இலங்கைக்கு இந்திய ஆதரவு உண்டு: வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: இலங்கைக்கு இந்திய ஆதரவு எப்போதும் உண்டு என்று வெளியுறவுச் செயலர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசும் அந்நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் பற்றியும் நாம் அறிவோம். இலங்கை மக்கள் இந்தக் கடினமான காலத்தை கடந்துவர உதவி செய்து வருகிறோம். நெருங்கிய நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா 3.8 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளைச் செய்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் சூழலையும் நாங்கள் உற்று … Read more

இயற்கை வேளாண்மை செய்ய விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.!

இயற்கை வேளாண்மைப் பாதையில் முன்னேறி, உலகளாவிய வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் காணொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா இயல்பிலும் பண்பாட்டிலும் வேளாண்மை சார்ந்த நாடாக இருந்து வருவதாகத் தெரிவித்தார். ஏழைகள் அடித்தட்டு மக்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களில் ஊராட்சிகள் முதன்மையான பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஊராட்சியிலும் 75 விவசாயிகளை இயற்கை வேளாண்மையுடன் இணைக்கும் சூரத்தில் உருவாகியுள்ள … Read more

திரவுபதி முர்முவை சந்தித்ததால் சமாஜ்வாதி கட்சியுடன் முறிவு?; ஓம் பிரகாஷ் ராஜ்பர் விளக்கம்

லக்னோ: ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை சந்தித்ததால், சமாஜ்வாதி – சுபாஸ்பா கட்சியுடனான உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (சுபாஸ்பா) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பாஜக கூட்டணி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில் அவரை காளிதாஸ் மார்க்கில் சந்தித்தேன். அந்த கூட்டத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.முர்முவின் … Read more

கனமழை: தெலங்கானாவில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஹைதராபாத்: கனமழை காரணமாக தெலங்கானாவில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜூலை 11, 12, 13 ஆகிய நாட்களில் பள்ளி, கல்லூரிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஆலோசனை: தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றதன் காரணமாகவும், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகவும் நாடு முழுவதும் பரவலாக பல்வேறு மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலங்கானா மாநிலத்தில் ஜெயசங்கர் பூபல்பள்ளி, நிசாம்பாத், ராஜண்ணா சிர்கிலா மாவட்டங்களில் கடும் … Read more

டிஜிட்டல் இந்தியா திட்டம் மகத்தான வெற்றி – பிரதமர் மோடி பெருமிதம்!

கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வர முடியாது எனக்கூறியவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றி சரியான பதிலடியை கொடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில், இயற்கை விவசாயம் தொடர்பான கருத்தரங்கில், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், பல்வேறு இலக்குகளை நோக்கி செயல்பட துவங்கி உள்ளது. வரவிருக்கிற நாட்களில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளம் … Read more

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்ட அசாம் முதலமைச்சர்.!

அசாமில் மாபியா மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரின் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். திப்ரூகரில் மாபியா மிரட்டல் குறித்து ஏற்கெனவே புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் அச்சுறுத்தல் வந்ததால் மிரட்டியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வீடியோவைப் பதிவுசெய்துவிட்டு இளம் வணிகர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அறிந்த முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைத் … Read more

அசாமில் தொடர் மழை எதிரொலி; ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 8 பேர் பலி: மேலும் பாதிக்கப்பட்ட 82 பேருக்கு தீவிர சிகிச்சை

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 8 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்பது நாட்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் குறைந்தது எட்டு பேர் ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் இறந்துள்ளனர்; 82 பேர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிவன் வேடம் அணிந்து நாடகம் – அவமதிப்பு புகாரில் இளைஞர் கைது

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அசாமில் சிவன் வேடம் அணிந்து தெரு நாடகத்தை நடத்திய இளைஞரை அசாம் போலீஸார் கைது செய்தனர். அசாம் மாநிலம் நஹோன் மாவட்டத்தில் உள்ள காலேஜ் செளக் பகுதியில் நேற்று காலை சிவன் – பார்வதி வேடம் அணிந்தபடி இளைஞரும், இளம்பெண்ணும் தெரு நாடகத்தை நடத்தினர். அதில், மோட்டார் சைக்கிளில் அவர்கள் வருவது போலவும், பின்னர் பெட்ரோல் தீர்ந்து பாதி வழியிலேயே அவர்கள் நிற்பது போலவும் அவர்கள் நாடகக் காட்சிகளை அமைத்தனர். அப்போது … Read more

Ttd: பிரம்மோற்சவ பெருவிழா… திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!

திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் உவக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் செப்டம்பர் 27 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மாண்டமான இந்த பிரம்மோற்சவ திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வும் செப்டம்ப்ர 27 ஆம் தேதி மாலையே நடைபெற உள்ளது. கொடியேற்ற நிகழ்வின் முக்கிய அம்சமாக, ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் வழங்க உள்ளார். பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக அக்டோபர் … Read more

மனைவியிடம் பொய் சொல்லி தோழியை பார்க்க வெளிநாடு சென்று திரும்பியவர் கைது

தோழியை பார்க்க வெளிநாடு சென்றதை மனைவியிடம் இருந்து மறைக்க, பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த நபரை மும்பை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். திருமண பந்தத்தை மீறி, தனது தோழியுடன் பழகி வந்த நபர், அவரை பார்ப்பதற்காக வெளிநாடு சென்று மும்பை திரும்பியுள்ளார். அதிகாரிகள் சோதனையின் போது, பாஸ்போர்ட்டில் அவரது பயண விவரங்கள் குறித்த பக்கங்கள் கிழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியதில், மனைவியிடம் அலுவல் வேலைக்காக வெளியில் செல்வதாக கூறி, தோழியை … Read more