டிரோன் நிறுவனப் பங்குகளை வாங்கும் அதானி..!

டிரோன் தயாரிப்பு நிறுவனத்தின் 50 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கான உடன்பாட்டில் அதானி நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வேளாண்மைக்குப் பயன்படும் டிரோன்களைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 50 விழுக்காடு பங்குகளை விலைக்கு வாங்க அதானி டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டெக்னாலஜீஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது. இதன்மூலம் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான டிரோன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. Source link

சட்டசபைக்குள் செல்பி எடுக்க தடை – உ.பி. சபாநாயகர் அதிரடி

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று உ.பி., சட்டசபையில் மாநில பட்ஜெட் தாக்கலானது. அப்போது எம்.எல்.ஏக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சபாநாயகர் சதீஷ் மஹானா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சட்டசபைக்குள் எம்.எல்.ஏக்கள் செல்பி எடுத்தாலோ, புகைப்படம் எடுத்தாலோ மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படும்.  சட்டசபை கூட்டத்தொடர் சமயத்தின்போது, சட்டசபை வளாகத்தில் தனிப்பட்ட கேமராவை பயன்படுத்தவும் … Read more

8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கோவிட் காலத்தில் ஓராண்டில் ரூ.30 லட்சம் கோடி லாபத்தை 142 பெரும் பணக்காரர்கள் ஈட்டியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடியும் நிலையில், ‘எட்டு ஆண்டுகள் – 8 சூழ்ச்சிகள் – பாஜக அரசு தோல்வி’ என்ற தலைப்பில் சிறு கையேட்டை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய் மாகேன், ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கூறுகையில், ‘ஆட்சிக்கு வருவதற்கு … Read more

இறந்து போன தனது குட்டி யானையை தூக்கிக்கொண்டு சென்ற தாய் யானை

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள அம்பாரி தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானை ஒன்று இறந்து போன தனது குட்டி யானையை தூக்கிக்கொண்டு சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. தகவல் அறிந்து சென்ற பின்னாகுரி நகர வனவிலங்குகள் பாதுகாப்பு குழுவினர் அந்த யானைக்குட்டியை மீட்பதற்குள் அந்த தாய் யானை குட்டியை சுமந்து கொண்டு ரெட்பேங்க் தேயிலை தோட்டப்பகுதிக்கு சென்றுள்ளது. யானைக்குட்டி உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை

மும்பை: இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வான்கடேவால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் ஆர்யன் கான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் நடந்த தவறுகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைவர் எஸ்.என்.பிரதான் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியை கொலை செய்த அண்ணன்: உ.பி.யில் பயங்கரம்

உத்தரப் பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் சியோஹாரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட முபாரக்பூர் கிராமத்தில் ஒரு ஆணின் உடல் பகுதி எரிந்த நிலையில் மே 23 அன்று மீட்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த உடல் பங்கஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து பங்கஜ் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவரது அண்ணன் அசோக் அளித்த பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் சந்தேகத்தின்பேரில் அசோக்கை … Read more

“ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பூர்விக இந்தியர்களா?” – சீதாராமையா பேச்சால் சலசலப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநில 10-ம் வகுப்பு திருத்தப்பட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் கேஷவ் பலிராம் ஹெட்க்வேரின் உரை சேர்க்கப்பட்டிருப்பது குறித்து அம்மாநில முன்னாள் முதல்வர் சீதாராமையா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சீதாராமையா கலந்து கொண்டார். அப்போது அவர், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் மேற்கொள்ளபட்ட … Read more

குரங்கு அம்மை தொற்றுக்கு சிறார்களே அதிகளவில் பாதிப்பு-ஐ.சி.எம்.ஆர். தகவல்

குரங்கு அம்மை தொற்றுக்கு சிறார்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நோய் பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானியான அபர்ணா முகர்ஜி, குரங்கு அம்மை பாதிப்பை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக கூறினார். இதனிடையே, 20 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட உலக சுகாதார … Read more

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

லே: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக்கில் பேருந்து விபத்திற்குள்ளானதில் நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more

சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவரது நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்தியப் புலனாய்வுத் துறையின் எஃப்ஐஆர் படி, ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதல்வராக 1999 ஜூலை 24 முதல் மார்ச் 5 2005 வரை செயல்பட்டபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் … Read more