தந்தையின் கையில் இருந்து தவறிய 4 மாத குழந்தையை கீழே போட்டு கொன்ற குரங்கு: மொட்டை மாடியில் நடந்த சோகம்

பரேலி: உத்தரபிரதேசத்தில் மூன்றாவது மாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து நான்கு மாத குழந்தையை குரங்கு ஒன்று கீழே போட்டு கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள துங்கா கிராமத்தை சேர்ந்த இந்திக் உபாத்யாய் மற்றும்  அவரது மனைவி ஆகியோர் தங்களது வீட்டின் மூன்றாவது மாடியின் மொட்டை மாடியில் நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது இந்திக் உபாத்யாயின் கையில் தங்களது 4 மாத ஆண் குழந்தை நிஷிக் இருந்தது. திடீரென அவர்களது … Read more

முகமது ஜுபைர் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

உத்தரப்பிரதேசத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட 6 எப்.ஐ.ஆர்.களை ரத்து செய்யக்கோரி பத்திரிகையாளர் முகமது ஜுபைர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளப் பதிவுகளை செய்ததாக உத்தரப்பிரதேச காவல்துறையினரால் பல்வேறு காலகட்டங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு வழக்கிலும் சமீபமாக அவர் கைது செய்யப்பட்டு வருகிறார்.  இந்நிலையில் உத்தரப்  பிரதேச மாநிலம் ஹாத்ராஸ், ஜாஜியாபாத், முசாபர்நகர், … Read more

நாடு முழுவதும் நடைபெற்ற 16வது குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவு.: தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டி

டெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி. மோடி தகவல் தெரிவித்துள்ளார். நாட்டின் 16-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இன்று காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மின்னணு … Read more

எல்லா அரிசிக்கும் ஜிஎஸ்டி கிடையாது; இதற்கு மட்டும்தான்! மத்திய அரசு விளக்கம்!

வணிகப்பெயர் இல்லாத (பிராண்ட் அல்லாத) 25 கிலோ எடைக்கு மேற்பட்ட அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், வரி உயர்வு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது வணிகப்பெயர் இல்லாத (பிராண்ட் அல்லாத) 25 கிலோ எடை வரையில் மூட்டையில் அடைக்கப்பட்ட தானியங்களுக்கு மட்டுமே 5 சதவிகித ஜிஎஸ்டி … Read more

முகமது ஜுபைருக்கு எதிராக எவ்வித துரித நடவடிக்கையும் கூடாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்துக் கடவுள்களை அவமதித்ததாகவும் உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் தனக்கெதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 6 வழக்குகளை ரத்து செய்யக் கோரி அவசர மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர் தாக்கல் செய்திருந்தார். முகமது ஜுபைர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி … Read more

president election: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ!

நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்யிடுகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்களும், அந்தந்த மாநில சட்டப்பேரவைகளிலோ, தலைமைச் செயலக வளாகத்திலோ மாநில எம்எல்ஏக்களும் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான முகமது மொகிம், பாஜக வேட்பாளரான திரெளபதி முர்மு … Read more

புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக மாநிலங்களவை எம்பிக்கள் பதவியேற்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்பிக்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், நாமக்கல் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், வடசென்னை இரா.கிரிராஜன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.சமீபத்தில் தமிழகத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், நாமக்கல் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், வடசென்னை இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவை பொருத்தமட்டில் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால … Read more

தமிழக வங்கிகளில் இனி தமிழிலேயே பரிவர்த்தனை – நிர்மலா சீதாராமன் உறுதி!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெற துவங்கியுள்ளது. இத்தொடரில் இன்று மக்களவை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்வது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் உள்ள வங்கி கிளைகளில் தமிழிலே பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார். “தமிழ் மொழி மூலம் வங்கிகளிலே பரிவர்த்தனை செய்ய விரும்புவர்களுக்கு வசதியாக ஏற்பாடு செய்யப்படும். மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் தமிழிலேயே பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: அஸ்ஸாம், ஒடிசா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் முர்முவுக்கு வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்தே புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் … Read more

Monkeypox: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை – பாதிப்பு 2 ஆக உயர்வு!

கேரள மாநிலத்தில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, உலக நாடுகளை, மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த வகை நோய், குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாக ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன. உடலில் கொப்பளங்கள் போல் பரவும் இந்த நோய், தற்போது உலகை பயமுறுத்தி வருகிறது. குரங்கம்மை நோய், விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு … Read more