பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன்.: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு முகமது ஜுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த பதிவு மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் முகமது ஜுபைரை கடந்த மாதம் 28-ம் தேதி கைது திகார் சிறையில் அடைத்தனர். அதனையடுத்து ஜாமீன் வழங்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் … Read more

’Corona Be Like: என்ன கொஞ்சம் திரும்பி பாருங்க’ : ஆஃபருக்காக மாலில் குவிந்த கேரளாட்டீஸ்!

முன்பெல்லாம் தள்ளுபடி என்றாலே ஆடி தள்ளுபடிதான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது மாதத்திற்கு ஒரு தள்ளுபடி, சீசனுக்கு ஒரு தள்ளுபடி என காணும் இடமெல்லாம் தள்ளுபடியாய் அறிவிப்பதால் கொரோனா உட்பட எந்த நோய் பரவல் குறித்த அச்சமும், தெளிவும் இல்லாமல் மக்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் கேரளாவின் பிரபல லுலு மாலில் Midnight sale என்ற பெயரில் கிட்டத்தட்ட மாலில் உள்ள அனைத்து கடைகளிலும் 50 சதவிகிதம் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. Midnight … Read more

உழவர் கடன் அட்டை விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்க வேண்டும் – பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தல்!

உழவர் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளின் கூட்டத்தில் பேசிய அவர், கிராமப்புற வங்கிகளின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மீன்பிடித்தல் மற்றும் கால்நடை பண்ணை தொழிலில் ஈடுபடுவோருக்கும் உழவர் கடன் அட்டை வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.   Source link

ரேணிகுண்டா வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியில் கணக்கில் வராத ₹1.50 லட்சம் பறிமுதல்

*மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 3 பேர் கைது* லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடிதிருமலை : ரேணிகுண்டா வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ₹1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 3 ேபர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி உள்ளது. இங்கு அதிகளவில் லஞ்சம் பெறுவதாக குற்றசாட்டுகள் வந்தது. … Read more

”லீவுக்காக பயணிகளிடம் உதவி கேட்ட நபர்” – எப்படி தெரியுமா? மும்பையில் நடந்த சுவாரஸ்யம்!

விடுமுறைக்காக பள்ளி கல்லூரிக்கு செல்வோரை காட்டிலும் எக்கச்சக்கமான சாக்குப்போக்குகளை சொல்வதில் அலுவலக பணியாளர்களே கெட்டி என்பது ரெடிட் தளத்தில் ஷேர் செய்யப்பட்ட வைரல் போஸ்ட் மூலம் அறியலாம். மும்பை மற்றும் புனேவில் ட்ரெயின், பஸ் போன்ற பொது போக்குவரத்து சேவைக்கான சரியான நேரத்தை குறிக்கும் அப்ளிகேஷன்தான் M-Indicator. இந்த ஆப்பை பயன்படுத்துவதால், தங்களுடைய நேரத்தை அதற்கேற்றால் போல பயணிகள் மேனேஜ் செய்து கொள்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த m-indicator ஆப்பை பயன்படுத்தி ஊழியர் ஒருவர் தனக்கான லீவை பாஸிடம் … Read more

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை..!

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய புனே, சதாரா, ராய்கட், ரத்தினகிரி, சிந்து துர்க், கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கெனவே கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிகக் கனமழை முதல் அதிகன மழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.  Source link

பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கினர். ட்விட்டரில் புதிய பதிவுகளை பதிவிடக் கூடாது; உத்திரப்பிரதேசத்தின் சீதாப்பூர் நீதிமன்ற எல்லைப் பகுதியை விட்டு ஜுபைர் வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் தந்தது. 

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ் நேரில் ஆஜராக சிபிஐ நோட்டிஸ்.!

கேரளாவில் நலிந்தவர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கில் வருகிற 11 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு சிபிஐ நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, தங்கக்கடத்தல் உள்பட 3 வழக்குகளில் ஸ்வப்னா சுரேஷிடம் கேரள மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், தாம் உண்மையை வெளியே கொண்டுவர முயற்சிப்பதால் தம்மீது சதி வழக்குகளை பின்னி முதலமைச்சர் பினராயி விஜயன் துன்புறுத்துவதாக ஸ்வப்னா சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார். … Read more

ஷின்சோ அபே மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ட்வீட்

டெல்லி: இந்தியா- ஜப்பான் உறவுக்கு காரணமான ஷின்சோ அபே மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ட்வீட் செய்தார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காசர்கோடு பகுதியில் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் சாலைகளிலும் பாய்கிறது. கன்னூர் மாவட்டத்தில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து சேதமடைந்ததது. 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என முதலமைச்சர் அலுவலகம் கூறியுள்ளது.  Source link