மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் டெல்லியில் பதவியேற்பு..!!

டெல்லி: மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் டெல்லியில் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடகாவில் இருந்து தேர்வான நிர்மலா சீதாராமன், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் பதவியேற்றனர். புதிய எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அக்னிபத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளார் அமைச்சர் ராஜ்நாத்சிங்..!

அக்னிபத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் விளக்கம் அளிக்கவுள்ளார். 11ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். 4 ஆண்டு கால ஒப்பந்த முறையில் ராணுவத்தின் முப்படைகளிலும் பணியாற்ற அக்னிபாத் என்ற திட்டத்தில் அறிவித்தது. 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் எதிர்காலம் குறித்த பிரச்சினை எழுந்து போராட்டங்கள் எழுந்தன. இந்நிலையில், அக்னிபத் … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. 18 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு..ஒரே நாளில் 38 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 18,815 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,78,054 ஆக உயர்ந்தது.* புதிதாக 38 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

புதுடெல்லி: ஜி20 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சீனா, தென்கொரியா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் நவம்பரில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் 2 நாள் கூட்டம் பாலி மாகாண தலைநகர் தென்பசாரில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் பங்கேற்றுள்ளனர். … Read more

தார் ஜீப்பின் டாப்பில் கறி வெட்டும் கத்தியுடன் உலா வந்த நகை கடை அதிபர்.. பாய்ந்தது போலீஸ் வழக்கு!

இறைச்சிக் கடை திறப்பு விழாவிற்காக, கையில் வெட்டுக்கத்தியுடன் தார் ஜீப்பின் கூரையில் அமர்ந்து ஊர்வலமாக வந்த பிரபல நகைக்கடை அதிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் செம்மனூர் பேஷன் ஜுவல்லரியின் உரிமையாளர் போபி செம்மனூர் என்பவர் தான் கெத்து காட்டுவதற்காக, தார் ஜீப்பின் மீது ஏறி கத்தியுடன் அமர்ந்து உலா வந்து வாண்டடாக வழக்கு வாங்கிய வள்ளல். கேரளா மற்றும் தமிழகத்தில் நகைக்கடைகளை நடத்தி வரும் இவர், தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக சாலையில் … Read more

இந்தியாவில் மிக குறைந்த கட்டணத்தில் விரைவில் ஆகாசா ஏர் விமான சேவை : ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி : ஆகாசா ஏர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய விமான நிறுவனம் ஒன்றிற்கு விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2022 டிசம்பரில் குறைந்த கட்டணத்தில் இந்தியாவில் விமான சேவை வழங்கும் நோக்கில் ஆகாசா ஏர் விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெருமளவு முதலீடு செய்துள்ளார். வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர். விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளதால் மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்த … Read more

தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி கல்விக்கு வழிவகுக்கிறது – வாரணாசியில் நலத்திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி உறுதி

வாரணாசி: தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி கல்விக்கு வழிவகுக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் பயணமாக வாரணாசி சென்றார். அப்போது ரூ.600 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். வாரணாசியின் எல்.டி. கல்லூரியில் … Read more

கடந்த 7 நாட்களில் 89 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்க தரிசனம்

ஜம்மு:  இந்த ஆண்டுக்கான அமர்நாத் பனிலிங்க யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கியது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி முடிவடைகிறது. இதுவரை மொத்தம் 89 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று 8வது குழுவினர் யாத்திரைக்கு புறப்பட்டனர். 5726 பக்தர்கள் அடங்கிய குழுவானது பக்வதி நகர் யாத்திரை நிவாசில் இருந்து 242 வாகனங்களில் புறப்பட்டுச்சென்றனர்.

ராஜஸ்தானில் 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு தொடக்கம்

ஜுன்ஜுனு: ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் கூட்டம் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு நகரில் நேற்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நிர்வாகிகள் மன்மோகன் வைத்யா, அருண் குமார், கிரிஷன் கோபால் மற்றும் சி.ஆர் முகுந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 2025-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு, நூற்றாண்டு விழாவை காஷ்மீரில் கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பை விரிவுபடுத்த … Read more

குஜராத்தை போல் லக்னோவிலும் நிறுவப்பட உள்ள 108 அடி உயர அனுமன் சிலை..!

குஜராத்தை போல் லக்னோவிலும் 108 அடி உயர அனுமன் சிலை புதிதாக நிறுவப்பட உள்ளது. அங்குள்ள கோமதி நதிக்கரையில் உள்ள தேவ்ரஹா காட் பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலில் இந்த சிலை நிறுவப்படுகிறது. அனுமன் கோயிலில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளில் சிலை தயாராகிவிடும் என்று கட்டடக் கலைஞர்களில் ஒருவரும், கோயிலின் அறங்காவலருமான விஜய் சின்ஹா கூறினார். ஏற்கனவே அங்கு 151 அடி உயரத்தில் லட்சுமணன் … Read more