பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!

பாட்னா: குடியரசு துணை தலைவர் பதவி கனவு நிறைவேறாததால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் விமர்சனம் நகைப்புக்குறியது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாரதிய ஜனதா உடனான உறவு முறித்துக்கொண்டு நிதிஷ்குமார் ஆர்.ஜே.டி.யின் மகா கூட்டணியில் இணைந்து 8வது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே, நிதிஷ்குமாரின் விலகல் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட நிதிஷ்குமார் விரும்பியதாக தெரிவித்தார். … Read more

மசினகுடி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது..!!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மேலும் ஊட்டியில், அருகே உள்ள கிளென் மார்கன் அணை அதன், முழு கொள்ளளவை எட்டியதால், அணையிலிருந்து சுமார் 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, வெள்ளப்பெருக்கு காரணமாக மசினகுடி தரைப்பாலம் முழுவதும்  மூழ்கியுள்ளது. இதனால், அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. Source link

75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்; மூவர்ண கொடியில் மின்னும் வேலூர் கோட்டை ..!!

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ (Azadi Ka Amrit Mahotsav) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் நமது தேசப்பற்றை பறை சாற்றும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்ஷா அணை தேசியக்கொடி நிறத்தில் தற்போது ஒளிர ஆரம்பித்திருப்பது நாட்டு மக்களின் மனதில் தேசபக்தி உணர்வைத் தூண்டும் வகையில் உள்ளது. பாட்சா அணை தேசிய கொடி வண்ணத்தில் ஒளிரும் வீடியோவை … Read more

சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: ஜனவரி 1, 2018 அன்று மகாராஷ்டிர மாநிலம் பீமாகோரேகானில் நடைபெற்ற கலவரத்துக்கு காரணமாக இருந்ததாகக் கூறி, சமூக ஆர்வலர் வரவர ராவ் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மும்பை உயர் நீதிமன்றம் அவரை இடைக்கால ஜாமீனில் விடுவித்தது. தனக்கு நிரந்தர ஜாமீன் வழங்க வேண்டும் என்று வரவர ராவ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், மும்பைஉயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதை எதிர்த்து வரவர ராவ்உச்ச நீதிமன்றத்தில் … Read more

இலவச திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் சொல்வது என்ன..? – அரசியல் கட்சிகள் ஷாக்..!

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யஉத்தரவிட வேண்டும் என்றுகோரியிருந்தார். அதேநேரம், ஆம் ஆத்மி உள்ளிட்ட … Read more

இந்தியாவின் முதல் மெய்நிகர் அருங்காட்சியகத்தை துவக்கி வைத்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!

இந்தியாவின் முதல் மெய்நிகர் விண்வெளி அருங்காட்சியகத்தை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடப்படும் வேளையில், இஸ்ரோவின் திட்டங்களை டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தும் புதுமையான யோசனையை இஸ்ரோ முன்வைத்துள்ளது. இத்தளத்தில், இஸ்ரோவின் செயற்கைக்கோள், ராக்கெட்டுகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படம், வீடியோக்கள் இடம்பிடித்துள்ளன.  Source link

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனுதாக்கல் செய்தார். இடைக்காலமாக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.    

ஏன் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும்?

ஏன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? வாக்காளர் பட்டியலை, 100 சதவீதம் துாய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக, ஆதாரை இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது. வாக்காளர்களின் ஆதார் விபரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் பாதுகாக்கப்படும். மேலும், போலி வாக்காளர்களைக் கண்டறிய இந்த நடவடிக்கை மிகவும் உறுதுணையாக இருக்கும். … Read more

ஒரே ஒரு நொடி தான்… சிறு கவனக்குறைவால் நிறுத்தி வைகப்பட்ட லாரி நகர்ந்து 4 வயது சிறுவன் பலி!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல் (36). இவர் ஓட்டுநராக பணிபுரிகிறார். இவரது மகன் ரித்திஷ் (4).  இந்த நிலையில், நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்துவதற்காக தண்ணீர் லாரி அங்கு வரவழைக்கப்பட்டது. அந்த லாரி வந்த போது கோவிலை வந்தடைந்ததும் முன் பின் நகராமல் இருக்க சக்கரங்களுக்கு கற்களை எதுவும் வைக்காமல் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் கருணாகரன் … Read more

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கார்பிவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதில் ஏற்கெனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், எந்த தடுப் பூசியை 2 டோஸ்கள் எடுத்துக் கொண்டார்களோ அதையை பூஸ்டர் டோஸாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் … Read more