துணை ஜனாதிபதிக்கு ஆக.6ம் தேதி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் வரும் 5ம் தேதி தொடக்கம்

புதுடெல்லி: நாட்டின் துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 16வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 5ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் … Read more

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி நீட்டிப்பை ஏற்க வேணுகோபால் மறுப்பு: 3 மாதங்களுக்கு மட்டும் சம்மதம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவி காலம் இன்றோடு முடிந்த நிலையில், ஒன்றிய அரசின் வேண்டுகோளை ஏற்று 3 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.  நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகும் அதிகாரம் கொண்டவர் தான் தலைமை வழக்கறிஞர் ஆவார். குறிப்பாக ஜனாதிபதியின் சார்பாகவே நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கும் அளவிற்கு உட்சபட்ச அதிகாரம் கொண்டது இந்த பதவியாகும். இந்த நிலையில், முன்னதாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த … Read more

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். ஆனால்..? – உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 16 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநரின் உத்தரவு சட்டவிரோதம் என்று சிவசேனா தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க … Read more

உதய்பூர் கொலை | “20 வருடங்களுக்கு முன்பே குடும்பத்தை பிரிந்தவர் ரியாஸ்” – சகோதரர் வெளியிட்ட தகவல்கள்

புதுடெல்லி: ராஜஸ்தானின் உதய்பூரில் தையல் கடை உரிமையாளர் கன்னையா லால் டெலி (40) படுகொலை வழக்கில் கைதான முகம்மது ரியாஸ் அட்டாரி (38) குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. ரியாஸ் அட்டாரியின் உடன் பிறந்த சகோதரரான அப்துல் அயூப் லோஹர் ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரர் ரியாஸ் குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “என்னுடன் பிறந்த பத்து பேரில் நான் இரண்டாவது சகோதரன். 10-வதாக பிறந்தவர் ரியாஸ். எங்கள் தந்தை இறந்த பின்னர், … Read more

சபையை எல்லாம்கூட்ட வேண்டாம்… நானே போயிடுறேன்… பதவியை ராஜினாமா செய்த முதல்வர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு, அதனை அவர் கடிதமாகவும் அனுப்பி இருந்தார். ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் … Read more

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

தேவாலயம் ஒன்றில் ஞானஸ்தானம் எடுப்பதற்காக குளியல் தொட்டியில் மூழ்கி எழுந்த இளைஞர் ஒருவர் மீது அருகில் வைக்கப்பட்டிருந்த மைக் உரசியதால் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். புது நன்மைக்கு ஜெபம் சொன்ன பாதிரியாரை மிரள வைத்த சம்பவத்தின் நேரடி காட்சிகள் வெளியாகி உள்ளது. மகராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சலிஸ்பரி பார்க் தேவாலயத்தில் இளைஞர் ஒருவருக்கு ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புது நன்மை எடுக்கும் இளைஞரை தேவாலயத்தில் உள்ள புனித நீர் தொட்டிக்குள் … Read more

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம்

டெல்லி: குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கருத்துக்கு இந்திய நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடுவதாக என  வெளியுறவுத்துறை கூறியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த … Read more

60 மணிநேரத்தில் 2 நாடுகள், 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி

ஜெர்மனி மற்றும் அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் மோடி, பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். குறிப்பாக உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்தாலும், சர்வதேச கரியமில வாயு வெளியீட்டில் இந்தியாவின் பங்கு வெறும் 5சதவிகிதம்தான் என்றார். இயற்கையுடன் இணைந்த வாழ்க்கைமுறையே இதற்கு காரணம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடியை அபுதாபி  ஆட்சியாளர் … Read more

'சிவசேனா தொண்டர்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை' – உத்தவ் தாக்கரே உருக்கமான பேச்சு

மும்பை: “எதிர்பாராத விதமாக அதிகாரத்துக்கு வந்தவன் நான். அதே பாணியில் இப்போதும் வெளியேறவும் செய்கிறேன்” என மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியாகும் முன்பாக, மகாராஷ்டிரா முதல்வர் மாநில மக்களுக்கு சமூக வலைதளம் உரையாற்றினார். தனது உரையில், “இந்த தருணத்தில், என்னை ஆதரித்த என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சகாக்களுக்கு எனது நன்றியை … Read more

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே..

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு அதிருப்தி எம்.எல்.ஏ.கள் என்ன விரும்பினார்களோ அதனை கொடுத்துள்ளதாக உத்தவ் தாக்கரே தகவல் அடுத்து அமைய இருக்கும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த சோனியா காந்தி, சரத் பவாருக்கு நன்றி – உத்தவ் தாக்கரே Source link