கோவை: NOC சமர்ப்பிக்காத விரக்தியில் பயிற்சி மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பிரவீன் அன்னதடா (33). இவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார். இந்நிலையில், தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர,; கடந்த ஓராண்டு காலமாக Tamil Nadu MGR University Medical Counsel Registration செய்ய ஜாம்ஜெட்பூரில் உள்ள தனது கல்லூரியில் NOC வாங்கி சமர்ப்பிக்காமல் … Read more

கேரளாவில் நாட்டின் முதல் ஆன்லைன் டாக்ஸி சேவை

திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் முறையாக அரசுக்கு சொந்தமான ஆட்டோ-டாக்ஸி சேவையை ‘‘கேரளா சவாரி’’ என்ற பெயரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கிவைத்தார். இதுகுறித்து கேரள தொழிலாளர் நலத் துறை அமைச்சர் வி. சிவன்குட்டி தெரிவித்தது: புதிய தாராளமயமாக்கல் கொள்கை என்பது நமது பாரம்பரிய தொழில்துறைகளையும், தொழிலாளர்களையும் மிகவும் எதிர்மறையாக பாதிக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், மோட்டார் வாகனப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக சுரண்டப்படாத வருமான ஆதாரத்தை உறுதி செய்யவே தொழிலாளர் துறை “கேரளா சவாரி” … Read more

பீகாரில் இது நடந்தால் எனது ஆதரவு மெகா கூட்டணிக்கு தான்: பிரசாந்த் கிஷோர் ஓப்பன் டாக்!

பீகாரில் இரு ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் எனது ஆதரவு நிதிஷ்குமார் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணிக்கு தான் என கூறியுள்ளார் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர். தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் பீகாரைச் சேர்ந்தவர். தேர்தல் வியூகப் பணிகளோடு நிதிஷ் குமாருடன் அரசியலிலும் ஈடுபட்டார். பின்னர் கருத்து வேறுபாடுகாரணமாக பிரிந்தார். அண்மையில் பீகார் அரசியலில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக் கொண்டு … Read more

குஜராத் குற்றவாளிகள் விடுதலை: பாஜக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்…

டெல்லி: பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் என்றும் அவர்கள் நல்ல பழக்கவழக்க உடையவர்கள் என்றும் பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதில், தாகோடு மாவட்டம் ராந்திப்பூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி இஸ்லாமிய பெண்ணான பில்கிஸ் பானு 11 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது … Read more

டெல்லி துணை முதல்வர் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை -அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் அண்மையில் மது பானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி அரசுக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டது என புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த … Read more

டெல்லி துணை முதல்வர் வீட்டில் ரெய்டு – “வெல்கம் சிபிஐ” என கெஜ்ரிவால் ரியாக்‌ஷன்

புதுடெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இன்று காலை முதல் சிசோடியாவின் வீடு உட்பட மொத்தம் 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான விதிமீறல் புகாரை அடுத்து, இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, டெல்லி அரசின் முன்னாள் கலால் ஆணையர் கோபிகிருஷ்ணாவின் டாமன் மற்றும் டையூ இல்லத்திலும் சோதனை நடக்கிறது. சோதனையை அடுத்து … Read more

கைதாவாரா டெல்லி துணை முதல்வர்? ஆம் ஆத்மியை குறிவைக்கிறதா மோடி அரசு?

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்புடைய 21 இடங்களில் மத்திய அரசின் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி ஆயத்தீர்வை கொள்கையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சில வாரங்களுக்கு முன்னதாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனால், ஆயத்தீர்வை துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சிக்கல் உருவானது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அப்போதே செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா விரைவி கைது … Read more

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை; சிபிஐ நடத்தும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி துணை முதல்-மந்திரியாக மனிஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மனிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் … Read more

POSOCO-விடம் மின்சாரம் வாங்கவும் விற்கவும் தமிழகத்துக்கு தடை! ஏன் தெரியுமா?

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற மையத்திடம் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் பாக்கித் தொகையை செலுத்தத் தவறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் பாக்கித் தொகையை செலுத்தத் தவறியதால், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற மையத்திடம் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சார பரிமாற்றத்திற்கான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷனின் தலைவர் எஸ்.ஆர்.நரசிம்மன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் உள்ளிட்ட 13 … Read more

ட்ரம்ப்பின் 36 மணிநேர இந்திய பயணத்துக்கு ரூ.38 லட்சம் செலவு – ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: கடந்த 2020-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் 36 மணி நேர இந்தியப் பயணத்துக்கு மத்திய அரசு சுமார் ரூ.38 லட்சம் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2020-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லிக்கு அவர் வருகை தந்தார். அவருடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயரதிகாரிகள் வந்திருந்தனர். … Read more