பெண் தெய்வம் குறித்த சர்ச்சை: லீனா மீது உ.பி போலீஸ் வழக்கு

லக்னோ: பெண் தெய்வம் குறித்த ‘காளி’ ஆவணப் படத்தின் போஸ்டரை கனடாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை என்பவர் சமீபத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லீனா மணிமேகலைக்கு எதிராக நேற்று ெடல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று உத்தரபிரதேச போலீசாரும் வழக்குபதிந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குபதியப்பட்டுள்ளது. அவர் மீது இந்திய தண்டனைச் … Read more

பசிபிக் பகுதியில் நடக்கும் 'ரிம்பாக் ஒத்திகை' – இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா, பி-8ஐ பங்கேற்பு

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய கடற்படை ஒத்திகையான ‘ரிம்பாக் ஒத்திகை’யில் பங்கேற்பதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் சாத்புரா போர்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும் ஹவாய்த் தீவிற்கு சென்றுள்ளன. பசிபிக் வளைய போர்ப்பயிற்சி ஒத்திகையான ரிம்பாக் (RIMPAC) நிகழ்வில் பங்கேற்பதற்காக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா போர்க்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும், ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்திற்கு சென்றுள்ளன. இதில், சாத்புரா கப்பல் ஜூன் 27-ம் தேதி ஹவாயைச் சென்றடைந்த நிலையில், பி-8ஐ விமானம் … Read more

பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஹேமந்த் சோரனின் ஆதரவு கிடைக்குமா?.. பழங்குடியினர் கட்சி என்பதால் எதிர்பார்ப்பு

ராஞ்சி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் ஆதரவு கோரியுள்ளார். ஆனால், காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளதால், இன்னும் எவ்வித அறிவிப்பும் வெளியாக வில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, நேற்று ஜார்கண்ட் சென்றார். ஜார்க்கண்டின் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களைத் தவிர, ஆளும் பழங்குடியினக் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஷிபு சோரன், அதன் செயல் தலைவர் மற்றும் முதல்வர் ஹேமந்த் … Read more

nupur sharma case: உச்ச நீதிமன்ற கருத்துக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்!

முகமது நபிகள் குறித்து நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா ஆகியோர், இந்த விஷயத்தில் நூபுர் ஷர்மாவின் கருத்து நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுவாக கடுமையான வார்த்தைகளை … Read more

கடந்த 17 நாட்களில் 7 வது முறை.. அடுத்தடுத்து தொழில் நுட்பக் கோளாறுக்கு உள்ளாகும் ஸ்பைஸ் ஜெட் விமானம்..!

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானம் ஒன்றில் நடுவானில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. ஏற்கனவே இன்று காலை அதே நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானம் ஒன்று துபாய் செல்லும் வழியில் எரிபொருள் அளவை காட்டும் சமிக்ஞை விளக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த 17 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இது ஏழாவது முறை என்பது … Read more

பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார்?.. ஜிஎஸ்டி வரி குறித்து ராகுல் காந்தி கண்டனம்..!

டெல்லி: நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியான ‘ஜிஎஸ்டி’, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை ஜிஎஸ்டி நிறைவு செய்த நிலையில், மத்திய பாஜக அரசு அதனைக் கொண்டாடி வருகிறது. மத்தியில் பாஜக … Read more

வைரத்திற்கு 1.5% வரி! மருத்துவ காப்பீட்டிற்கு 18% வரியா? – ராகுல் காந்தி கேள்வி

நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வைரங்களுக்கு ஒன்றரை சதவிகித வரியும் மிகவும் அத்தியாவசியமான மருத்துவ காப்பீடுகளுக்கு 18 சதவிகித வரியும் … Read more

ஐ.என்.எஸ். விக்ராந்தின் இறுதி சோதனை ஓட்டம் இந்த வாரத்தில் கொச்சி கடற்பகுதியில் நடைபெற உள்ளதாக தகவல்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தின் இறுதி சோதனை ஓட்டம், இந்த வாரத்தில் கொச்சி கடற்பகுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் அந்த கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக 28 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த கப்பல், 7 ஆயிரத்து 500 நாட்டிக்கல் மைல் தூரம் தொடர்ந்து பயணிக்கும் திறன்கொண்டது. கடலில் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை … Read more

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு; காரில் ஆட்டம் போட்ட குற்றவாளிகள் கைது: டெல்லி போலீஸ் அதிரடி

புதுடெல்லி: பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஆயுதங்களுடன் காரில் ஆட்டம் போட்ட மேலும் 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு வீரர் அங்கித் மற்றும் அவரது கூட்டாளி சச்சினை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மூசேவாலாவை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் காரில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் … Read more

நுபுர் சர்மா குறித்த நீதிபதிகளின் கருத்தில் எந்த நியாயமும் இல்லை – 117 பேர் கூட்டறிக்கை

நுபுர் சர்மா குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட 117 பேர் இணைந்து கூட்டாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நுபுர் சர்மாவை கட்சி … Read more