பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு உலக வங்கி ரூ.13,834 கோடி கடனுதவி

புதுடெல்லி: மத்திய அரசு செயல்படுத்தும் பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு உலக வங்கி 175 கோடி டாலர் (ரூ.13,834.54 கோடி) கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 100 கோடி டாலர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கும் 75 கோடி டாலர் மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கும் வழங்கப்படுகிறது. இத்தகவலை இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் ஹைதெகி மோரி தெரிவித்துள்ளார். தனியார் முதலீடுகள் குறைந்துள்ள சூழலில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க 75 கோடி டாலரை முதலீட்டு திட்டப் பணிகளில் முதலீடு செய்ய … Read more

தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அமரீந்தர் சிங்?

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் … Read more

6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது

புதுடெல்லி: நாடு முழுவதும் 6 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தென் பருவமழை வழக்கமாக நாடு முழுவதும் ஜூலை 8ம் தேதி தொடங்கும். ஆனால், இந்தாண்டு பெரும்பாலான மாநிலங்களில் முன்கூட்டியே தொடங்கி விட்டது. ராஜஸ்தான், குஜராத்தில் மட்டும் மழை இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் முதல் இங்கும் பருவ மழை பெய்ததால், தென்மேற்குப் பருவமழை சாதாரண தேதிக்கு 6 நாட்களுக்கு முன்பாகவே நாடு முழுவதும் தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், … Read more

மகாராஷ்டிரா பேரவைத் தலைவர் தேர்தல் | சமபலம் இருபப்தால் பாஜக – சிவசேனா இடையே கடும் போட்டி

மும்பை: மகாராஷ்டிர பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜக, சிவசேனா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு அசாமில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினார். இதையடுத்து பேரவையில் பலத்தை நிரூபிக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, ஆளுநர் … Read more

சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்

புதுடெல்லி: ‘நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளது,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டமாக பேசியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: இந்த ஆண்டு இந்தியா 75வது சுதந்திர தின விழா கொண்டாடுகிறது. இந்தியா குடியரசு ஆகி 72 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியிருந்தும் அரசியலமைப்பின்படி ஒவ்வொரு அமைப்புக்கும் வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் … Read more

பிரதமர் மோடியை கண்டு கேசிஆர் பயப்படுகிறார் – பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு கருத்து

ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை தொடங்கியது. இக்கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். பிரதமர் மோடியை வரவேற்க அங்கிருந்த கோலாட்டம் கலைஞர்களுடன் இணைந்து அவர் கோலாட்டம் ஆடி கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஹைதராபாத்தில் பிரதமர் மோடி வரும் வழியெல்லாம் ஆளும் டிஆர்எஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பல எதிர்ப்பு பலகைகளை பார்த்தேன். இதைப் பார்க்கும்போது தெலங்கானா முதல்வர் கேசிஆர் எவ்வளவு தூரம் … Read more

பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்

புதுடெல்லி: டெல்லியில் இருந்து  ஜபால்பூர் புறப்பட்டு சென்ற தனியார் விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்திற்குள் புகை வந்ததால் உடனடியாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம், ஜபால்பூர் நோக்கி பயணிகளுடன் நேற்று காலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. 5 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, விமானத்திற்குள் திடீரென புகை ஏற்பட்டது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். … Read more

தமிழ்நாடு, ஆந்திராவில் ஆட்சிக்கு வருவது பற்றி பாஜக செயற்குழுவில் ஆலோசனை – ஹைதராபாத் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஒட்டலில் தொடங்கிய இக்கூட்டத்துக்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமை வகித்தார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி மற்றும் யோகி ஆதித்யநாத், பசவராஜ் பொம்மை உட்பட பாஜக ஆளும் மாநிலங்களைச் … Read more

காற்றில் கலந்து வரும் காலன் மண்ணை தொட்டதும் மரணம்: பிறந்த 30 நாளில் ஒரு லட்சம் குழந்தைகள் பலி; ஆண்டுக்கு ஆண்டு குறையும் இந்தியர்கள் ஆயுள்

ஒரு காலத்தில் அனைத்து இடங்களிலும் குடிநீர் இலவசமாக கிடைத்தது. காலப்போக்கில், வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகரங்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, கிராமங்களிலும் கூட பணம் கொடுத்து குடிநீரை மக்கள் வாங்கி வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால், ‘தூய காற்றை’ விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நிலைமை என்னவாகும்? தற்போது அந்த நிலையை நோக்கி பல நகரங்கள் … Read more

முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு

இம்பால்: மணிப்பூரில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களான நிலையில், மண்ணில் புதைந்த 80 பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று இம்மாநில முதல்வர் பைரன் சிங் வேதனை தெரிவித்துள்ளனர். நேற்று வரையில் 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 18 பேர் ராணுவ வீரர்கள். மணிப்பூரில் ேநானி மாவட்டத்தில் துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள பகுதி என்பதால், இவர்களுக்கு … Read more