கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை… வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென்மெற்கு பருவமழையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 14 மாவட்டங்களில் கனமழையானது, கடந்த ஒருவாரமாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. அதனால் குடகு மாவட்டம், உடுப்பி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. குடகு, உடுப்பி உட்பட 3 மாவட்டங்கள் முழுவதுமாக … Read more

திருமலை தேவஸ்தான வரலாற்றில் முதல்முறை… – திருப்பதியில் ஒரேநாளில் ரூ. 6.19 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக, கடந்த 4-ம் தேதி பக்தர்கள் ரூ. 6.19 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர். உலகின் பணக்காரக் கடவுளாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், உண்டியல் காணிக்கை மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருவாய் குறைந்தது. தற்போது வழக்கம்போல பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுவதால், ஏராளமானோர் நேர்த்திக் கடன் செலுத்த திருமலைக்கு வந்த வண்ணம் … Read more

தையல்காரர் கொலை வழக்கில் ஐதராபாத்தில் ஒருவன் கைது: என்ஐஏ அதிரடி நடவடிக்கை

ஐதராபாத்: உதய்பூர் தையல்கார் கன்னையா லால் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவனை ஐதராபாத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த ஜூன் 28ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்னையா  லால் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோரால்  படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் இருவரும் தாங்கள் கன்னையா லாலை கொன்ற  விபரத்தை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டனர்.மேலும்  குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மற்றொரு வீடியோவை வெளியிட்டனர்; அதில்  அவர்கள் … Read more

”ரோஸ்டட் சிக்கன் வாங்கப் போய் நான் ரோஸ்ட் ஆனதுதான் மிச்சம்” – அப்பா மகனின் வைரல் சாட்டிங்!

ஆன்லைன் ஃபுட் டெலிவரி செய்யும் செயலிகளில் பல நேரங்களில் வித விதமான குளறுபடிகள் நடைபெறுவது வாடிக்கை. எப்போதும் உணவகங்கள், டெலிவரி ஊழியர்கள் தரப்பில் இருந்து நடக்கும் வேடிக்கையான, குளறுபடிகளான சம்பவங்களே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகும். மாறாக வாடிக்கையாளரின் தவறால் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான வாட்ஸ்அப் சாட்ஸ் தான் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகியிருக்கிறது. ஜித்து என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் தனது பெற்றோருடனான வாட்ஸ்அப் சாட் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து, “ரோஸ்டட் சிக்கன் வாங்கி சாப்பிடலாம் என … Read more

முஸ்லிம் கதாபாத்திரங்களால் நாடகம் பாதியில் நிறுத்தம் – எழுத்தாளர்கள் கண்டனம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சோரப் அருகேயுள்ள ஹனவட்டியில் இரு தினங்களுக்கு முன்பு வீரசைவ மந்திராவில் எழுத்தாளர் ஜெயந்த் கைகினியின் ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’ என்ற நாடகம் நிகழ்த்தப்பட்டது. ஜோசப் ஸ்டெய்னின் ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’ நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்ட கன்னட நாடகத்தில் முஸ்லிம் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. ரங்க பெலக்கு நாடக குழுவினர் மாலை 7.45 மணிக்கு நாடகத்தை தொடங்கிய போதே இந்துத்துவ அமைப்பை சேர்ந்த சிலர், “முஸ்லிம் கதாபாத்திரங்கள் நிறைந்த நாடகத்தை … Read more

பஞ்சாப்பில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்..!

பஞ்சாப்பில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பஞ்சாப் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார் Source link

இபிஎஸ்-க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு

டெல்லி: இபிஎஸ்-க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில் இபிஎஸ் மீதான வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டத்தில் சுற்றித் திரியும் சிறுத்தை – அச்சத்தில் தொழிலாளர்கள்

தேயிலை தோட்டப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழக – கேரள எல்லை பகுதியான தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே கேரள பகுதியான மூணாறு, பூப்பாறை, பெரியகானல், சின்னகானல், லாக்காடு எஸ்டேட் போன்ற பகுதிகளில் தேயிலை தோட்டங்களும் ஏலத்தோட்டங்களும் அதிகமாக உள்ளன. இங்கு, போடி, தேவாரம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் தினந்தோறும் சென்றும் அங்கேயே தங்கியும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மூணாறு அருகே லாக்காடு தேயிலை எஸ்டேட் பகுதியில் … Read more

‘‘மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள் காளி’’- திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கருத்தால் கடும் சர்ச்சை: ட்விட்டரில் நடந்த ‘வார்த்தைப் போர்’

கொல்கத்தா: காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியதற்கு மேற்கு வங்கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அது அவரது தனிப்பட்ட கருத்து என திரிணமூல் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. இயக்குநர் லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட போஸ்டர் வெளியானது. அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் காளிதேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் … Read more

அக்னிபத் திட்டம்: விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் … Read more