இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

டெல்லி: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இலங்கை பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்களால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்ற அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து வருகிறார்.

எதிர்கட்சிகள் அமளி: 2-வது நாளாக முழுவதுமாக முடங்கிய நாடாளுமன்றம்

மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால் முடங்கின. விலைவாசி உயர்வு, கடும் பணவீக்கம் ஆகிய முக்கிய விவகாரங்கள் மீது பிற அலுவல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரண்டு வகைகளிலும் கோரிக்கை வைத்தன. இந்தக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் தொடர் முழக்கங்களை எழுப்பின. இந்நிலையில் இரண்டு அவைகளும் முதலில் இரண்டு மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. … Read more

உத்தரப் பிரதேச லூலூ மாலில் மத வழிபாடுகள்: முதல்வர் யோகி எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள லூலூ மாலில் சிலர் தொழுகை நடத்திய சம்பவம் சர்ச்சையான நிலையில், “இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது, மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில் “சிலர் தேவையற்ற தடைகளை ஏற்படுத்துகின்றனர். பொது இடங்களில் மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். லக்னோ நிர்வாகம் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” … Read more

நீட் தேர்வுக்கு விலக்கு எப்போது? – தமிழக அரசை கை காட்டிய மத்திய அரசு!

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்து உள்ளார். நீட் எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மாநில ஆளுநர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சத்தின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, … Read more

“சில்லரையாக விற்கபடும் அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டி இல்லை” – நிர்மலா சீதாராமன்

சில்லரையாக விற்கபடும் அரிசி, கோதுமை, பருப்பு, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், லேபிள் ஒட்டபட்டு, பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். Source link

பால், அரிசிக்கு 5% ஜிஎஸ்டி: பாஜக எம்பி கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: பால், தயிர், வெண்ணெய், அரிசி, பருப்பு, ரொட்டி போன்ற பேக்கேஜ் செய்யப்பட்ட பொருளுக்கு 5% சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பாஜக எம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மகனான பாஜக எம்பி வருண்காந்தி வெளியிட்ட பதிவில், ‘பால், தயிர், வெண்ணெய், அரிசி, பருப்பு, … Read more

ஒரே ஆண்டில் இந்திய குடியுரிமையை துறந்த ஒன்றரை லட்சம் இந்தியர்கள்

சென்ற ஆண்டில் மட்டும் 1,63,370 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், 2019ஆம் ஆண்டு முதல் 2021 வரை குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை வெளியிட்டார். அதன்படி இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020இல் 85,256 பேரும், 2021இல் 1,63,370 பேரும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என தெரிவித்து உள்ளார். அமெரிக்கா … Read more

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தொகையை உயர்த்தும் யோசனை இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: பிரதான் மந்திரி ஆவாஸ் ஜோஜ்னா எனும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் (PMAY) வீட்டுக்கான தொகையை உயர்த்தும் யோசனை அரசிடம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை நாடாளுமன்ற மக்களவையில் இன்று ரவிக்குமார் எம்.பி எழுப்பிய வினாவுக்கு மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில் தெரிவித்தார். இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ”பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் (PMAY-G) கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகளின் பட்டியலைப் புதுப்பிக்க அரசு … Read more

5% ஜிஎஸ்டி உடனடியாக திரும்ப பெற வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீது விதித்துள்ள 5% ஜிஎஸ்டி யை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை வலியுறுத்தினார். “ஒருபுறம், ஒட்டுமொத்த நாடும் பணவீக்கத்துடன் போராடுகிறது, மறுபுறம், மத்திய அரசு தினசரி பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரியைவிதித்து, அவற்றின் விலையை அதிகப்படுத்தியுள்ளது. “உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் முதல்வர் திங்களன்று … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நேரில் அழைப்பு

டெல்லி: பிரதமர் மோடியிடம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சரின் சார்பில் அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோர் வழங்கினார்கள். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.7.2022 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.அப்போது முதலமைச்சர், சென்னையில் 28.7.2022 அன்று நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி … Read more