ப ரீதியாக பிரச்னைகள் இருந்து வந்துள்ளது. ஸ்ரீனு வைட்லா இயக்கிய படங்களில் ரூபா காஸ்ட்யூம் … Read more

நண்டு படத்தில் பாடியபாடகர் பூபிந்தர் சிங் புற்றுநோய்க்கு பலி: பிரதமர் இரங்கல்

மும்பை: பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் பூபிந்தர் சிங் மரணம் அடைந்தார்.மூத்த பாலிவுட் பாடகரும், இசை அமைப்பாளருமான பூபிந்தர் சிங் (82), பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந் தார். ஏற்கனவே அவருக்கு கொரோனா பாதிப்பும் இருந்தது. இதனால் பெரும் அவதிக்குள்ளான பூபிந்தர் சிங், நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், பாலிவுட் பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். பஞ்சாப் அமிர்தசரஸ் நகரில் … Read more

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய ஒரு சீட்டுக்கு ரூ20 லட்சம்: சிபிஐ விசாரணையில் திடுக் தகவல்

புதுடெல்லி: நீட் தேர்தல் ஆள்மாறாட்டம் செய்ய ஒரு சீட்டுக்கு ரூ20 லட்சம் வசூல் செய்யப்பட்ட பகீர் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 17ம் தேதி நடந்தது. டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், ஆள்மாறாட்டம் செய்த 8 பேர் கைதாகினர். இவர்களில் டெல்லியை சேர்ந்த … Read more

ராணுவத் தேர்வில் சாதியப் பாகுபாடு – பதிலளித்த ராஜ்நாத் சிங்!

செவ்வாயன்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், ஜாதி மற்றும் மதச் சான்றிதழ்களை இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பத்தில் கேட்பதாக குற்றம் சாட்டினார். இது உண்மையல்ல என ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். “இது வெறும் வதந்தி. முந்தைய முறை, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்து நடந்து வருகிறது. எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, பழைய முறை தொடர்கிறது,” என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். ஜாதி மற்றும் மதச் சான்றிதழ்களைக் கேட்கும் ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தின் ஒரு பகுதி … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாத அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைனில் நாளை வெளியிடப்பட உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யவரும் பக்தர்கள் அதிகாலையில் அங்கபிரதட்சணம் செய்வது வழக்கம். இதற்காக  தனிகவுன்டரில் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை முந்தைய நாளில் பெறும் பக்தர்கள், மறுநாள் அதிகாலை 2 மணியளவில் சுவாமியை தரிசிப்பார்கள். ஆண்கள் வேட்டி மற்றும் துண்டு அணிந்தும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார் அல்லது புடவையிலும் அனுமதிக்கப்படுவர். ஆண், பெண்கள் தனித்தனி குழுவாக அங்கபிரதட்சணம் செய்து … Read more

நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டம்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய நபர் கைது

ராஜஸ்தான்: பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியா ஊடுருவிய நபர் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். நுபுர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தை ஆதரித்து டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டால் தனது ட்விட்டரில் ஒரு கருத்தைப் … Read more

மாணவிகளின் உள்ளாடையை கழற்றிய பின் “நீட்” தேர்வு எழுத அனுமதித்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – கேரள போலீசார்

கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற நீட் தேர்வின் போது மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடையை அகற்றிய பின் தேர்வு எழுத அனுமதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தேசிய தேர்வு முகமை சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவினர் கொல்லத்தில் விசாரணை நடத்த … Read more

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் 7 லஷ்கர் தீவிரவாதிகள் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜோரியில் 7 லஷ்கர் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியின் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை ேசர்ந்த 7 தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை ஜம்மு பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார். ஏடிஜிபி அளித்த தகவலின்படி, கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து … Read more

டெல்லியில் உள்ள 3 அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து

டெல்லியில் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள 3 அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட 12 பேரை மீட்புக்குழுவினர் மீட்ட நிலையில், ஒரு சிலருக்கு மட்டும் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுவதற்கும் பரவிய நிலையில் அப்பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. … Read more

பயணிகளின் உயிரில் விளையாடும் விமான நிறுவனங்கள் ‘ஸ்பாட் செக்கிங்’கில் திடுக்கிடும் தகவல் அம்பலம்: ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: விமானங்கள் அடிக்கடி தரையிறக்கப்படுவதால் எழுந்த புகாரையடுத்து, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஸ்பாட் செக்கிங் செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.இந்திய விமான நிறுவனங்களின் விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் சம்பங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அதுவும் கடந்த சில வாரங்களாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப காரணங்கள் என்று கூறப்பட்டாலும், விமான நிறுவனங்களின் தொழில்நுட்ப அலட்சியம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமை இண்டிகோவின் ஷார்ஜா – ஐதராபாத் விமானம் தொழில்நுட்ப … Read more