ரிக்‌ஷாவிலிருந்து தவறிவிழுந்த குழந்தை – பஸ்முன் பாய்ந்து காப்பாற்றிய ட்ராஃபிக் போலீஸ்

பஸ் முன் பாய்ந்து குழந்தை உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலீசுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அவனிஷ் சரண் என்ற நபர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ரிக்‌ஷாவில் இருந்து விழுந்த குழந்தையை போக்குவரத்து காவலர் ஒருவர் சரியான நேரத்தில் எப்படி காப்பாற்றினார் என்பதே அந்த வீடியோ. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் 41 க்கும் அதிகமான லைக்குகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது. To his credit, the traffic policeman … Read more

கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு – டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு (75) கடந்த 2-ம் தேதிகரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப் பட்டது. இந்நிலையில், டெல்லியில்உள்ள கங்கா ராம் மருத்துவமனை யில் நேற்று சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறும்போது, ‘‘தற்போது சோனியா காந்தி ஸ்திரமாக இருக்கிறார். மருத்துவ மனையில் அவரது உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் நலம் விரும்பிகள், கட்சி தொண்டர்கள், … Read more

பரபரப்பான சாலையில் ஆட்டோவில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக மீட்ட போக்குவரத்து காவலர்..

உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையில் விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து காவலர் மீட்ட காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் காசிப்பூர் பகுதியில் பரபரப்பான சாலையில், வேகமாக திரும்பிய மின்சார ஆட்டோவில் இருந்து குழந்தை ஒன்று கீழே விழுந்தது. இதைக் கண்ட போக்குவரத்து காவலரான சுந்தர் லால், துரிதமாக செயல்பட்டு எதிரே வந்த பேருந்தை நிறுத்தி அக்குழந்தையை மீட்டார். இது தொடர்பான வீடியோக் காட்சியை சத்தீஸ்கரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவனிஷ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த நிலையில், … Read more

6 மணிநேரத்தில் 24 முட்டை போட்ட அதிசய கோழி: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஒரு கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட அதிசய சம்பவம் நடந்துள்ளது. இதை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் பிஜுகுமார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி 20க்கும் மேற்பட்ட கோழிகளை வாங்கி வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி பிஜுகுமாரின் மகளை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து அந்த கோழிக்கு … Read more

ஜஸ்டின் பீபர் உடல்நலத்துடன் இந்திய அரசியலை கிண்டல் செய்த காமெடியன் – நெட்டிசன்கள் காட்டம்

தற்போது உள்ள இந்திய அரசியல் நிலைப்பாட்டை நகைச்சுவையாக கூறுவதாக நினைத்து, ஜஸ்டின் பீபரின் உடல்நலக் குறைபாட்டுடன் ஒப்பிட்டு பேசியதால் இந்திய ஸ்டாண்ட் -அப் காமெடியனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். கனடாவை சேர்ந்த 28 வயதான புகழ்பெற்ற பாப் பாடகரான ஜஸ்டின் பீபர், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில், தனக்கு ராம்சாய் ஹண்ட் சின்ட்ரோம் என்ற ஒருவகை குறைபாடு உறுதிசெய்யப்பட்டிருப்பாகவும், அதனால் முகப்பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் அவரது முகத்தின் ஒரு பக்கத்தை அசைக்க … Read more

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்; போட்டியிட சரத் பவார் தயக்கம்?

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் சரத் பவார் அதனை ஏற்கத் தயங்குவதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி … Read more

ஸ்டாலின் பாணியில் மம்தா பானர்ஜி அதிரடி!

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக தமிழக அரசு தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எனவே, ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரங்களை பறிக்கும் பொருட்டு மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில், தமிழக … Read more

ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது – மத்திய அரசு

ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சூதாட்டம் மற்றும் பந்தயம் ஆகியவை நாட்டின் பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இளைஞர்கள், சிறார்களுக்கு சமூக பாதிப்பு மற்றும் நிதி சிக்கலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்கள் தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. Source link

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர், குடும்பத்தினர் மீது சந்தேகம்: ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகார்

டெல்லி: தங்கக் கடத்தல் வழக்கில் வெளியாகும் தகவல்களால் கேரள முதல்வர், குடும்பத்தினர் மீது சந்தேகம் என ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகார் அளித்தார்.சதித்திட்டத்தின் முக்கிய நபராக கேரள முதல்வர் இருப்பதாக அவர் கூறினார். கடத்தலை விசாரிப்பதற்கு பதில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பெண்ணுக்கு மிரட்டல் என தெரிவித்தார்.    

பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜி: மேற்குவங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமனம் செய்யும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். பட்டமளிப்பு விழாவும் ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது. அதேபோல் துணைவேந்தரை நியமிப்பதிலும் ஆளுநர் முக்கிய பங்கு வகிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் தமிழகம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் மாநில ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் … Read more