தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது ஒன்றிய அரசு..!!

டெல்லி: தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை ஒன்றிய அரசு 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தங்கம் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் அதன் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. 2021 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு மே மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 9 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா தன்னுடைய தேவைகளை இறக்குமதி மூலமே நிறைவேற்றி கொள்கிறது. தங்கத்தை இறக்குமதி செய்வதில் உலகத்திலேயே 2வது பெரிய நாடு இந்தியா. … Read more

நுபுர் சர்மா நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: “முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது. வளைகுடா நாடுகளின் கோபத்தை தூண்டியுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா மன்னிப்பு கோர வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். நுபுர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தை ஆதரித்து டெல்லி … Read more

'நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கணும்!'- உச்ச நீதிமன்றம் காட்டம்!

நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கி விட்டது என, உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர், முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தனர். இது அரபு நாடுகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, பாஜகவின் அடிப்படை பொறுப்பில் இருந்து இருவரையும் நீக்கி, அக்கட்சித் தலைமை … Read more

நாட்டுமக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கோர வேண்டும்… உச்சநீதிமன்றம் அதிரடி

முகமது நபி குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு நுபுர் ஷர்மா மன்னிப்பு கோருவதாவும், தமது கருத்துக்களை அவர் திரும்ப பெறுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜரான நுபுர் ஷர்மாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தொலைக்காட்சியில் தோன்றி நுபுர் ஷர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று உத்தரவிட்டது.  நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துகள் ஏற்புடையது அல்ல என்றும் இதுபோன்ற விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த என்ன அவசியம் ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பியது. … Read more

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வரும் 4ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வரும் 4ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவித்துள்ளது. நாளை முதல் தொடங்கவிருந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் 3,4ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. நாளை சபாநாயக்கர் பதிவிக்கான வேட்புமனு தாக்கல் நடக்கும் என்றும் நாளை மறுநாள் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவர் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2 ஆண்டுகள் இடைவெளி – கோலாகலமாக தொடங்கிய பூர் ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம்

ஒடிசா மாநிலத்தில் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்ட விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஒடிசா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள புரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகிறது. இது 42 நாட்களுக்கு நடக்கும் மிக நீண்ட திருவிழாவாகும். பிரகாசமான வண்ணங்கள், உற்சாகமான மக்கள், நெரிசலான கடைகள் மற்றும் மகிழ்ச்சியான கைவினைஞர்கள் உள்ளிட்ட … Read more

அமர்நாத் யாத்திரை பாதைக்கு அருகில் குல்காமில் நடந்த என்கவுன்ட்டரில் 2 லஷ்கர் தீவிரவாதிகள் உயிரிழப்பு

குல்காம்: காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் மிர் பஜார் அருகில் உள்ள நவபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தப் பகுதிக்கு உள்ளூர் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: காஷ்மீரில் தற்போது அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. அந்த யாத்திரை செல்லும் பாதைக்கு அருகில் நவபோரா பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருந்தனர். பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை … Read more

சட்டசபைக்குள் ஷிண்டேவை அனுமதிக்காதீங்க..! – உச்சநீதிமன்றத்தில் தாக்கரே மனு!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருக்கு ஆதரவு அளிக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை, மாநில சட்டப்பேரவைக்குள் நுழைய தடை விதிக்கக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அண்மையில் ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கியதால், உத்தவ் … Read more

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்த சஞ்சய் ராவத்

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகவுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக்கோரி அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். இந்நிலையில், மதியம் 12 மணிக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் ஆஜராகவுள்ளதாக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட அவர், விசாரணை அலுவலகம் முன் தொண்டர்கள் குவிய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். Source link

'நுபுர் சர்மாவும் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது': உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது; அது ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.