ஆக.,6இல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஜூலை 19ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதி கோரி நவாப் மாலிக், அனில் தேஷ்முக் மனு தாக்கல்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதி கோரி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 17ம் தேதி சட்டமேலவை தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரிய இருவரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் வாக்களிக்க அனுமதி கேட்டுள்ளனர்.   Source link

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கூடுதல் வரி விதிப்பது பற்றி மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்க குழுவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அம்பானிக்கு பாதுகாப்பு – திரிபுரா நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

அம்பானி குடும்பத்தாருக்கு மும்பையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான விவரங்களை கேட்ட உச்சநீதிமன்றம், திரிபுரா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  மகாராஷ்டிரா அரசாங்கம் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்த பொதுநல மனுவை திரிபுரா உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருந்தது. அம்பானி குடும்பத்தாருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருக்கிறது என்ற எச்சரிக்கை மற்றும் மகாராஸ்டிரா அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மத்திய அரசு பாதுகாப்பை வழங்கியது. இந்த … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தங்களுக்கு கவலையில்லை – ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தங்களுக்கு கவலையில்லை என்றும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தங்களிடம் உள்ளதாகவும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் முகாமிட்டுள்ள அவர், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் நாளை மும்பை செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தங்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் ஏக்நாத் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.  Source link

ஜனாதிபதி தேர்தல் வாக்கு சேகரிக்க யஷ்வந்த் சின்கா கேரளா வருகை; மு.க.ஸ்டாலினுடன் நாளை சந்திப்பு

திருவனந்தபுரம்: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா வாக்கு சேகரிப்பதற்காக திருவனந்தபுரம் வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். 2 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா இன்று முதல் தென் … Read more

கரோனா தடுப்பில் தீவிர நடவடிக்கை தேவை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் பலவகையானப் பண்டிகைகள் மற்றும் யாத்திரைகள் தொடங்கவுள்ள நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தொற்று கணிசமான அளவு குறைந்திருந்தது. தற்போது ஒருசில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று … Read more

OH MY GOD..! பல் தேய்க்காமல் முத்தம் – மனைவியை குத்தி கொன்ற கணவன்!

பற்களை தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில், மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு, தீபிகா என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணிபுரியும் அவினாஷ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க, பாலக்காட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, அவினாஷ் தூங்கி எழுந்ததும், தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்துள்ளார். … Read more

புதுச்சேரி முதலமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் தொடர் போராட்டம் வாபஸ்..

புதுச்சேரியில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து கழக பணியாளர்களின் தொடர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பணி பாதுகாப்பு வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 23-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள், போக்குவரத்துத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதலமைச்சருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமென உறுதியளிக்கப்பட்டது. Source link

அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம்விஸ்வநாதன் மேல்முறையீடு

டெல்லி: அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம்விஸ்வநாதன் மேல்முறையீடு செய்துள்ளார். 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக  நத்தம்விஸ்வநாதன் மேல்முறையீடு செய்து இருக்கிறார்