அக்னிபத் திட்டம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ராணுவ பணிகளுக்கு நான்காண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் தற்போதுள்ள வழக்கமான நடைமுறையின் படியே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரியும் பிகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தி்ல் ஈடுபட்ட இளைஞர்கள் பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களை தீவைத்து எரித்துள்ளதால், இதுவரை … Read more

ஆந்திராவில் கரடி தாக்கி 6 பேர் படுகாயம்.!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கரடி தாக்கியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். வஜ்ரப்பு கொத்தூரூ கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த 6 பேரையும் பசுமாடு ஒன்றையும் கரடி தாக்கியது. படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். Source link

அசாம் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் மழை, வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளதாக மாநில அரசு தகவல்

திஸ்பூர்: அசாம் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் மழை, வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மழை, வெள்ளத்திற்கு மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர்.

'ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் மோடிக்கும்' – காங். தலைவர் சர்ச்சை பேச்சு

ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் பிரதமர் மோடிக்கு நேரும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சுபோத்காந்த் சஹாய் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாய், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். ”ஹிட்லரைப் போல நடந்து கொள்பவர்கள் அவரைப்போல் தான் இறப்பார்கள். … Read more

‘‘அக்னிபாதை வீரர்களுக்கு ஆதரவு; வேலை தர தயார்’’ – வரிசை கட்டும் தொழிலதிபர்கள்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தில் 4 ஆண்டு பயிற்சி முடித்த வீரர்களுக்கு வேலை தருவதாக ஆனந்த் மகேந்திரா கூறியதைபோலவே பல தொழிலதிபர்களும் உறுதியளித்துள்ளனர். மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா மற்றும் பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா உள்ளிட்ட தொழில்துறையினர் அக்னிபாதை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் கேபிள் காரில் சிக்கிய 11 பேரும் பாதுகாப்பாக மீட்பு

இமாச்சலப் பிரதேசத்தில் பர்வானூ என்னுமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறால் நடுவழியில் நின்ற கேபிள் காரில் சிக்கிக் கொண்ட 11 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சோலன் மாவட்டத்தில் டிம்பர் டிரெயில் எனப்படும் சுற்றுலா விடுதிக்குச் சென்றுவர கேபிள் கார் போக்குவரத்து வசதி உள்ளது. 11 பேருடன் சென்ற கேபிள் கார் நடுவழியில் நின்றது. தகவல் அறிந்த தொழில்நுட்பக் குழுவினரும், மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் இணைந்து கேபிள் காரில் இருந்த அனைவரையும் ஒவ்வொருவராகக் கயிறுகட்டிப் பாதுகாப்பாகத் தரையிறக்கினர். மாலைக்குள் மீட்புப் … Read more

கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குணமடைந்து வீடு திரும்பினார்

டெல்லி: டெல்லி கங்காராம் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா குணமடைந்து வீடு திரும்பினார். சோனியா காந்தி வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக காங். செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்

இமாச்சல பிரதேசம்: நடுவானில் நின்ற ரோப் கார் – பதைபதைக்கும் வீடியோ

இமாச்சல பிரதேசத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவானில் கேபிள் கார் நின்றதில் 11 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று பர்வானூ. இப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக கேபிள் கார் சேவை செயல்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் இந்த கேபிள் காரில் 11 சுற்றுலாப்பயணிகள் சென்றுள்ளனர். அப்போது கேபிள் கார் திடீரென பல நூறு அடி உயரத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவழியில் 2 மணிநேரம் நின்றது. இதையடுத்து பர்வானூ … Read more

‘‘அக்னிபாதை பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு’’- ஆனந்த் மகேந்திரா உறுதி

புதுடெல்லி: அக்னிபாதை பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது என அந்நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபதிபருமான ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார். ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களை போராட தூண்டியதாக பிஹார், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மீது … Read more

கர்நாடகத்தில் ரூ.28,000 கோடி மதிப்பில் திட்டங்கள்.. தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டிய பிரதமர்..

கர்நாடகத்தில் 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணி முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடக்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, தமது ஒவ்வொரு நிமிடத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொங்கண் ரயில்வேயில் 740 கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதை, முழுவதும் குளிரூட்டப்பட்ட பெங்களூர் விஸ்வேஸ்வரையா ரயில் நிலையம், அரிசிக்கரை – துமக்கூர், ஏலகங்கா – பெனுகொண்டா ஆகியவற்றின் இடையான இரட்டை ரயில்பாதை ஆகியவற்றைப் பயன்பாட்டுக்குப் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். … Read more