11.52 லட்சம் பேர் எழுதிய நிலையில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் 13 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி

புதுடெல்லி: யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 13 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான 861 இடங்களுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வை கடந்த 5ம் தேதி நடத்தியது. இந்த எண்ணிக்கை தற்போது 1,022 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் நிலை தேர்வை 11.52 லட்சம் பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில், … Read more

மகாராஷ்டிர நெருக்கடி | அதிருப்தி எம்எல்ஏக்கள் 34 பேர் ஆளுநருக்கு கடிதம் – சட்டப்பேரவையை கலைக்க உத்தவ் தாக்கரே முடிவு?

மும்பை: எனது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்துள்ளேன். எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யத் தயார் என்று மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இதனிடையே ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு சிவசேனா கட்சி, சுயேச்சை உள்ளிட்ட சேர்ந்த 34 அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் அசாமில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற … Read more

தேர்தல் பத்திர விவரங்களை தருவதில் மோதல் தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை: அடுத்த மாதம் 15ம் தேதி வரை கெடு

புதுடெல்லி:  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுத்தது தொடர்பாக 15ம் தேதிக்குள் பிரமாண பத்திரம்  தாக்கல் செய்யும்படி  தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக மக்களும், தொழிலதிபர்கள், தொழிற்சாலைகள், வெளிநாட்டினர் போன்றவர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதில் பாஜ உள்ளிட்ட கட்சிகள் பல நூறு கோடிக்கும்  அதிகமாக நன்கொடை பெற்றுள்ளன. இந்நிலையில், சமூக ஆர்வலர் லோகேஷ் … Read more

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடகா விண்ணப்பம் நிராகரிப்பு – மேலாண்மை ஆணைய கூட்டம் தள்ளிவைப்பு

பெங்களூரு: மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான இறுதி திட்ட வரைவு அறிக்கையில் எல்லைகளை இறுதி செய்து தாக்கல் செய்யாததால், அனுமதி கோரும் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நீக்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான முதல்கட்ட திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்தது. இதில் 5,252 ஹெக்டேர் பரப்பளவில் அணை கட்டப்பட இருக்கிறது என … Read more

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டவே முடியாது: தமிழக குழுவிடம் ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் உறுதி

புதுடெல்லி: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது என டெல்லி சென்ற தமிழக குழுவிடம் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகா அரசின் கோரிக்கையை ஏற்று, மேகதாதுவில் இம்மாநிலம் அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.இந்நிலையில், தமிழக … Read more

அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் விசாரணைக்கு ஆஜராக மேலும் சில வாரமாகும்: ராகுலை சந்தித்து காங். தலைவர்கள் ஆதரவு

புதுடெல்லி: விசாரணைக்கு நேரில் ஆஜராக மேலும் சில வாரங்கள் அவகாசம் வழங்கக் கோரி அமலாக்கத் துறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுலை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள், எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, கடந்த 13, 14, 15, 20 மற்றும் 21ம் தேதிகளில் டெல்லி அமலாக்கத் துறை  அலுவலகத்தில் ராகுல் … Read more

மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி: குடும்பத்துடன் அரசு பங்களாவை காலி செய்த முதல்வர் உத்தவ் தாக்ரே

மும்பை: மகாராஷ்டிராவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தனது குடும்பத்துடன் முதல்வரின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு தனது சொந்த வீடான ‘மாடோஸ்ரீ’க்கு திரும்பியுள்ளார். சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சித் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, சமீபகாலமாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்துவந்தார். கடந்த திங்கட்கிழமை நடந்த சட்ட மேலவைத் தேர்தலில் சிவசேனா கட்சியின் 12 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல 3 … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் விஜய் பாபுக்கு முன் ஜாமின்..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபுக்கு முன் ஜாமின் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணைக்கு தொடர்ந்து 7 நாட்கள் ஆஜராவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய் பாபுவிற்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. Source link

பாஜ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான முர்மு நாளை வேட்பு மனுத்தாக்கல்: யஷ்வந்த் சின்கா 27ல் மனுத்தாக்கல்

புதுடெல்லி: பாஜ கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் திரவுபதி முர்மு, நாளை வேட்பு மனு தாக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய அவருடன், பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் செல்ல உள்ளனர். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. இதில் போட்டியிட ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒடிசாவை பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி … Read more

மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதி..!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 80 வயதான கோஷ்யாரிக்கு வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் அவர் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   Source link