ராஞ்சி கலவரம் – 6 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தும் உயிர் பிழைத்த இளைஞர்!

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஞ்சியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், போலீஸாரால் 6 முறை சுடப்பட்ட இளைஞர் அதிசயத்தக்க வகையில் உயிர் பிழைத்திருக்கிறார். நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் நுபுர் சர்மா, அனில் ஜிண்டால் ஆகியோர் அண்மையில் தெரிவித்த கருத்துகள் மிகவும் சர்ச்சையானது. வளைகுடா இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது. இதனைத் தொடர்ந்து, நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மேற்குறிப்பிட்ட … Read more

சோனியாவுக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் வாங்கியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உட்பட பலர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி கடந்த 2-ம் தேதியும், சோனியா காந்தி கடந்த 8-ம் தேதியும் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் கோரிக்கையை ஏற்று, நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாவும் அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து … Read more

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரக முகவரிக்கு செல்வதாக இருந்த ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஃபைசல் … Read more

ஜிவிகே குழுமம் மீது 6 வங்கிகள் வழக்கு

12 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாத ஜிவிகே குழுமத்தின் மீது ஆறு வங்கிகள் வழக்குத் தொடுத்துள்ளன. 2011 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பரோடா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியன ஜிவிகே குழும நிறுவனங்களுக்கு மொத்தம் 12 ஆயிரத்து 114 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதையடுத்து ஜிவிகே குழுமத்தின் மீது வங்கிகள் வழக்குத் தொடுத்துள்ளன.  … Read more

இந்தியா-வில் அதிகரிக்கும் கொரோனா தொற்று… ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது.. 4 பேர் பலி…..ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 8,582 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,32,22,017 ஆக உயர்ந்தது.* புதிதாக 4 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

நூபுர் சர்மா சர்ச்சை கருத்தை கண்டித்து போராட்டங்கள்: போலீஸார் கவச உடையில் செல்ல உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: சர்ச்சை கருத்து தொடர்பாக நடைபெறும் போராட்டங்களின் போது போலீஸார் கவச உடையில் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் முகமது நபி பற்றி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் முஸ்லிம்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். நூபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேற்கு வங்கம் மற்றும் … Read more

எண்ணெய் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி கோர விபத்து… 4 பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் நயாகர் பகுதியில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த எண்ணெய் சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அப்போது தீப்பிடித்ததால் லாரி வெடித்துச் சிதறியது. இதில் லாரியில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். அருகில் நின்றிருந்த சிலர் படுகாயம் அடைந்தனர். இதனால் சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது Source link

மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு கிடுக்கிப்பிடி: பொய் வாக்குறுதி அளித்தால் அபராதம்

புதுடெல்லி: மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஒன்றிய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இன்டர்நெட், விளம்பர பேனர்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றில் நாள்தோறும் பல்வேறு விளம்பரங்கள் வருகின்றது. இது போன்ற விளம்பரங்களில் நடிப்பவர்களை பார்த்தும், மேலும் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் மற்றும் இத்தனை சதவீதம் தள்ளுபடி என்பதை கேட்டு முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகப்படியாக ஏமாந்து வருகின்றனர். இந்த நிலை நாடு முழுவதும் உள்ளது.இந்நிலையில், ஒன்றிய அரசு தரப்பில் … Read more

“மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிப்பணியாது"- பினராயி விஜயன்

மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிப்பணியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில், ஸ்வப்னா சுரேஷ் சமீபத்தில் ஆடியோவொன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவால் கேரளாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த ஆடியோவில் மாநில அரசுடன் நெருங்கிய தொடர்புடைய நபர் எனக் கூறப்படும் பத்திரிகையாளர் ராஜ் கிரண், ஸ்வப்னா சுரேஷுடன் பேசியதாக தெரிகிறது. அதில் ராஜ் கிரண், முதலமைச்சர் பினராயி விஜயன் தங்கக் கடத்தல் குற்றச்சாட்டை சகித்துக் கொள்ளமாட்டார் … Read more

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் எண்ணிக்கை அதிகரிப்பு: சிபிடிடி தலைவர் தகவல்

புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் (சிபிடிடி) சங்கீதா சிங் தெரிவித்துள்ளார். ரிட்டர்ன் தாக்கல் செய்வது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த நிதி ஆண்டில் ரிட்டர்ன் தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 7.14 கோடி. அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 6.9 கோடியாக இருந்தது. பொதுவாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் பெறும் போது வரி செலுத்துவோரின் விகிதம் … Read more