கரும்புக்கு குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.15 அதிகரிப்பு

புதுடெல்லி: கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சர்க்கரை ஆலைகள் அளிக்கும் கரும்புக்கான நியாயமான மற்றும் லாபகரமான விலைக்கு (எப்ஆர்பி) பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை நேற்று குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தற்போது குவிண்டாலுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.290ஐ, ரூ.305 ஆக உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, அக்டோபர்-செப்டம்பரில் தொடங்கும் 2022-2023க்கானஆண்டில் வழங்கப்பட உள்ளது. அரசின் இந்த முடிவால்  நாடு முழுவதும் உள்ள 5 கோடி … Read more

எஸ்பிஐ உதவி பொது மேலாளரான துப்புரவு தொழிலாளி – கடின உழைப்பில் சாதனை படைத்த மகாராஷ்டிர பெண்

புதுடெல்லி: தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) துப்புரவு தொழிலாளி, 37 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கேயே உதவி பொது மேலாளராகி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கடந்த 1964-ல் பிறந்தவர் பிரதிக் ஷா டோண்ட்வாக்கர். சதாஷிவ் கது என்பவருடன் இவருக்கு 16 வயதில் நடந்த திருமணம் காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார் பிரதிக் ஷா.மும்பை எஸ்பிஐ.யின் ஒரு கிளை அலுவலகத்தில் சதாஷிவ் அலுவலக உதவியாளராக இருந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த மகனுடன் சொந்த … Read more

பாதுகாப்பு அச்சுறுத்தல் 348 செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 348 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. மக்களவையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட செயலிகள் குறித்த கேள்விக்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து கூறிய போது, `உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 348 செயலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. … Read more

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் நிரந்தர சட்டம் உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத விதமாக ஒரு நிரந்தர சட்டத்தை உருவாக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13,500 பேர் கடந்த 2011ம் ஆண்டு பணியிலிருந்து அப்போதைய அதிமுக அரசால் நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் … Read more

பார்ச்சூன் வெளியிட்ட உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில் எல்ஐசி நிறுவனத்துக்கு 98வது இடம்..

அமெரிக்காவை சேர்ந்த பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக அளவில் தலைசிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில், பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி 98வது இடம் பிடித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 தனியார் நிறுவனங்கள் உள்பட மொத்தம் 9 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு 155வது இடத்தில் இருந்த நிலையில், 51 இடங்கள் முன்னேறி 104வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேசன், ஒஎன்ஜிசி, ஸ்டேட் பேங்க் ஆப் … Read more

கணவரின் ஜிஎஸ்டி எண் பகிர்வு கோவா மதுபார் சர்ச்சை ஸ்மிருதிக்கு புதிய சிக்கல்

பனாஜி: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கணவருக்கு சொந்தமான நிறுவனத்தின் ஜிஎஸ்டி எண், கோவா மதுபான விடுதியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள், கோவாவில் சட்ட விரோதமாக மதுபான விடுதி நடத்தி வருவதாக சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஸ்மிருதி இரானி, இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், … Read more

தேர்தல் இலவசம் குறித்து ஆலோசிக்க சிறப்பு குழு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்பு வழங்கும் விவகாரத்தில் நிபுணர்கள் கொண்ட சிறப்பு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க  கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி ரமணா, ‘‘இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தை ஒன்றிய அரசால் நடத்த இயலாமல் போகலாம். … Read more

சொத்துக்குவிப்பு வழக்கில் சவுதாலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை சஸ்பெண்ட்..

சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சஸ்பெண்ட் செய்து டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. சவுதாலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். சவுதாலாவுக்கு 88 வயது ஆவதை கருத்தில் கொண்டும், ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகள் அவர் சிறையில் இருந்துள்ளதை கவனத்தில் கொண்டும் இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.  Source link

கேரளாவில் கனமழை பலி 20 ஆக உயர்வு: சிவப்பு எச்சரிக்கை வாபஸ்

திருவனந்தபுரம் கேரளாவில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. கேரளாவில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. நெய்யார், பேப்பாறை, அருவிக்கரை உள்பட பல அணைகள் திறக்கப்பட்டு   உள்ளன. கேரள மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடுக்கி மாவட்டம் பொன்முடி, கல்லார்குட்டி, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள … Read more

18,728 நாட்கள் எம்எல்ஏ உம்மன்சாண்டி சாதனை

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தொடர்ந்து 51 ஆண்டுகள் நாட்கள் எம்எல்ஏ.வாக இருந்து சாதனை படைத்துள்ளார். கேரளாவில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. இவர் தற்போது புதிய சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து 18,728 நாட்கள் அதாவது 51 ஆண்டுகளும், மூன்றே கால் மாதமும் எம்எல்ஏவாக இருந்துள்ளார். கடந்த 1970ல் உம்மன்சாண்டி 27வது வயதில் கோட்டயம் மாவட்டம், புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். தொடர்ந்து, இதே தொகுதியில் 11 … Read more