நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் சோனியா வீட்டில் போலீஸ் குவிப்பு: யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை; காங்கிரஸ் தலைமை ஆபீசுக்கு தலைவர்கள் செல்ல தடை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தி வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கட்சி தலைவர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்தது. இந்த பத்திரிகையை நடத்த, காங்கிரஸ் கட்சி சார்பில் … Read more

குரங்கு அம்மை தொற்றில் இருந்து தப்பிக்க சுகாதாரத்துறை கூறும் அறிவுரைகள் என்ன தெரியுமா ..?

உலகில் 78 நாடுகளில் குரங்கு அம்மை இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 20,000-க்கும் அதிகமானவர்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் குரங்கு அம்மை தொற்று அதிகளவில் ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்காவில் 70 பேர் அத்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்காவைத் தவிர்த்து பிற நாடுகளில் குரங்கு அம்மைக்கு நான்கு பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சமீபகாலமாக குரங்கு அம்மை தோற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதற்கு பல மருத்துவ நிபுணர்கள் தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் குரங்கு … Read more

உஜ்வாலா திட்டத்தின் 9 கோடி பயனாளிகளில் 4.13 கோடி பேர் ஒரு முறை கூட ‘காஸ்’ சிலிண்டர் வாங்கவில்லை: கடும் விலை ஏற்றத்தால் தயக்கம்

புதுடெல்லி: உஜ்வாலா திட்ட பயனாளிகளில் 4.13 கோடி பேர் கடும் விலை ஏற்றத்தால் ஒரு முறை கூட ‘காஸ்’ விலை கொடுத்து வாங்கவில்லை என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின்  உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவச காஸ் இணைப்பும், மானியத்துடன் கூடிய காஸ் விநியோகம் செய்யப்படுகிறது. பயனாளிக்கு ஒன்றிய அரசின் மானியம் கிடைத்தாலும் கூட, அவர்களில் கோடிக்கணக்கான மக்கள் காஸ் சிலிண்டர்களை நிரப்புவதில்லை. காரணம், வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மாயாவதி ஆதரவு யாருக்கு ..?

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், ஆளும் கூட்டணியும் எதிர்க்கட்சியும் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துக்கு வரத் தவறியதால், தன்கருக்கு தனது ஆதரவை முறையாக அறிவிப்பதாக மாயாவதி கூறினார். பரந்த தேசிய நலன் மற்றும் பகுஜன் இயக்கத்தை கருத்தில் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க தனது கட்சி முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். ராஜஸ்தானைச் … Read more

அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.: இந்திய கடற்படை தகவல்

டெல்லி: அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. 82,000 பெண்கள் உட்பட 9.55 லட்சம் பேர் அக்னிபத் திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆம் ஆத்மி ஆதரவு யாருக்கு..? – ஆச்சரியப்பட்ட எதிர்கட்சிகள்..!

இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, வரும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை ஆம் ஆத்மி கட்சி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் எம்பி சஞ்சய் சிங் தெரிவித்தார். “ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும் , டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் நடைபெற்றது. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்பது … Read more

மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்பு: ஆளுநர் இல. கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..!!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்று கொண்டனர். மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, மேற்குவங்க அமைச்சர்களாக இருந்த சுப்ரதா முகர்ஜி, சாதன் பாண்டே ஆகியோர் உயிரிழந்தனர். இந்த மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், கடந்த மாத இறுதியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, … Read more

நாடு முழுவதும் 51,000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ்: மொத்தம் 24 லட்சம் பேருக்கு பாதிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் 51 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மொத்தம் 24 லட்சம் பேருக்கு பாதிப்பு உள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாடு முழுவதும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டது. அதன்படி கடந்தாண்டு  அறிக்கையின்படி எய்ட்ஸ் நோய் தொற்று பாதிப்பு 46 சதவீதம் வரை குறைந்துள்ளது.  நாடு முழுவதும் சுமார் 24.01 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 45 சதவீதம் அல்லது 10.83  … Read more

பாஜகவுக்கு ஆலோசனை கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்..!

அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு சென்று இருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது சீனா தைவான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு இருக்கக்கூடிய தேசப் பிரிவினை வாதத்தை முன்வைத்து இது பேசுபொருளாக இருக்கிறது. சீனாவில் இருந்து பிரிந்த தேசம் தைவான் என்றாலும் தைவானையும் சேர்த்து ஒருங்கிணைந்த சீனா என்கின்ற கனவில் சீனா இருக்கிறது. இது எல்லை பிரச்சனையாக விரிவடையும் பட்சத்தில் போர் நடக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் தைவான் சீனா … Read more

கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மைக்கும் தடுப்பூசி வருது!: ஒன்றிய அமைச்சருடன் சீரம் சிஇஓ பேச்சு

புதுடெல்லி: கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக ஒன்றிய அமைச்சரை சந்தித்த சீரம் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்தார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு, மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருந்தும் கொரொனா தொற்று உருமாறிய வைரசாக மீண்டும் பரவி வருகிறது. அந்த வகையில் குரங்கம்மை என்ற புதியவகை வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 8 பேர் குரங்கம்மை வைரசால் … Read more