வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? – பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!

நாம அன்றாடம் பயன்படுத்தும், சாப்பிடுகிற பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான வரிகளில் இருந்து விலக்கு பெறுவதற்காக எப்படியெல்லாம் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள், இதனால் எவ்வளவு வரி விலக்கு அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கிறது என்பதை பார்ப்போம். Cameras: சினிமாக்கள் மற்றும் மிக நீண்ட நேரத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் கேமிராக்களை தவிர DSLR உட்பட எல்லா வகையான handi கேமிராக்களிலுமே 29 நிமிடம், 59 நொடிகளுக்கு மட்டுமே வீடியோவாக பதிவு செய்ய முடியும். இது எதோ தொழில்நுட்ப காரணத்துக்காகத்தான் இருக்கும் என … Read more

கர்நாடகாவில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு

பெலகாவி: கர்நாடகாவில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகக் தாலுகா அக்கா தங்கேரஹல்லா கிராமத்தில் இருந்து கனரக வாகனம் ஒன்றில் நேற்று 20 தொழிலாளர்கள் தேசூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கனபராகி கிராமம் அருகேவந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து உருண்டது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்தவர்கள் … Read more

திருமலை திருப்பதி மலைப்பாதையில் ஏழுமலையான் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருமலை திருப்பதி ஏழுமலையானை அன்றாடம் தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பஸ் போக்குவரத்து வசதி உள்ளது. இத்துடன் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பஸ்களிலும் தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை 22 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இந்த மலைப்பாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால், வனத்துக்குள் இருந்து கரடி. … Read more

குஜராத்தில் தாமிரம் உற்பத்தி ஆலையை தொடங்கும் கவுதம் அதானி.!

குஜராத்தில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் அளவுக்கு தாமிர உற்பத்தி செய்யும் திறன்பெற்ற தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த பணிகளில் முதற்கட்டமாக 5 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியை தொடங்குவதற்காக எஸ்பிஐ, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட ஆறு வங்கிகளிடம் இருந்து 6 ஆயிரத்து 71 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளது. Source link

திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் பக்தர்கள்; வாகன ஓட்டிகள் அச்சம்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனால் பக்தர்கள், வாகனஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லவும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரவும் 2 மலைப்பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் வழியாக ஆந்திர மாநில அரசு பஸ்கள், தேவஸ்தான பஸ்கள் மற்றும் ஜீப்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் திருமலை சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலைகள் எப்போதும் பக்தர்களின் வாகனங்களால் நிறைந்து காணப்படும். இந்த … Read more

பறவைகள் வாழ்வதற்காகவே கட்டப்பட்ட பிரத்யேக 6 அடுக்கு கட்டடம்! 2000 பறவைகள் தங்கலாம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பறவைகள் வாழ்வதற்காகவே ஆறு அடுக்கு கொண்ட ஒரு சிறிய கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நகரமயமாதல் காரணமாக பறவைகள் கூடு அமைத்து தங்குவதற்கான இடம் இல்லாததால், ஏராளமான பறவைகள் அழியும் நிலையில் உள்ளன. சுற்றுச்சூழலை காக்கும் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஜெய்ப்பூரை சேர்ந்த கோசாலையில், பறவைகள் தங்குவதற்காகவே பிரத்யேக கட்டடத்தை உருவாக்கியுள்ளனர். இதில் ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பறவைகள் வரை தங்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பாகிஸ்தான், சீனாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் சரியான பதிலடி கொடுக்க முடியும்: விமானப் படை தலைமை தளபதி சவுத்ரி உறுதி

புதுடெல்லி: ‘‘நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு பிராந்திய எல்லைகளில் சீனா, பாகிஸ்தானால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், தேவைப்படும்போது குறுகிய நேரத்தில் சரியான பதிலடிகொடுக்க இந்திய விமானப் படையால் முடியும்’’ என்று விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி உறுதியாக தெரிவித்தார். இந்திய விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நமது நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் சில சவால்கள் உள்ளன. எல்லை வரையறை இல்லாததால் இந்த சவால்கள் நீடிக்கின்றன. … Read more

16 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்க ஜூலை 11 வரை தடை..!

மகாராஷ்டிரச் சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் சிண்டே தலைமையிலான 16 சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 11 வரை தகுதி நீக்கம் செய்யத் தடை விதித்துள்ளது. ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் 16 பேருக்குத் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரச் சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் நரஹரி சிர்வால், திங்கள் மாலைக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து 16 பேரும் உச்ச … Read more

காரில் வைத்து நடந்த கொடூரம்: உ.பி.யில் தாய், மகள் பலாத்காரம்

உத்தரகாண்ட்: லிப்ட் தருவதாக கூறி, தாய், மகளை காரில் பலாத்காரம் செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி நகர் பிரன் காலியர் பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனது 6 வயது மகளுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த ஒரு கும்பல், லிப்ட் கொடுப்பது போன்று நடித்து, இருவரையும் காரில் ஏற்றி கொண்டனர். சிறிது தூரம் சென்றதும், ஓடும் … Read more

உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்க, அம்மாநில அரசியலில் புயல் வீசத்துவங்கியது. இதில், பல எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையின் ஜூன் 25 … Read more