நிலமோசடி வழக்கில் கைதான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு 4 நாட்கள் காவல்: மும்பை நீதிமன்றம் அனுமதி..!!

மும்பை: நிலமோசடி வழக்கில் கைதான சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 1034 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமோசடி வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றமும் நடைபெற்றது என்று அமலாக்கத்துறையினரின் வழக்கில் சஞ்சய் ராவத் முக்கிய நபராக சேர்க்கப்பட்டுள்ளார். மஹாரஷ்டிராவின் புரேகா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்புகளை சீரமைப்பு செய்ததில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்தது என்பது குற்றச்சாட்டு. சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில் முன்னாள் … Read more

ம.பி: ஆம்புலன்ஸ் தராததால் தாயின் சடலத்தை 80 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற மகன்!

தாயின் சடலத்தை 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூரில் உள்ள கோடாரு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். செவிலியர்களின் அலட்சியத்தால் தனது தாய் உயிரிழந்ததாக, அவரது மகன் சுந்தர் குற்றம்சாட்டினார். இதையடுத்து தாயின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், தனியார் ஆம்புலன்ஸிடம் கேட்டபோது ஐந்தாயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் … Read more

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா டெல்லி காவல் ஆணையராக நியமனம்

புதுடெல்லி: டெல்லி காவல் துறைக்கு புதிய ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய படையில் முக்கிய பங்காற்றியவர். ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சய் அரோரா, 1988-ல் ஐபிஎஸ் முடித்து தமிழ்நாடு பிரிவின் அதிகாரியாக பணியாற்றினார். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றவர். இந்தோ – திபெத் எல்லை படையின் (ஐடிபிபி) இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது டெல்லி காவல் துறை ஆணையராக நேற்று நியமிக்கப்பட்டார். அந்தப் … Read more

முன்னாள் முதல்வர் என்டிஆர் மகள் உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவின் இளைய மகள் கந்தமனேனி உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், மறைந்த பிரபல நடிகருமான என்.டி.ராமா ராவின் இளைய மகள், கந்தமனேனி உமா மகேஷ்வரி, தெலங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து … Read more

BSNL புத்துயிரூட்டும் நிதி..! மத்திய அரசு அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் புத்துயிரூட்ட ஒரு இலட்சத்து 64ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவது அதன் சேவைத் தரத்தை உயர்த்தவும், கடன் சுமையைக் குறைக்கவும், கண்ணாடி இழை வலையமைப்பை விரிவாக்கவும் உதவும் எனத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல்லின் வருவாயில் 80 விழுக்காடு ஊதியத்துக்கும் ஓய்வூதியத்துக்கும் செலவிடப்பட்டு வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஊழியர்களின் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் நட்டம் பாதியாகக் … Read more

திருப்பதி மெய்நிகர் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி கோயிலில் 7-ம் தேதி முதல் 10 வரை மெய்நிகர் சேவை மூலம் தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சேவை டிக்கெட் முன்பதிவு செய்து தரிசன டிக்கெட்டுகள் பெறும் கோட்டா நாளை மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை சகஸ்ர தீப அலங்கரம் சேவைக்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் கூறியுள்ளது.

ம.பி மருத்துவமனையில் தீவிபத்து – 10 பேர் உயிரிழப்பு; 3 பேர் கவலைக்கிடம்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தீப்பற்றி மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவியிருக்கிறது. தீ கொளுந்துவிட்டு எரிவதால் முதற்கட்டமாக மருத்துவமனையிலுள்ள நோயாளிகளை வெளியே கொண்டுவரும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் 10 நோயாளிகள் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 10 தீயணைப்பு வாகனங்கள் … Read more

வாக்குறுதியை அரசு நிறைவேற்ற கோரி பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்

சண்டிகர்: மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி பஞ்சாபில் விவசாயிகள் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு, விவசாய சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு … Read more

சஞ்சய் ராவத்திற்கு 4 நாட்கள் அமலாக்க துறை காவல் – நீதிமன்றம் உத்தரவு!

பத்ரா சாவுல் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்தை, வரும் 4 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு, மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. 1,034 கோடி ரூபாய் நில மோசடி தொடர்பான வழக்கில், சிவசேனா மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக … Read more

தொழில் போட்டி காரணமாக ஹைதராபாத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொழில் போட்டி காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கூலிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். அங்குள்ள மாதாப்பூர் என்ற இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இஸ்மாயில் என்பவரை, அண்மையில் சிறையிலிருந்து வெளிவந்த சாதிக் பாட்சா மற்றும் கூட்டாளிகள் மூன்று பேர், வீட்டில் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த இடத்திலேயே இஸ்மாயில் உயிரிழந்தார். காயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய சாதிக் பாட்சா மற்றும் … Read more