மாணவர்களுக்கு புதிய உத்தரவு – கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை என, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் போராட, அதற்கு எதிராக, ஹிந்து அமைப்புகளும் போராட்டம் … Read more

கருப்பா பிறந்தா அடிப்பீங்களா…? அழகு நிலைய அடாவடி பெண் கைது..! தொடரும் மனித நேயமற்ற தாக்குதல்

கேரளாவில் அழகு நிலையம் முன்பு நின்று செல்போன் பேசியதால் தனது கடையின் அழகு கெட்டுவிட்டதாக கூறி மலைவாழ் பெண்ணை , அவரது மகள் கண் முன்பே அழகு நிலைய பெண் உரிமையாளர்  செருப்பால் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சாஸ்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் அதே பகுதியில் பெண்களுக்கான பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். மருதங்குழி மலைகிராமத்தை சேர்ந்த சேபா என்ற பட்டதாரி பெண் தனது … Read more

பாஜக நிர்வாகிகள் ஸ்டேஷனுக்குள் நுழைய தடை; உ.பி காவல் நிலையம் வெளியே பேனர் வைப்பு

மீரட்: மீரட் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு வெளியே, பாஜக நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு நுழைய தடை விதித்து பேனர் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.  உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி  காவல் நிலையத்திற்கு வெளியே, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியே வைக்கப்பட்டுள்ள பேனரில் (இந்தியில் எழுதப்பட்டுள்ளது), ‘பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள் … Read more

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த இண்டிகோ நிறுவனம்.. ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு!

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த இண்டிகோ நிறுவனம்! ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு! ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் விமானத்தில் ஏற மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், இண்டிகோ நிறுவனத்திற்கு விமான போக்குவரத்துதுறை இயக்குநரகம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மே 7ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் தடுத்தனர். விமான நிலையத்திற்கு அசௌகரியமான காரில் பயணம் செய்ததால் … Read more

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி மனுத் தாக்கல்

பாட்னா: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவந்த மகள் மிசா பாரதியுடன், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் உடன்வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவரும் அவரைப் பார்க்க தொண்டர்கள் கூட்டம் கூடியது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் லாலு மகள் மிசா பாரதி மற்றும் முன்னாள் எம்எல்ஏ பயஸ் அகமது, மறைந்த முன்னாள் எம்.பி மொகத் சகாபுதினின் மனைவி ஹினா சகாப் ஆகியோர் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். … Read more

உலகின் முதல் நானோ யூரியா திரவ தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் உலகின் முதல் நானோ யூரியா திரவ தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கலோல் என்ற இடத்தில் ஆலையைத் திறந்து வைத்து பேசிய அவர், இந்த தொழிற்சாலையில் ஒரு சாக்கு யூரியாவின் திறனை அழுத்தி ஒரு பாட்டிலில் நீர்மமாக அடைத்துவிட முடியும் என்றும் இதனால் போக்குவரத்துச் செலவு குறைவதுடன், சிறு விவசாயிகளும் பயன் அடைவார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்த தொழிற்சாலை தினசரி ஒன்றரை லட்சம் பாட்டில் நானோ யூரியா தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதாகவும் அவர் … Read more

ரூ.3500 மதிப்புள்ள 50 கிலோ யூரியாவை ரூ.300க்கு தருகிறோம்- பிரதமர் மோடி

குஜராத்தின் காந்தி நகர் கலோலில் உலகின் முதல் நானோ யூரிவா திரவ ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ யூரியா மூட்டையின் விலை ரூ.3500 ஆக உள்ளது. விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா மூட்டை ரூ.300க்கு வழங்கப்படுகிறது. 7- 8 ஆண்டுகளுக்கு முன் பெருமளவு யூரியா கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இவ்வாறு அவர் கூறினார். இதையும் படியுங்கள்.. பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் … Read more

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை; 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ளூர் போலீசார், பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன … Read more

உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – மருமகள் மீது போலீஸார் வழக்கு பதிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இவர் 2004-05-ம் ஆண்டில் என்.டி. திவாரி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ஹால்தானி பகுதியில் மகன் அஜய் பகுகுணா, மருமகள், பேத்தியுடன் வசித்தார். கடந்த வாரம் பேத்தியை மானபங்கம் செய்ய முயன்றதாக இவரது மருமகள் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை போலீஸாருக்கு போன் செய்து விட்டு மாடியிலுள்ள … Read more

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் ; இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம்

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் செல்ல தங்களது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற்ற இண்டிகோ நிறுவன ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களை விமானத்தில் ஏற்ற முடியவில்லை என அந்நிறுவனம் … Read more