பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்; நடிகையின் புகாரில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர் விசாரணையும் நடைபெறுகிறது. இம்மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில நாட்களுக்கு முன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் பலாத்கார வழக்கில் முதலில் இருந்த வேகம் தற்போது இல்லை. விசாரணையில் ஆளுங்கட்சியினர் … Read more

பட்டியாலா சிறையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு க்ளார்க் வேலை ஒதுக்கீடு: சிறப்பு உணவுக்கு அனுமதி

பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து அண்மையில் சிறை சென்றார். அவருக்கு, சிறை நிர்வாகம் க்ளார்க் வேலை ஒதுக்கியுள்ளது. இது குறித்து பட்டியாலா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள், சித்துவின் கைதி எண் 241383. அவர் சிறை எண் 7ல் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு க்ளார்க் வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தனது அறையில் இருந்தே வேலைகளை செய்வார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு அறைக்கே கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர். சிறைத் … Read more

ஏரிக்குள் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி: திருமணத்திற்கு சென்றபோது அதிகாலை சோகம்

திருமலை: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ரெட்டிவாரி கிராமத்தை சேர்ந்தவர் கங்கிரெட்டி. இவரது மனைவி மதுலதா. மகள் குஷிதாரெட்டி, மகன் தேவன்ஷ்ரெட்டி. இவர்களது உறவினர் ஒருவரின் திருமணம் இன்று சித்தூர் மாவட்டம் பலமனேரில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கங்கிரெட்டி தனது குடும்பத்தினருடன் இன்று அதிகாலை காரில் புறப்பட்டார். மதனப்பள்ளி அருகே உள்ள புங்கனூர் சாலை வழியாக வந்தபோது ஏரி மீதுள்ள சிறுபாலத்தை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராமல் கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இதனை … Read more

குஜராத்: ஆன்லைன் கேம் விளையாட போனுக்காக மோதல் – ‘தம்பியை கொலை செய்து கிணற்றில் வீசிய 16 வயது சிறுவன்’

அகமதாபாத்: ஆன்லைன் கேம் விளையாடும்போது ஏற்பட்ட மோதலில், சிறுவன் ஒருவன் தனது தம்பியை கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் உள்ள காம்லெஜ் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியது: “இவர்களது குடும்பம் ராஜஸ்தானிலிருந்து வந்துள்ளனர். கடந்த 23-ஆம் தேதி இரு சிறுவர்களும் மாறி மாறி ஒரே போனில் வீடியோ மேம் விளையாடியுள்ளனர். இதில் தனக்கான வாய்ப்பு வரும்போது சிறுவனின் தம்பி போனை வழங்க மறுத்திருக்கிறார். … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த பாம்புகள்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பல்வேறு அறைகள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு பத்மாவதி விசாரணை மையம் அருகே உள்ள பாண்டவா விருந்தினர் மாளிகையில் நாகபாம்பு ஒன்று வந்தது. உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தார். இதேபோன்று ஜி.என்.சி சோதனை சாவடி அருகே உள்ள தேவஸ்தான தோட்டத்துறை நர்சரியில் சாரைப்பாம்பு … Read more

ராஜஸ்தான்: மனைவியால் தாக்கப்பட்ட பள்ளி முதல்வர் – வைரல் வீடியோவும் பாதுகாப்பு உத்தரவும்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பள்ளி முதல்வர் ஒருவர் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக புகார் அளித்துள்ளார். அதற்கான ஆதாரத்தை அவர் சமர்ப்பித்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நபர் ஒருவர், பெண் ஒருவரால் கடுமையாக தாக்கப்படும் காட்சி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், அந்த வீடியோவில் இருப்பவர் அஜித் யாதவ என்பதும், அவருடைய மனைவியால் அவர் பேட், வீட்டு உபயோகப் பொருட்களால் தாக்கப்பட்டிருப்பதும் … Read more

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022-ஐ பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். நாளை காலை 10 மணிக்கு ட்ரோன் திருவிழாவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி பின்னர் கிசான் ட்ரோன் விமானிகளுடன் உரையாடுகிறார். பின்னர் திறந்தவெளி ட்ரோன் செயல் விளக்கங்களை காண உள்ளார். கண்காட்சி மையத்தில் 70க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்த உள்ளனர். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் … Read more

கேரள சட்டசபையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை பெண் உறுப்பினர்கள் தேசிய மாநாடு: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘ஆசாதி கா அமிர்த் திருவிழா’ வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை கேரள சட்டசபையில் (திருவனந்தபுரம்) நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி … Read more

சலில் பரேக்கிற்கு ரூ.71 கோடி சம்பளம்: ஆண்டுக்கு 43% உயர்வு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்போசிஸ்

பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக் ஆண்டு சம்பளம் ரூ.49.7 கோடியில் இருந்து 43 சதவீதம் அதிகரித்து ரூ.71 கோடியாக உயர்ந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது. காலச் சக்கரம் எப்போதும் ஒரு தரப்புக்கு சாதகமாக சுழலாது என்பதைப் போல கடந்த … Read more

ஹிஜாப் தடையை அமல்படுத்தக்கோரி கல்லூரி வளாகத்திற்குள் மாணவ மாணவிகள் போராட்டம்!

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது போல கல்லூரி மாணவிகளும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மங்களூருவில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக அரசு கடந்த பிப்ரவரி முதல் புதிய சீருடை சட்டத்தை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் கர்நாடக அரசாணை செல்லும் என்று மார்ச் 15-ம் … Read more