பாஜக தலைவர்களுக்கு 50 வகையான உணவுகளை சமைத்து வழங்கிய சமையற் கலைஞர் யாதம்மா..!

ஐதராபாத் தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர்களுக்குத் தெலங்கானாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலைஞர் யாதம்மா தலைமையிலான குழுவினர் ஐம்பது வகையான தென்னிந்திய சைவ உணவு வகைகளைச் சமைத்துப் பரிமாறியுள்ளனர். ஆந்திர தெலங்கானா மாநிலங்களுக்கு உரிய குழம்பு, கூட்டு, பொரியல், அவியல் வகைகள், கோங்குரா துவையல், ஜவ்வரிசிப் பாயசம் உள்ளிட்ட ஐம்பது உணவு வகைகளைக் கூட்ட அரங்கில் உள்ள சமையற் கூடத்தில் தயாரித்து வழங்கினர். பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த பாஜக தலைவர்கள், தாங்கள் சமைத்து … Read more

ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொல்லப்பட்ட நபர்.. அதிர்ந்து போன போலீஸ்.. உ.பியில் பயங்கரம்!

குடி போதையில் தாய் வழி உறவினரை கழுத்தை நெறித்து கொன்ற கோலு மிஷ்ரா என்பவரை கைது செய்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தின் அயோத்யாவில் இன்று (ஜூலை 3) நடந்திருக்கிறது. கொல்லப்பட்ட நபர் பங்கஜ் சுக்லா (35) அமேதியை சேர்ந்தவர் என்றும், இவர் அயோத்யாவின் புஹாபுர் பகுதியில் உள்ள தாய்வழி தாத்தாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு பங்கஜ் சுக்லாவும், கோலு ஷர்மாவும் இணைந்து நேற்று இரவு (ஜூலை 2) மது குடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் … Read more

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சஞ்சய் ராவத்திடம் 10 மணி நேரம் விசாரணை

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ரூ.1,034 கோடி மதிப்பிலான நிலம் கைமாறியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ராவத்துக்கு சொந்தமான சில சொத்துகள் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறையின் மும்பை பிரிவு சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதன்படி தெற்கு … Read more

சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் விவசாயிகளை தாக்கிய புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது..!

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் விவசாயிகளை தாக்கிய புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது. குண்டலுப்பேட்டை அருகே வனப்பகுதியொட்டி அமைந்துள்ள கோபாலபுரா என்ற கிராமத்தில் சில நாட்களுக்கு முன் விவசாயி ஒருவரின் பசுமாட்டை புலி கொன்றது. அதனை தடுக்க முயன்றபோது விவாசாயிகளையும் அந்த புலி தாக்கியது. Source link

ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் பொதுமக்களிடம் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி என விசாரணையில் அம்பலம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் பொதுமக்களிடம் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி என விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தேடப்பட்ட லஷ்கர் தீவிரவாதியான உசேன் ஷா, பாஜக நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியாஸி மாவட்டம் டக்சன் கிராமத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதியை உசேன் ஷா, அவரது கூட்டாளியை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” – சீமான் காட்டம்

`பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரித்து விட்டு சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என அதிமுக-வினர் கூறுகிறார்கள். சமூகநீதி என்றால் என்ன என்று எடப்பாடி பழனிசாமி கூற வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் `அக்னிபாத்’ திட்டம் பற்றி பேசிய … Read more

‘‘40 ஆண்டுகள் இனி பாஜக சகாப்தம் தான்; தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்’’- அமித் ஷா நம்பிக்கை

ஹைதராபாத்: நமது நாட்டில் இன்னும் 40 ஆண்டுகளுக்கு பாஜக சகாப்தம் தான், இனி தென்னிந்தியாவில் பாஜக வளரும், தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். இதனை அசாம் முதல்வர் ஹிமானந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் … Read more

ஊழலின் சின்னமாகத் தெலங்கானா அரசு திகழ்கிறது – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ஊழலின் சின்னமாகத் தெலங்கானா அரசு திகழ்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், இலட்சக்கணக்கானோர் பல ஆண்டுக்காலம் போராடியதால் தெலங்கானா மாநிலம் உருவானதாகத் தெரிவித்தார். போராட்டம் நடத்திய மக்கள் தெலங்கானா நாட்டிலேயே முதல் மாநிலமாக விளங்கும் என நம்பியதாகவும், டிஆர்எஸ் அரசு அந்த நம்பிக்கையைச் சிதைத்து விட்டதாகவும் குறிப்பிட்டார் Source link

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் இனிப்பு ஊட்டியது சரியா?: நினைவுகளை பகிர்ந்து கொண்ட சரத்பவார்

மும்பை: ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் இனிப்பு ஊட்டியது குறித்து தனது பழைய நினைவுகளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பகிர்ந்து கொண்டார். மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் வியாழக்கிழமை  பதவியேற்றனர். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அளித்த பேட்டியில், ‘ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸின் பதவியேற்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் (ஆளுநர்) அவர்களுக்கு இனிப்பு ஊட்டிவிட்டு, பூங்கொத்து கொடுத்து … Read more

“அடுத்த 40 ஆண்டுகள் பாஜகதான் ; தமிழகத்தில் விரைவில் ஆட்சி அமைப்போம்” – அமித் ஷா சூளுரை!

கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா பேசினார். ஐதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் சகாப்தமாக இருக்கும் என்றும், இந்தியா “விஷ்வ குரு” (உலகத் தலைவராக) மாறும் என்றும் தெரிவித்தார். “கடந்த தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் பாஜகவின் வெற்றி, கட்சியின் … Read more