கிரெடிட் கார்டு செலவீனங்கள் அதிகரிப்பு – பொருளாதாரம் மீள்வதாக ரிசர்வ் வங்கி கருத்து

கிரெடிட் கார்டு மூலம் செலவழிப்பது சென்ற மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதை பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியதன் அறிகுறியாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியதன் அறிகுறியாக சென்ற மே மாதத்தில் கிரெடிட் கார்டுகள் முலம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளார்கள் செலவழித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய 2021ஆம் ஆண்டின் இதே மாதத்தில் செலவிட்டதை விட 118 சதவிகிதம் அதிகமாகும். ஆன்லைன் மூலம் … Read more

இந்தியாவில் கடந்த மாதத்தில் கிரெடிட் கார்ட் மூலம் ரூ.1.14 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கி தகவல்!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த மே மாதம் கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, மின்னணு பரிவர்த்தனை கருவி மூலம் மே மாதத்தில் 42 ஆயிரத்து 266 கோடி ரூபாயும், இணையவழி வர்த்தகம் மூலம் 71 ஆயிரத்து 429 கோடி ரூபாயும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கார்டுக்கு சராசரியாக 14 ஆயிரத்து 800 ரூபாய் பரிவர்த்தனையாகியுள்ளது. Source link

மும்பை கட்டட விபத்து: 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரம்

மும்பை: மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி தொடருகிறது.

மின் சைக்கிள்களின் விலையை ரூ.15 ஆயிரம் வரை குறைக்க ஹீரோ நிறுவனம் முடிவு!

மின் சைக்கிள்களை உருவாக்கி வரும் ஹீரோ சைக்கிளின், ஹீரோ லெக்ட்ரோ நிறுவனம், ஐந்து வகையான சைக்கிள்களின் விலையை 15 ஆயிரம் ரூபாய் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. மின்சார வாகனக் கொள்கையின் அடிப்படையில் டெல்லி அரசு மின்சார வாகனத்திற்கு வரிச் சலுகையும் மானியமும் வழங்கி வருகிறது. இந்தச் சலுகையைப் பெற தற்போது ஹீரோ லெக்ட்ரோ நிறுவனமும் தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, தனது ஐந்து வகையான மின்சார சைக்கிள்களின் விலையை 15 ஆயிரம் ரூபாய் வரை குறைக்க அந்நிறுவனம் … Read more

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி; 12 பேர் மீட்பு

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இதுவரை 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மும்பை குர்லா பகுதியில் நாயக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது. 4 தளங்கள் கொண்ட இந்த கட்டிடம் சிதிலமடையும் நிலையில் இருந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே இந்த கட்டிடத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, குடியிருப்புவாசிகள் காலி செய்யுமாறு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில், நாயக்நகர் சொசைட்டியின் D பிரிவு குடியிருப்பு நேற்று பின்னிரவு … Read more

திட்டமிட்டப்படி ஜூலை 11 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு – தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்.!

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு, திட்டமிட்டப்படி ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு காலதாமதாக நடைபெற்றதால், இந்த ஆண்டு அவகாசம் வழங்க வேண்டும் என சில மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வும், ஜெ.இ.இ. மெயின் தேர்வும் திட்டமிட்டப்படி நடைபெறும் என தேசிய … Read more

மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து… 8 பேர் உயிருடன் மீட்பு.. ஒருவர் பலி… 11 பேர் காயம்

மும்பை : மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குர்லா பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனே மீட்புப் பணியை தொடங்கினர்.இதுவரை 8 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஒருவர் இந்த விபத்தில் பலியாகி உள்ளார்.11 பேர் காயம் அடைந்துள்ளனர்.  மேலும் 20 முதல் … Read more

“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?”- ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. திரைப்படங்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும், சமூகவலைதளங்களிலும் இவர் கூறும் கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. If DRAUPADI is the PRESIDENT who are the PANDAVAS ? And more importantly, who are the KAURAVAS? — Ram Gopal … Read more

ஜூலை 12 வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை – அமைச்சர்களின் துறைகள் அதிரடியாக பறிப்பு

புதுடெல்லி: தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக வரும் ஜூலை 12 வரை அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனாவுக்கு 56, தேசியவாத காங்கிரஸுக்கு 53, காங்கிரஸுக்கு 44 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. பெரும்பான்மைக்கு 144 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஆளும் கூட்டணிக்கு 153 எம்எல்ஏக்கள் இருந்தனர். எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 106, அதன் கூட்டணி கட்சிகளுக்கு … Read more

ராணுவ முகாமில் இரு அதிகாரிகளை சுட்டுக் கொன்ற வீரர் கைது

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் ராணுவ முகாமில் இரு அதிகாரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய ராணுவ வீரரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். மேற்கு வங்கம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த இரு ஹவில்தார்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராணுவ முகாமை விட்டு சில கிலோ மீட்டர் தூரம் வீரர் லோகேஷ் தப்பியோடிய நிலையில் அவரை மடக்கிப் பிடித்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link