கோரக்பூர் நோக்கி பறந்து சென்ற போது விமானத்தின் கண்ணாடியில் விரிசல்

மும்பை: கோரக்பூர் நோக்கி சென்ற விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், அந்த விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து நேற்று, உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரை நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கண்ணாடி ஒன்றில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த விமான தொழில்நுட்ப குழுவினர், உடனடியாக விமானத்தை மும்பைக்கு திருப்பிவிடுமாறு விமானியிடம் அறிவுறுத்தினர். அதையடுத்து, விமானத்தை மீண்டும் மும்பைக்கு கொண்டு செல்ல தலைமை விமானி முடிவு செய்தார். இதுகுறித்து … Read more

மாநிலங்களவை தேர்தல் – காங்கிரஸ் வேட்பாளராக ப. சிதம்பரம் தேர்வு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களவை தேர்தலில் தமிழக சட்டப்பேரவையின் வலுப்படி திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன. அதில் திமுகவிற்கு கிடைக்கவிருக்கும் 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என் ராஜேஷ்குமார், ரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவதாக … Read more

மாற்றுத்திறனாளிக்கு அனுமதி மறுத்த இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்

புதுடெல்லி: மாற்றுத் திறனாளி சிறுவனும், அவனது பெற்றோரும் ஹைதராபாத் செல்ல இந்த மாத தொடக்கத்தில் ராஞ்சி விமான நிலையம் வந்தனர். அப்போது அங்கிருந்த இண்டிகோ விமான அதிகாரி, அந்த சிறுவன் இயல்புக்கு மாறாக நடந்து கொள்கிறான். அவனை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். தங்கள் மகன் மாற்றுத் திறனாளி குழந்தை என்றும் அவன் இயல்பாகவே இருக்கிறான் என்றும் சிறுவனின் பெற்றோர் விளக்கியுள்ளனர். அதன் பிறகும் அந்த அதிகாரி அவர்களை அனுமதிக்கவில்லை. இந்நிகழ்வை நேரில் பார்த்த … Read more

பஞ்சாப்பில் காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூஸ்வலா சுட்டுக் கொலை..!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகரும் பாடகருமான சித்து மூஸ்வலா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று மாலை மான்சா மாவட்டத்தில் உள்ள ஹவஹர்கே என்ற கிராமத்தில் தனது காரில் சித்து மூஸ்வலா சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், சித்து உயிரிழந்த நிலையில், அவருடன் காரில் பயணித்த 2 பேர் படுகாயமடைந்தனர். சித்து உள்ளிட்ட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு நேற்று திரும்பப் பெற்ற நிலையில், அடுத்த நாளே … Read more

மத்திய மந்திரி எல்.முருகனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுடெல்லி: மத்திய மந்திரி எல்.முருகனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பா.ஜனதா கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் அவரது பிறந்த நாளையொட்டி கட்சியினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார்கள். பிரதமர் மோடி, மத்திய மந்திரி எல்.முருகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தங்களின் அர்ப்பணிப்பு இளைஞர்களை … Read more

மோடி பிரதமரான பின்னர் முதன்முறையாக நிலக்கரி இறக்குமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி: மாநிலங்களின் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு

புதுடெல்லி: மோடி பிரதமரான பின்னர் முதன் முறையாக நிலக்கரியை ஒன்றிய அரசு இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது. அதனால் வரும்காலங்களில் மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமும், ஒன்றிய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம், கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக நிலக்கரி இறக்குமதி செய்கிறது. கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றப் பின்னர், முதன் முறையாக நிலக்கரி இயக்குமதி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் … Read more

விடுமுறை தினம் – புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினமான இன்று புதுச்சேரி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தும், குதிரையேற்றம், ஒட்டகத்தில் பயணித்தும் மகிழ்ச்சியடைந்தனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் அதை கொண்டாடும் வகையில் புதுச்சேரிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலை மற்றும் பாண்டி மெரினா, பாரடைஸ் கடற்கரை, நீளம் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளில் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தும், ஒருவருக்கு ஒருவரும், குடும்பத்துடன் செல்பி … Read more

கர்நாடகா: முகலாயர் ஆட்சி காலத்தில் 36 ஆயிரம் கோயில்கள் அழிப்பு – ஈஸ்வரப்பா பேச்சால் சர்ச்சை

பெங்களூரு: முகலாயர் ஆட்சி காலத்தில் 36 ஆயிரம் கோயில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன என கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா ஷிமோகாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மங்களுரு ஜும்மா மசூதியை புனரமைக்கும்போது இந்து கோயில் என தெரிய வந்திருக்கிறது. அதனை சட்ட ரீதியாக மீட்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளது பாராட்டத்தக்கது. ஸ்ரீரங்கப்பட்டினம் ஜாமியா மசூதியும் 300 ஆண்டுகளுக்கு முன்னால் இந்து கோயிலாக இருந்தது. அதில் இப்போதும் இந்து … Read more

குஜராத்தில் உள்ள போர்டு கார் தொழிற்சாலையை வாங்கும் டாட்டா.. ஆலையை டாட்டா நிறுவனம் எடுக்க மாநில அமைச்சரவை ஒப்புதல்..!

குஜராத்தின் சானந்தில் உள்ள போர்டு கார் தொழிற்சாலையை டாட்டா மோட்டார்ஸ் எடுத்துக்கொள்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள ஆலைகளில் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளப்போவதாக போர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் குஜராத்தில் உள்ள போர்டு ஆலையை டாட்டாவுக்கு விற்பது தொடர்பாக இரு நிறுவனங்களும் பேச்சு நடத்தின. திங்களன்று இது குறித்துக் குஜராத் அரசு, டாட்டா மோட்டார்ஸ், போர்டு ஆகியவற்றின் இடையே புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.  Source link

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நன்றி- பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது 89-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை சிம்லாவில் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் குருகிராமில் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். மேலும், மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவில் வெவ்வேறு … Read more