45 நாள்களுக்குப் பின் ஜாமீன் பெற்ற முன்னாள் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர்!

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சருக்கு 45 நாட்களுக்கு பிறகு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த மே மாதம் பஞ்சாப் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய் சிங்கலா, சுகாதாரத்துறைக்கான அரசு ஒப்பந்தங்களில் 1 சதவீதம் கமிஷன் கேட்டதாக முறையீடு புகார் பெறப்பட்டதையடுத்து பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டார். முறைகேடு வழக்கில் கைது … Read more

மழை நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கிய பள்ளிப்பேருந்து.. சிறார்களை உடனடியாக மீட்க களத்தில் இறங்கிய பொதுமக்கள்.!

தெலங்கானா மாநிலத்தின் மஹ்பூப் நகரில் 30 மாணவர்களுடன் சென்ற பள்ளிப்பேருந்து மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பாதி மூழ்கிய நிலையில், அதில் இருந்த சிறார்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மஹ்பூப் நகர் பகுதியில் நேற்று முதல் தொடர் கனமழை பெய்த நிலையில், அங்குள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில், இன்று காலை மாணவர்களுடன் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று மச்சனப்பள்ளி என்ற பகுதியின் அருகே ரயில் பாலத்தின் கீழே சென்றபோது மழைநீர் சூழ்ந்த இடத்தில் சிக்கியது. இதனைக் … Read more

நடிகையின் பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு மீண்டும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை போலீசார் கைப்பற்றி எர்ணாகுளம் விசாரண நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர். இந்த நிலையில் பலாத்கார காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாக பாலச்சந்திர குமார் என்பவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் மெமரி கார்டை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி … Read more

பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமின் – உச்ச நீதிமன்றம் அதிரடி!

‘ஆல்ட் நியூஸ்’ இணையதள இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக ‘ஆல்ட் நியூஸ்’ செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜுபைர் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, 2018 ஆம் ஆண்டு முகமது ஜுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்குரியை வகையில் கருத்திருந்தார். இது மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அளிக்கப்பட்ட … Read more

ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்.. 9 பேர் உயிரிழப்பு!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் கார் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். ராம்நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக தேலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற கார் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தகவலறிந்து விரைந்த மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு, காருக்குள் இருந்த எஞ்சிய ஒருவரை பத்திரமாக மீட்டனர். மேலும், ஆற்றில் பாய்ந்த காரை டிராக்டர் உதவியுடன் மீட்கும் பணி  நடைபெற்றது.  … Read more

பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன்.: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு முகமது ஜுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த பதிவு மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் முகமது ஜுபைரை கடந்த மாதம் 28-ம் தேதி கைது திகார் சிறையில் அடைத்தனர். அதனையடுத்து ஜாமீன் வழங்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் … Read more

’Corona Be Like: என்ன கொஞ்சம் திரும்பி பாருங்க’ : ஆஃபருக்காக மாலில் குவிந்த கேரளாட்டீஸ்!

முன்பெல்லாம் தள்ளுபடி என்றாலே ஆடி தள்ளுபடிதான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது மாதத்திற்கு ஒரு தள்ளுபடி, சீசனுக்கு ஒரு தள்ளுபடி என காணும் இடமெல்லாம் தள்ளுபடியாய் அறிவிப்பதால் கொரோனா உட்பட எந்த நோய் பரவல் குறித்த அச்சமும், தெளிவும் இல்லாமல் மக்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் கேரளாவின் பிரபல லுலு மாலில் Midnight sale என்ற பெயரில் கிட்டத்தட்ட மாலில் உள்ள அனைத்து கடைகளிலும் 50 சதவிகிதம் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. Midnight … Read more

உழவர் கடன் அட்டை விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்க வேண்டும் – பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தல்!

உழவர் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளின் கூட்டத்தில் பேசிய அவர், கிராமப்புற வங்கிகளின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மீன்பிடித்தல் மற்றும் கால்நடை பண்ணை தொழிலில் ஈடுபடுவோருக்கும் உழவர் கடன் அட்டை வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.   Source link

ரேணிகுண்டா வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியில் கணக்கில் வராத ₹1.50 லட்சம் பறிமுதல்

*மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 3 பேர் கைது* லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடிதிருமலை : ரேணிகுண்டா வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ₹1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 3 ேபர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி உள்ளது. இங்கு அதிகளவில் லஞ்சம் பெறுவதாக குற்றசாட்டுகள் வந்தது. … Read more

”லீவுக்காக பயணிகளிடம் உதவி கேட்ட நபர்” – எப்படி தெரியுமா? மும்பையில் நடந்த சுவாரஸ்யம்!

விடுமுறைக்காக பள்ளி கல்லூரிக்கு செல்வோரை காட்டிலும் எக்கச்சக்கமான சாக்குப்போக்குகளை சொல்வதில் அலுவலக பணியாளர்களே கெட்டி என்பது ரெடிட் தளத்தில் ஷேர் செய்யப்பட்ட வைரல் போஸ்ட் மூலம் அறியலாம். மும்பை மற்றும் புனேவில் ட்ரெயின், பஸ் போன்ற பொது போக்குவரத்து சேவைக்கான சரியான நேரத்தை குறிக்கும் அப்ளிகேஷன்தான் M-Indicator. இந்த ஆப்பை பயன்படுத்துவதால், தங்களுடைய நேரத்தை அதற்கேற்றால் போல பயணிகள் மேனேஜ் செய்து கொள்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த m-indicator ஆப்பை பயன்படுத்தி ஊழியர் ஒருவர் தனக்கான லீவை பாஸிடம் … Read more