கர்நாடகாவில் மின்வேலியில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழக்கும் காட்டு யானைகள்

பெங்களுர்; கடந்த 5 நாட்களில் 3 காட்டு யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கின்றன. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் இரையை தேடி வரக்கூடிய காட்டு யானைகள் மின் வேலியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டும் 3 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்மாபேட்டை தாலுகா பஞ்சப்பள்ளி பகுதியில் இரை தேடி வனப்பகுதியில் இருந்து கிராமப்பகுதிக்கு வந்த  25 வயது பெண் யானை … Read more

விறகு சேகரிக்க சென்ற பெண்ணுக்கு கிடைத்த வைரக்கல்! நேர்மையுடன் பெண் செய்த காரியம்

அதிர்ஷ்டம் வாழ்க்கையில் ஒருமுறை கதவை தட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணுக்கு பட்டை தீட்டாத வைரக்கல் கிடைத்திருக்கிறது. புருஷோத்தம்பூரில் வசிக்கும் ஜெண்டா பாய் என்ற பெண், தனது 6 குழந்தைகளையும் காப்பாற்ற தினமும் கூலி வேலைக்கு செல்கிறார். அவர் விறகு எடுக்கச் சென்றபோது பட்டை தீட்டாத வைரக்கல் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஏழ்மையிலும் நேர்மையாக இருந்த அந்தப்பெண், வைரத்தை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். 4.39 கேரட் எடையுள்ள … Read more

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: மாநிலங்களவை சபாநாயகர் அறிவிப்பு…

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து மேலும் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றன. சுசில்குமார், குப்தா சந்தீப்குமார் உள்பட மூன்று உறுப்பினர்கள் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றன. மாநிலங்களவை இன்று காலை துவங்கியவுடன் அவையில் அமலளி ஏற்பட்டது. எதிர் காட்சிகளை பொறுத்தவரை விளைவாசி உயர்வு, எம்.பி.கள் மீதான தக்க நடவடிக்கையை திரும்ப பெறுவதற்கான உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுப்பட்டார்கள். இந்நிலையில், ஆளும் கட்சி இருக்கின்ற அவையில் அமளி ஏற்பட்டது. குறிப்பாக அவையில் இருந்த மத்திய நிதியமைச்சர் … Read more

நாற்காலிகள் மீது ஏறிச்சென்ற டீச்சர்… தண்ணீரில் நிற்கும் மாணவர்கள் – வைரல் வீடியோ

உத்தரப் பிரதேசத்தில் மழைநீரில் நனையாமல் செல்ல மாணவர்களை தண்ணீரில் நிற்கவைத்து நாற்காலிகள்மீது ஏறிச்சென்ற ஆசிரியையின் வீடியோ வைரலானதை அடுத்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் மதுரா மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளி ஆசிரியையின் செயல் இணையத்தில் பரவி வைரலானது. அதில் பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் நிற்பதால் ஆசிரியை ஒருவர் மாணவர்களை வரிசையாக பிளாஸ்டிக் நாற்காலிகளை போடச்சொல்லி அதன்மீது ஏறி நடந்துசெல்கிறார். ஆசிரியை உலர்ந்த … Read more

ஆதீர் ரஞ்சன் சவுத்ரியை தொடர்ந்து சர்ச்சையில் சோனியா காந்தி: பாஜகவினர் சாடல்

புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவரை தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், சோனியா காந்தி மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். முன்னதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் பேசும்போது குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபதி என்று சொல்வதற்குப் பதிலாக ராஷ்ட்ரபத்னி என்று சொல்லிவிட்டார். “இது வாய் தவறி நிகழ்ந்துவிட்டது. எனக்கு குடியரசுத் தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அவர் கூறியிருந்தாலும் … Read more

காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சௌத்ரியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக ஆர்பாட்டம்!

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை தகாத வார்த்தையில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சௌத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதிர்ரஞ்சன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். இதனிடையே, தாம் தவறுதலாக அவ்வாறு குறிப்பிட்டு விட்டதாக ஆதிர்ரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார். Source link

மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதியாக சொல்வேன்; மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிற மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது: எனது கட்சிக்கு எதிராக தீய நோக்கத்துடன் பிரசாரம் செய்யப்படுகிறது. ஒருவர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் கண்டிப்பாக தண்டிக்கட்டும். ஆனால் புலனாய்வு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு … Read more

மேலும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்; சஸ்பெண்ட் 27ஆக உயர்வு

மேலும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மக்களவை உறுப்பினர்கள் நால்வர் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் சேர்த்து, இந்தக் கூட்டத் தொடரில் இதுவரை 27 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடக்க நாளிலிருந்து ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்குவது தினசரி வாடிக்கையாகிவிட்டது என்கிற … Read more

மேற்குவங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜியை நீக்கினார் மம்தா பானர்ஜி..!!

கொல்கத்தா: மேற்குவங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜியை மம்தா பானர்ஜி நீக்கி உள்ளார். மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், தலைநகர் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி கடந்த 23-ம் தேதி கைது … Read more

மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம் தொடர்கிறது

புதுடெல்லி: மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றும் தொடர்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், விலைவாசி உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, அக்னிபாதை திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த கோரி மக்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கூட்டத்தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர். அதே போன்று மாநிலங்களவையில் திமுகவின் 6 எம்பிக்கள் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் … Read more