வாரணாசி நீதிமன்றத்தில் கியான்வாபி மசூதி வழக்கு தள்ளிவைப்பு – முஸ்லிம்கள் தரப்பு வாதம் தொடங்கியது

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் கியான்வாபி மசூதி மீதான வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் துவங்கியது. இதில் முஸ்லீம்கள் தரப்பில் நடைபெற்ற வாதம் ஜுலை 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்காரி கவுரி அம்மனை தரிசிக்கும் வழக்கில் களஆய்விற்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கிற்கு தடை கேட்டு மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியினர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதற்கு அடிப்படையாக மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ஐ சுட்டிக் காட்டியிருந்தனர். இதை … Read more

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி..!

போர்ட்பிளேயர்: வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலையிலேயே தஞ்சமடைந்தனர். முதல் நிலநடுக்கம் 11.05 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 என்ற அளவுகோலில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்த நிலையில், மூன்றாவதாக … Read more

அவ்வளவு பாசமா? – இறந்த நபருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த கிராம மக்கள்

கிராமத் தலைவர் தேர்தலில் இறந்த நபர் ஒருவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்து அதிகாரிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர் மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராம மக்கள். மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்திலுள்ள கஜேரா கிராமத்தில் 1296 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு கிராமத் தலைவர் தேர்தல் ஜூலை 1ஆம் தேதி நடைபெற்றது. அதில் 1,043 பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் ரவீந்திர தாகூர், சந்திரபான் அஹிர்வார் மற்றும் வினோத் சிங் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே … Read more

லாலு பிரசாத் யாதவுக்கு தோள்பட்டை எலும்பு முறிவு

பாட்னா: பிஹாரில் கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இந்நிலையில் தலைநகர் பாட்னாவில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் மாடிப்படியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவும் முதுகில் காயமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாட்னா தனியார் மருத்துவமனையில் லாலு பிரசாத் … Read more

டிஜிட்டல் மையத்தில் உலகை வழிநடத்துகிறது இந்தியா – பிரதமர் மோடி

ரேஷன் கார்டுக்கும், பிறப்புச் சான்றிதழுக்கும் வரிசையில் நின்ற காலம் மலையேறி விட்டதாகவும், டிஜிட்டல் மயமாக்கத்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு சேவைகளுக்கான டிஜிட்டல் போர்ட்டல்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, காந்தி நகரில் துவக்கி வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தொழில் தொடங்குவதை எளிதாக்கி, தொடக்க நிலை நிறுவனங்களுக்கு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் என்றார். நான்காம் தொழிற்துறை புரட்சியில் இந்தியா அங்கம் … Read more

தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் செல்போன் ஜாமர் கருவிகளை பயன்படுத்துவது சட்டவிரோதம்

புதுடெல்லி: செல்போன் ஜாமர்களை தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று  ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவக் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல ஊடக அறிக்கைகளின்படி, வயர்லெஸ் ஜாமர் மற்றும் பூஸ்டர்/ரிப்பீட்டர்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்து பொது மக்களுக்கு கடந்த 1ம் தேதி தொலைத்தொடர்புத் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் ஒரு ஆலோசனையை வழங்கி உள்ளது. அதன்படி, செல்போன் சிக்னல் ஜாமர், ஜிபிஎஸ் பிளாக்கர் அல்லது பிற சிக்னல் … Read more

ஹோட்டலுக்கு சாப்பிட போறீங்களா? பில் கட்டும்போது இதை கவனித்தில் கொள்ளவும்

உணவகங்களில் சேவை கட்டணத்தை சேர்த்து ஜிஎஸ்டியை வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள் சேவை கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், உணவகங்களில் சாப்பிட்ட மொத்தத் தொகையில் சரக்கு மற்றும் சேவை கட்டணத்தை விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் எந்த ஒரு பெயரிலும் சேவை கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்றும் சேவை கட்டணத்தை செலுத்துமாறு நுகர்வோரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. சேவை கட்டணத்தை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் … Read more

75வது சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக மாணவர்களின் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: இந்தியா சுதந்திரம் அடைந்து வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் 75 ஆண்டு நிறைவடைகிறது. இதனால் சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு … Read more

100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த பக்தரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவத்தினர்..!

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்று திரும்பும் போது 100 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தவரை ராணுவத்தினர் மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். மகாராஷ்ட்ராவை சேர்ந்த சத்ய நாராயணன், குடும்பத்தினருடன் அமர்நாத் யாத்திரை சென்று குதிரை வண்டியில் திரும்பிய நிலையில், பிராரிமார்க் அருகில் வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது. இதில் நூறு அடி ஆழ பள்ளத்தில் சத்ய நாராயணன் தவறி விழுந்தார். தலையில் காயம் மற்றும் மார்பு பகுதியில் எலும்பு முறிவுடன் கிடந்த … Read more

ராகுல் குறித்து போலி வீடியோ பாஜ எம்பிக்கள் 2 பேர் மீது வழக்கு

புதுடெல்லி:  காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி குறித்து போலி வீடியோ பதிவிட்டது தொடர்பாக பாஜ எம்பிக்கள் ராஜ்யவர்த்தன் சிங் ரதோர் ம்றறும் சுப்ராத் பதவ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு எம்பி அலுவலகம் தாக்குதல் சம்மந்தமாக பேசிய கருத்தை உதய்பூரில் நடந்த கொலையுடன் தொடர்புபடுத்தி பாஜ எம்பியும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் போலியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. … Read more