“தேசத்துக்கு என்னால் முடிந்ததைச் செய்வேன்” – ராஜ்ய சபா எம்பியாக ஹர்பஜன் சிங் பதவியேற்பு

புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 25 பேர் நேற்று முறைப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். பஞ்சாப் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். ஏற்கெனவே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் தலைவராக உள்ள ஹர்பஜன் சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை தேர்தலுக்கு முன்பு சந்தித்தார். அவர் காங்கிரஸில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடலாம் என தகல்கள் வெளியாகின. ஆனால் … Read more

அரிசி, கோதுமை, பருப்பு, தயிரை 25 கிலோவுக்கு அதிகமா வாங்கினா ஜிஎஸ்டி இல்லை: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: அரிசி, கோதுமை, பருப்பு போன்வற்றை 25 கிலோவுக்கு மேல் வாங்கினால் ஜிஎஸ்டி வராது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிவிதிப்புக்குள் வராத பல பொருட்களுக்கு புதிதாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது. குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும், லேபிள் ஒட்டப்பட்ட உணவுப் பொருட்களான  பால், தயிர், பனீர், மோர், லஸ்ஸி, அரிசி, கோதுமை மாவு ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.இந்த புதியவரி விதிப்பு … Read more

நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சம்பளத்தால் அதிக செலவு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம்: தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு

திருமலை: நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சம்பளத்தால் அதிக செலவு ஏற்பட்டுள்ளதால், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு செய்துள்ளனர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர் தில் ராஜூ தலைமையில் ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி 10 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு … Read more

PresidentialPolls: குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு எவ்வளவுன்னு தெரியுமா?

தேசத்தின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்யிட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்களும், அந்தந்த மாநில சட்டப்பேரவைகளிலோ, தலைமைச் செயலக வளாகத்திலோ வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் மாநில எம்எல்ஏக்களும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் என நாடு முழுவதும் மொத்தம் … Read more

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 22-ம் தேதி கூடுகிறது: கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க முடிவு..!

டெல்லி: டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெற உள்ளது. மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அந்த விசாரணை நிலுவையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த விவகாரத்தை காவிரி ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 17 மற்றும் 23ம் தேதிகளிலும் ஜூலை 6ம் … Read more

ம.பி நர்மதை ஆற்றுக்குள் மகாராஷ்டிர பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் பலி; 15 பேர் மீட்பு

தார்/ மத்தியப்பிரதேசம்: மகாராஷ்டிரா போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நர்மதை ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர். மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகமான எம்எஸ்ஆர்டிசி-யைச் சேர்ந்த பேருந்து ஒன்று திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து புனே நோக்கி சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்து தார் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா – மும்பை நெடுஞ்சாலையில் கல்காட் பாலத்தில் சென்று … Read more

உச்ச நீதிமன்றத்தை நாடிய நுபுர் ஷர்மா – என்ன காரணம் ?

பாஜக விலிருந்து நீக்கப்பட்ட நுபுர் ஷர்மா, முகமது நபியைப் பற்றி பேசி தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். நுபுர் ஷர்மா ஜூலை 1 அன்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கம் கோரினார். இது வரிசையாக எப்.ஐ.ஆர்.களை இணைப்பதற்கான மனுவைத் திரும்பப் பெற வழிவகுத்தது. நுபுர் ஷர்மா, நபிகள் நாயகத்திற்கு எதிரான அவதூறான அறிக்கைக்காக ஒன்பது எஃப்.ஐ.ஆர்களை எதிர்கொள்கிறார். அவரது கருத்துக்கு எதிராக … Read more

பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்: உ.பி. நீதிமன்றங்கள், காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்..!!

டெல்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உத்திரப்பிரதேச நீதிமன்றங்கள், காவல்துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. ஒரே விவகாரத்தில் வெவ்வேறு இடங்களில் பல முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். முகமது ஜுபைர் கைது விவகாரத்தில் இந்த ஆபத்தான சுழற்சி கவலை அளிக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

சேலம் முழுவதும் இஎஸ்ஐ திட்டத்தை அமலாக்குக: மக்களவையில் திமுக எம்.பி பார்த்திபன் கோரிக்கை

புதுடெல்லி: சேலம் மாவட்டம் முழுவதிலும் இ.எஸ்.ஐ திட்டத்தை அமலாக்க வேண்டும் என்று சேலம் மக்களவைத் தொகுதி திமுக எம்.பியான எஸ்.ஆர்.பார்த்திபன் திங்கள்கிழமை கேரிக்கை எழுப்பினார். இது குறித்த கோரிக்கையை திமுக எம்பியான எஸ்.ஆர்.பார்த்திபன் விதி எண் 377 -ன் கீழ் விடுத்ததில் பேசியதாவது: “சேலம் உருக்கு ஆலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இதுவரை இஎஸ்ஐ வசதி கிடைக்கவில்லை. பலமுறை எஸ்.எஸ்.பி அலுவலகத்திலும் ஒப்பந்தக்காரர் … Read more

இஸ்ரேல் நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் மின் வாகனங்களுக்கான அலுமினியம் ஏர் பேட்டரிகள் உற்பத்தி..!

ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹின்டல்கோ நிறுவனம், இஸ்ரேலின் பினர்ஜி, ஐ.ஓ.பி. நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் மின் வாகனங்களுக்கான அலுமினியம் ஏர் பேட்டரிகளை உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. பேட்டரிகளுக்கான அலுமினிய தகடுகளை உற்பத்தி செய்யவும், பேட்டரிகளில் பயன்படுத்தப்பட்ட அலுமினியத்தை மறுசுழற்சி செய்யவும் அந்நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஆக்ஸிஜனுடன் சுற்றுப்புற காற்றில் அலுமினியம் வினைபுரியும் போது உருவாகும் அலுமினியம் ஹைட்ராக்சைட் மூலம் அலுமினியம் – ஏர் பேட்டரிகள் ஆற்றலை உற்பத்தி செய்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்த எடை போன்ற … Read more