ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா வேட்புமனு தாக்கல்: ராகுல், சரத்பவார், அகிலேஷ் பங்கேற்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்கா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கான ஆதரவை காட்டும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் சென்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் … Read more

பஞ்சாப்பில் அனைவருக்கும் 300 யூனிட் மின்சாரம் ஜூலை 1 முதல் இலவசம்: நிதி அமைச்சர் அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, மாதம் 300 யூனிட் இலவச மின்சார திட்டம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். பஞ்சாபில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதன் தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தாக்கல் செய்த … Read more

அம்பானி பாதுகாப்பு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: அம்பானி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த திரிபுரா உயர் நீதிமன்றம், ‘என்ன மாதிரியான அச்சுறுத்தல் இருக்கிறது என்ற ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு … Read more

ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவராக இருந்த மொகபத்ரா கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, வாரியத்தின் புதிய தலைவராக நித்தின் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1986ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரியான இவர், தற்போது இந்திய வருவாய் சேவையின் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் என்பது வருமான வரித்துறையின் நிர்வாக அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் தலைவரைத் தவிர சிறப்பு செயலாளர்கள் பதவியில் ஆறு பேர் … Read more

பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில் மின்வசதி இல்லாத கிராமங்களும் உள்ளன

புதுடெல்லி: ஜெர்மனியில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க முனிச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களிடம் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது அவர், ‘‘இந்தியாவின் அனைத்து கிராமங்களும் திறந்வெளி கழிப்பிடம் இல்லாதவைகளாகவும், மின்சார வசதி பெற்ற கிராமங்களாகவும் மாறியுள்ளன’’ என்றார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் நேற்று அளித்த பதிலில், ‘அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறும் வேளையில், பாஜவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு கிராமத்துக்கு போர்க்கால … Read more

2018-ல் மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு – ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது

புதுடெல்லி: மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, 2020ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த அவர், டெல்லி காவல்துறை தனிப்பிரிவின் முன் ஆஜராகி இருந்தார். ஆனால் அந்த வழக்கிற்காக அவர் கைது செய்யப்படவில்லை. ஏனென்றால், அந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் பெற்றிருந்தார். எனினும் விசாரணையின் முடிவில் அவர் நேற்று மாலை 7 மணி அளவில் கைதாகினர். எந்த வழக்கில் கைதாகினார் … Read more

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கவுகாத்தியில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள மகாராஷ்டிரா சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களில் 16 பேர் மீது, கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக துணை சபாநாயகர் பிறப்பித்த நோட்டீஸ் மீது, அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 20ம் தேதி சட்ட மேலவை தேர்தல் முடிந்த அன்றே, அப்போதைய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், … Read more

”ஓடி ஓடி உழைச்சதுக்கு இதுதான் பரிசா..” மணமகனால் நொந்துப்போய் ₹50 லட்சம் கேட்ட நண்பர்கள்!

திருமணங்கள் என்றதுமே அனைவருக்கும் கொண்டாட்டங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனாலும் சண்டை சச்சரவு இல்லாத திருமண வீடே இருக்க முடியாது. அதுவும் இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் என்றால் திணுசு திணுசாக ரகளை செய்வதில் வல்வர்களாக இருப்பர். இப்போ நாம பார்க்க போகிற நிகழ்வும் அப்படிதான். பெரும்பாலும் உறவினர்களோ வேறு எவரோதான் திருமண வீட்டை களேபரமாக்குவார்கள். ஆனால் மணமகனே இங்கு பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள பஹதுராபாத்தில்தான் ஒரு விநோதமான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அமர் உஜாலா … Read more

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு கடந்த 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். Source link

இடைத்தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்; ஜே.பி.நட்டா மகிழ்ச்சி

புதுடெல்லி: நாடு முழுவதும் மூன்று மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், உத்தர பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி சங்ரூர் மக்களவைத் தொகுதியில் தோல்வி அடைந்தது. திரிபுராவில் பர்தோவாலி டவுன் சட்டசபை தொகுதியில் போட்டியிடட் முதல்வர் மாணிக் சஹா தாம் வெற்றி பெற்றார். இந்நிலையில், இடைத்தேர்தலில் … Read more