கேரளாவில் குரங்கு அம்மைக்கு ஒருவர் உயிரிழப்பு: ஆந்திரா, கர்நாடகாவில் தலா ஒருவருக்கு சிகிச்சை

திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்புஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மையானது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980-களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் உடன் இணைந்த பண்புகளைக் கொண்ட தாகும். இந்நிலையில், குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப் பட்டிருந்தது. கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் உறுதி … Read more

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் 1,48,995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது – மத்திய நிதியமைச்சகம்

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கிடைத்த மாத வருவாயில் இது இரண்டாவது அதிகத் தொகையாகும். மகாராஷ்டிர மாநிலம் 22 ஆயிரத்து 129 கோடி ரூபாயுடன் வரி வருவாயில் முதலிடத்தில் உள்ளது. 9795 கோடி ரூபாய்  வருவாயுள்ள கர்நாடகம் இரண்டாமிடத்திலும், 9183 கோடி ரூபாய் வருவாயுள்ள குஜராத் மூன்றாமிடத்திலும், 8449 கோடி ரூபாய் வரி வருவாயுள்ள தமிழகம் … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு…

டெல்லி: 11 வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து இன்று விவாதம் நடைபெறும் நிலையில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் ஆகிய இரு அவைகளும் தினம்தோறும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறன. இந்த சூழ்நிலையில் இன்று 11வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி இருக்கிறது.  சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் அதன்பின் அவை இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. அந்த சமயத்தில் எதிர் … Read more

ஜூலையில் ரூ.1,48,995 கோடி ஜி.எஸ்.டி. வசூல் – கடந்த ஆண்டை விட 28% கூடுதல்

கடந்த 5 மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பது ஒவ்வொரு மாதமும் சீரான அதிகரிப்பை காட்டுகிறது. 2022 ஜூலை மாதத்தில்  மொத்தம் ரூ.1,48,995 கோடி ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,751 கோடி, எஸ் ஜிஎஸ்டி ரூ. 32,807 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 79,518 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 41,420 கோடி உள்பட). செஸ்வரி ரூ. 10,920 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 995 … Read more

மேற்கு வங்கத்தில் ரூ.48 லட்சத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கைது

ஹவுரா: மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் ரூ.48 லட்சம் பணத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் விசால் கொங்காரி ஆகிய மூன்று பேரும் , மேற்குவங்கத்தில் உள்ள ஹவுராவுக்கு காரில் சென்றனர். காரில் அதிகளவு பணம் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, ராணிஹாதி என்ற இடத்தில் போலீஸார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர்.அப்போது ஜார்க்கண்ட் எம்எல்ஏ.,க்கள் வந்த வாகனத்தில் … Read more

நாக்பூரை ஆரஞ்சு நகராக்க வீடுதோறும் ஆரஞ்சுக் கன்று நட வேண்டும் – அமைச்சர் நிதின் கட்கரி

நாக்பூரை உண்மையிலேயே ஆரஞ்சு நகராக்குவதற்கு வீடுதோறும் ஆரஞ்சுக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான நாக்பூரில் சாலையோர வணிகர்களுக்குக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,  கேட்டுக்கொண்டார். இதேபோலத் தான் சாலையோரக் கடைகளுக்குச் சென்றபோது, காவல்துறையினர் தங்களிடம் தொல்லை செய்வதாகவும், பணம் கொடுக்காமல் உணவு வாங்கிச் செல்வதாகவும் கடைக்காரர்கள் புகார் கூறியதாகத் தெரிவித்தார்.  Source link

பொம்மை உற்பத்தித்துறையில் இந்தியா மாபெரும் வளர்ச்சி: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: இந்திய பொம்மை உற்பத்தி துறை எவரும் எதிர்பார்க்காத வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், கொரோனா காலத்தில் சுமார் 2600 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிரதமர் மோடி வானொலி மூலம் நாட்டுமக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவில் பொம்மை ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைந்துள்ளதாகவும், பொம்மை உற்பத்தித்துறை மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறினார். முன்பு பொம்மைகள் … Read more

நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி

பிஸ்னோய் கும்பலிடமிருந்து வந்த கொலை மிரட்டலைத் தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்த பிஸ்னோய் கும்பல் அண்மையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடிதம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்திருந்தது. அந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சல்மான் கான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனிடையே சல்மான் கான் கடந்த … Read more

'துப்பாக்கிக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும்' – ஆளுநர் ஆர்.என்.ரவி

துப்பாக்கி பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “துப்பாக்கியை பயன்படுத்துவர்களை துப்பாக்கி கொண்டுதான் கையாள வேண்டும். வன்முறையை எதிர்கொள்வதில் துளியும் சகிப்புத்தன்மை தேவையில்லை. தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை அவசியமில்லை. கடந்த 8 ஆண்டுகளாக நம் நாட்டில் எந்தவித … Read more

மன்மோகன் மாதிரி இல்ல மோடி.. அடிச்சா அடிதான்: ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பேசுவது சமீபகாலங்களில் அதிக கவனம் பெற்றுவருகிறது. சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். சனாதனம் குறித்த அவரது பேச்சு சர்ச்சையை சந்தித்து ஓய்ந்த நிலையில் தற்போது வன்முறைக்கு வன்முறையால் தான் தீர்வு காணமுடியும் என்று பொருள்படும் வகையில் பேசியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய … Read more