தேசிய கிராம தன்னாட்சித் திட்டத்தில் நிலுவைத் தொகை இருப்பது ஏன்? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: தேசிய கிராம தன்னாட்சித் திட்டத்தில் நிலுவைத் தொகை இருப்பது ஏன்? என திமுக எம்பி கனிமொழி செவ்வாய்க்கிழமை மக்களவையில் எழுப்பி கேள்விக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் பதிலளித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியின் எம்பியான கனிமொழி எழுப்பியக் கேள்வியில், ‘தேசிய கிராம தன்னாட்சித் திட்டம் என்ற பொருள்படியான ’ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான்’ திட்டத்தில் மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட திட்டத் தொகைக்கும் விடுவிக்கப்பட்ட தொகைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளதா? இடைவெளி … Read more

கொரோனா… குரங்கு அம்மை… பன்றிக் காய்ச்சல்… வைரஸ்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் கேரளா!

கேரளாவில் கடந்த சில நாட்களாக குரங்க அம்மை சற்று தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. திருச்சூரில் குரங்கு அம்மை அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அத்துடன் இன்று மேலும் ஒருவருக்கு இந்த அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் குரங்கு அம்மைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இப்படி அம்மை நோய் ஒருபுறம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில்் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலும் கேரளாவில் பரவ தொடங்கி உள்ளது. அந்த … Read more

உலகளாவிய பாதிப்பால்தான் விலைவாசி உயர்வு வங்கியில் பணம் எடுப்பதற்கு, தீவிர சிகிச்சைக்கு வரியில்லை: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை மறுக்கவில்லை. உலகளாவிய காரணிகள் பொருளாதாரத்தை பாதிப்பது எதார்த்தம்’ என மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் குறுகிய நேர விவாதம் நேற்று நடந்தது. அப்போது, நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது என்பதை ஒன்றிய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும், அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர். இதற்கு … Read more

பிரக்ஞானந்தா தோல்வி! இருப்பினும் பலம் வாய்ந்த ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஓபன் பி அணி!

செஸ் ஒலிம்பியாட் தொடரின் இன்றைய போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்த போதிலும், மேலும் 2 தமிழக வீரர்கள் வெற்றியால் பலம் வாய்ந்த ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஓபன் பி அணி! நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற 4 போட்டியிலும் வென்று பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியாவின் ஓபன் பி அணி. 3 தமிழக வீரர்களை அங்கமாக கொண்ட இந்த அணி இன்று பலம் வாய்ந்த ஸ்பெயினை எதிர்த்து களம் கண்டது. தமிழக வீரர் … Read more

டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 3-ஆக அதிகரிப்பு..!!

டெல்லி: டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் குரங்கம்மை பாதிப்பட்டுள்ளோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

ஜூலையில் யுபிஐ மூலம் 600 கோடி ரூபாய் பணப் பரிமாற்றங்கள் – பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த மாதத்தில் யுபிஐ (UPI) வாயிலாக மின்னணு பணப் பரிவர்த்தனைகள் 600 கோடியைத் தாண்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யுபிஐ வாயிலாக மின்னணு பணப்பரிவர்த்தனை என்பது புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற மக்கள் எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் பொருளாதாரத்தை வெளிப்படைத்தன்மையாக வைக்க வழியேற்படுத்துவதாக கூறியுள்ளார். கொரோனா காலத்தில் மின்னணு பரிவர்த்தனைகள் மிகவும் உபயோகமாக இருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.  2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகபட்சமாக ஜூலையில் மின்னணு பரிவர்த்தனைகள் 600 கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

"நாங்கள் துரோகிகளா?" – உத்தவ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுத்த ஏக்நாத் ஷிண்டே!

சிவசேனா தலைமைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,” நானும் எனது ஆதரவாளர்களும் துரோகிகளாக இருந்திருந்தால், மகாராஷ்டிர மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க மாட்டோம்” என்று கூறினார். புனே மாவட்டத்தில் உள்ள சாஸ்வாத் என்ற இடத்தில் நடந்த பேரணியில் பேசிய முதல்வர் ஷிண்டே, “பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனாவை காப்பாற்ற” தானும் அவரை ஆதரிக்கும் மற்ற சிவசேனா எம்எல்ஏக்களும் எடுத்த நிலைப்பாடு மக்களின் ஆதரவால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். ஆட்சியில் இருந்தாலும் மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலில் தாக்கரே … Read more

ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று?.. மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி

டெல்லி: ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று? என திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா; திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டிலேயே 70% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு; பால் விலை ரூ.3 குறைத்துள்ளது. மதிய உணவு திட்டத்தையும் தாண்டி காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி … Read more

"என் வீட்டில் யாரோ பணத்தை வைத்து என்னை மாட்டி விட்டுள்ளனர்" – பார்த்தா சாட்டர்ஜி உதவியாளர்

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி தனது வீட்டில் அமலாக்கத்துறை கைப்பற்றிய பணம் தன்னுடையதே அல்ல என்றும் தான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து யாரோ வைத்துவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகப் … Read more

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யும் பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார். ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், “இந்த ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அரசு நடத்தப் போகிறதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக; கோவிட் தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கான பிற … Read more