கல்லறையாக மாறி வரும் காபூல்; கருவில் இருந்த 7 மாத குழந்தையை இழந்தோம்: நாடு திரும்பிய சீக்கியர் குமுறல்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில்  கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சி அமைத்ததில் இருந்து, அங்கு வசித்து வந்த சீக்கியர்கள், இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவானது. இவர்களின் மீது அடிக்கடி மதவெறி தாக்குதல்கள் நடந்தன. கடந்த மாதம் 18ம் தேதி காபூலில் உள்ள சீக்கியவர்களின் புனித தலமான குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்கள், இந்தியர்கள் நாடு திரும்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, … Read more

''எங்களுக்கு வேண்டியது நீதியே, அனுதாபம் அல்ல'' – சித்தராமையா கொடுத்த ரூ.2 லட்சத்தை தூக்கி எறிந்த பெண்

கெரூர்: கர்நாடகாவில் இருதரப்பினர் மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா வழங்கிய 2 லட்ச ரூபாயை பெண் தூக்கியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி அருகே கெரூர் கிராமம் உள்ளது. இங்கு கடந்தவாரம் புதன்கிழமை மாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணை சிலர் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை வேறு மதத்தை சேர்ந்த சிலர் கண்டித்தனர். இரு தரப்பினரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் வெடித்துள்ளது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். … Read more

நடுவானில் ஆட்டம் கண்ட தனியார் விமான இன்ஜின்: அவசரமாக தரையிறக்கம்

புதுடெல்லி:  கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி போயிருந்த தனியார் விமான நிறுவனங்கள், தற்போதுதான் முழுவீச்சில் சேவையை அளித்து வருகின்றன. ஆனால், இந்த விமானங்களில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை இண்டிகோ நிறுவன பயணிகள் விமானம், குஜராத்தின் வதோதராவுக்கு புறப்பட்டது.  நடுவானில் அதன் இன்ஜினில் பெரும் அதிர்வுகள் உருவானது. இதனால், பயணிகள் பீதியில் அலறினர். இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள … Read more

காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா மீது பணத்தை தூக்கி வீசிய பெண்

கர்நாடகாவில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு கொடுத்த பணத்தை பெற்று கொள்ளாமல் காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா மீது பெண் ஒருவர் வீசியெறிந்தார். பாகல்கோர் மாவட்டத்தில் மதக்கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் நலம் விசாரித்த சித்தாராமையா, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார். அப்போது, அந்த பணத்தை தூக்கி வீசிய பெண் ஒருவர், தங்களுக்கு நீதியும், அமைதியும் வேண்டும் என்று தெரிவித்தார்.   Source link

சர்ச்சை வார்த்தைகளை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள்நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டங்களில் உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் என மிகப்பெரிய பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மற்றொரு புதிய தடையை மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை … Read more

திருப்பதி திருமலையில் UPI செயலிகள் மூலம் அறைகள், தரிசன டிக்கெட்டுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்

திருப்பதி திருமலையில் UPI செயலிகள் மூலம் அறைகள், தரிசன டிக்கெட்டுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பணமாகவோ அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தி வசதிகளை பெற்ற பக்தர்கள் இனி QR கோடு மூலம் பணம் செலுத்தலாம். இதனிடையே, திருப்பதில் முதியவர் ஒருவர் கூட்ட நெரிசலால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.   Source link

கேரளாவில் கணவன் வெட்டிக் கொலை: எம்எல்ஏ விதவையானது அவருடைய தலைவிதி; மாஜி அமைச்சர் பேச்சால் பேரவையில் அமளி

திருவனந்தபுரம்: பெண் எம்எல்ஏ.க்கு எதிராக அவதூறு கருத்து கூறிய மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மணிக்கு எதிராக  எதிர்க்கட்சிகள் அமளியில்  ஈடுபட்டன. கேரள  மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள ஒஞ்சியம்  பகுதியை சேர்ந்தவர்   சந்திரசேகரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பொறுப்பில்  இருந்தவர், சில வருடங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சி  மார்க்சிஸ்ட் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்நிலையில், 7  வருடங்களுக்கு முன்பு சந்திரசேகரன் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட்  கட்சியை சேர்ந்த 10க்கும் … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் மத நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று நாடாளுமன்ற செயலக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று புதிய பட்டியலை வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சை ஓயும் முன்பு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் காமராஜர் : பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

டெல்லி: காமராஜர் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். … Read more

'பாகிஸ்தான் பத்திரிகையாளரை அழைத்தேனா?'.. பாஜகவினரின் குற்றச்சாட்டுக்கு அன்சாரி விளக்கம்

”நான் பாகிஸ்தான் பத்திரிகையாளரை அழைக்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை” என மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் ஹமீத் அன்சாரி. பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளரான நஷ்ரத் மிஸ்ரா என்பவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 5 முறை இந்தியா வந்ததாகவும், இங்கிருந்து திரட்டிய முக்கிய தகவல்களை அந்த நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு வழங்கியதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும், அப்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்ததாகவும், இந்தியாவில் அவரை சந்தித்ததாகவும் அவர் கூறியிருப்பதாகவும் பாஜக கூறியுள்ளது. … Read more