இமாச்சல் காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்தார் ஆனந்த் சர்மா

புதுடெல்லி: இமாச்சல் காங்கிரஸ் வழிகாட்டு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தலை முன்னிட்டு கட்சி எடுத்த முடிவுகள் குறித்து என்னுடன் ஆலோசிக்கவில்லை. எனது சுயகவுரவத்தை விட்டு கொடுக்க முடியாது. ஆனால் இமாச்சலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்வேன் என ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இமாச்சல் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு தலைவராக ஆனந்த் சர்மா கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் … Read more

டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த தீவிரம்: விவசாயிகளை தடுக்க சிமெண்ட் தடுப்புகளை போட்டு அரண்..!

டெல்லி: பிரதமர் மோடி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி விவசாயிகள் இன்று முதல் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டதால் டெல்லியை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் ஓராண்டு காலம் அமர்ந்து விவசாயிகள் நடத்திய தர்ணா போராட்டம் நாட்டையே உலுக்கியது. 8 மாதங்களுக்கு பின்னர் டெல்லியில் போராட்டம் நடத்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டனர். இதனை தடுக்க அரியானா எல்லை, உத்தரப்பிரதேச எல்லை என முக்கிய … Read more

யுஸ்வேந்திர சாஹல் உடன் விவாகரத்தா? – மவுனம் கலைத்த தனஸ்ரீ

சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பிரியவிருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில் அதுகுறித்து மவுனம் கலைத்துள்ளார் தனஸ்ரீ. இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் 2020 டிசம்பரில் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்தார். தனஸ்ரீ வர்மா ஒரு யூடியூபர். மேலும் டான்சராகவும் பணிபுரிந்து வருகிறார். தனிப்பட்ட முறையில் அவரை சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம். இதனால் சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீயும் ஒன்றாக வெளியிடும் ஷார்ட் வீடியோக்கள் இணைய உலகில் மிகப்பிரபலம். இதனிடையே, … Read more

தோல் மருத்துவரை தாக்கிய மகள்: மன்னிப்பு கோரிய மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா

குவாஹாட்டி: மிசோரம் மாநில முதல்வராக மிசோ தேசிய முன்னணி தலைவர் ஜோரம்தங்கா உள்ளார். இவரது மகள் மிலாரி சாங்தே, கடந்த 17-ம் தேதி தலைநகர் அய்வாலில் உள்ள தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற சென்றார். ஆனால், முன்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி மிலாரியை பார்க்க மறுத்துள்ளார் மருத்துவர். இதனால் ஆத்திரமடைந்த மிலாரி, மருத்துவரின் அறைக்குள் நுழைந்து அவரது கன்னத்தில் அறைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து அனுப்பினர். இந்த சம்பவத்தை செல் போனில் பதிவு செய்த யாரோ, … Read more

இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டம்

தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி விரிவாக்கம், மின்சார வாகன தயாரிப்பு குறித்த திட்டங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை அந்நிறுவனத்தின் தலைவர் லியு சந்தித்தார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளுடனும் அவர் பேச்சு நடத்தினார். Foxconn தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று மையங்களைக் கொண்டுள்ளது, அங்கு Apple, Xiaomi மற்றும் பிற எலக்ட்ரானிக் பிராண்டுகளுக்கான ஃபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. Source … Read more

அரசியல் களத்திற்கு வருகிறாரா ஜூனியர் என்டிஆர்?.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

டெல்லி: ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைக்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஐதராபாத்தில் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு இருந்ததாக ஜூனியர் என்டிஆர் தெலுங்கு சினிமாவின் ரத்தினம் என்றும் அமித்ஷா பாராட்டினார். முன்னதாக … Read more

வருமான வரித்துறை சார்பில் ரூ.37.5 லட்சம் செலுத்தக் கூறி தொழிலாளிக்கு நோட்டீஸ்: போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை

ககாரியா: பிஹார் தினக் கூலி தொழிலாளி ஒருவருக்கு ரூ.37.5 லட்சம் வரிபாக்கியை செலுத்தக் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிஹார் மாநிலம் ககாரியா மாவட்டம் மஹானா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் யாதவ். இவர் நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் பெறுகிறார். இந்நிலையில், இவரது பெயரில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ரூ.37.5 லட்சம் வரி பாக்கியை செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் … Read more

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் திட்டம் முறியடிப்பு..!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகளை ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச் சண்டை நடத்தி விரட்டியடித்தனர். இரவில் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் சிலருடன் ஜம்மு காஷ்மீரின் நவுஷாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் காயம் அடைந்த தபாரக் உசைன் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்காக ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளான். 10 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்ற … Read more

ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்க சட்ட திருத்தம் சிங்கப்பூர் அறிவிப்பு

சிங்கப்பூர்: ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக மாற்ற அரசியலமை ப்பு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப் போவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அறிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், வருடாந்திர தேசிய தினப் பேரணியில் பேசுகையில், ‘‘ஒரே பாலின சேர்க்கையை குற்றமாக கருதும் காலனித்துவ கால சட்டத்தை ரத்து செய்வது இப்போது சரியானது என கருதுகிறேன். ஏனெனில் பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள். இதன் மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன். ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை … Read more

வடமாநிலங்களில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு

மாண்டி: வட மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் ஒடிசாவில் கடந்தமூன்று நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இந்த மாநிலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் … Read more