கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக தொடங்குவதற்கு மக்களின் பங்களிப்பு முக்கியம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

புது டெல்லி: வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமூக அமைப்புகளையும் ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களை தொடங்குமாறு தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது. சுற்றுப்புறங்களில் கொசு இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நமது சொந்த வீடுகள் மற்றும் சமூகங்களுடன் தொடங்குவோம் என கொசு மூலம் பரவும் … Read more

விவோ நிறுவனம் தொடர்புடைய 119 வங்கிக் கணக்குகளை முடக்கியது அமலாக்கத்துறை..!

விவோ நிறுவனம் தொடர்புடைய 119 களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் மீது பணப்பரிவர்த்தனை முறைகேடு புகார் எழுந்ததையடுத்து அந்நிறுவனத்தின் 44 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிறுவனத்தின் இரண்டு முக்கிய சீன நிர்வாகிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, இந்தியாவில் விவோ நிறுவனத்தின் 23 துணை நிறுவனங்கள் செயல்படுவதாகவும் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு … Read more

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்; தேசிய பங்குச்சந்தை மாஜி சிஇஓ மாஜி போலீஸ் கமிஷனர் மீது வழக்கு: 10 இடங்களில் சிபிஐ ரெய்டு

மும்பை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா, முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ)  சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ குழும செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன்  ஆகியோர் பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பங்குச் சந்தை தகவல்களை கசியவிட்ட … Read more

செல்போன் இறக்குமதி 33% சரிவு! சீனாவை நம்பியிருக்கும் நிலை குறைந்துள்ளது! காரணம் என்ன?

செல்போன்கள் தயாரிப்பிற்கு பயன்படும் சிப்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலிலும் உற்பத்தி அதிகரித்துள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பால் மொபைல் போன்கள் இறக்குமதி 33 விழுக்காடு சரிந்துள்ளதாக கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்னணு சாதங்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. செல்போன்கள் தயாரிப்பிற்கு பயன்படும் செமி கண்டக்டர் சிப்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலிலும் செல்போன்கள் உற்பத்தி உள்நாட்டில் அதிகரித்துள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது. இதனால், 2021-22ஆம் நிதியாண்டில் உள்நாட்டில் செல்போன்கள் உற்பத்தி 26 விழுக்காடு … Read more

அமர்நாத் யாத்திரையின்போது ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்..!

காஷ்மீர்: அமர்நாத் புனித யாத்திரை நடைபெற்று வரும் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். அமர்நாத் யாத்திரை என்பது இமயமலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள சிவன்  கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் யாத்திரையாகும். கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இதனிடையே இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. … Read more

'காளியை வழிபடுவது குறித்து பாஜக எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்' – மஹுவா மொய்த்ரா பதிலடி

“காளியை வழிபடுவது குறித்து வங்க மக்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்” என்று பாஜகவுக்கு திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மஹுவா மொய்த்ரா அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “என்னை பொறுத்தவரை காளி மாமிசம் உண்ணும், மது அருந்தும் தெய்வம்” எனக் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். … Read more

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

புதுடெல்லி: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக தேசிய கொடி பறக்கும் அனைத்து கட்டிடங்களிலும் நாளை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நாளை நடைபெறாது. முன்னதாக, ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறும் நிலையில், … Read more

அமர்நாத் யாத்திரை நிறுத்தம்… பக்தர்கள் ஷாக்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சகணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு கடந்த 30 ஆம் தேதி (ஜூன் 30) முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஆகஸ்ட்11 ஆம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வந்து கொண்டிருந்தனர். இரு … Read more

பிரபல இந்தி நடிகர் ராஜ்பாப்பருக்கு 2 ஆண்டு சிறை

பிரபல இந்தி நடிகரும், அரசியல் பிரமுகருமான ராஜ் பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த 1996-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ் பாப்பர் போட்டியிட்டார். அப்போது வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குசாவடி ஒன்றில் அலுவலரை பணிசெய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 26 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று … Read more

சிவசேனா அதிருப்தி தலைவரான ஏக்நாத்தை ஆட்சியமைக்க அழைத்தது தவறு: சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே முறையீடு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சியமைக்க அழைத்தது தவறு எனக்கூறி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அக்கட்சியின் எம்எல்ஏக்கள், பாஜகவுடன் சேர்ந்து தற்போது கூட்டணி ஆட்சி அமைத்துள்ளனர். ெபரும்பாலான எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருப்பதால், … Read more