மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபம் மற்றும் இம்பால் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. நோனே மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணி நடைபெறுவதால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக, 107 டெரிடோரியல் ஆர்மி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கன மழை பெய்ததால் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. ராணுவ முகாம் மீது மண் சரிந்ததில் வீரர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர். … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகம் மீது வெடிகுண்டு வீசிய மர்ம நபர்.. சிசிடிவி காட்சி வெளியீடு.!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு வீசும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஏகேஜி சென்டரில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்திற்கு நள்ளிரவில் மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவர் வெடிகுண்டை எடுத்து வீசி விட்டு வேகமாக சென்று விட்டார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சிசிடிவி உதவியுடன் வெடிகுண்டு வீசிய நபரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் வெடிகுண்டு … Read more

‘ஆதார்-பான்’ எண் இணைக்காவிட்டால் இன்று முதல் இரு மடங்கு அபராதமாக ரூ.1000 கட்ட வேண்டும்!!

புதுடெல்லி: ’பான்’ எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ‘ஆதார்’ எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால்,இன்று முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒன்றிய அரசின் உத்தரவுப்படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. பின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.அதே சமயம், எண்களை இணைக்காமல் இருந்தவர்களுக்கு ஆறுதல் … Read more

டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!

இந்திய ரயில் சேவையில் உணவு மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்கும் IRCTC-யின் சேவை குறித்தும், அதன் விலைப்பட்டியல் குறித்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. ஆனால் ஐ.ஆர்.சி.டியின் சேவை குறித்து எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும் அதன் மீது எந்த தீர்வும் காணப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டு வருவதும் வழக்காகி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த வகையில், சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்கியதற்கு IRCTC சார்பில் 70 ரூபாய்க்கு ரசீதை … Read more

ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல் – திரவுபதி முர்மு, சின்ஹா மனுக்கள் ஏற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுபோல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து மாநிலங்களவை செயலாளரும் குடியரசுத் … Read more

தையல்கலைஞரைக் கொன்ற 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்

உதய்பூரில் தையல்கலைஞர் தலையை வெட்டி படுகொலை செய்த இரண்டு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அஜ்மீர் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான இருவரின் செல்போன்களையும் அதில் உள்ள பாகிஸ்தான் தொடர்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு மற்றும் அலட்சியத்தால் தையல்கடைக்கார் கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்ததால் இதே போல் கொலை மிரட்டலுக்கு ஆளான … Read more

ஒன்றிய அரசு தரவரிசை பட்டியல் வெளியீடு எளிதாக தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களில் தமிழகம்

புதுடெல்லி: எளிதில் தொழில் தொடங்குவதற்கான சூழலைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஆந்திரா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் முன்னணி சாதனை மாநிலங்கள் பட்டியலில் இடம் வகிக்கின்றன. வர்த்தகம் மேற்கொள்வதற்கான விதிமுறைகளை எளிதாக்கி, சிறந்த வர்த்தக சூழலை (ஈஸி ஆப் டூயிங் பிஸினஸ்) உருவாக்கியுள்ள மாநிலங்கள் தொடர்பான, ‘மாநில வணிக சீர்த்திருத்த செயல் திட்டம் 2020’ தரவரிசை பட்டியலை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020ம் … Read more

பாஜக செயற்குழுவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு தெலங்கானா உணவுகளை செய்து அசத்த உள்ள யாதம்மாள்

ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் ஜூலை 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக ஆட்சிபுரியும் 18 மாநிலங்களின் முதல்வர்கள், அனைத்து மாநில பாஜக தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் … Read more

6 வயது சிறுமியையும், தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது.!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில், 6 வயது சிறுமியையும் அவள் தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 25 ஆம் தேதி தாயும் மகளும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இருவரும் பாலியல் வன்முறைக்கு ஆளானதை மருத்துவப் பரிசோதனை உறுதி செய்தது. மன நலம் பாதிக்கப்பட்டதால் தாயால் வாக்குமூலம் தர இயலவில்லை. காவல்துறையினர் மின்னணு சாதனங்கள் ,கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தும் 150  பேரிடம் விசாரணை நடத்தியும் குற்றம் செய்தவர்களை சுற்றி … Read more

பாலிவுட் நடிகைக்கு கொலை மிரட்டல்

மும்பை: பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்குவது வழக்கம். மேலும், சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிடுவார். தலிபான் தீவிரவாதிகளுடன் இந்துத்துவா தீவிரவாதிகளை ஒப்பிட்டு அவர் சொன்ன கருத்து வைரலானது. இந்நிலையில், ஸ்வரா பாஸ்கருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்தக்கடிதத்தில், ‘தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகப் பேசி வந்தால், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை மும்பை வெர் … Read more