மூத்த தலைவர்களில் ஒருவர்; முன்னாள் ஒன்றிய அமைச்சர் காங்கிரசில் இருந்து கபில் சிபல் விலகல்: சமாஜ்வாடி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் போட்டி

லக்னோ: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கபில் சிபல், காங்கிரசில் இருந்து நேற்று அதிரடியாக விலகினார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோற்றதில் இருந்தே காங்கிரசில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. 2019 மக்களவை தேர்தலில் தோற்றப் பிறகும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியை சந்தித்தப் பிறகும் உட்கட்சி பூசல், தலைவர்கள் விலகல் போன்றவை அதிகமாகி இருக்கின்றன. குறிப்பாக, நேரு குடும்பத்தை சாராத ஒருவரை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கும்படி, குலாம் நபி … Read more

சீனா பாஸ்போர்ட் விவகாரத்தில் இன்று ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்: ஓரிரு நாளில் கைதாக வாய்ப்பு

புதுடெல்லி: சீனா நாட்டினருக்கு பாஸ்போர்ட் வாங்கி தருவது தொடர்பாக ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரை, பஞ்சாப்பை சேர்ந்த தொழிற்சாலைக்காக சட்டவிரோதமாக சீனாவை சேர்ந்த 263 தொழிலாளர்களை அழைத்து வர விசா பெற்றுத் தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் மீது … Read more

ஜம்மு காஷ்மீரில் கொடூரம் – வீடு புகுந்து டிவி நடிகையை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் ஹிஷோரா பகுதியில் டி.வி. நாடக நடிகை அம்பிரீன் பட் வீடு உள்ளது. இந்நிலையில், நடிகை அம்பிரீமின் வீட்டிற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். அம்பிரீன் மீதும், அவருடன் இருந்த 10 வயது சிறுமி மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்பிரீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  துப்பாக்கி குண்டு காயத்தால் படுகாயமடைந்த 10 வயது சிறுமிக்கு … Read more

விலைவாசி உயர்வை தடுக்க சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: சர்க்கரை கையிருப்பை பராமரிப்பதற்கும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் வரும் 1ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு, சர்க்கரைக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பை உறுதி செய்யவும், சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கவும், அதன் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து, எந்த சர்க்கரை ஏற்றுமதியாக … Read more

சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்து விபத்து..! 6 பேர் உயிரிழப்பு, 40 பேர் படுகாயம்

ஒடிசா மாநிலத்தில் சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஒடிசாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தரிங்பாடியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். கஞ்சம் பகுதியில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த போது வளைவு ஒன்றில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். Source link

2 வருடத்துக்கு பிறகு தொடங்கும் மோகன்லால், திரிஷா படம்

திருவனந்தபுரம்: மோகன்லால், திரிஷா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு பிறகு தொடங்க உள்ளது. மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம், திரிஷ்யம் 2 படங்களை இயக்கியவர் ஜீத்து ஜோசப். சமீபத்தில் மோகன்லால் நடித்த டுவெல்த் மேன் படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் என்ற படத்தை உருவாக்குவதாக ஜீத்து ஜோசப் தெரிவித்தார். கொரோனா பாதிப்பின் காரணமாக அதிக தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படம் உருவாக்க முடியாததால், பல இடங்களில் … Read more

ஆயுள் தண்டனையில் ஜெயிலுக்கு போகும் யாசின் மாலிக்!

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், யாசின் மாலிக் குற்றவாளி என்று கடந்த 19 ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், யாசின் மாலிக்கின் சொத்து விவரம் குறித்து அவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்று நீதிமன்றத்தில் … Read more

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் இறுதிப் போட்டியில் நுழைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா.!

செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் சென்னையின் ஆர். பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் நுழைந்தார். நெதர்லாந்தைச் சேர்ந்த அனிஷ் கிரியை 3.5 – 2.5 என்ற புள்ளிக்கணக்கில் அரையிறுதியில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனையடுத்து செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர்-2 வீரரான சீன வீரர் டிங் லிரனை எதிர்கொள்கிறார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.  Source link

நன்கொடை வசூலித்து தில்லுமுல்லு 2,100 கட்சிகள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் கடந்த 15ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் நிதி முறைகேடுகள், விதிமுறைகளை மீறி செயல்படும், ‘பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்’ மீது  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, விதிமுறைகளை மீறி நன்கொடைகளை  பெற்று மோசடியில் ஈடுபட்டு வரும் இதுபோன்ற கட்சிகள் மீதான அதிரடி துவங்கி உள்ளது. கடுமையான நிதி முறைகேட்டில் ஈடுபட்ட 3 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், … Read more

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு: சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை..!

டெல்லி: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகனான எம்பி கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக புகார் எழுந்தது. அதையடுத்து கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதனை தொடர்ந்து அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை … Read more