ஆந்திராவில் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை நெருங்கிய கருப்பு பலூன்களால் பரபரப்பு

ஆந்திரா: ஆந்திராவில் கருப்பு பலூன்கள் நடுவானில் பிரதமர் மோடி இருந்த ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்றபோது அவருக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம் நடத்தப்பட்டது.

பிரதமரின் ஹெலிகாப்டரை சுத்துப்போட்ட கருப்பு பலூன்கள்! ஆந்திராவில் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டருக்கு அருகே ஏராளமான கருப்பு பலூன்கள் பறந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக செயற்குழுக் கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தொண்டர்கள் இடையே உரையாற்றினார். செயற்குழுக் கூட்டம் முடிவடைந்ததை அடுத்து, நரேந்திர மோடி இன்று டெல்லி திரும்பினார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஆந்திராவின் விஜயவாடாவுக்கு இன்று மாலை வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். பிரதமரின் ஹெலிகாப்டர் பறக்க … Read more

தெலங்கானாவில் விரைவில் இரட்டை இன்ஜின் ஆட்சி: பொதுக் கூட்டத்தில் பிரதமர் உறுதி

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் போலீஸ் பயிற்சி மைதானத்தில் நேற்று மாலை தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தலைமையில் ‘விஜய சங்கல்ப சபை’ எனும் பெயரில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி முதலில் தெலுங்கில் பேசி தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர் ஹிந்தியில் பேசியதாவது. தெலங்கானா மண் ஒரு வீரம் மிக்க மண் மட்டுமின்றி ஆன்மீக மண்ணும் கலந்துள்ள பூமியாகும். தெலங்கானாவுக்கு அனைத்து மத்திய அரசின் … Read more

காங்கிரஸ் பறக்க விட்ட கருப்பு பலூன்கள் – பிரதமர் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு!

ஆந்திர மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் பறக்க விட்ட கருப்பு பலூன்கள், பிரதமரின் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த நாளின் ஓராண்டு கால விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் விஜயவாடாவில் இருந்து ஹெலிகாப்டரில் … Read more

“ஓட்டல்கள், உணவகங்களில் சேவை கட்டணம் விதிக்கக் கூடாது” – மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள், சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தாமாக வாடிக்கையாளர்கள் தருவதே சேவைக் கட்டணம் எனக் குறிப்பிட்ட அந்த அமைச்சகம், அதனை செலுத்தக்கோரி நிர்பந்திக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறி சேவைக் கட்டணம் விதிப்பவர்கள் மீது புகாரளிக்க உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

கேரளாவில் பருவ மழை தீவிரம்; 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 4 நாட்களுக்கு பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று 12 … Read more

வாழத்தக்க சிறந்த நகரங்களின் பட்டியல்! முதல் 100 இடங்களுக்குள் ஒரு இந்திய நகரம் கூட இல்லை!

உலகின் வசிக்கத்தக்க சிறந்த நகரங்களுக்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து சென்னை உள்ளிட்ட 5 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் வசிக்கத்தக்க இந்த ஆண்டுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலை பொருளாதார புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. 173 நகரங்கள் கொண்ட பட்டியலில் இந்தியாவில் இருந்து 5 நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. சிறந்த நகரத்திற்கான தரத்திற்கு முதல் 100 இடங்களுக்குள் இருப்பது குறியீடாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து ஒரு நகரம் கூட முதல் 100 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய … Read more

உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு 125 மணல் ரத சிற்பங்களை கடற்கரையில் உருவாக்கி சாதனை

புரி: உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை வெள்ளிகிழமை தொடங்கியது.இதையொட்டி புரி கடற்கரையில் மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரத சிற்பங்களை மாணவர்களுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார். இந்த சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறது. ஒடிசா மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை மிகவும் புகழ்பெற்றது. 9 நாட்கள் நடக்கும்இந்த ரத யாத்திரை வெள்ளிக்கிழமை தொடங்கியது. மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன்பட்நாயக் முக்கிய நிகழ்வுகளின்போது அதைப் பிரபலப்படுத்தவும் … Read more

PM Modi Andhra Visit: மோடியுடன் செவ்ஃபி எடுத்து கொண்ட பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திர மாநிலத்துக்கு வருகை தந்திருந்தார். அவரது பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ஆந்திர மாநிலம், பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125 ஆவது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அத்துடன் அவரது 30 அடி உயர வெண்கல சிலையையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், … Read more

5 வயது சிறுவனை மயக்கம் அடையும் அளவிற்கு அடித்த ஆசிரியர்.. மிருகத்தனமாக அடித்த ஆசிரியருக்கு மக்கள் தர்ம அடி..!

பீகாரில், 5 வயது சிறுவனை மயக்கமடைந்து விழும் அளவிற்கு மிருகத்தனமாக அடித்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தலைநகர் பட்னாவில் உள்ள டியூசன் சென்டரில் பணியாற்றி வரும் சோட்டு என்ற அந்த ஆசிரியர் 5 வயது சிறுவனை கட்டையால் கண்மூடித்தனமாக அடிக்கும் காணொளி இணையத்தில் வைரல் ஆனது. ஒரு கட்டத்தில் கட்டை உடைந்த போது கோபம் தனியாத அந்த ஆசிரியர் சிறுவனின் முடியை பிடித்து இழுத்து அவனை சகட்டுமேனிக்கு அறைந்தார். வலி தாங்கமுடியாமல் கதறி அழுத … Read more