5 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் பெட்ரோல் பயன்படுத்தப்படாது; தடை விதிப்போம் – நிதின் கட்கரி

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பெட்ரோல் பயன்படுத்தப்படாது என்றும், அதன்பிறகு இந்தியாவில் பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருளுக்கு தடை விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு டாக்டர் ஆஃப் சயின்ஸ் (டிஎஸ்சி) என்ற கவுரவப் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பெட்ரோல் பயன்பாட்டுக்கு வராது. ஒரு அறிக்கையின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் … Read more

ஜெ., பாணியில் ஜெகன் மோகன் ரெட்டி – கட்சியின் வாழ்நாள் தலைவர் ஆனார்!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினார். இந்தக் கட்சி உருவானது முதல், அவர் கட்சித் தலைவராக, அவரது தாயார் ஒய்.எஸ்.விஜயம்மா கவுரவத் தலைவராக பதவி வகித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து கடைசியாக 2017 … Read more

ஜெகன்மோகன் சந்தர்ப்பவாதி: சந்திரபாபு குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சந்தர்ப்பவாதி என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நேற்று பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் சந்தர்ப்பவாதி, அவருக்கு தேவை இருக்கும்வரை யாராக இருந்தாலும் பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசுவது வழக்கம். அவ்வாறு தனது சொந்த சித்தப்பாவான ஒய்எஸ். விவேகானந்தரெட்டியை பயன்படுத்திக்கொண்டார். தனது சகோதரியை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வந்தவுடன் அவரை தள்ளி … Read more

கையில் கம்புடன் வந்த அம்மா… தலைதெறிக்க ஓடிய சிறுவர்கள் – வைரலாகும் போட்டோஸ்

கையில் கம்புடன் வந்த அம்மாவை கண்டதும் அடித்து பிடித்து சிறுவர்கள் தலைதெறிக்க ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் இந்த வீடியோ காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.  கேரளா மாநிலம் முழுவதும் தற்போது மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கும் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயநாடு, திருநெல்லி என்னும் பகுதியில் உள்ள வயல்வெளியில் மழை பெய்து … Read more

ஷின்சோ அபேயின் படத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அஞ்சலி

தேர்தல் பிரச்சாரத்தின்போது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உருவப்படத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு நேரில் சென்ற ஜெய்சங்கர், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சடோஷி சுஸூகியிடன் தனது இரங்கலை தெரிவித்தார்.  Source link

சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து போனதால் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியின் எதிர்காலம் என்ன?.. சோனியா, ராகுலை காங். தலைவர் சந்தித்ததால் பரபரப்பு

புதுடெல்லி: சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த நிலையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியின் எதிர்காலம் என்னாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே சோனியா, ராகுலை மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் கவிழ்ந்தது. சிவசேனா இரண்டாக பிளவுபட்டுள்ளதால், தற்போது மகா விகாஸ் அகாடி கூட்டணியின் எதிர்காலம் என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த … Read more

எகிறும் எரிபொருள் விற்பனை! ஜூன் மாதத்தில் 17.9% அதிகரிப்பு!

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை சென்ற ஜூன் மாதத்தில் 17.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலகளவில் பெட்ரோல், டீசலை அதிகளவு பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில், எரிபொருள் பயன்பாடு கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்ற ஜூன் மாதத்தில் ஒரு கோடியே 86 லட்சம் டன் எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் டீசல் விற்பனை 23.9 சதவிகிதமும், பெட்ரோல் விற்பனை 23.2 சதவிகிதமும் … Read more

திருப்பதியில் கொட்டும் மழையில் ஏழுமலையானை தரிசிக்க குழந்தைகளுடன் காத்திருந்த பக்தர்கள்..

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொட்டும் மழையில் ஏராளமானோர் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர். வார இறுதி நாள் என்பதால் சனிக்கிழமையன்று திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  திடீரென பெய்த மழையால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நனைந்தபடி வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர். Source link

நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு!: இந்தியா மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்..2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய பக்கங்கள் முடக்கம்..!!

டெல்லி: நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக இந்தியா மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும் இந்த விவகாரம் முடிவுக்கு வராத நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா மீது ஹேக்கர்கள் … Read more

தொலைத்தொடர்பு துறையில் களமிறங்கும் அதானி குழுமம்? 5ஜி ஏலத்தில் பங்கேற்க முடிவு?

5ஜி அலைக்கற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், அதானி குழுமம் தொலைத்தொடர்புத் துறையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்ப காலம் ஜூன் 26 ஆம் தேதி விண்ணப்பம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 4ஆவது நிறுவனமாக அதானி குழுமம் ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 26ஆம் … Read more