மீண்டும் ‘வொர்க் பிரம் ஹோம்?’-  புதிய வேலைமுறையை அமல்படுத்த விரும்பும் 73% இந்திய நிறுவனங்கள்

புதுடெல்லி: கோவிட்-19 தொற்றுநோய் பரவியதில் இருந்து பல நிறுவனங்கள் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், 73% இந்திய நிறுவனங்கள் வீட்டில் இருந்தும் அலுவலகம் வந்து பணியாற்றும் கலவையான வேலை முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக புதிய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. ஊழியர்களை நீக்கும் நடவடிக்கைகளிலும் நிறுவனங்கள் ஈடுபட்டன. நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து … Read more

பேருந்து சக்கரத்துக்கடியில் ஸ்கூட்டியுடன் சிக்கிக்கொண்ட நபர்… கோர விபத்து

கேரள மாநிலம் ஆலத்தியூரில் சாலை வளைவில் கவனக்குறைவுடன் திரும்பிய பேருந்து, பக்கவாட்டில் இருந்த ஸ்கூட்டி மீது மோதி அதன் மீது ஏற இருந்த சூழலில், ஒருவர் துரிதமாக செயல்பட்டு ஸ்கூட்டி ஓட்டுநரை காப்பாற்றினார். மலப்புரம் – ஆலத்தியூர் சந்திப்பு பகுதியில் பேருந்து மோதியதில் சக்கரத்துக்கடியில் ஸ்கூட்டியுடன் நபர் சிக்கிக்கொண்ட நிலையில், அதனை பார்த்த ஒருவர் கூச்சலிட்டதோடு, பேருந்தை வேகமாக தட்டியும் நிற்கச்செய்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.  Source … Read more

சமையல் எண்ணெய்களின் விலையை ரூ.15 குறைக்க ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: சமையல் எண்ணெய்களின் MRP-யில் உடனே ரூ.15 குறைக்க உணவு பொதுவிநியோகத்துறை உத்தரவிட்டது. சமையல் எண்ணெய்களின் மீதான விலைகுறைப்பை உடனே அமல்படுத்த ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது. விலைகுறைப்பை உறுதிப்படுத்த  சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு உணவு, பொதுவிநியோகத்துறை ஆணையிட்டது. 

வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க விவோ நிறுவனம் செய்த செயல்.. அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை

இந்தியாவில் வரி விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி பணத்தை கிட்டத்தட்ட 50 சதவீத வருவாயை சீனாவுக்கு அனுப்பியதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனத்தில் இருந்து 465 கோடி ரூபாயை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனத்திற்கு சொந்தமான 48 இடங்களிலும், அதை சார்ந்த நிறுவனங்களின் தொடர்புடைய 23 இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், 119 வங்கிக் … Read more

தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார்: சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

புதுடெல்லி: தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நாராயண், மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகிய மூவர் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 2010-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனம் (என்எஸ்இ), கோ-லொக்கேஷன் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது, என்எஸ்இ சர்வருடன் புரோக்கிங் நிறுவனங்களின் சர்வர்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இந்தக் கட்டமைப்பை … Read more

படகு பழுதாகி 2 நாட்களாக நடுக்கடலில் தவித்த புதுச்சேரி மீனவர்கள்.. பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர்.!

புதுச்சேரி அருகே நடுக்கடலில் படகு பழுதாகி 2 நாட்களாக தவித்துக் கொண்டிருந்த 9 மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர், படகையும் இழுத்து வந்து கரை சேர்த்தனர். கடந்த 5ம் தேதி தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற 9 மீனவர்கள் மரக்காணம் பகுதியில் கடலில் 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது படகில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு நடுக்கடலில் மீனவர்கள் தவித்த நிலையில், மீனவர்கள் இருக்குமிடத்தை கண்டறிந்த இந்திய கடலோர காவல்படையினர் … Read more

அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் சூழலில் அங்கு மேக வெடிப்பு ஏற்பட்டு 5 பேர் பலி, ஏராளமானோர் மாயம்

காஷ்மீர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் சூழலில் அங்கு மேக வெடிப்பு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் மயமாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடும் நிலையில் அமர்நாத் யாத்திரை நிறுத்திவைத்துள்ளது. 

ஜெகன்மோகனின் தாயார் கட்சி பதவியில் இருந்து திடீர் ராஜினாமா – முடிவுக்கு இதுதான் காரணம்!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் கெளரவத் தலைவர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். தெலங்கானாவில் தனிக் கட்சி நடத்தி வரும் தனது மகளுக்கு துணை நிற்க போவதாக அவர் அறிவித்துள்ளார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தி வருவதால் திறமையான முதல்வர் என்ற பெயர் இவருக்கு இருக்கிறது. இதற்கிடையே, இவரது சகோதரியான ஒய்.எஸ். ஷர்மிளா, ஒய்எஸ்ஆர் … Read more

அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் இருவர் உடல் நசுங்கி பலி.!

ஆந்திராவில், அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த பைக் அரசு பேருந்து மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அகதிரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில், அரசு பேருந்து மீது மோதியது. அதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. Source link

பஞ்சாப் பாடகருக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும்..சினிமா தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்..: போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

மும்பை: பஞ்சாப் பாடகரை கொன்றது போல் சினிமா தயாரிப்பாளர் சந்தீப் சிங்கையும் கொல்வோம் என்று கொலை மிரட்டல் வந்ததால், அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல பஞ்சாபி பாடகரும், அரசியல்வாதியுமான சித்து மூசே வாலா கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய பல கொலை குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதால், ஒவ்வொருவராக போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சந்தீப் சிங் என்பவர், … Read more