உலகின் வசிக்கத்தக்க சிறந்த நகரங்களின் பட்டியல்: சென்னை, பெங்களூருக்கு எந்த இடம்? 

உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலில் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்கள் மிகக் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது. பொருளாதார புலனாய்வு அமைப்பு உலகம் முழுவதும் மொத்தம் 173 நகரங்களில் வாழ்க்கை நிலைமைகளை ஆய்வு செய்து இந்த ஆண்டுக்கான உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வாழக் கூடிய தரத்தின் அடிப்படையில் தரவரிசையில் இடம்பெறும். குறிப்பாக நகரத்தின் உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட அம்சங்களை வைத்து … Read more

“மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் செயல்படுவார்கள்” – மத்திய கல்வித்துறை அமைச்சர்

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் பேசிய அவர், மத்திய பல்கலைக்கழகங்களுக்கு குடியரசுத் தலைவர் வேந்தராகவும், மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராகவும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். இது சரியான மற்றும் நன்கு பரிசோதிக்கப்பட்ட அமைப்பு எனக்கூறிய அவர், வேந்தர் பதவியில் சிலர் அரசியல் பிரச்னைகளை உருவாக்குவதாகவும் மம்தா பானர்ஜியை மறைமுகமாக சாடினார். Source link

மகா விகாஸ் அகாடி கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெல்லும்: சஞ்சய் ராவத்

மராட்டியம்: சட்டசபை தேர்தல் இன்று நடத்தப்பட்டால் மகா விகாஸ் அகாடி கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எங்கள் பக்கம் திரும்பி வருவார்கள் என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

”இந்த ரேட்டுக்கு வீடே வாங்கிரலாம்” : Uber கார் கட்டணத்தால் ஆடிப்போன மும்பைவாசிகள்!

இந்தியாவில் எந்த நகரத்தில் இருந்தாலும் டிராஃபிக்கில் சிக்குவது பெரும் சிக்கல்தான். அதுவும் மழை காலமென்றால் என்னத்தச் சொல்ல என அதிருப்தி தெரிவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். ஒரு பக்கம் மழை, ஒரு பக்கம் டிராஃபிக்கை சமாளிக்க cab, auto பிடித்தாவது வீட்டுக்கு சென்றிடலாம் என எண்ணி அதற்காக செயலியில் புக் செய்ய முற்பட்டால் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அப்படியான சம்பவம் குறித்துதான் இப்போது பார்க்கப் போகிறோம்.  மும்பையில் அண்மை நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அலுவலகங்களுக்கு … Read more

பிரதமர் ஹெலிகாப்டர் அருகே பறந்த கருப்பு பலூன்களால் போலீஸ் அதிர்ச்சி

பீமவரம்: பீமவரம் அருகே உள்ள பேத அமிரம் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னவரம் சென்றார். பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது சில கருப்பு பலூன்கள் வானத்தில் பறந்து வந்து ஹெலிகாப்டர் அருகே நெருங்கின. இந்த கருப்பு பலூன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பறந்ததால் போலீஸார் அதிர்ச்சி … Read more

மும்பையை மிரட்டும் கனமழை – 2 நாட்களுக்கு வெளியே வராதீங்க!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்த கன மழை காரணமாக, பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. சியான், அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது. பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. … Read more

தகாத வார்த்தைகளால் இந்திய ரசிகர்களை திட்டிய இங்கிலாந்து ரசிகர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கி. கிரிக்கெட் வாரியம் உறுதி.!

பர்மிங்ஹாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இனவெறியுடன் நடந்து கொண்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது. எட்ஜ்பஸ்டனில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள், இந்திய ரசிகர்களிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினர். மைதானத்தில் இருந்த காவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது குறித்து இந்தியர்கள் பலர் டிவிட்டரில் பதிவிட்ட நிலையில், நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

தெலுங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை: ரூ.4 கோடி மதிப்புள்ள 8.3 கிலோ தங்க நகைகள் திருட்டு

ஹைத்ராபாத்: தெலுங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து, கொள்ளையர்கள் நகைகளையும், பணத்தையும் அள்ளிச்சென்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பூசாப்பூரில், தெலுங்கானா கிராமிய வங்கி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த வங்கியில், கடந்த சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டது. நேற்று வழக்கம் போல், அதிகாரிகள் வங்கியை திறப்பதற்காக வந்தபோது, வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த வங்கி லாக்கர் கேஸ் … Read more

மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை: மும்பையில் ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பெய்துவரும் கனமழையால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்திப் பத்திரமான இடங்களில் தங்கவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 5 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மும்பைக்கு மும்பை மழை: முக்கியத் தகவல்கள் 1. தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாபூர் உள்ளிட்ட … Read more

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த சரக்கு லாரி.!

இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர வீட்டிற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்தனர். முன்னதாக, நேற்று குலு பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 3,000 பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது Source link