கணவர் கொடுமையால் அமெரிக்காவில் தற்கொலை செய்த மகள்.. கண்ணீருடன் பெற்றோர் வைக்கும் கோரிக்கை!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உருக்கமான வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் மன்தீப் கவுரின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, அவரது உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் நகரைச் சேர்ந்த மன்தீப் கவுர் என்ற 30 வயதான பெண்ணுக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரஞ்சோத்வீர் சிங் சந்து என்பவருடன் திருமணம் நடந்தது. இதன்பின்னர் இந்தத் தம்பதியினர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் … Read more

நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்கையும் டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துகள் நாடு முழுவதும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. ஆனால், நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த உதய்ப்பூர் தையல் தொழிலாளி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதற்கிடையில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நுபுர் சர்மா மீது வழக்குகள் தொடரப்பட்டன.இந்நிலையில் தன் மீது நாட்டின் பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்கை டெல்லிக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நுபுர் சர்மா ஒரு மனு தாக்கல் … Read more

மோடியின் சொல் பேச்சை கேட்காத யோகி… உ.பி.., யில் செய்யப் போகும் தரமான சம்பவம்!

என்னதான் அரசியல் கட்சிகள் நாட்டின் வளர்ச்சி ,முன்னேற்றம் என்றெல்லாம் பேசினாலும், தேர்தல் போரில் வெல்வதற்கு அவர்கள் இலவசங்களையே கவசங்களாக அணிந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டை கிட்டதட்ட அரை நூற்றாண்டுகள் ஆண்ட கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி, தலைநகர் டெல்லியை ஆண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால் வரை இதற்கு யாரும் விிதிவிலக்கில்லை. இவர்களின் வரிசையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் விரைவில் சேர உள்ளார். ரக்ஷபந்தன் திருநாளை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்றும், நாளையும் பெண்கள் அரசுப் … Read more

இந்தியாவில் Fastag பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: இந்தியாவில் Fastag பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் போது ஏற்படும் டிராஃபிக்கால் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்த நிலையில் தான், அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையெல்லாம் சரிசெய்யும் விதமாகவும், வாகன … Read more

”நாய் கூட சீண்டாது!”.. உணவின் தரம் குறித்து கதறி அழுத உ.பி கான்ஸ்டபிள்! வைரல் வீடியோ

உத்தரப் பிரதேசத்தில் தங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து காவலர் ஒருவர் கதறி அழுது போராட்டம் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி பலத்த விவாதங்களை கிளப்பியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காவலராக பணிபுரிந்து வரும் மனோஜ் குமார் மதிய உணவாக சில ரொட்டிகளை வாங்கிக் கொண்டு கண்ணீருடன் அந்த வீடியோவில் தோன்றுகிறார். “ஒரு நாய் கூட இந்த உணவை சாப்பிட முடியாது. ஆனால் இதைத்தான் எங்களுக்கு உணவாகக் கொடுக்கின்றனர். இது மூத்த காவல்துறை அதிகாரிகளின் மோசடி. இவர்கள் மோசடி காரணமாகவே … Read more

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி – என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதி உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் மாவட்டம், வோட்டர்ஹோல் பகுதியில் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த இடத்தை பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் சண்டை நீடித்தது. இந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் காஷ்மீர் பண்டிட்டுகள் ராகுல் பட், அம்ரின் பட் … Read more

நேபாளத்தில் ஒரே நேரத்தில் 2 தொற்றால் மக்கள் அவதி

காத்மண்டு: உலக நாடுகளில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, கொரோனா வைரசின் 4வது அலையில் நேபாள நாடு சிக்கி தவித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் 1,090 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தெரிய வரவில்லை. இதுபற்றி காத்மண்டு போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ‘4வது அலையை சுகாதார அதிகாரிகள் எதிர்கொண்டு வரும் சூழலில், கடந்த 2 மாதங்களில் … Read more

அதற்குள் அடுத்த சர்ச்சையா! இலங்கை விரையும் பாக். போர்க்கப்பல் – வலுக்கும் எதிர்ப்பு

சீன கடற்படையின் உளவு கப்பலான யுவான் வாங் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்ச இலங்கை அனுமதிக்க கூடாது என சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு செல்வது அடுத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தைமூர் என அழைக்கப்படும் இந்த பாகிஸ்தான் நாட்டு போர் கப்பல் சீனாவில் கட்டுமானம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா நாட்டிலிருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருக்கும் தைமூர் கப்பல், பங்களாதேஷ் நாட்டில் உள்ள சட்டோகிராம் என்கிற துறைமுகத்தில் நிறுத்த … Read more

சமூக நலத் திட்டங்களும் இலவசங்களும் வெவ்வேறானவை: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, “இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தை மத்திய அரசால் நடத்த முடியாமல் போகலாம். எந்தவொரு அரசியல் கட்சிகளும் இத்தகைய இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு விரும்பாமல் … Read more

கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஸ்ரீசைலம் அணையிலிருந்து 10 மதகுகளில் தண்ணீர் திறப்பு

திருமலை: கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீசைலம் அணையிலிருந்து 10 மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீசைலம் அணை நிரம்பி உள்ளது. இந்த காலநிலையில் முதன்முறையாக 10 மதகுகள் 10 அடி உயர்த்தப்பட்டு நாகார்ஜூனா சாகருக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஸ்ரீசைலம் அணைக்கு ஜூராலாவில் இருந்து 2 லட்சத்து 28 ஆயிரத்து 558 கன அடி … Read more