காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் மேக வெடிப்பு? – அமர்நாத் யாத்திரை பக்தர்கள் 13 பேர் உயிரிழப்பு

காஷ்மீர்: மத்திய காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள பால்டால் முகாம் அருகே பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் யாத்திரை சென்ற 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மாலை 5.30 மணியளவில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டு அதிக கனமழை அந்தப் பகுதியில் பெய்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் நிலச்சரிவும் உண்டாக, அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் அவதிப்பட்டனர். இதில் சிக்கிய பலர் காணாமல் போயுள்ளனர். … Read more

டெங்கு, மலேரியா பரவுவதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

புதுடெல்லி:  ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் நிலை பற்றியும், அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் டெல்லியில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. காணொளி மூலம் நடந்த கூட்டத்தில் டெல்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களின் சுகாதார துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மாண்டவியா பேசும்போது, ‘ஒவ்வொருவரும் கொசு ஒழிப்பு பணியை தங்களது வீடுகள், அருகில் உள்ள … Read more

’சீருடைக்கு காசு கேட்டு வகுப்பறைக்குள் வாளுடன் வந்த தந்தை’ – பீகாரில் பகீர் சம்பவம்!

பள்ளி சீருடைக்கு காசு தரவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை ஒருவர் வாளுடன் வகுப்பறைக்குள் சென்று மிரட்டிய சம்பவம் பீகாரில் உள்ள அராரியா பகுதியில் அரங்கேறியிருக்கிறது. ஜோகிஹட் காவல்நிலைய அதிகாரி இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கூறியிருப்பதாவது, “பள்ளி சீருடைக்கு பணம் கிடைக்காததால் தந்தை ஒருவர் வாளுடன் தனது குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்று, அங்குள்ள ஆசிரியர்களை அச்சுறுத்தியிருக்கிறார். மேலும், 24 மணி நேரத்திற்குள் பணம் தராவிட்டால், மீண்டும் வருவேன் என, ஆசிரியர்களை மிரட்டவும் செய்திருக்கிறார். Bihar … Read more

அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.51.72 கோடி அபராதம்: அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி:  அம்னெஸ்டி இந்தியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் முன்னாள் சிஇஓ.வுக்கு முறையே ரூ.51.72 கோடி மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம், அம்னெஸ்டி இந்தியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட். இது, இந்தியாவின் அந்நிய செலாவணி சட்டத்தை மீறி பல்வேறு வெளிநாடுகளுக்கு தனத இந்திய நிறுவனங்கள் மூலமாக மிகப்பெரிய ெதாகையை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கூறப்பட்ட புகார்களை விசாரித்த அமலாக்கத் துறை, … Read more

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை! ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்! 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடியில் பயின்று வரும் மாணவி உட்பட 8 கல்லூரி மாணவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து ஜார்க்கண்டில் உள்ள குந்தி மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் துணை வளர்ச்சி ஆணையர் இல்லத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டனர். விருந்தில் மாணவி தனியாக இருந்ததை சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டான … Read more

தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கு; இந்தி நடிகருக்கு 2 ஆண்டு சிறை.! லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு

லக்னோ: தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில் பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு லக்னோ நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தி திரைப்பட பாலிவுட் நடிகரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜ் பப்பர், 1996ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலின் போது தேர்தல் அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வஜிர்கஞ்ச் காவல் நிலைய போலீசார் ராஜ் பப்பர் மீது வழக்குபதிவு செய்தனர். அப்போது நடந்த தேர்தலின் போது சமாஜ்வாதி கட்சி சார்பில் … Read more

சட்டையின் மீது தண்ணீரை கொப்பளித்து… இஸ்திரிகாரரின் அலம்பல் வீடியோ வைரல்

இஸ்திரி கடைக்காரர் ஒருவர் சட்டைத் துணிகளின் மீது தண்ணீரை கொப்பளித்து அயர்ன் பண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட் ஃபோனும், சமூக வலைதளங்களின் பயன்பாடும் மக்கள் மத்தியில் அதிகரித்ததை அடுத்து, மனிதர்கள் செய்யும் வினோதமான செயல்களையும், ஆச்சரியப்படும்படியான நடவடிக்கைகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்படியெல்லாம் யாராவது செய்வார்களா என்று நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சில வீடியோக்கள் அவ்வப்போது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அந்த ரகத்திலான வீடியோ தான், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி … Read more

கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக தொடங்குவதற்கு மக்களின் பங்களிப்பு முக்கியம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

புது டெல்லி: வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமூக அமைப்புகளையும் ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களை தொடங்குமாறு தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது. சுற்றுப்புறங்களில் கொசு இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நமது சொந்த வீடுகள் மற்றும் சமூகங்களுடன் தொடங்குவோம் என கொசு மூலம் பரவும் … Read more

விவோ நிறுவனம் தொடர்புடைய 119 வங்கிக் கணக்குகளை முடக்கியது அமலாக்கத்துறை..!

விவோ நிறுவனம் தொடர்புடைய 119 களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் மீது பணப்பரிவர்த்தனை முறைகேடு புகார் எழுந்ததையடுத்து அந்நிறுவனத்தின் 44 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிறுவனத்தின் இரண்டு முக்கிய சீன நிர்வாகிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, இந்தியாவில் விவோ நிறுவனத்தின் 23 துணை நிறுவனங்கள் செயல்படுவதாகவும் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு … Read more

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்; தேசிய பங்குச்சந்தை மாஜி சிஇஓ மாஜி போலீஸ் கமிஷனர் மீது வழக்கு: 10 இடங்களில் சிபிஐ ரெய்டு

மும்பை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா, முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ)  சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ குழும செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன்  ஆகியோர் பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பங்குச் சந்தை தகவல்களை கசியவிட்ட … Read more