24 நாட்களில் 1,600கி.மீ: டெல்லியில் இருந்து கார்கிலுக்கு சைக்கிளில் வீரர்கள் பயணம் 

புதுடெல்லி: இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் இருந்து கார்கில் மலைப்பகுதிக்கு சைக்கிள் பயணம் 2 பெண் அதிகாரிகள் தலைமையில் வீரர்கள் பயணம் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூறும் விதமாக, இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சைக்கிள் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. டெல்லி முதல் டிராஸ் வரையிலான இந்த பயணம் நேற்று தொடங்கியது. ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 20 வீரர்கள் அடங்கிய இந்தக் குழுவிற்கு, ராணுவ மேஜர் ஸ்ரிஷ்டி சர்மா … Read more

'அரசியல் சாசனத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டது நீதித்துறை' – தலைமை நீதிபதி என்.வி.ரமணா

“அரசியல் சாசனத்துக்கு மட்டுமே நீதித் துறை கட்டுப்பட்டது,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்து உள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய – அமெரிக்கர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: நாட்டின், 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். அது போல குடியரசு பெற்று, 72 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். ஆனாலும், அரசியல் சாசனம் ஒவ்வொரு அமைப்புக்கும், ஒவ்வொரு … Read more

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைப் பிடித்துக் கொடுத்த ஊர்மக்கள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவரைப் பிடித்த ஊர்மக்கள் அவர்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ரியாசி மாவட்டம் தக்சன் என்னுமிடத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளான பைசல் அகமது, தாலிப் உசைன் ஆகியோரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து இரண்டு ஏகே வகைத் துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, 7 கையெறி குண்டுகள், தோட்டாக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. ஊர்மக்களின் துணிச்சலைப் பாராட்டி ஆளுநர் மனோஜ் சின்கா 5 இலட்ச ரூபாயும், டிஜிபி 2 … Read more

மராட்டிய சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நார்வேகர் தேர்வு.! 164 வாக்குகளை பெற்று வெற்றி

மும்பை: மராட்டிய சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நார்வேகர் வெற்றி பெற்றுள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டப்பேரவையில் 164 வாக்குகளை பெற்று மராட்டிய சபாநாயகராக ராகுல் நார்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜன் செல்வி தோல்வியுற்றார். மராட்டியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. கடந்த புதன்கிழமை உத்தவ் தாக்கரே முதல்வர் … Read more

பாஜக கூட்டணிக்கு முதல் வெற்றி: மகாராஷ்டிர சபாநாயகர் தேர்தலில் வெற்றி: அடுத்தது நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை: மகாராஷ்டிர பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு அசாமில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினார். இதையடுத்து பேரவையில் பலத்தை நிரூபிக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, … Read more

ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் வெற்றி: சபாநாயகராக பாஜக எம்எல்ஏ தேர்வு!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக, பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. இதை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் மற்றும் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்வதாக, உத்தவ் தாக்கரே அறிவித்தார். … Read more

மகாராஷ்டிர சட்டப்பேரவை தலைவராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் 164 வாக்குகளைப் பெற்றுள்ளார். மகாராஷ்டிரச் சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களும், அவரை ஆதரிக்கும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கியிருந்த டிரைடென்ட் விடுதியில் இருந்து நேராகச் சட்டப்பேரவைக்கு வந்தனர். அனைவரும் ஒரேபோல் காவித் தலைப்பாகை அணிந்து வந்தனர்.   துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக சட்டமன்ற … Read more

மராட்டிய சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நார்வேகர் வெற்றி

மும்பை: மராட்டிய சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நார்வேகர் வெற்றி பெற்றுள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டப்பேரவையில் 164 வாக்குகளை பெற்று மராட்டிய சபாநாயகராக ராகுல் நார்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜன் செல்வி தோல்வியுற்றார். 

இந்தியாவில் புதிதாக 16,103 பேருக்கு கரோனா தொற்று: 31 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 103 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,02,429 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 13,929 பேர் மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த … Read more

துணை ஜனாதிபதி ஆகிறார் அமரீந்தர் சிங் – பிரதமர் மோடி தரும் கிப்ட்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமீரந்தர் சிங் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல், வரும், 18 ஆம் தேதி நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் துணை தலைவர் பதவிக்கான தேர்தல், அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த, ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவை, … Read more