பால் தயிர் ஆனாலும்; தயிர் மோர் ஆனாலும்… ஒரே நாடு; ஒரே அடி: மக்களை கசக்கி பிழியும் ஜிஎஸ்டி; பிறந்தாலும் வரி, செத்தாலும் வரி

‘டாக்ஸ்’ (வரி) என்ற சொல், லத்தீன் சொல்லான ‘டாக்ஸோ’ என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள், ‘நான் மதிப்பிடுகிறேன்’ என்பதாகும். நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனிடம் இருந்து அரசு நேரடி, மறைமுக வரி வசூலித்து வருகிறது. நேரடி வரி என்பது குடிமக்களே அரசாங்கத்திற்கு செலுத்தக்கூடிய தொழில் வரி, வருமான வரி, சொத்துவரி உள்ளிட்டவை. மறைமுக வரி என்பது குடிமக்கள் நேரடியாக அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமல், மக்கள் வாங்கும் பொருள்களுக்கும், பெரும் சேவைகளுக்கும் வர்த்தகர்களால் மக்களிடம் வரிவசூல் செய்யப்பட்டு, அதை … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் | வேட்புமனு தாக்கல் தொடங்கியது – ஆகஸ்ட் 6-ம் தேதி வாக்குப்பதிவு

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (ஜூலை 5) தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள எம்.வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவி ஏற்க வேண்டும். எனவே, … Read more

குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர் தாயை 56 ஆயிரம் கிமீ ஆன்மிக பயணம் அழைத்து செல்லும் மகன்: திருப்பதியில் சுவாமி தரிசனம்

திருமலை: தந்தையின் மரணத்தால் வீட்டில் தவித்த தனது தாயை சுமார் 56 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து நாடு முழுவதும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு அழைத்துச்சென்று வருகிறார் அவரது மகன். அதன்படி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கர்நாடக மாநிலம், மைசூரு அருகே உள்ள போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(45). இவர் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் ரத்னம்மா(74). கிருஷ்ணகுமாரின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு … Read more

குறைவான ஜிஎஸ்டி வரி விதித்தால் ஏழைகளின் சுமை குறையும் – ராகுல் கருத்து

புதுடெல்லி: குறைவான ஜிஎஸ்டி வரியால் ஏழைகளின் சுமை குறையும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் அடுத்தடுத்த பதிவில் நேற்று கூறியிருப்பதாவது: சுகாதார காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரி 18%, மருத்துவமனை அறை மீதான ஜிஎஸ்டி வரி 5%, வைரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 1.5%. பிரதமர் மோடி யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை வலியுடன் நினைவுபடுத்துவதாக ‘கப்பார் சிங் டேக்ஸ்’ (ஜிஎஸ்டி) உள்ளது. ஒற்றை மற்றும் … Read more

துணை ஜனாதிபதி தேர்தல் மனுதாக்கல் தொடங்கியது: ஆக.6ம் தேதி வாக்குப்பதிவு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் 19ம் தேதியாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 20ம் … Read more

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: இன்று நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. அதன் பிறகு ஜூன் 17, 23 ஆகிய‌ தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்ட‌து. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, மேகேதாட்டு திட்டம் … Read more

பவன் கல்யாண் பெயரை பச்சை குத்திய நடிகை

ஐதராபாத்: பவன் கல்யாண் பெயரை நடிகை அஷு ரெட்டி தனது உடலில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். தெலுங்கில் பல படங்களில் நடித்திருப்பவர் அஷு ரெட்டி. கவர்ச்சி பாடல்களுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இவர் திடீரென நடிகர் பவன் கல்யாண் பெயரை ஆங்கிலத்தில் தனது விலா பகுதியில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அஷு ரெட்டி கூறும்போது, ‘நான் பவன் கல்யாணின் தீவிர ரசிகை. அவரது எல்லா படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன். சிறு வயது முதல் … Read more

அல்லு அர்ஜுனுடன் இணைகிறார் விஜய் சேதுபதி

ஐதராபாத்: அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்த படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கினார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் இந்த படம் இந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதில் பஹத் பாசில் கேரக்டரில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதையடுத்துதான் இந்த படத்துக்குள் … Read more

இரவுநேர விடுதிக்கு வெளியே நண்பர்களுக்குள் மோதல்.. திடீரென்று ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு..!

அரியானாவின் பஞ்சகுலா மாவட்டத்தில் இரவுநேர விடுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் திடீரென்று ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அப்போது விடுதிக்கு வெளியே 4 பெண்கள் நின்றிருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் விடுதி பாதுகாவலர் மற்றும் அடையாளம் தெரியாத இளைஞர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மோஹித் என்பவரை போலீசார் கைது செய்தனர். Source link

பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம் இயக்குனர் லீனா மீது நடிகை கடும் தாக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம்

புதுடெல்லி: பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் பெண் இயக்குனர் லீனா மணிமேகலையை பிரபல நடிகை கண்டித்துள்ளார். கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை தனது சமீபத்திய ஆவணப் படமான ‘காளி’ போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. கனடாவில் நடைபெற்ற ‘அண்டர் தி டெண்ட்’ என்ற திட்டத்தின் கீழ் இப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. ர்ச்சைக்குரிய இந்த படத்தின் போஸ்டர் டிவிட்டரில் டிரெண்டானது. அதில், காளி வேடமணிந்த பெண் ஒருவர், சிகரெட் … Read more