சுதந்திர தின விழா | டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகை தந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றுவது இது … Read more

Video: உலகின் 6 கண்டங்களில் இந்திய கடற்கடை மூவர்ணக்கொடி ஏற்றிய அற்புத காட்சி!

இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஆறு கண்டங்கள், மூன்று பெருங்கடல்கள் மற்றும் ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளன. இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஆகஸ்ட் 15 அன்று பல்வேறு துறைமுகங்களை அடைந்து இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற உயர்மட்ட தலைமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டின் உள்ளூர் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றியது. ஒரு வீடியோவை ட்வீட் செய்த இந்திய கடற்படை, “75 ஆண்டு சுதந்திரத்தை … Read more

ராணுவம், விமானப்படை, கடற்படை வீரர்கள் நாட்டுக்கு மரியாதை: பூமியில் இருந்து 30 கி.மீ உயரத்தில் பறந்த தேசிய கொடி…

டெல்லி: பூமியில் இருந்து 30 கி.மீ உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விண்வெளியில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. இளம் விஞானிகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்திய அமைப்பு நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் விண்வெளியில் தேசிய கொடியை பறக்கவிட்டது. பூமியிலிருந்து 1,06,000 அடி உயரத்தில் பலூன் ஒன்றின் உதவியோடு கொண்டு செல்லப்பட்ட தேசிய கொடி பின்னர் பறக்கவிடப்பட்டது. இந்திய சுதந்திர தினத்திற்கு சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர் அமெரிக்க வாழ் இந்தியரான … Read more

ஃபோட்டோஷாப் செய்து தேசப்பற்றை காண்பித்த ஐ.ஐ.டி. பாம்பே.. கொதித்துப்போன நெட்டிசன்ஸ்!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாட்டின் அனைவரது இல்லங்கள்தோறும் தேசியக்கொடியை ஏற்றி தத்தம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். மேலும் தேசியக் கொடியை எப்படியெல்லாம் பறக்க விடவேண்டும், எப்படியெல்லாம் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்ற அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி நாட்டு மக்கள் பலரும் தங்கள் இல்லங்களிலும், வாகனங்களிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிட்டனர். சாமானிய மக்களே நாட்டின் மூவர்ணக் கொடியை … Read more

10 ரூபாய் கட்டணத்தில் கொச்சி மெட்ரோவில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம்

கொச்சி: நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொச்சி மெட்ரோவில் பயணிகள் வெறும் 10 ரூபாய் மட்டுமே செலுத்தி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது Freedom To Travel என்ற ஆஃபரின் கீழ் இன்று ஒருநாள் மட்டும் வழங்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் ஆண்டை கொண்டாடும் விதமாக அரசு நாட்டு மக்களுக்கு சில சலுகையை அறிவித்துள்ளது. பாரம்பரிய நினைவுச் சின்னங்களை இலவசமாக பொதுமக்கள் … Read more

மோடி ஜெபித்துள்ள அதே ஊழல் மந்திரம்… இனியும் கிடைக்குமா மக்களின் வரம்?

2 ஜி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது (2009 -14) ஆட்சி காலத்தின் இரண்டாம் பாகத்தில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு, நிலக்கரி இறக்குமதியில் ஊழல், காமன்வெல்த் போட்டிகளை நடத்தியதில் முறைகேடு என மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசைக்கட்டி நின்றன. இதுதான் சரியான தருணம் என்று காங்கிரஸ் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் பாஜக ஒருபுறம் உரக்க எடுத்துரைக்க, மறுபுறம் அன்னா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான … Read more

விடுதலை போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்றுகிறார் பிரதமர் – அமித் ஷா புகழாரம்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் ஒன்பதாவது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். அப்போது நான்கு ஹெலிகாப்டர்களில் இருந்து தேசிய கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியேற்றினார். அதேபோல் நாடு முழுவதும் இருக்கும் அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மத்திய … Read more

டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராகுல் காந்தி, பிரியங்கா, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து சுதந்திர தின கவுரவ யாத்திரை தொடங்கிய அவர்கள், காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு ஊர்வலமாக சென்றனர். காங்கிரஸ் தொண்டர்களும் மூவர்ண கொடியை கையில் ஏந்திக்கொண்டு யாத்திரையில் பங்கேற்றனர். காந்தி வாழ்ந்த இல்லத்தில், அவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் ராகுல், … Read more

அரசு அதிகாரிகள் ஹலோவிற்கு பதிலாக வந்தே மாதரம் என்று சொல்ல வேண்டும் – மகாராஷ்டிரா அமைச்சர்

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் செல்போனில் பேசும் போது இனி ஹலோ (Hello) என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என அம்மாநில கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்களில் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் எனவும், அந்நிய வார்த்தையான ஹலோ-வை தவிர்த்து வந்தே மாதரம் என்ற உள்நாட்டு வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “நாம் சுதந்திரத்தின் 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நாம் சுதந்திர தின … Read more

மோடியின் 82 நிமிட உரை, 5 உறுதிமொழிகள் – செங்கோட்டை சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்

புதுடெல்லி: நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். டெல்லியில் பிரதமர் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றுவது இது 9-வது முறையாகும். பொதுவாக பிரதமர் மோடி உள்நாடு, வெளிநாடு என எங்கு உரை நிகழ்த்தினாலும் டெலி ப்ராம்ப்டர் மூலம் உரை நிகழ்த்துவது வழக்கம். டெலி ப்ராம்ப்டர் இல்லாமல் அவரால் உரை நிகழ்த்த முடியுமா என்று காங்கிரஸ் பலமுறை விமர்சனம் செய்ததும் உண்டு. இந்நிலையில், பிரதமர் நரேந்திர … Read more