என்எல்சியில் தமிழ்நாட்டினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விவகாரம் குறித்து 4ம் தேதி பேச்சுவார்த்தை: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தகவல்

டெல்லி: நாடாளுமன்றத்தில் பேசியது குறித்து டெல்லியில் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; விதிமுறைக்கு மாறாக பட்டதாரிகள் திறன் மதிப்பீட்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் என்எல்சியில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பினேன். ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து நெய்வேலி விவகாரம் குறித்து விவாதித்தேன். என்எல்சி விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன். என்எல்சியில் தமிழ்நாட்டினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விவகாரம் குறித்து … Read more

தீவிரம் காட்டும் கொரோனா: இன்று மட்டும் 34 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவல், தீவிர நிலையில் இருந்து  குறைந்து ஓய்ந்துவிட்ட நிலையில் இந்தியாவிலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற சமூக பரவலை தடுக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பான சமூக நிலையே நிலவிவருகிறது. மேலும் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின் படியும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படியும் நாடு முழுவதும் பெரும்பாலானோருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு, பாதிக்கும் மேற்பட்டோருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாய் இதுவரை … Read more

75 வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு தபால் துறையின் இணையதளம் மூலம் ஆன்லைனில் தேசியக்கொடி விற்பனை

நாட்டின் 75 வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்துள்ள வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றுவோம் என்ற இயக்கத்தின் அடிப்படையில், தபால் நிலையங்கள் மூலம் தேசியக் கொடியை விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தபால் துறையின் ePost office என்ற இணையதளத்தின் மூலம் மக்கள் தேசியக்கொடியை ஆன்லைனில் பதிவு செய்து வாங்கலாம். ஒரு தேசியக்கொடியின் விலை 25 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜிஎஸ்டி வரிகள் கிடையாது. நாட்டில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் இந்த … Read more

நடனமாடும் போது கீழே விழுந்த மாஜி முதல்வரின் மனைவி: ரசிகர்கள் அதிர்ச்சி

பெங்களூரு: முன்னாள் முதல்வரின் மனைவியான நடிகை ராதிகா, நடனம் ஆடும் போது திடீரென கீழே விழுந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா  தளத்தின் தலைவரான எச்டி குமாரசாமி, கடந்த 2010ம் ஆண்டு கன்னட நடிகை ராதிகாவை  திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் ராதிகா குமாரசாமி என்று அழைக்கப்பட்டார். சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த ராதிகா, சமூக ஊடகங்களில் தனது அன்றாட வாழ்க்கையின் வீடியோ காட்சிகளைப் பகிர்ந்துகொள்வார். அதன் மூலம் தனது … Read more

வீட்டை சுத்தம் செய்தபோது அசம்பாவிதம்-மாடியிலிருந்து விழுந்த தம்பியை தாங்கிப்பிடித்த அண்ணன்

கேரள மாநிலம் மலப்புரத்தில் வீட்டை சுத்தம் செய்யும்போது மேல் மாடியிலிருந்து தவறி விழுந்த தம்பியை, அவரது அண்ணன் தாங்கிப்பிடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம் அருகேயுள்ள சங்கரம்குளம் பகுதியில், சகோதரர்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல்தளத்தில் இருந்த தம்பி சாதிக் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். அச்சமயம் இதனைப் பார்த்த அவரது அண்ணன் ஷஃபீக், தம்பியை தாங்கிப் பிடித்தார். இதில் இரண்டு பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பரவி வருகின்றது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

குரங்கு அம்மைக்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு உள்ளது: மத்திய சுகாதார அமைச்சர்

புதுடெல்லி: குரங்கு அம்மைக்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்தார். குரங்கு அம்மை தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (ஆக.2) விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “குரங்கு அம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குரங்கு அம்மைக்கு எதிராக சரியான தடுப்பூசியைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது விஞ்ஞானிகள் குரங்கு அம்மை … Read more

கேரளாவில் அதிகரிக்கும் குரங்கம்மை – மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்?

கேரள மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, உலக நாடுகளை தற்போது குரங்கம்மை நோய் பாடாய் படுத்தி வருகிறது. இந்த வகை நோய், குழந்தைகளை அதிகளவில் தாக்கக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்தியா, ஸ்பெயின் உட்பட பல்வேறு நாடுகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. இதை அடுத்து, குரங்கம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்தியாவில் கேரளா, டெல்லி … Read more

10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கேரளாவில் மழைக்கு 10 பேர் பலி: தேர்வுகள் தள்ளி வைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில தினங்களாக மிக தீவிர மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாளாக திருவனந்தபுரம் முதல் கண்ணூர் வரை அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து உள்ளது. முல்லைப் பெரியாறு, இடுக்கி நெய்யாறு உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.அதன்படி நாளை வரை பெரும்பாலான மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. … Read more

விரைவில் ஆட்சி கவிழும்..! – என்ன சொல்கிறார் ஆதித்யா தாக்கரே..?

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் உத்தவ் தாக்கரே அணியின் சிவ சேனா கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அம்மாநில முன்னாள் அமைச்சரும், உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரே கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஆதித்யா தாக்கரே பேசுகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை தாக்கி பேசினார். அந்த கூட்டத்தில் ஆதித்யா தாக்கரே கூறியதாவது” உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, தாங்கள் பாரபட்சம் காட்டப்படுவறதாக யாரும் … Read more

அறிவுரைகளை கேட்டு செயல்படுவதே அரசுக்கு அழகு: மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு

டெல்லி: ஏழைகளுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசினார். அறிவுரைகளை கேட்டு செயல்படுவதே அரசுக்கு அழகு. 2014 தேர்தல் வாக்குறுதிகளையே ஒன்றிய பாஜக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என கூறினார்.