மாநில அரசுகளுடன் மோதல் போக்கிருந்தால் தேசம் எப்படி வளரும்? – அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி

மாநில அரசுகளுடன் மோதல் போக்கினை மட்டுமே மத்திய அரசு கடைபிடிக்குமேயானால் நாடு எப்படி வளார்ச்சிக் காணும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால். இது தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளதாவது: சாமான்ய மனிதர்கள் பணவீக்கன், வேலைவாய்ப்பின்மையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையி மத்திய அரசு மாநில அரசுகளுடன் கைகோத்து இப்பிரச்சினைகளுக்கு அல்லவா தீருவ் காரண வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக மாநில அரசுகளுடன் … Read more

யாரையும் காலில் விழ விடக்கூடாது: அமைச்சர்களுக்கு தேஜஸ்வி உத்தரவு

பாட்னா: ‘புதியதாக கார் வாங்கக் கூடாது, யாரையும் காலில் விழ அனுமதிக்கக் கூடாது,’ என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை ராஷ்டிரிய ஜனதா தள அமைச்சர்களுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மகா கூட்டணி அரசில், முக்கிய கூட்டணி கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளது. இக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார். இவருடைய கட்சியை சேர்ந்த 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இம்மாநில சட்ட … Read more

'2024ல் பிரதமர் மோடிக்கு மக்களே லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள்' – மணிஷ் சிசோடியா

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டியும் டெல்லி அரசுக்கு புதிய கொள்கையினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதில் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா … Read more

கியான்வாபி வழக்கு தாமதம் – முஸ்லிம் தரப்புக்கு அபராதம்

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தில் உள்ள சிங்கார கவுரி அம்மன் மற்றும் பிற கடவுள்களை வழிபடும் உரிமை கோரி 5 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா மஸ்ஜித் (ஏஐஎம்) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வாஸ் கடந்த மே 20-ம் தேதி விசாரிக்கத் … Read more

புதிய கலால் கொள்கை முறைகேடு சிக்கியவர்களுக்கு சிபிஐ சம்மன்: டெல்லி அரசியலில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில்  புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 31 இடங்களில் அது  சோதனை நடத்தியது. இதில், முறைகேடு தொடர்பான  முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். ‘இன்டோஸ்பிரிட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரும் , தனியார் மதுபான வியாபாரியுமான சமீர் மகேந்திரு தான், அரசின் புதிய கலால் கொள்கையை உருவாக்கியவர்களில்  … Read more

26/11 பாணியில் மும்பையில் மீண்டும் தாக்குதல் – பாகிஸ்தான் எண்ணிலிருந்து காவல் துறைக்கு வாட்ஸ் அப் மூலம் மிரட்டல்

மும்பை: மும்பை காவல் துறையின் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு நேற்று முன்தினம் இரவு வாட்ஸ் அப்மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், மும்பையில் 26/11 பாணியில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல் துறை நேற்று தெரிவித்தது. பாகிஸ்தான் செல்போன் எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த தகவலின் ‘ஸ்க்ரீன்ஷாட்’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 6 பேர் இந்த தாக்குதலை நடத்துவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கடந்த ஜூன் … Read more

மாநில பிரிப்பால் பாதித்த ஆந்திராவுக்கு அதிக நிதி: ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி அறிவுரை

அமராவதி: ‘மாநிலம் பிரிக்கப்பட்டதால் பின்தங்கியுள்ள ஆந்திராவுக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதியுதவி அளிக்க வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கோரியுள்ளார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி.ரமணா  நேற்று திறந்து வைத்தார். இதில் பேசிய அவர், ‘‘கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதன் பிறகு  நிதி தொடர்பான விஷயத்தில் ஆந்திரா பின் தங்கியுள்ளது. எனவே, ஒன்றிய அரசு இந்த … Read more

இனி தகுதித்தேர்வில் தமிழ் கட்டாயம்!!

தமிழ் மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்னும் முறை … Read more

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் புகார் | பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு பிடிவாரன்ட்

பெங்களூரு: பாலியல் வழக்கில் கர்நாடக நீதிமன்றம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண் மென்பொறியாளர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தங்கியிருந்தார். அப்போது நித்தியானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சம்பந் தப்பட்ட பெண் ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் நித்தியானந்தா கடந்த 2010-ம் ஆண்டு இமாச்சலபிரதேச … Read more

'மனித வளத்துக்கான மதிப்பு குறைந்து விட்டது' – தலைமை நீதிபதி என்.வி.ரமணா

“கல்வி அளிக்கும் நிறுவனங்கள் தொழிற்சாலைகளாக பெருகி உள்ளதால், படித்து பெறும் பட்டம் மற்றும் மனித வளத்துக்கான மதிப்பு குறைந்து விட்டது” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்து உள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதியில் அமைந்துள்ள ஆச்சாரியா நாகார்ஜூனா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்தப் பல்கலையின் முன்னாள் மாணவரான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் இடையே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி … Read more