ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

புதுடெல்லி: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக தேசிய கொடி பறக்கும் அனைத்து கட்டிடங்களிலும் நாளை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நாளை நடைபெறாது. முன்னதாக, ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறும் நிலையில், … Read more

அமர்நாத் யாத்திரை நிறுத்தம்… பக்தர்கள் ஷாக்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சகணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு கடந்த 30 ஆம் தேதி (ஜூன் 30) முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஆகஸ்ட்11 ஆம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வந்து கொண்டிருந்தனர். இரு … Read more

பிரபல இந்தி நடிகர் ராஜ்பாப்பருக்கு 2 ஆண்டு சிறை

பிரபல இந்தி நடிகரும், அரசியல் பிரமுகருமான ராஜ் பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த 1996-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ் பாப்பர் போட்டியிட்டார். அப்போது வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குசாவடி ஒன்றில் அலுவலரை பணிசெய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 26 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று … Read more

சிவசேனா அதிருப்தி தலைவரான ஏக்நாத்தை ஆட்சியமைக்க அழைத்தது தவறு: சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே முறையீடு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சியமைக்க அழைத்தது தவறு எனக்கூறி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அக்கட்சியின் எம்எல்ஏக்கள், பாஜகவுடன் சேர்ந்து தற்போது கூட்டணி ஆட்சி அமைத்துள்ளனர். ெபரும்பாலான எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருப்பதால், … Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 72% மதிப்பெண்கள்.. 58 வயதில் சாதித்த ஒடிசா எம்.எல்.ஏ

ஒடிசாவைச் சேர்ந்த 58 வயதான எம்.எல்.ஏ. அங்கட் கன்ஹர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 72 சதவிகித தேர்ச்சியுடன் வெற்றிபெற்றுள்ளார். ஒடிசாவில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வை அம் மாநிலம் முழுவதும் 5.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியிருந்தனர். அவர்களோடு புல்பானி தொகுதி பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ. அங்கட் கன்ஹரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். கந்தமால் மாவட்டம், பிதாபரி கிராமத்தில் அமைந்துள்ள ருஜன்ஜி உயர்நிலைப் பள்ளியில் … Read more

மீண்டும் ‘வொர்க் பிரம் ஹோம்?’-  புதிய வேலைமுறையை அமல்படுத்த விரும்பும் 73% இந்திய நிறுவனங்கள்

புதுடெல்லி: கோவிட்-19 தொற்றுநோய் பரவியதில் இருந்து பல நிறுவனங்கள் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், 73% இந்திய நிறுவனங்கள் வீட்டில் இருந்தும் அலுவலகம் வந்து பணியாற்றும் கலவையான வேலை முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக புதிய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. ஊழியர்களை நீக்கும் நடவடிக்கைகளிலும் நிறுவனங்கள் ஈடுபட்டன. நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து … Read more

பேருந்து சக்கரத்துக்கடியில் ஸ்கூட்டியுடன் சிக்கிக்கொண்ட நபர்… கோர விபத்து

கேரள மாநிலம் ஆலத்தியூரில் சாலை வளைவில் கவனக்குறைவுடன் திரும்பிய பேருந்து, பக்கவாட்டில் இருந்த ஸ்கூட்டி மீது மோதி அதன் மீது ஏற இருந்த சூழலில், ஒருவர் துரிதமாக செயல்பட்டு ஸ்கூட்டி ஓட்டுநரை காப்பாற்றினார். மலப்புரம் – ஆலத்தியூர் சந்திப்பு பகுதியில் பேருந்து மோதியதில் சக்கரத்துக்கடியில் ஸ்கூட்டியுடன் நபர் சிக்கிக்கொண்ட நிலையில், அதனை பார்த்த ஒருவர் கூச்சலிட்டதோடு, பேருந்தை வேகமாக தட்டியும் நிற்கச்செய்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.  Source … Read more

சமையல் எண்ணெய்களின் விலையை ரூ.15 குறைக்க ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: சமையல் எண்ணெய்களின் MRP-யில் உடனே ரூ.15 குறைக்க உணவு பொதுவிநியோகத்துறை உத்தரவிட்டது. சமையல் எண்ணெய்களின் மீதான விலைகுறைப்பை உடனே அமல்படுத்த ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது. விலைகுறைப்பை உறுதிப்படுத்த  சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு உணவு, பொதுவிநியோகத்துறை ஆணையிட்டது. 

வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க விவோ நிறுவனம் செய்த செயல்.. அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை

இந்தியாவில் வரி விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி பணத்தை கிட்டத்தட்ட 50 சதவீத வருவாயை சீனாவுக்கு அனுப்பியதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனத்தில் இருந்து 465 கோடி ரூபாயை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனத்திற்கு சொந்தமான 48 இடங்களிலும், அதை சார்ந்த நிறுவனங்களின் தொடர்புடைய 23 இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், 119 வங்கிக் … Read more

தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார்: சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

புதுடெல்லி: தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நாராயண், மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகிய மூவர் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 2010-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனம் (என்எஸ்இ), கோ-லொக்கேஷன் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது, என்எஸ்இ சர்வருடன் புரோக்கிங் நிறுவனங்களின் சர்வர்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இந்தக் கட்டமைப்பை … Read more