கர்நாடக ஏ.டி.ஜி.பி.யை விமர்சித்த ஐகோர்ட் நீதிபதிக்கு மிரட்டல்!

கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.ஜி.பி. சீமந்த் குமார் சிங்கை விமர்சனம் செய்ததற்காக தன்னை இட மாற்றம் செய்வதாக மிரட்டல் விடுப்பதாக அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதி சந்தேஷ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். பெங்களூர் நகர்ப்புற மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது, நில தகராறு தொடர்பாக சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக, மாவட்ட ஆணைய நீதிமன்ற ஒப்பந்த ஊழியர் சேத்தன் மற்றும் உதவி தாசில்தார் மகேஷ் ஆகியோர், 5 லட்சம் ரூபாய் … Read more

ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது…அமைச்சர் சக்கரபாணி உரை

டெல்லி: உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக இன்று டெல்லி நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக உணவு  மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உரை ஆற்றினார். அதனை காண்போம், ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சருக்கும், ஒன்றிய இணை அமைச்சர்கள் மற்றும் அனைத்து  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் … Read more

காவல் நிலையத்திலேயே காவலருக்கு உதை- உ.பி. பயங்கரத்தின் பகீர் வீடியோ

உத்தரப்பிரதேசத்தில் மியான்புரி என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் காவல் துறை அதிகாரியை கடுமையாக தாக்கும் வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளது. இளம் காவல் துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் அந்த இளைஞர் பின்னர் கைகளால் தாக்கத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியையும் எடுத்து தாக்கினார். பின்னர் காவல் துறை அதிகாரியும் பதிலுக்கு தாக்கினார். இதனால் அருகிலிருந்தவர்கள் திகைத்து நின்றனர். #WATCH | Young man loses temper, beats police official inside … Read more

காவல் நிலையத்திற்குள் அதிகாரியை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்.. வழக்கு தொடர்பாக விசாரனைக்கு அழைக்கப்பட்டபோது விபரீதம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் மியான்புரியில் வழக்கு ஒன்றில் கவுன்சிலிங்கிற்காக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென நிதானத்தை இழந்து அங்கு இருந்த காவல் அதிகாரியை கடுமையாக தாக்கினார்.   #WATCH | Young man loses temper, beats police official inside a police station premises in Mianpuri UP. He had been called for counselling in connection with another case. (Note: Abusive language) pic.twitter.com/WhYJwa95NQ — ANI UP/Uttarakhand … Read more

டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதால் பரபரப்பு

கராச்சி: டெல்லியில் இருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் இறக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் விமானம் அவசரமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் தரையிறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய் செல்வதற்கு முன்பாகவே தொழில்நுட்ப கோளாறு இருப்பதை தெரிந்து கொண்டதால், விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். அப்பொழுது, அருகாமையில் பாகிஸ்தானின் கராச்சி … Read more

ராகுல் காந்தி குறித்து போலிச் செய்தி: உ.பி போலீஸ் Vs சத்தீஸ்கர் போலீஸ்… டிவி நெறியாளர் மீதான ‘நடவடிக்கை’யில் நடந்தது என்ன?

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் வயநாடு சென்றிருந்தார். அங்கு அவரது கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து அவர் தெரிவித்த கருத்தை உதய்பூர் படுகொலைக்கு கூறியதாக மாற்றிக் கூறியதால் சர்ச்சை எழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் சத்தீஸ்கர் மாநிலப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். உண்மையை மாற்றிக் கூறிய நிருபரை கைது … Read more

Maharashtra Cabinet Expansion: அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? – துணை முதல்வர் குட் நியூஸ்!

மகாராஷ்டிர மாநிலத்தில், விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். மேலும், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் உடனான கூட்டணி முறித்துக் கொள்ள வேண்டும் என்றும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் … Read more

இரட்டை மடிப்பு வலை விவகார வழக்கு; இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து ஒன்பது பேர் சார்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்கு மடிப்பு வலைக்கு தடை … Read more

முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20% பேர் பெண்களாக இருப்பர்: இந்திய கடற்படை தகவல்

புதுடெல்லி: முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20% பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இதுவரை வந்த விண்ணப்பங்களில் தகுதியானோரை அலசி ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்திய கடற்படை இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. அதேபோல் விமானப்படையில் சேர இதுவரை 2.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவலும் வெளியாகியுள்ளது. இன்று மாலையுடன் விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு பெறுகிறது. 20% பெண்கள்: இந்நிலையில், இந்திய கடற்படை தான் இதுவரை பெற்ற விண்ணப்பங்களில் ஏற்கத்தக்க தகுதியுள்ளவற்றில் 20% … Read more

டெல்லி விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம் – நடுவானில் நடந்தது என்ன?

டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியயதாவது: விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது மற்றும் பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அவசரநிலை … Read more