மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயாவுக்கு 96 டன் நிவாரணப் பொருட்கள்

புதுடெல்லி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன. அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் பெய்த தொடர் கனமழையால் சுமார் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக விமானப்படை மூலம் குடிநீர், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 96 டன் … Read more

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆன்மா செத்துவிட்டது: சஞ்சய் ராவத்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆன்மா செத்துவிட்டது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார். 40 ஆண்டுகளாக கட்சியில் இருந்தவர்கள் ஓடிப்போன நிலையில், அவர்களிடம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கட்சியில் உண்டு, குடித்து குதுகலமாக இருந்தவர்கள், தங்களது தந்தையை மாற்றியுள்ளனர் என்றும், தாங்கள் அவர்கள் போல் இல்லை எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். Source link

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை செயலரிடம் மனு அளித்தார். வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் ராகுல் காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போருக்கு தயாராகிறதா சீனா? லடாக் எல்லையில் படை பலத்தை பல மடங்கு பெருக்கி அச்சுறுத்தல்

இந்தியாவின் லடாக் எல்லையில் தனது படை பலத்தையும், ஆயுத பலத்தையும் சீனா பல மடங்கு பெருக்கியுள்ளதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் சீன ராணுவத்தினர் திடீரென ஊடுருவினர். இதையடுத்து அங்கு இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு சீனப் படையினரின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், அதே ஆண்டு ஜூன் மாதம் இரு … Read more

சமாஜ்வாதி வெற்றிக்கு தடையான மாயாவதி: உ.பி இடைத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதியின் வெற்றிக்கு மீண்டும் மாயாவதி தடை ஏற்படுத்தி உள்ளார். இவரது பகுஜன் சமாஜ் கட்சி ராம்பூரில் வேட்பாளரை நிறுத்தாதாலும், ஆஸம்கரில் போட்டியிட்டதாலும் சமாஜ்வாதியின் வாக்குகள் பிரிந்துள்ளன. இவை பாஜகவிற்கு சாதகமாகி, சமாஜ்வாதி இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிஎஸ்பியுடன் கூட்டணி வைத்து அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி போட்டியிட்டது. இரண்டில் பெற்ற வெற்றியில் ஆஸம்கரில் அகிலேஷ், 6,21,578 வாக்குகள் பெற்றிருந்தார். இதற்கு, முஸ்லிம், … Read more

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கப் போகும் முடிவு?

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 17,073 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, கேரளா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 17 ஆயிரத்து 73 … Read more

அம்பானி குடும்பத்தாருக்கு மும்பையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவரம் தொடர்பாக ஒன்றிய அரசு மனு தாக்கல்

டெல்லி: அம்பானி குடும்பத்தாருக்கு மும்பையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவரம் தொடர்பாக ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பாதுகாப்பு விவரம் கேட்ட திரிபுரா ஐகோர்ட்டுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

குருகிராமில் தொழுகையை அடுத்து இறைச்சிக்கும் எதிர்ப்பு: புதிய கடைகளுக்கு அனுமதி மறுக்க ஹரியாணா முதல்வரிடம் வலியுறுத்தல் 

புதுடெல்லி: குருகிராமில் புதிய இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அதன் இந்து அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதன் மீது பாஜக ஆளும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லிக்கு அருகிலுள்ளது குருகிராம். ஐடி நகரமான இங்கு தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளது. இதனால், அதில் பணியாற்ற வேற்று மாநிலங்களிலிருந்து பலரும் வந்து வசிக்கின்றனர். இதில் கணிசமாக முஸ்லீம்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தொழுகைக்கான மசூதிகள் போதுமானதாக இல்லை. … Read more

ஜூலை 1 முதல் பிரசாரத்தை துவக்குகிறார் திரவுபதி முர்மு

பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு, ஜூலை 1 ஆம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முர்மு ஆதரவு கோரினார். தொடர்ந்து திமுக தலைவர், மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரிடம் அவர் ஆதரவு கோர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஜனாதிபதி தேர்தல்… இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவுக்கு டிஆர்எஸ் கட்சி ஆதரவு!!

புதுடெல்லி:  ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரெளபதிமுர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் … Read more