கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பட்டப்பகலில் அரசுப் பேருந்து கடத்தல்: ஒருவர் கைது..போலீசார் விசாரணை..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா அரசு பேருந்து பணிமனையில் இருந்து அரசுப் பேருந்து கடத்தப்பட்டது. கடத்தி சென்ற பேருந்து சாலையோரம் நின்ற மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது மோதியது. காளூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி பேருந்தை மீட்டனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக டெல்லியில் உள்ள மைதானங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, அம்மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. டெல்லியில் தியாகராஜ் விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இரவு 9 மணி வரை டெல்லியில்  மைதானங்கள் திறந்திருக்கும் சூழலில், இந்த மைதானத்தில் மாலை 7 மணிக்கே அங்குள்ள விளையாட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. டெல்லி வருவாய்த் துறையின் முதன்மைச் செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி … Read more

பிரதமர் மோடி ஹைதராபாத் வரும் முன்பே பெங்களூரு புறப்பட்டுச் சென்ற தெலங்கானா முதல்வர்

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் வர உள்ளா நிலையில் அவர் வரும் முன்பே சந்திப்பை தவிர்க்கும் விதத்தில், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இன்று காலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். இதனால் சந்திரசேகர ராவின் பாஜக மீதான கோபம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர் எஸ் கட்சிக்கும், பாஜக விற்கும் இடையே தீவிர அரசியல் மோதல்கள் நடைப்பெற்று வருகின்றன. சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாலும், ஹைதராபாத் மாநகராட்சி … Read more

முதல்வர் பசவராஜ் மீது எடியூரப்பா அதிருப்தி – கட்சிக்குள் புகைச்சல்!

கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீது, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா, பாஜக வயது மூப்பு கொள்கை மற்றும் அமைச்சர்கள் அதிருப்தி காரணமாக, முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக, பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த, … Read more

காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுந்த் கிராமத்தில், பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த நிலையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காஷ்மீர் … Read more

ஒடிசாவில் வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்கள்

புவனேஸ்வர் : ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் (வயது 28) என்ற வாலிபர், பகுதி நேரமாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22-ந்தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களை சந்தித்து வேலை கேட்டுக்கொண்டிருந்தார். பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்பதற்காக சென்றார். அப்போது ஒரு லாரியை நோக்கி இவர் சென்றபோது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை … Read more

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனில் பிரப்-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

மும்பை : பணமோசடி விசாரணை தொடர்பாக மராட்டிய அமைச்சரும் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனில் பிரப்-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. நிலம் பேரம் ஒன்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒருபகுதியாக இந்த சோதனை நடைபெற்றது.அனில் பிரப் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து மராட்டியத்தில் புனே, மும்பை மற்றும் தபோலி ஆகிய நகரங்களில் உள்ள 7 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையால் சோதனை நடத்தப்படுகிறது.ரத்தினகிரி … Read more

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்! பயனர்கள் புகார் மழை!

வேகமாக ஓட்டிச் செல்லும்போது ஓலா எலக்ரிக் ஸ்கூட்டரின் முன்சக்கரங்கள் கழண்டு சென்று விடுவதாக பயனர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. இம்முறை பேட்டரி வெடிப்பு அல்ல… இயந்திரக் கோளாறுகள் பற்றிய புகார்கள். ஓலா ஸ்கூட்டரின் முன்பக்க சஸ்பென்ஷனின் நீடித்த தன்மை குறித்த புகார்கள் குவியத் துவங்கியுள்ளன. ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே முன்சக்கரம் உடைந்துபோய் விட்டதாக பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். @OlaElectric @bhashThe front fork is … Read more

சீனர்களுக்கு விசா தர லஞ்சம் பெற்றதாக புகார்: கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராக சிபிஐ சம்மன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறைஅமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம்பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. பஞ்சாபில் டிஎஸ்பிஎல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத் தர, டிஎஸ்பிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது … Read more

டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்- கைது செய்யப்பட வாய்ப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. பஞ்சாபில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக … Read more