கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் பாதியாக குறைந்தது

புதுடெல்லி: சென்ற நிதி ஆண்டில் வங்கி மோசடிகள் பாதியாகக் குறைந்துள்ளன. 2020-21 நிதி ஆண்டில் வங்கிகளில் பதிவான மோசடித் தொகை ரூ.1.05 லட்சம் கோடி யாக இருந்தது. 2021-22 நிதி ஆண்டில் பதிவான மோசடித் தொகை ரூ.41,000 கோடி ஆகும். குறிப்பாக ரூ.100 கோடிக்கு மேலான மோசடி வழக்குகளின் எண்ணிக்கை சென்ற நிதி ஆண்டில் பாதியாகக் குறைந்துள்ளது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேலான மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 265 ஆக இருந்தது. 2021-22-ல் அது … Read more

டெல்லியில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 2 மடங்காக உயர்வு.. ரூ.54,000லிருந்து ரூ.90,000 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றம்..!

டெல்லியில் எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஊதியம் மற்றும் படிகள் சேர்த்து எம்.எல்.ஏ.க்களுக்கு 54 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திறமையானவர்கள் அரசியலுக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். Source link

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கர்நாடக ஏடிஜிபி அம்ரீத் பால் கைது: சிஐடி போலீசார் அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில் காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏடிஜிபி அம்ரீத் பால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிகளுக்காக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான நிலையில் இந்த தேர்வை எழுதிய பெரும்பாலானோர் இந்த தேர்வில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிஐடி போலீசார் விசாரணை … Read more

திருமணத்தை மீறிய உறவு – மனைவியை சாட்டையால் அடித்து தெருத்தெருவாக இழுத்துச் சென்ற கணவர்!

திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறி பெண்ணை அவரது கணவன் உள்ளிட்டோர் சாட்டையால் அடித்து தெருத்தெருவாக இழுத்துச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள போர்படாவ் கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த ராகுல் தோடா என்பவரின் மனைவி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சில தினங்களுக்கு முன்பு மாயமானதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த கிராமம் முழுவதும் ராகுல் தோடாவும், ஊராரும் சீதாவை … Read more

அசாம் முதல்வருக்கு 200 கிலோ மாம்பழம் பரிசாக அனுப்பி வைத்த வங்கதேச பிரதமர்

குவாஹாட்டி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு 200 கிலோ அம்ரபாலி மாம்பழத்தை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாசார்பில், அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள அந்நாட்டு துணைத் தூதர் ஷா முகமது தன்விர் மான்சுர், முதல்வரின் முதன்மைச் செயலாளர் சமிர் கே.சின்ஹாவிடம் கடந்த 1-ம் தேதி மாம்பழங்களை ஒப்படைத்தார். கடந்த ஆண்டும் இதேபோல ஷேக் ஹசீனா, சர்மாவுக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்தார். இதுகுறித்து வங்கதேச துணைத் தூதர் … Read more

” பல சேவைகள் இணையதளத்தை சார்ந்திருப்பதால், வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டது” – பிரதமர் மோடி

மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, பல்வேறு சேவைகள் இணையதளத்தை சார்ந்திருப்பதால், மக்கள் வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா வார நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், அனைத்து துறைகளிலும் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதாக கூறினார். Source link

பாலக்காடு அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்: 16 வயது அண்ணன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய 16 வயது அண்ணனை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமியை வயிற்று வலி என்று கூறி அவரது பெற்றோர் அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பரிசோதனையில் சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மண்ணார்க்காடு … Read more

"இந்திய மீனவர்களை (தமிழக) விடுவிக்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்ததில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை கடற்படையினரால் கடந்த 8 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 2977 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில், கடந்த 3-ம் … Read more

பசியோடு யார் வந்தாலும் உணவு, உடை, தங்குமிடம் இலவசம்: ஹைதராபாத் மருத்துவ தம்பதியினரின் தன்னலமற்ற சேவை

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைத ராபாத் கொத்தப்பேட்டா பகுதியை சேர்ந்தவர் வி.சூரிய பிரகாஷ். இவரது மனைவி காமேஸ்வரி. இருவரும் மருத்துவர்கள். இவர்கள், தங்கள் வீட்டுக்கு யார் பசியோடு வந்தாலும் உணவு, உடை வழங்கி, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். மருத்துவ தம்பதியரின் வீட்டுக்கு அடைக்கலம் தேடி வருவோர், தங்களுக்கு பிடித்த உணவுகளை அவர்களே சமைத்து சாப்பிடலாம். இது குறித்து சூரிய பிரகாஷ் கூறியதாவது. எங்களது வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்காக செலவு செய்கிறோம். … Read more

sevice tax: சேவை வரி இனி கட்டாயமில்லை… வாடிக்கையாளர்கள் நிம்மதி!

நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையிலும், முறையற்ற வர்த்தக நடைமுறையை தடுக்கும் வகையிலும், உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு உண்டதற்கான விலை ரசீதுகளில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. சேவை வரியை செலுத்துமாறு உணவகங்கள் நுகர்வோரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சேவை வரியை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் என்பது அவர்களிடம் … Read more